என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு வசதிகள் செய்து தர கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • நாள் ஒன்றுக்கு 400 முதல் 500 வரை நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று ெசல்கிறார்கள்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தேவையான அத்தியாவசிய வசதிகள் செய்து தர வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில குழு உறுப்பினர் விஜயராஜன், மாவட்டச் செயலாளர் தண்டியப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீரபாண்டி, முத்துராமலிங்க பூபதி, சுரேஷ், திருப்புவனம் ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி, சிவகங்கை ஒன்றிய செயலாளர் உலகநாதன், இளையான்குடி ஒன்றிய செயலாளர் ராஜு, மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜெயந்தி, ஜெயராமன், மானாமதுரை ஒன்றிய குழு உறுப்பினர்கள் முனிராஜ், பரமாத்மா, முருகானந்தம், ராஜாராமன், மூர்த்தி, பாலசுந்தரி ஆகியோர் பேசினர். மானாமதுரை அரசு 

    • சாலையில் திரிந்த மாடுகளை நகராட்சி பணியாளர்கள் பிடித்து அபராதம் விதித்தனர்.
    • மாடுகளை சாலைகளில், தெருக்களில் மேய்ச்சலுக்கு விடக்கூடாது என்று எச்சரித்து ஒப்படைத்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர்பகுதியில் சிவகங்கை ரோடு, ராமேசுவரம் செல்லும் நான்கு வழிசாலை, பழைய பஸ்நிலையம், சுந்தரபுரம், கடைவீதி, சிவகங்கை ரோடு, தாயமங்கலம்ரோடு, கன்னார் தெரு, சிப்காட், மூங்கில் ஊரணி ஆகிய பகுதிகளில் ஏராளமான வீடுகளில் உள்ள பசுமாடுகளை இரவு-பகலாக அதன் உரிமையாளர்கள் மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடுகின்றனர்.

    சாலையில் சுற்றி திரியும் இந்த மாடுகளால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. நகராட்சி நிர்வாகம் மாடுகளை சாலை மற்றும் தெருபகுதியில் மேய்ச்சலுக்கு விடக்கூடாது என்று வாகனத்தில் ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. இதை பொருட்படுத்தாமல் வழக்கம்போல் மாடுகள் ரோட்டில் திரிந்தன. நகராட்சி ஆணையாளர் சக்திவேல் உத்தரவின்படி சுகாதார ஆய்வாளர் தங்கதுரை மற்றும் பணியாளர்கள் கடைவீதி மற்றும் சாலையில் திரிந்த 10-க்கும் மேற்பட்ட பசுமாடுகளை பிடித்து நகராட்சி அலுவலக வளாகத்தில் கட்டிபோட்டனர்.

    அந்த மாடுகளுக்கு தண்ணீர், புல், கீரைகளை வழங்கினர். மாடுகளை தேடி வரும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து மீண்டும் மாடுகளை சாலைகளில் , தெருக்களில் மேய்ச்சலுக்கு விடக்கூடாது என்று எச்சரித்து ஒப்படைக்கப்படும்.

    • சிவகங்கை மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகளில் பல்வேறு திட்ட பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து வாங்கப்படுவதை பார்வையிட்டு, அங்குள்ள பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர், சிங்கம்புணரி மற்றும் நெற்குப்பை ஆகிய பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில், பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகள் தொடர்பாக, மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையினை எதிர்நோக்கி தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள தடுப்பு உபகரணங்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஓய்வு அறை ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, திருப்பத்தூர்-காரைக்குடி ரோடு வார்டு 10ல் கைவண்டி மூலம் முதல்நிலை சேகரம் மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து வாங்கப்படுவதை பார்வையிட்டு, அங்குள்ள பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

