என் மலர்
நீங்கள் தேடியது "New Moon Yagya"
- மானாமதுரை பஞ்சமுக பிரித்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசை யாகம் நடந்தது.
- புனிதநீர் கலசத்தை மேளதாளத்துடன் எடுத்துச் செல்லப்பட்டு மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவிக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள பஞ்ச பூதேஸ்வரம் என்னும் இடத்தில் 24 மணி நேரமும் அன்னதானம் நடைபெறும் பிரசித்தி பெற்ற மகா பஞ்சமுக பிரித்தியங்கிர தேவி கோவில் உள்ளது. இங்கு அமாவாசை தினத்தை முன்னிட்டு மகா கணபதி ஹோமத்துடன் யாகம் தொடங்கியது.
உலக மக்கள் துன்பத்தில் இருந்து விடுபட்டு வாழ்கையில் அனைத்து செல்வங்களை பெற்று பேரானந்தத்துடன் வாழ வேண்டியும், இயற்கை விவசாயம் செழிக்க வேண்டியும், நோய் தொற்றுகள் வரக்கூடாது எனவேண்டியும் பிரித்தியங்கிரா யாகம், வனதுர்க்கை யாகம் நடந்தது.
இந்த சிறப்பு யாகத்தில் அனைத்து வகை பழங்கள், உயர்ரக மிளகு, தேன், நெய் மற்றும் நோய் தீர்க்கும் மூலிகை பொருட்கள், பட்டு வஸ்திரம், பட்டு புடவைகள், மிகப்பெரிய பூமாலைகள் போடப்பட்டு யாகத்தை தஞ்சை குருஜி கணபதி சுப்பிரமணியம் சாஸ்திரி மற்றும் அவரது சீடர்கள் நடத்தினர்.






