என் மலர்
சேலம்
- கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- மேட்டூர் அணையில் தற்போது 88.19 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 116.63 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 5 ஆயிரத்து 793 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று 6 ஆயிரத்து 140 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 1000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே தண்ணீர்திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையில் தற்போது 88.19 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- ஆந்திர ஐயப்ப பக்தர்கள்ரயிலில் கற்பூரம் ஏற்றி வழிபட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- ரெயிலில் கற்பூரம் கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்கப்படும்.
திருப்பதியில் இருந்து கொல்லம் சென்ற ரெயிலில் ஆபத்தை உணராமல் ஆந்திர ஐயப்ப பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.
திருப்பதியில் இருந்து கொல்லம் சென்ற ரெயில் சேலம் வழியாக சென்ற போது தடையை மீறி கற்பூரம் ஏற்றி ஐயப்ப பக்தர்கள் வழிபாடு செய்தனர். இணையத்தில் வெளியான வீடியோவை வைத்து போலீசார் அவர்கள் மீது மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஐயப்ப பக்தர்கள் தரிசனம் முடித்து திரும்பிய பின்னர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
ரெயிலில் கற்பூரம் கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- உடல் அழுகிய நிலையில் காணப்படுவதால் அங்கேயே பிரேத பரிசோதனை நடத்திட போலீசார் முடிவு செய்துள்ளனர்.
- ஆற்றுக்குள் செல்போன் டவரை பிடித்துக் கொண்டு தத்தளித்தபடி உயிருக்கு போராடிய ராமுவை உயிருடன் மீட்டனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் ராமு(27). இவரது மனைவி மோகனாம்பாள் (19). இவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். காதல் திருமணம் செய்து கொண்ட இருவருக்கும் இடையே கடந்த 1-ந் தேதி இரவு தகராறு ஏற்பட்டது.
இதில் மனமடைந்த மோகனாம்பாள், பேளூர் அருகே வேட்டைக்காரனூர் பாலத்தில் இருந்து வசிஷ்டநதியில் குதித்தார். இவரை தொடர்ந்து அவரது கணவர் ராமுவும் வஷிஷ்டநதியில் குதித்தார். இதுகுறித்து தகவலறிந்த அந்த பகுதி மக்கள் நள்ளிரவு நேரத்தில் ஆற்றுக்குள் செல்போன் டவரை பிடித்துக் கொண்டு தத்தளித்தபடி உயிருக்கு போராடிய ராமுவை உயிருடன் மீட்டனர்.
ஆற்றில் குதித்த கர்ப்பிணிப் பெண் மோகனாம்பாள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது குறித்து வாழப்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் புதன்கிழமை மாலை வரை தொடர்ந்து 4 நாட்கள் தேடியும், ஆற்றில் வெள்ளம் குறையாததால் மோகனாம்பாளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தேடும் பணியை தீயணைப்பு துறையினர் நிறுத்திக் கொண்டனர்.
இன்று அதிகாலை வசிஷ்டநதியில் தண்ணீர் வரத்து குறைந்த நிலையில், பேளூர் அடுத்த ராமநாதபுரத்தில் வசிஷ்ட நதியின் கரையில் ஒரு பெண்ணின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதை கண்ட இப்பகுதி மக்கள், வாழப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது கரை ஒதுங்கிக் கிடந்த பெண் மோகனாம்பாள் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவரது தாயார் மற்றும் உறவினர்களை வரவழைத்து உறுதிப்படுத்திய போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன், மோகனாம்பாளின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் அழுகிய நிலையில் காணப்படுவதால் அங்கேயே பிரேத பரிசோதனை நடத்திட போலீசார் முடிவு செய்துள்ளனர். 7 நாட்களுக்கு முன் வசிஷ்ட நதியில் குதித்த கர்ப்பிணிப் பெண் இன்று அதிகாலை பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் உறவினர்களி டையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.78அடியாக இருந்தது.
- அணையில் 86.89 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.78அடியாக இருந்தது.
அணைக்கு வினாடிக்கு நேற்று 14 ஆயிரத்து 404 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 9 ஆயிரத்து 601 கனஅடியாக குறைந்து காணப்பட்டது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 1000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 300 அடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையில் 86.89 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.
- அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
- தற்போது அணையில் 86.20 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
அதே நேரம் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் தேவை குறைந்ததால் அணையில் இருந்து குறைந்த அளவிலேயே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.32 அடியாக உயர்ந்து காணப்பட்டது. மேலும் அணைக்கு நேற்று வினாடிக்கு 25 ஆயிரத்து 98 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 14,404 கனஅடியாக குறைந்தது. தொடர்ந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 86.20 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.
