என் மலர்tooltip icon

    சேலம்

    • தேவி (வயது25). இவர் கரட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
    • தனது வீட்டின் அருகே இருந்த கிணற்றில் தனது மகன் சித்தேஸ்வரனை கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி கோனப்பெண்ட் பகுதியை சேர்ந்தவர் கணபதி. இவரது மனைவி தேவி (வயது25). இவர் கரட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு சித்தேஸ்வரன் என்ற 4 வயதில் மகன் உள்ளான்.

    இந்த நிலையில் இன்று காலை அரசு பள்ளி ஆசிரியை தேவி தனது வீட்டின் அருகே இருந்த கிணற்றில் தனது மகன் சித்தேஸ்வரனை கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் தேடி 2 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தொளசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில் ஆசிரியை தேவி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாகவும், இவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஸ்ரீதர் (வயது 26). எலக்ட்ரீசியன் இவர் வீடுகளுக்கு வயரிங் செய்யும் தொழில் செய்து வந்தார்.
    • இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீதர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஊரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி ஊராட்சி பூமிநாய்க்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் ஸ்ரீதர் (வயது 26). எலக்ட்ரீசியன் . இவர் வீடுகளுக்கு வயரிங் செய்யும் தொழில் செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    புத்தாண்டு கொண்டாட்டம்

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீதர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஊரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் முன்பு ரேடியோ செட் ஒலிபெருக்கி அமைத்து பாடல் ஒலிபரப்பு செய்து, மதுபோதையில் ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பட்டாசு வெடித்தும் சத்தம் போட்டு ஆரவாரம் செய்தனர்.

    அன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், அங்கு வந்தனர். நள்ளிரவில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம். ஒலிபெருக்கி மூலம் சத்தம் அதிகமாக வைப்பதால் வீட்டில் இருக்கும் வயதானவர்கள், பெண்கள், குழந்தை களுக்கு அசவுகரியமாக இருக்கும். எனவே அமைதியாக கொண்டாடுங்கள் என சொல்லி விட்டு போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    போலீசார், சென்றதும் சிறிது நேரத்திலேயே மீண்டும் ஸ்பீக்கரில் சத்தம் அதிகமாக வைத்து சினிமா பாடல் ஒலிப்பரப்பு செய்து மதுபோதையில் நடனமாடி கொண்டிருந்தனர்.

    மோட்டார்சைக்கிள் பறிமுதல்

    இது பற்றி தகவல் அறிந்த ஓமலூர் போலீ சார் அங்கு வந்து, ஸ்பீக்கர்,

    ரேடியோ செட் ஆகிய வற்றை பறிமுதல் செய்தனர். அப்போது அங்கு ஏராளமான மோட்டார்சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் நள்ளிரவில் அவர்கள் மது போதையில் பைக்ரேசில் ஈடுபடக்

    கூடும் என கருதி சந்தே கத்தின் அடிப்படையில் மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். இதில் ஸ்ரீதர் மோட்டார்சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    மோதல் வெடித்தது

    போலீசார், அங்கிருந்து சென்றதும் இது தொடர்பாக ஸ்ரீதர் தரப்பினருக்கும், அய்யம்பெருமாம்பட்டி, பழையூர் பகுதியை சேர்ந்த ராமன் மகன் விக்ரம் (26) தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்போது விக்ரம் தரப்பினர் சுற்றி வளைத்து ஸ்ரீதரை தாக்கினர். மேலும் விக்ரம் நண்பர் செட்டு மகன் மோகன்குமார் (23) என்பவர் கீழே கிடந்த கட்டையை எடுத்து ஸ்ரீதர் தலையில் ஓங்கி அடித்தார்.

