என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கற்றல் பணிகளை விட மற்ற பணிகளை அதிகமாக செய்கிறோம்
- கற்றல் பணிகளை விட மற்ற பணிகளை அதிகமாக செய்கிறோம் என சிவகங்கை முதன்மை கல்வி அதிகாரியிடம் ஆசிரியர் கூட்டமைப்பினர் புகார் அளித்தனர்.
- இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக முதன்மை கல்வி அலுவலர் உறுதி அளித்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதனை சந்தித்து பேசினர்.
அப்போது நிர்வாகிகள், முதன்மை கல்வி அலுவலரிடம், மாநில உயர் அலுவலர்கள் அடங்கிய மண்டல ஆய்வு கள் சமீபத்தில்தான் முடிவ டைந்துள்ளதால் அந்த குழு அளித்துள்ள மீளாய்வு கருத்துகள் பள்ளிகளில் ஆசிரியர்களால் நடைமுறை ப்படுத்தப்பட்டு வரும் சூழலில், மாவட்ட அளவிலான குழு அமைத்து தொடர் ஆய்வுகள் மேற்கொள்ள திட்டமிடப்படுவதால் பதிவேடுகள் தயார் செய்வ திலேயே ஆசிரியர்களின் நேரம் வீணடிக்கப்படுகிறது.
இதனால் கற்றல், கற்பித்தலில் உள்ள சமநிலை பாதிக்கப்படுகிறது என்று எடுத்துரைத்தனர். தேவையற்ற பதிவேடுகளை ஆய்வுக்கு வரும் அலுவலர்களால் வலியுறுத்தப்படுவது ஆசிரியர்கள் மத்தியில் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
இது மாவட்ட கல்வி வளர்ச்சியை பாதிக்கும். பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளும்போது அறியப்படும் குறைகளை சரி செய்வதற்கு உரிய அறிவுரைகளை ஆசிரிய ர்களுக்கு வழங்க வேண்டும்.கற்றல் இடைவெளியால் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள நடத்தை மாற்றங்களை சரி செய்ய வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக முதன்மை கல்வி அலுவலர் உறுதி அளித்தார். இந்த சந்திப்பில் சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) சண்முக நாதன், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) முத்துச்சாமி, தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) மாரி முத்து, உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (இடைநிலை) அருளானந்து உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்