- இந்தியாவில் சமையல் எண்ணெய்கள் அதிக அளவில் மலேசியா உள்பட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
- மத்திய அரசின் இறக்குமதி வரி உயர்வு மற்றும் சில நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போரால் மலேசியாவில் சமையல் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
சேலம்:
நமது அன்றாட சமையலில் சமையல் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. வெவ்வெறு வகையான எண்ணெய்களை நம்முடைய அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலம் பல்வேறு பலன்கள் கிடைக்கிறது. சமையலுக்கு சரியான எண்ணெய் பயன்படுத்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் சமையல் எண்ணெய் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
உணவுகளில் எண்ணெய் இல்லாத உணவுகளை எடுத்து கொண்டால் அதிக சோர்வு மற்றும் உடல் நிலை சரியில்லாமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எண்ணெயில் இருந்து கிடைக்கும் கொழுப்பு உடலுக்கு மிகவும் முக்கியம், அவை மூளை நரம்பு மண்டலங்களை சிறப்பாக இயங்க உதவி புரியும். மார்க்கெட்டுகளில் பல்வேறு விதமான சமையல் எண்ணெய்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டாலும் தரமான எண்ணெய்களை நாம், தேடி தேர்வு செய்ய வேண்டும்.
இந்தியாவில் சமையல் எண்ணெய்கள் அதிக அளவில் மலேசியா உள்பட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த இத்தகைய எண்ணெயின் விலை தற்போது அதிக அளவில் உயர்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் 110 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பின்னர் மத்திய அரசு இறக்குமதி வரியை உயர்த்தியதால் தீபாவளி நேரத்தில் லிட்டருக்கு 20 ரூபாய் உயர்ந்தது.
பின்னர் தீபாவளி பண்டிகை முடிந்ததும் விலை குறையும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக லிட்டருக்கு மேலும் 20 ரூபாய் உயர்ந்தது. இதனால் பல்வேறு சமையல் எண்ணெய்கள் ஒரு லிட்டர் தற்போது 150-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கடந்த 2 மாதங்களில் மட்டும் சமையல் எண்ணெய் ஒரு லிட்டருக்கு 40 ரூபாய் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திடீர் விலை உயர்வால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த விலை உயர்வுக்கு காரணம் குறித்து சேலம் மாவட்ட எண்ணெய் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறுகையில் , மத்திய அரசின் இறக்குமதி வரி உயர்வு மற்றும் சில நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போரால் மலேசியாவில் சமையல் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. மலேசியாவில் இருந்து அதிக அளவில் சமையல் எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துகள் இந்தியா இறக்குமதி செய்வதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு மேலும் சில மாதங்கள் நீடிக்கும். தற்போதைக்கு விலை குறைய வாய்ப்பில்லை இவ்வாறு அவர்கள் கூறினர் .
- அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் பரிசல் மூலம் பயணித்து வருகின்றனர்.
- திருமணிமுத்தாறு-சரபங்கா நதியில் தொடர்ந்து வெள்ளம்.
சேலம்:
சேலத்தில் முக்கிய நீராதாரமே மலைகள் தான். ஏற்காடு சேர்வராயன் மலை தொடரில் உள்ளது. திருமணிமுத்தாறின் பிறப்பிடமாக ஏற்காடு மலை திகழ்கிறது . சேர்வராயன் மலைகளில் இருந்து வழிந்தோடும் தண்ணீர் திருமணிமுத்தாறில் சங்கமித்து தொடர் சங்கிலி ஏரிகளை நிரப்பி காவிரியுடன் கலக்கிறது.
அதாவது திருமணிமுத்தாறு சேலம் நகரம் வழியாக உத்தமசோழபுரம், ஆட்டையாம்பட்டி, வீரபாண்டி வழியாக 120 கி.மீ. ஓடி பரமத்திவேலூர் அருகே காவிரியில் கலக்கிறது. சிறப்புமிக்க திருமணிமுத்தாறில் கடந்த 1972-ம் ஆண்டு பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது திருமணிமுத்தாறில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி பெரும் அழிவை ஏற்படுத்தியது.

இந்த பெரும் வெள்ளத்தில் கோட்டை மாரியம்மன் கோவில் அம்மன் கருவறை மூழ்கியது. திருவள்ளுவர் சிலை அருகே ஒரு வாரத்திற்கு மேல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக சேலம் மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி மற்றும் டிசம்பர் 1,2-ந்தேதிகளில் கன மழை பெய்தது. இதனால் சேலம் மாவட்டத்தில் மற்ற இடங்களை காட்டிலும் ஏற்காட்டில் அதிக மழை பெய்தது.
அங்கு கடந்த 1-ந்தேதி காலை நிலவரப்படி 144.4 மில்லி மீட்டர் மழையும், 2-ந்தேதி 238 மில்லி மீட்டர் மழையும், 3-ந்தேதி 98.2 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
இம்மழையால் ஏற்காடு மலைப்பாதை மற்றும் கிராமப்பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன.