    இதில் ஸ்ரீதர் மண்டை உடைந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. ஊர்மக்கள் அங்கு கூடி சண்டையை விலக்கி விட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஸ்ரீதரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    பரிதாபமாக இறந்தார்

    இந்த சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, விக்ரம், மோகன்குமார் ஆகியோரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இதனிடையே தலையில் பலமாக தாக்கியதால் ஸ்ரீதருக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நேற்று இரவு ஸ்ரீதர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    4 பேருக்கு வலைவீச்சு

    இதையடுத்து கைதான விக்ரம், மோகன்குமார் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், லிப்தீஷ், மற்றொரு கார்த்திக், கோகுல் ஆகிய 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது எல்க்ட்ரீசியன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சி யையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • விஜயகுமார் (வயது 29). இவர் லாரிகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்தார்.
    • கணவன்-மனைவி இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக வைஷ்ணவி அவரது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.

    சேலம்:

    சேலம் அரிசிபாளையம் சின்னப்பன் தெருவை சேர்ந்த இளங்கோ மகன் விஜயகுமார் (வயது 29). இவர் லாரிகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்தார். விஜயகுமாருக்கு ரேகா தேவி(28) மற்றும் வைஷ்ணவி(27) ஆகிய 2 மனைவிகள் உள்ளனர்.

    முதல் மனைவிக்கு 11 வயதில் ஒரு மகனும் 2-வது மனைவிக்கு 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து திருவாக் கவுண்டனூர் பகுதியில் வசித்து வருகிறார். 2-வது மனைவி வைஷ்ணவியுடன் விஜயகுமார் வசித்து வந்தார்.

    கடந்த மாதம் 25-ந் தேதி கணவன்-மனைவி இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக வைஷ்ணவி அவரது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.

    வீட்டில் தனியாக இருந்த விஜயகுமார் நேற்று காலை 8 மணி அளவில் வீட்டில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    இது குறித்த புகார் பேரில் பள்ளப்பட்டி போலீசார் சம்பவஇடத்திற்கு சென்று விஜயகுமார் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் விஜயகுமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    விஜயகுமாருக்கும் அந்த பகுதியை சேர்ந்த சில வாலிபர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் 3 வாலிபர்கள் விஜயகுமாரை தாக்கி உள்ளனர் இதில் படுகாயம் அடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே இறந்ததாக கூறப்படுகிறது.

    விஜயகுமாரை தாக்கிய வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.மேலும் இது சம்பந்தமாக சிலரை பிடித்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

    • வைகுண்ட ஏகாதசியை யொட்டி சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • மார்கழி மாதத்தில் நடக்கும் இந்த உற்சவம் 20 நாட்கள் நடைபெறும்.

    சேலம்:

    வைகுண்ட ஏகாதசியை யொட்டி சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பெருமாள் கோவில்க ளில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று வைகுண்ட ஏகாதசி விழாவாகும். ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் நடக்கும் இந்த உற்சவம் 20 நாட்கள் நடைபெறும். இந்த விழாவின் முக்கிய மான நிகழ்ச்சியாக மார்கழி

    மாத வளர்பிறை ஏகாதசி திதி அன்று "சொர்க்க வாசல்" என்று அழைக்கப்ப டும் பரமபத வாசல் திறக்கப்படும். இந்த சொர்க்கவாசல் வழியே அன்றைய தினம் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    இதன்படி சேலம் மாநகரில் கோட்டை பெருமாள் கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் இன்று

    அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு உற்சவம்வி மரிசையாக நடைபெற்றது.

    சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சிக்காக, அழகிரிநாத சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து திருப்பாவை பாடல்கள் பாடப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தன. சரியாக அதிகாலை 5.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அழகிரி நாத பெருமாள் "பரமபத வாசல்" என்றழைக்கப்படும் சொர்க்க வாசல் வழியாக அழைத்து வரப்பட்டார்.

    அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் "கோவிந்தா... கோவிந்தா" என பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பினார்கள். சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த பெருமாள், கோவிலின் கிழக்கு வாசல் வழியாக மீண்டும் கோவிலுக்குள் சென்று உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    விழாவை முன்னிட்டு கண்ணாடி மாளிகையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவிலில் மூலவர் அழகிரிநாதபெருமாள், சுந்தரவல்லி தாயார், ஆண்டாள், ஆஞ்சநேயர், கருடாழ்வார், கிருஷ்ணர், விஷ்ணுதுர்க்கை சன்னதி களில் மூலவர்களுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடந்தன.