    மேலும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-2022-ம் ஆண்டின் கீழ் ரூ.195 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையம் மற்றும் தென்மாபட்டு பகுதியில், தூய்மை பாரத திட்டம் 2021-22-ம் ஆண்டின் கீழ் ரூ.15லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாய கழிப்பிடம், புதுப்பட்டி வார்டு2-ல் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-22-ம் ஆண்டின் கீழ் மருதாண்டி ஊரணியில் ரூ.53.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய நடைபாதை, தடுப்புச்சுவர் அமைக்கும் பணி உள்பட பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வுகளின் போது, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ராஜா, பேரூராட்சித் தலைவர்கள் கோகிலாராணி (திருப்பத்தூர்), புசலான் (நெற்குப்பை), அம்பலமுத்து (சிங்கம்புணரி), உதவி செயற்பொறியாளர், உதவிப்பொறியாளர், பேரூராட்சி செயல் அலுவலர்கள், பேரூராட்சி துணைத்தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

    • மானாமதுரை பஞ்சமுக பிரித்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசை யாகம் நடந்தது.
    • புனிதநீர் கலசத்தை மேளதாளத்துடன் எடுத்துச் செல்லப்பட்டு மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவிக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள பஞ்ச பூதேஸ்வரம் என்னும் இடத்தில் 24 மணி நேரமும் அன்னதானம் நடைபெறும் பிரசித்தி பெற்ற மகா பஞ்சமுக பிரித்தியங்கிர தேவி கோவில் உள்ளது. இங்கு அமாவாசை தினத்தை முன்னிட்டு மகா கணபதி ஹோமத்துடன் யாகம் தொடங்கியது.

    உலக மக்கள் துன்பத்தில் இருந்து விடுபட்டு வாழ்கையில் அனைத்து செல்வங்களை பெற்று பேரானந்தத்துடன் வாழ வேண்டியும், இயற்கை விவசாயம் செழிக்க வேண்டியும், நோய் தொற்றுகள் வரக்கூடாது எனவேண்டியும் பிரித்தியங்கிரா யாகம், வனதுர்க்கை யாகம் நடந்தது.

    இந்த சிறப்பு யாகத்தில் அனைத்து வகை பழங்கள், உயர்ரக மிளகு, தேன், நெய் மற்றும் நோய் தீர்க்கும் மூலிகை பொருட்கள், பட்டு வஸ்திரம், பட்டு புடவைகள், மிகப்பெரிய பூமாலைகள் போடப்பட்டு யாகத்தை தஞ்சை குருஜி கணபதி சுப்பிரமணியம் சாஸ்திரி மற்றும் அவரது சீடர்கள் நடத்தினர். 

    • மானாமதுரை அருகே நடந்த மக்கள் தொடர்பு முகாமில் தமிழரசி எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    • மாங்குளம் ஊராட்சி தலைவர் முருகவள்ளி தேசிங்கு ராஜா வரவேற்றார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம். மாங்குளம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் தலைமை தாங்கி பேசிய மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி, பொதுமக்களுக்கு பட்டா மாறுதல்களையும், புதிய குடும்ப அட்டை, உதவித்தொகை, வேளாண் விளைபொருட்கள், மக்களை தேடி மருத்துவ பெட்டகங்களை பயனாளிகளுக்கு வழங்கினார். மாங்குளம் ஊராட்சி தலைவர் முருகவள்ளி தேசிங்கு ராஜா வரவேற்றார். ஒன்றியகுழு துணை தலைவர் முத்துசாமி மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்-சிறுபான்மை நல அலுவலர், வட்டாட்சியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தேவகோட்டை அருகே கோவில் நிலத்தை அபகரிக்க முயன்றதாக ஊராட்சி கிளார்க் மீது புகார் அளிக்கப்பட்டது.
    • நடவடிக்கை எடுக்காவிட்டால் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவோம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே இளங்குடி கிராமத்தில் ஊர் மத்தியில் கிராம தெய்வமாக விளங்கும் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் முளைப்பாரி திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    இந்த கிராமத்தில் பஞ்சாயத்து கிளர்க்காக இருப்பவர் சித்ரா (வயது40) இவரது வீடு கோவில் அருகே உள்ளது. இவர் தனது வீட்டின் செப்டிக் டேங்க் அமைக்க வேறு பகுதியில் இடமிருந்தும் அங்கு அமைக்காமல் கிராமக் கோவிலுக்கு எதிரில் உள்ள கோவில் நிலத்தில் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக திருவேம்பத்தூர் போலீஸ் நிலையத்திலும், தேவகோட்டை கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர். அதில், சித்ரா கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாகவும், சர்சைக்குரிய இடத்தில் சர்வேயர், கிராம நிர்வாக அலுவலர் சர்வே செய்து அந்த இடத்தை நீங்கள் பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்திருந்தனர்.இதையும் மீறி அவர் செப்டிக் டேங்க் அமைக்க முயற்சி செய்தார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

