search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேச்சேரி எறகுண்டப்பட்டி ரங்கநாதர் கோவிலில்  சொர்க்கவாசல் திறப்பு
    X

    விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் ரங்கநாதர் அருள்பாலித்த காட்சி.

    மேச்சேரி எறகுண்டப்பட்டி ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

    • மேச்சேரி ஏறகுண்டப்பட்டி ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது.
    • இதை முன்னிட்டு கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    சேலம்:

    மேச்சேரி ஏறகுண்டப்பட்டி ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு நாட்டியாலயாவின் பாரத நடன நிகழ்ச்சியும், 10 மணி முதல் பஜனையும் நடைபெற்றது.

    இன்று அதிகாலை 2.45 மணிக்கு திருமஞ்சனம் நீராட்டல் நடந்தது. தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அலங்காரமும் 4.45 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்பு 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சாமி சிறப்பு அலங்காரத்தில் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினார்.

    அப்போது ஏராளமான பக்தர்கள் கோவிந்த கோவிந்தா என பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தார்கள். பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு மற்றும் அன்னதானமும் வழங்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை சுகுமார்-வனிதா மணியம்மாள் சாரிட்டபிள் டிரஸ்ட் அறக்கட்டளைதாரர் மற்றும் நிர்வாகிகள், விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×