    சொர்க்கவாசல் திறப்பை காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நள்ளிரவு கோவிலுக்கு வந்து காத்திருந்தனர். சேலம் மாநகரில் மட்டுமல்லாது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து குவிந்தனர். கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்ய தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. மாற்றுத்திறனாளி களுக்கும், முதியவர்க ளுக்கும் சாமி தரிசனம் செய்துவிட்டு வருவதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுதர்சன பட்டாச்சாரியார் செய்திருந்தார். விழாவை முன்னிட்டு சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கார்மேகம், மேயர் ராமச்சந்திரன், துணை கமிஷனர் லாவண்யா இந்து அறநிலையத்துறை அதி காரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து கோவிலில் "இராப்பத்து" உற்சவமும் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தின்போது தினமும் இரவு 8 மணிக்கு பெருமாள் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளல், இரவு 8.30 மணிக்கு திருக்கொட்டாரத்தில் பக்தி உலாவுதல் உற்சவமும் நடைபெறுகிறது.

    பட்டை கோவில்

    இதேபோல் சேலம் டவுன் பட்டைக்கோவிலில் இன்று அதிகாலை 5.15 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு

    சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாளை தரிசித்த னர். மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பட்டைக்கோவில் அருகே

    உள்ள ஆஞ்சநேயர் சன்னதி யில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.

    சேலம் செவ்வாய்ப்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் அதிகாலை 5.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. விழாவையொட்டி மூலவர், பிரகாரத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடந்தன. அங்கும் காலை முதல் மாலை வரை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அம்மாப்பேட்டை சிங்கமெத்தை சவுந்தரராஜ பெருமாள் கோவில், செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவில், சேலம் 2-வது அக்ரஹாரம் லட்சுமி நாராயணசுவாமி கோவில், சின்ன திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில், பெரமனூர் வெங்கடேச பெருமாள் கோவில், பிருந்தாவன் ரோட்டில் உள்ள வெங்கடா

    சலபதி கோவில், மகேந்திர புரியில் உள்ள அலமேலு மங்கை சமேத வெங்கடேச வரதராஜ பெருமாள் கோவில் உள்பட சேலத்தில் உள்ள அனைத்து பெருமாள்

    கோவில்களிலும் இன்று அதிகாலை வைகுண்ட ஏகா தசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

    • புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது எல்க்ட்ரீசியன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
    • கைதான விக்ரம், மோகன்குமார் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கை கொலை வழக்கமாக மாற்றி போலீசார் பதிவு செய்தனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி ஊராட்சி பூமிநாய்க்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் ஸ்ரீதர் (வயது 26). எலக்ட்ரீசியன் . இவர் வீடுகளுக்கு ஓயரிங் செய்யும் தொழில் செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீதர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஊரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் முன்பு ரேடியோ செட் ஒலிபெருக்கி அமைத்து பாடல் ஒலிபரப்பு செய்து, மதுபோதையில் ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பட்டாசு வெடித்தும் சத்தம் போட்டு ஆரவாரம் செய்தனர்.