    இதுதொடர்பாக கிராம மக்கள் கூறும்போது, கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த ஊராட்சி கிளார்க் சித்ரா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவோம் என்று தெரி வித்தனர்.

    • இளையான்குடியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்ட கணக்கெடுப்பு முகாம் நடந்தது.
    • இதில் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.

     மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் உள்ள பேரூராட்சி மற்றும் கிராம பகுதியில் சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி அறிவுறுத்தலின்படி, இளையான்குடி பேரூராட்சி அலுவலகம், சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் இணைந்து மக்கள் குறைதீர்க்கும் கூட்ட கணக்கெடுப்பு முகாமை நடத்தியது. முள்ளியரேந்தல், நெடுங்குளம் மற்றும் கிருஷ்ணாபுரம் ஆகிய ஊராட்சிகளில் இந்த முகாம் நடந்தது. மாணவிகள் வீடு, வீடாக சென்று மக்களின் குறைகளை பதிவு செய்து பேரூராட்சி அலுவலர்களிடம் மனுக்களாக வழங்கினர். இதில் இளையான்குடி பேரூராட்சி அலுவலர்களுடன் இணைந்து கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் அஸ்மத்து பாத்திமா, அப்ரோஸ், சேக் அப்துல்லா மற்றும் உன்னத் பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் சுல்தான் செய்யது இப்ராஹிம், இணை ஒருங்கிணைப்பாளர் ஜெயமுருகன் ஆகியோர் உடன் சென்றனர். இந்த பணியில் ஈடுபட்ட மாணவிகளை கல்லூரி முதல்வர் அப்பாஸ்மந்திரி பாராட்டினார்.

    • சிங்கம்புணரி பேரூராட்சி அலுவலகத்தில் புதிய அலுவலக கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்வது குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
    • அதன் அருகிலேயே இடம் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சி அலுவலகத்தில் புதிய அலுவலக கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்வது குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்டு, தே.மு.தி.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணை சேர்மன் இந்தியன் செந்தில் தலைமையில் செயல் அலுவலர் ஜான்முகமது முன்னிலையில் கூட்டம் நடந்தது.

    இதில் பேரூராட்சியின் தற்போதைய கட்டிடம் பழைமையான கட்டிடம் என்பதாலும், அங்கு போதிய இடவசதி இல்லாத கார ணத்தாலும் புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடம் சீரணி அரங்கம் பகுதியில் தேர்வு செய்யப்படுவதாக பேரூராட்சி தலைவர் தெரிவித்தார்.

    இது சம்பந்தமாக நடைபெற்ற ஆேலாசனை கூட்டத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். பின்னர் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

    அ.தி.மு.க. நகர செயலாளர் வாசு பேசும்போது, புதிய பேரூராட்சி கட்டிடத்தை தவிர வர்த்தக பயன்பாட்டிற்காக வேறு எந்த ஒரு கட்டிடமும் கட்டக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். அதனைத்தொடர்ந்து காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சி நிர்வாகி களும் பேசினர்.

