search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

    கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி:

    பள்ளத்தூர் போலீஸ் சரகம் வட குடியைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 65).இவர் அப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிக்கும் நோக்கத்தோடு கல்லுக்கால்களை ஊன்றியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் ராஜ்மோகன் ஆக்கிரமிப்பு குறித்து விசாரணை நடத்தியபோது கருப்பையா தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், பள்ளத்தூர் போலீசார் அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கருப்பையாவை கைது செய்தனர்.
    Next Story
    ×