    அன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், அங்கு வந்தனர். நள்ளிரவில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம். ஒலிபெருக்கி மூலம் சத்தம் அதிகமாக வைப்பதால் வீட்டில் இருக்கும் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு அசவுகரியாக இருக்கும். எனவே அமைதியாக கொண்டாடுங்கள் என சொல்லி விட்டு போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    போலீசார், சென்றதும் சிறிது நேரத்திலேயே மீண்டும் ஸ்பீக்கரில் சத்தம் அதிகமாக வைத்து சினிமா பாடல் ஒலிப்பரப்பு செய்து மதுபோதையில் நடனமாடி கொண்டிருந்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்த ஓமலூர் போலீசார் அங்கு வந்து, ஸ்பீக்கர், ரேடியோ செட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அப்போது அங்கு ஏராளமான மோட்டார்சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் நள்ளிரவில் அவர்கள் மது போதையில் பைக்ரேஷிசில் ஈடுபடக்கூடும் என கருதி சந்தேகத்தின் அடிப்படையில் மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். இதில் ஸ்ரீதர் மோட்டார்சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    போலீசார், அங்கிருந்து சென்றதும் இது தொடர்பாக ஸ்ரீதர் தரப்பினருக்கும், அய்யம்பெரும்மாம்பட்டி, பழையூர் பகுதியை சேர்ந்த ராமன் மகன் விக்ரம் (26) தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்போது விக்ரம் தரப்பினர் சுற்றி வளைத்து ஸ்ரீதரை தாக்கினர். மேலும் விக்ரம் நண்பர் செட்டு மகன் மோகன்குமார் (23) என்பவர் கீழே கிடந்த கட்டையை எடுத்து ஸ்ரீதர் தலையில் ஓங்கி அடித்தார்.

    இதில் ஸ்ரீதர் மண்டை உடைந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. ஊர்மக்கள் அங்கு கூடி சண்டையை விலக்கி விட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஸ்ரீதரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, விக்ரம், மோகன்குமார் ஆகியோரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இதனிடையே தலையில் பலமாக தாக்கியதால் ஸ்ரீதருக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நேற்று இரவு ஸ்ரீதர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து கைதான விக்ரம், மோகன்குமார் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கை கொலை வழக்கமாக மாற்றி போலீசார் பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், லிப்தீஷ், மற்றொரு கார்த்திக், கோகுல் ஆகிய 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது எல்க்ட்ரீசியன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • 25 வயது இளம் பெண் ஒருவர், கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொண்டலாம்பட்டி சரக போலீஸ் உதவி கமிஷனர் ஆனந்தியிடம் புகார் மனு ஒன்று கொடுத்தார்.
    • என் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துக் கொண்டு சென்றுவிட்டார்.

    சேலம்:

    காதலர்களை மிரட்டி நகை பறித்த வழக்கில் கைதான சேலம் வியாபாரி சிறையில் அடைக்கப்பட்டார்.

    சேலத்தில் 25 வயது இளம் பெண் ஒருவர், கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொண்டலாம்பட்டி சரக போலீஸ் உதவி கமிஷனர் ஆனந்தியிடம் புகார் மனு ஒன்று கொடுத்தார். அந்த புகாரில், சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த சரவணன் (வயது 45) என்ற சர்க்கரை வியாபாரி, எனது தந்தையின் உறவினர் என்று கூறி அறிமுகமானார்.

    கொண்டலாம்பட்டி பட்டர்பிளை பாலம் அருகே நைசாக பேசி அழைத்து சென்று, என் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துக் கொண்டு சென்றுவிட்டார். இதன் பின்னரே அவர் எனது தந்தையின் உறவினர் இல்லை என்பதும், மோசடி நபர் என்பதும் தெரியவந்தது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த புகார் குறித்து தனிப்படை அமைத்து, சரவணனை போலீசார் தேடி வந்தனர்.

    இதனிடையே, கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, சரவணனை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன் விபரம் வருமாறு:-

    சரவணன் கடந்த 10 ஆண்டுகளாக பல பெண்களை ஏமாற்றியும், காதலர்கள் சேர்ந்து இருக்கும்போது, அவர்கள் பேசுவதை படம் எடுத்துக் கொண்டு அவர்களை மிரட்டியும் நகை, பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

    இதையடுத்து சரவணனை கைது செய்த போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். மேலும் சரவணனிடம் இது போன்று நகையை பறிகொடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள், சரவணன் மீது புகார் கொடுக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

    • மேச்சேரி ஏறகுண்டப்பட்டி ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது.
    • இதை முன்னிட்டு கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    சேலம்:

    மேச்சேரி ஏறகுண்டப்பட்டி ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு நாட்டியாலயாவின் பாரத நடன நிகழ்ச்சியும், 10 மணி முதல் பஜனையும் நடைபெற்றது.