    கூட்டத்தில் சிறுவர் பூங்கா அருகே மஞ்சு விரட்டு மணி செய்யும் தொழிலாளர்களை மாற்று இடத்திற்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை பா.ஜ.க. நிர்வாகி விடுத்தார். அதற்கு தி.மு.க. கவுன்சிலர் மணிசேகரன் கூறும்போது, சிங்கம்புணரி நகருக்கான கோவில் ஊழியம் செய்யும் சிறு தொழில் செய்யும் அவர்களின் வாழ்வா தாரத்தை நசுக்ககூடாது. அவர்களுக்கு அதன் அருகிலேயே இடம் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார். உடனே பேரூராச்சி தலைவர் அவர்களுக்கு நல்ல இடம் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

    • சிவகங்கை உழவர் சந்தை அருகே புதிய நூலக கட்டிடத்தை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • சட்டமன்றத்தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை சட்டமன்றத்தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் மதிப்பில் சிவகங்கை உழவர் சந்தை அருகே புதிய நூலக கட்டிடம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. இதில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நூலக கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த், நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி, ஒப்பந்ததாரர் முருகன், நகர் மன்ற உறுப்பினர்கள் ராபர்ட், கிருஷ்ணகுமார், தாமு, ராமதாஸ், விஜயக்குமார், தகவல் தொழில்நுட்ப மண்டல இணை செயலாளர் தமிழ்செல்வன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் செல்வமணி, கோபி, பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன், வட்டசெயலாளர் அருண்குமார் தங்கவேலு, நகர் மாணவரணி செயலாளர் ராஜபாண்டி மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு கல்வி கடன் முகாம் வருகிற 29-ந் தேதி நடக்கிறது.
    • முகாமில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து உடனடி கடன் ஆணைகளும் வழங்கப்படும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம் அனைத்து வட்டாரங்களிலும் வருகிற 29-ந்தேதி (செவ்வாய்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

    சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, இளை யான்குடி, திருப்பு வனம், திருப்பத்தூர், தேவ கோட்டை, கல்லல், கண்ணங்குடி, சிங்கம்புணரி, எஸ்.புதூர் வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் முகாமிலும், சாக்கோட்டை வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் காரைக்குடி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள கவியரசு கண்ணதாசன் மணிமண்டபத்தில் நடைபெறும் முகாமிலும் பங்கேற்கலாம்.

    விண்ணப்ப நகல், மாணவ-மாணவி மற்றும் பெற்றோரின் 2 புதிய புகைப்படம், வங்கி ஜாயிண்ட் அக்கவுண்ட் பாஸ்புத்தக நகல், இருப்பிட சான்று நகல், வருமான சான்று நகல், ஜாதி சான்று நகல், பான் கார்டு நகல், ஆதார் அட்டை நகல், கல்லூரியிலிருந்து பெறப்பட்ட Bonafide சான்றிதழ் மற்றும் கல்விக்கட்டண விவரம், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்பு மற்றும் இள நிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை ஆகிய ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

    கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்பத்தின் நகல் மற்றும் குறிப்பிட்ட ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம். முகாமில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து உடனடி கடன் ஆணைகளும் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மானாமதுரை அருகே 20 ஆண்டுகளுக்கு பிறகு 4 கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது.
    • தண்ணீர் செல்லும் கால்வாய் முகப்பு மேடாகியதால் குறிப்பிட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல இயலாதநிலை இருந்து வருகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை 20 ஆண்டுகளாக தண்ணீர் செல்லாத கண்மாய்களுக்கு வைகை ஆற்றில் இருந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளின் தொடர் முயற்சியின் காரணமாக 4 கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    வைகை ஆற்றில் கடந்த 6 மாத காலமாக தண்ணீர் நிற்காமல் சென்று கொண்டிருப்பது வரலாற்று உண்மையாகும். கடந்த கால வரலாற்று நிகழ்வுகளில் இது போன்று வைகை ஆற்றில் தண்ணீர் சென்றது கிடையாது என்று பெரிய வர்கள் பெருமிதத்தோடு கூறுகிறார்கள்.