ஏற்காட்டில் பெய்த பலத்த மழையினால் திருமணிமுத்தாறில் கடந்த 3-ந்தேதி காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 52 ஆண்டுகளுக்கு பிறகு திருமணிமுத்தாறில் மீண்டும் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கந்தம்பட்டி பைபாஸ் அருகே தரைப்பாலத்திற்கு மேல் இடுப்பளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
பாலத்தில் உள்ள தண்ணீர் மோட்டார்வைத்து வெளியேற்றப்பட்டது. கந்தம்பட்டி மற்றும் ஆற்றங்கரையோரம் உள்ள அனைத்து கிராமங்களிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
திருச்செங்கோடு அருகாமையில் கிராமங்களில் உள்ள திருமணிமுத்தாறு தரைபாலங்கள் அனைத்தும் மூழ்கடித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பல்வேறு கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
பரமத்திவேலூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. பரமத்திவேலூர் அருகே உள்ள பில்லூரில் இருந்து வில்லிபாளையம் உள்ளிட்ட தரைபாலம் மூழ்கியது. பொதுமக்கள் தரைபாலத்தை கடக்க வேண்டாம் என வருவாய்துறை, பேரூராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் வசிஷ்டநதி, சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சரபங்கா நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் எடப்பாடியில் உள்ள பெரிய ஏரி, சின்ன ஏரி, அரசிராமணி, பேரூராட்சி, குள்ளம்பட்டி, செட்டிப்பட்டியில் தரைபாலத்தை மூழ்கடித்து சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கிராமங்களில் விளைநிலங்கள் மட்டுமின்றி வீடுகள், பள்ளிகள், கடைகள் என கிராமம் முழுவதும் குளம்போல் தண்ணீர் தேங்கி பெருக்கெடுத்து ஓடியது. குள்ளம்பட்டியில் வெள்ளூற்று பெருமாள் கோவிலுக்கு செல்லும் சிறிய பாலமும் வெள்ளத்தால் சேதமடைந்தது.

ஓலப்பாளையம், கண்டாயிக்காடு, தைலங்காடு, வயக்காடு, சுக்கலான்காடு, கள்ளப்பாளையம், எல்லாப்பாளையம் உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தரைப்பாலம் மூழ்கியது. நைனாம்பட்டி, ஆரையான்காடு, செரக்காடு, வண்ணாங்காடு, கோட்டக்காடு, பூனையம்காடு, பெரியகாடு, புளியம்பட்டி உள்பட 25 குக்கிராமங்கள் வெள்ளம் சூழப்பட்டு தனித்தீவுகளாக மாறியுள்ளது.
தேவூர் மயிலம்பட்டி, மேட்டுகடை, பெரமச்சிபாளையம், மேட்டாங்காடு, சோழக்கவுண்டனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நெல், கரும்பு, வாழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
தண்ணீர் சூழ்ந்த கிராமங்களில் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், வெளியூர் செல்பவர்கள் பரிசல் மூலம் பள்ளிக்கு அழைத்து வந்து விடுகின்றனர். பள்ளி குழந்தைகளுக்கு உணவு, அத்தியாவசிய பொருட்கள், மளிகை பொருட்கள் ஆகியவற்றை பரிசல் மூலம் வீடுகளுக்கு வழங்கி வருகின்றனர். பால, மருந்து, மாத்திரைகள் வாங்க பொதுமக்கள் பரிசல் மூலம் பயணித்து வருகின்றனர்.
திருமணிமுத்தாறு-சரபங்கா நதி ஆகியவை கிராமங்களில் ஏற்படுத்திய சேதத்தை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து கணக்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த கிராமங்களில் அடிப்படை வசதிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருமணிமுத்தாறு-சரபங்கா நதியில் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 2 ஆறுகள் வெவ்வேறு திசைகளில் பயணித்தாலும் மழை வெள்ளத்தால் கடும் சேதத்தை ஏற்படுத்தி பொதுமக்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.
- மலைப்பாதையில் பாறைகள் உருண்டும் மரங்கள் சாய்ந்தும் கிடந்தது.
- கன ரக வாகனங்கள் மலைப்பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
சேலம்:
பெஞ்சல் புயல் காரணமாக சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 29-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை கன மழை கொட்டியது. இதனால் மலைப்பாதையில் ஆங்காங்கே சிற்றருவிகள் உருவாகி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
தொடர்ந்து அஸ்தம்பட்டியில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 20 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் ஏற்காடு மலைப்பாதையில் பாறைகள் உருண்டும் மரங்கள் சாய்ந்தும் விழுந்ததால் வாகனப்போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது.