    இன்று அதிகாலை 2.45 மணிக்கு திருமஞ்சனம் நீராட்டல் நடந்தது. தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அலங்காரமும் 4.45 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்பு 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சாமி சிறப்பு அலங்காரத்தில் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினார்.

    அப்போது ஏராளமான பக்தர்கள் கோவிந்த கோவிந்தா என பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தார்கள். பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு மற்றும் அன்னதானமும் வழங்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை சுகுமார்-வனிதா மணியம்மாள் சாரிட்டபிள் டிரஸ்ட் அறக்கட்டளைதாரர் மற்றும் நிர்வாகிகள், விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் பணி செய்ய நர்சுகளுக்கு தற்காலிக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
    • அதன்படி, ரூ.14 ஆயிரம் மாத சம்பளத்தில் சுமார் 6 ஆயிரம் நர்சுகள் தற்காலிக மாக நியமிக்கப்பட்டனர்.

    சேலம்:

    தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் பணி செய்ய நர்சுகளுக்கு தற்காலிக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.அதன்படி, ரூ.14 ஆயிரம் மாத சம்பளத்தில் சுமார் 6 ஆயிரம் நர்சுகள் தற்காலிக மாக நியமிக்கப் பட்டனர். இவர்களுக்கு டிசம்பர் மாதம் 31-ந் தேதியுடன் பணி முடிந்துவிட்டது என்றும், அதன் பிறகு பணி நீட்டிப்பு வழங்கப்படாது என்றும் நேற்று முன்தினம் சுகாதாரத்துறை அறிவித்தது.

    இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தொற்று காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட நர்சுகள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் மீண்டும் பணி வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் நர்சுகள் யாரும் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை.

    இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகளிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால் கலெக்டர் அலுவலகம் எதிரில் சாலையோரம் நர்சுகள் அனைவரும் அமர்ந்து இரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 105 நர்சுகளை இரவில் போலீசார் கைது செய்தனர். பின்னர் கோட்டையில் உள்ள மண்டபத்தில், அவர்களை அடைத்தனர்.

    இதையடுத்து அவர்களை காலையில் போலீசார் விடுவித்தனர். ஆனால் அவர்கள் எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை யாரும் இங்கிருந்து செல்லமட்டோம் என கூறினர். மேலும் அவர்கள் கூறும்போது:- தற்காலிக மாக நியமிக்கப்பட்ட எங்களை மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்க்க வேண்டும். கொரோனா தொற்று காலத்தில் தன்னலம் பாராமல் அனைவரும் பணிபுரிந்தோம். சுகாதா

    ரத்துறையில் காலியாக உள்ள நர்சுகள் பணியிடங்க ளில் எங்களுக்கு முன்னு ரிமை வழங்க வேண்டும் என்றனர்.இதனால் கோட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • சேலம் மேற்கு அஞ்–சல் கோட்டத்தில ஓய்–வூ–தி–ய–தா–ரர்–கள் வீட்–டில் இருந்–த–ப–டியே பயோ–மெட்–ரிக் முறையை பயன்–ப–டுத்தி டிஜிட்–டல் ஆயுள் சான்–றி–தழ் சமர்ப்–பிக்க ஏற்–பாடு செய்–துள்–ளது.
    • இதற்கு சேவை கட்–ட–ண–மாக ரூ.70 தபால்–கா–ர–ரி–டம் செலுத்த வேண்–டும்.

    சேலம்:

    சேலம் மேற்கு அஞ்–சல் கோட்ட கண்–கா–ணிப்–பா–ளர் அலு–வ–ல–கம் வெளி–யிட்–டுள்ள செய்–திக்–கு–றிப்–பில் கூறி–யி–ருப்–ப–தா–வது:-

    நேரில் சென்று ஆயுள் சான்–றி–தழ் சமர்ப்–பிக்க ஓய்–வூ–தி–ய–தா–ரர்–கள் படும் சிர–மங்–களை தவிர்க்–கும் வகை–யில் அஞ்–சல் துறை–யின் கீழ் செயல்–படும் இந்–தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ஓய்–வூ–தி–ய–தா–ரர்–கள் வீட்–டில் இருந்–த–ப–டியே பயோ–மெட்–ரிக் முறையை பயன்–ப–டுத்தி டிஜிட்–டல் ஆயுள் சான்–றி–தழ் சமர்ப்–பிக்க ஏற்–பாடு செய்–துள்–ளது. இதற்கு சேவை கட்–ட–ண–மாக ரூ.70 தபால்–கா–ர–ரி–டம் செலுத்த வேண்–டும்.