    தண்ணீர் செல்லும் கால்வாய் முகப்பு மேடா கியதால் குறிப்பிட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல இயலாத நிலை இருந்து வருகிறது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டியிடம் சங்க பொறுப்பாளர் காசிராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் தண்டியப்பன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வீரபாண்டி, செயலாளர் மோகன், மானாமதுரை ஒன்றிய தலைவர் பரமாத்மா, செயலாளர் முத்துராமலிங்கம், கீழமேல்குடி வெள்ளமுத்து, கீழமேல்குடி ஊராட்சி மன்றததலைவர் தர்மராமு மற்றும் கிராம பெரியவர்கள் வைகை ஆற்றில் வெள்ளமாக தண்ணீர் சென்று கொண்டிருக்கும் போது கீழ்மேல் குடி கண்மாய், மானாமதுரை கண்மாய், கால்பிரவு கண்மாய், கிருங்காகோட்டை கண்மாய் ஆகிய 4 கண்மாய்களுக்கும் தண்ணீர் செல்லாத அவல நிலையை எடுத்து கூறி இந்த கண்மாய்களுக்கு தண்ணீர் விட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் முயற்சியால் தற்போது அதற்கான வழிவகை ஏற்பட்டுள்ளது. வைகை ஆற்றில் இருந்து ஒரு கால்வாய் செல்கிறது. தூர்ந்து போயுள்ள அந்த கால்வாயை சீரமைத்து அதன் வழியாக தற்போது தண்ணீர் சென்று கொண்டி ருக்கிறது.

    இதற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், கலெக்டருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் காசிராஜன் நன்றி தெரிவித்தார்.

    • தேவகோட்டை அருகே பூட்டியிருந்த வீட்டில் கொள்ளையர்கள் புகுந்தனர்.
    • நகை-பணம் கிடைக்காததால் டி.வி.யை திருடிச்சென்றனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகர் பகுதியில் வசிப்பவர் சூசை அருள். இவரது மனைவி அன்னம்மாள் மேரி (வயது 65). இவரது வீடு ராம்நகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி எதிர்ப்புறம் உள்ளது.

    இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் நடைபெற்று ஒருவர் அமெரிக்காவிலும், மற்றொருவர் கோவையிலும் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த அன்னம்மாள் மேரி தனியாக வசித்து வருகிறார்.

    அவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டார். அவர் இன்று காலை 4 மணியளவில் தனது வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது அவரது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுபற்றி அறிந்த அக்கம் பக்கத்தினர் தேவகோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் டி.எஸ்.பி. கணேஷ்குமார், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் வீட்டில் இருந்த ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள எல்.சி.டி.டி.வி. திருடப்பட்டு இருந்தது.

    மேலும் வீட்டில் உட்புறம் உள்ள பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருள்கள் சிதறி கிடந்தன. ஆனால் அதில் நகைகள்-பணம் எதுவும் வைக்கப்படாததால் கொள்ளையர்கள் டி.வி.யை மட்டும் திருடிச் சென்றுள்ளனர்.

    சிவகங்கையில் இருந்து கைரேகை நிபுணர் குழுவினர் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் கைரேககைளை பதிவு செய்தனர். மேலும் அந்தப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை போலீசார் கைப்பற்றி பார்வையிட்டு வருகின்றனர்.

    ராம்நகர் பகுதிகளில் நடைபெற்று வரும் தொடர் திருட்டு சம்பவத்தால் அந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். தேவகோட்டை நகரில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் தாமாக முன்வந்து அவரவர் பகுதிகளில் கண்காணிப்பு காமிராக்களை பொருத்த வேண்டும் என்று டி.எஸ்.பி. கணேஷ்குமார் கேட்டுக் கொண்டார்.

    ×