குப்பனூர் வழியாக மட்டும் வாகனங்கள் சென்று வந்தன. இதனால் பொது மக்கள் தவித்தனர். தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் சாலையில் விழுந்த மண், பாறைகள் மற்றும் முறிந்து விழுந்த மரக்கிளைகளை அகற்றி வந்தனர். மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து சேலத்தில் இருந்து வழக்கமாக ஏற்காட்டிற்கு செல்லும் அடிவார மலைப்பாதையில் இலகுரக வாகனங்கள் மட்டும் செல்ல நேற்று மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.
இதையடுத்து மோட்டார் சைக்கிள்கள், கார்கள், வேன்கள், மளிகை பொருட்கள், பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்லும் சிறிய வாகனங்கள் நேற்று மாலை முதல் இந்த வழியாக சென்று வர தொடங்கின. பஸ்கள் மற்றும் லாரிகள் போன்ற கன ரக வாகனங்கள் இந்த மலைப்பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று காலை முதல் ஏற்காட்டில் அடிவாரம் வழியாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் ஏற்காட்டிற்கு செல்பவர்களும், அங்கிருந்து சேலத்திற்கு வரும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொது மக்கள் மகிழ்ச்சியுடன் அந்த பஸ்களில் பயணம் செய்தனர்.
சேலம்-ஏற்காடு இடையே 3 நாட்களுக்கு பிறகு இன்று காலை முதல் பஸ் போக்குவரத்து தொடங்கியது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் லாரிகள் ஏற்காடு செல்ல தொடர்ந்து தடை நீடிக்கிறது.
- மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது.
- மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 25,098 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர்:
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளில் தண்ணீர் முழு கொள்ள ளவை எட்டியுள்ளது. இந்த அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வருகிறது.
மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது. இதனால் அணை நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 111.39 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 113.39 அடியாக உயர்ந்து. இன்று காலை 8 மணியளவில் நீர்மட்டம் 114.58 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 85.09 டி.எம்.சி.யாக உள்ளது. இன்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 25,098 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே வாரத்தில் தனது முழுகொள்ளளவை எட்டிவிடும்.
பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1000 கன அடியும், கிழக்கு- மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
- மேட்டூர் அணைக்கு கடந்த சில தினங்களாக நீர்வரத்து அதிகரித்தப்படி உள்ளது.
- நீர் இருப்பு 83.05 டி.எம்.சி.யாக உள்ளது.
மேட்டூர்:
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த சில தினங்களாக நீர்வரத்து அதிகரித்தப்படி உள்ளது.
நேற்று முன்தினம் வினாடிக்கு 7,414 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலையில் 9,246 கன அடியாக அதிகரித்தது. தொடர்ந்து நேற்று இரவு 29,021 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது.
மேலும் இன்று காலையில் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 32,240 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1000 கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. நேற்று 111.39 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு நீர்மட்டம் 113.39 அடி உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 83.05 டி.எம்.சி.யாக உள்ளது.
- ஏற்காட்டில் 20 இடங்களில் மண் சரிவு, 22 கிராமங்களுக்கு செல்லும் தரைப்பாலம் சேதம் ஆகி உள்ளது.
- திருமணி முத்தாறு முழுமையாக தூர்வாரப்படாததால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதே போல் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது.
இந்த நிலையில், வெள்ள நீர் வடியத்தொடங்கிய உள்ளதாக சேலம் கந்தப்பட்டியில் ஆய்வு மேற்கொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-
* ஏற்காட்டில் 20 இடங்களில் மண் சரிவு, 22 கிராமங்களுக்கு செல்லும் தரைப்பாலம் சேதம் ஆகி உள்ளது.
* திருமணி முத்தாறு முழுமையாக தூர்வாரப்படாததால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
* முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் சேலம் மாநகரத்தில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
* சாத்தூர் அணையில் இருந்து எவ்வித அறிவிப்பும் இன்றி தென்பெண்ணை ஆற்றுக்கு நீர் திறக்கப்பட்டதால் கரையோர கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
* தென்பெண்ணை ஆற்றுக்கரையோரம் இருக்கக்கூடிய நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கடுமையான பாதிப்பு.
* தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மேட்டூர் அணைக்கு கடந்த சில தினங்களாக தண்ணீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
- நீர் இருப்பு 80.40 டி.எம்.சி.யாக உள்ளது.
மேட்டூர்:
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.
இதனிடையே பெஞ்சல் புயல் காரணமாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.
இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த சில தினங்களாக தண்ணீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 5,195 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 7,414 கன அடியாக அதிகரித்தது.
மேலும் இன்று காலை நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 9,246 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1000 கன அடியும், கிழக்கு- மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. காலை 8 மணியளவில் நீர்மட்டம் 111.39 அடி உயர்ந்தது. நீர் இருப்பு 80.40 டி.எம்.சி.யாக உள்ளது.