    ஓய்–வூ–தி–ய–தா–ரர்–கள் தங்–கள் பகுதி தபால்–கா–ர–ரி–டம் ஆதார் எண், செல்–போன் எண், பி.பி.ஓ. எண் மற்–றும் ஓய்–வூ–திய கணக்கு விவ–ரங்–களை தெரி–வித்து, கைவி–ரல் ரேகை பதிவு செய்–தால், ஒரு சில நிமி–டங்–களில் டிஜிட்–டல் ஆயுள் சான்–றி–தழை சமர்–பிக்க முடி–யும்.

    இந்த டிஜிட்–டல் ஆயுள் சான்–றி–தழ் சேவையை பெற விரும்–பும் ஓய்–வூ–தி–ய–தா–ரர்–கள் அரு–கில் உள்ள அஞ்–ச–ல–கம் அல்–லது தங்–க–ளது பகுதி தபால்–கா–ரரை தொடர்பு கொள்–ள–லாம். மத்–திய அரசு ஓய்–வூ–தி–ய–தா–ரர்–கள் மட்–டு–மின்றி தொழி–லா–ளர் வருங்–கால வைப்பு நிதி நிறு–வ–னம் மூலம் ஓய்–வூ–தி–யம் பெறு–ப–வர்–களும், இந்த வச–தியை பயன்–ப–டுத்தி வீட்–டில் இருந்–த–ப–டியே தங்–கள் பகுதி தபால்–கா–ர–ரி–டம் ஆயுள் சான்–றி–தழை சமர்ப்–பித்து பயன்–பெ–ற–லாம்.

    இவ்–வாறு அதில் கூறப்–பட்–டுள்–ளது.

    • இன்று சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டாச்சாரியார்கள் செய்திருந்தனர்.
    • அதிகாலை 5 மணிக்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பல வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை ஸ்ரீ பூதேவி,சமேத ஸ்ரீ அலமேலு உடனுறை ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் சாமி கோயில், சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

    அதன்படி இன்று சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டாச்சாரியார்கள் செய்திருந்தனர். அதிகாலை 5 மணிக்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பல வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று.


    காட்டூர் பாண்டுரங்கர் கோவில்

    காட்டூர் பாண்டுரங்கர் கோவில்

    அதன் பின்னர் சொர்க்கவாசல் கதவு திறக்கப்பட்டு, அதன் வழியாக சுவாமி பல்லக்கில் எடுத்துவரப்பட்டார். அப்பொழுது கோவிந்தா கோவிந்தா என பக்தர்கள் கோஷம் எழுப்பினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, அதிகாலை முதலே பெரு மாளை தரிசனம் செய்து வருகின்றனர். ஆத்தூர் நகர மன்ற தலைவி நிர்மலா பபிதா மணிகண்டன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.

    குமாரபாளையம்

    வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு இன்று அதி காலையில் குமாரபா ளையத்தில் உள்ள பெரு மாள் கோவில்களில் சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற்றது. அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி கோவில், காட்டூர் பாண்டுரங்கர் கோவில், கோட்டை மேடு பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அதிகாலை முதலே திரளான பக்தர்கள் பரமபத வாசல் வழியே சுவாமி தரிசனம் செய்தனர். தரிசனம் செய்த பக்தர்க ளுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    ராசிபுரம்

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மேட்டுத்தெருவில் பிரசித்தி பெற்ற பொன் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு இன்று அதிகாலை 5 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது பொன் வரதராஜ பெருமாள் சேஷ வாகனத்தில் முத்தங்கி கவச அலங்காரத்தில் பரமபத வாசல் வழியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதில் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டபடி, பெருமாளை வழிபட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று சாமியை தரிசனம் செய்தனர். பொன் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஜனகல்யாண் இயக்கம் சார்பில் அதன் தலைவர் பரந்தாமன், செயலாளர் மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டன.

    • கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் பணி செய்ய நர்சுகளுக்கு தற்காலிக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
    • கொரோனா தொற்று காலத்தில் தன்னலம் பாராமல் அனைவரும் பணிபுரிந்தோம்.

    சேலம்:

    தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் பணி செய்ய நர்சுகளுக்கு தற்காலிக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.அதன்படி, ரூ.14 ஆயிரம் மாத சம்பளத்தில் சுமார் 6 ஆயிரம் நர்சுகள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு டிசம்பர் மாதம் 31-ந் தேதியுடன் பணி முடிந்துவிட்டது என்றும், அதன் பிறகு பணி நீட்டிப்பு வழங்கப்படாது என்றும் நேற்று முன்தினம் சுகாதாரத்துறை அறிவித்தது.

    இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தொற்று காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட நர்சுகள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் மீண்டும் பணி வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் நர்சுகள் யாரும் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை.

    இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகளிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால் கலெக்டர் அலுவலகம் எதிரில் சாலையோரம் நர்சுகள் அனைவரும் அமர்ந்து இரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 105 நர்சுகளை இரவில் போலீசார் கைது செய்தனர். பின்னர் கோட்டையில் உள்ள மண்டபத்தில், அவர்களை அடைத்தனர்.

    இதையடுத்து அவர்களை காலையில் போலீசார் விடுவித்தனர். ஆனால் அவர்கள் எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை யாரும் இங்கிருந்து செல்லமட்டோம் என கூறினர். மேலும் அவர்கள் கூறும்போது:- தற்காலிகமாக நியமிக்கப்பட்ட எங்களை மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்க்க வேண்டும். கொரோனா தொற்று காலத்தில் தன்னலம் பாராமல் அனைவரும் பணிபுரிந்தோம். சுகாதாரத்துறையில் காலியாக உள்ள நர்சுகள் பணியிடங்களில் எங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றனர்.இதனால் கோட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆத்தூர் நகராட்சி 14-வது வார்டு மேட்டு தெருவில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள 5 குடிசை வீடுகளில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
    • அருகில் உள்ள வீடுகளுக்கும் தீ மளமளவென பரவியதால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி 14-வது வார்டு மேட்டு தெருவில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள 5 குடிசை வீடுகளில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. அருகில் உள்ள வீடுகளுக்கும் தீ மளமளவென பரவியதால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

    இதையடுத்து, ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. நிலைய அலுவலர் அசோகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள்ளாகவே 5 குடிசை வீடுகளும் முற்றிலும் எரிந்து சாம்பல் ஆகின. வீடுகளில் இருந்த பீரோ, நகை, பணம், டிவி, மிக்சி உள்பட பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள், பல்வேறு ஆவணங்களும் தீயில் கருகின.

    வீடுகளில் பிடித்த தீ, அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அமைக்கப்பட்டு இருந்த பந்தலிலும் பரவியது. இதில் பந்தல் முற்றிலும் எரிந்து நாசமானது. விசாரணையில், உசேன் என்பவருடைய வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டதால் இந்த தீ பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

    விபத்து குறித்து தகவல் அறிந்து ஆத்தூர் கோட்டாட்சியர் சரண்யா, ஆத்தூர் நகர மன்ற தலைவி நிர்மலா பபிதா ஆகியோரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். வீடுகளை இழந்தவர்களுக்கு தேவையான மாற்று ஏற்பாடுளையும் செய்தனர்.

    பின்னர், ஆத்தூர் நகர தி.மு.க செயலாளர் பாலசுப்பிரமணியம் வழி காட்டுதலின்படி, ஆத்தூர் நகர மன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்குவதற்கான வசதியும், தேவையான மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களையும் வழங்கினார்.

    ×