என் மலர்tooltip icon

    சேலம்

    • அணையின் நீர்மட்டம் 108.97அடியாக உயர்ந்து காணப்படுகிறது.
    • தற்போது அணையில் 76.95 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று வினாடிக்கு 7 ஆயிரத்து 545 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 6 ஆயிரத்து 422 கனஅடியாக குறைந்தது.

    அணையின் நீர்மட்டம் 108.97அடியாக உயர்ந்து காணப்படுகிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது.

    தற்போது அணையில் 76.95 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.

    • ஆசிரியர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தல்.
    • ஆசிரியர் ஜெயபிரகாஷை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.

    சேலம் மாவட்டம் கிழக்கு ராஜபாளையம் வீரகனூர் அருகே உள்ள அரசு பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பள்ளியில் கணித ஆசிரியராக ஜெயபிரகாஷ் என்பவர் பணிபுரிந்து வந்தார். அவர், மாணவர்களை கால் அழுத்திவிட சொல்லி ஓய்வெடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி கடும் கண்டனத்திற்கு உள்ளானது.

    இதனால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோரும், கல்வி ஆர்வலர்களும் வலியுறுத்தினர்.

    இந்நிலையில், மாணவர்களை கால் அழுத்த சொல்லி ஓய்வெடுத்த ஆசிரியர் ஜெயபிரகாஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    அதன்படி, சம்பந்தப்பட்ட கணித ஆசிரியர் ஜெயபிரகாஷை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    மாணவர்களை கால் அழுத்த சொல்லி, ஆசிரியர் தூங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
    • தற்போது அணையில் 76.54 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 355 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 7 ஆயிரத்து 545 கனஅடியாக குறைந்தது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் 108.68 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 76.54 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் கம்பளி ஆடைகளை அணிந்து கொண்டும், குடை பிடித்த படியும் சென்றனர்.
    • ஏற்காடு படகு இல்லம் பனிப்பொழிவால் சூழப்பட்டு இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு மாறிவிட்டது.

    ஏற்காடு:

    சுற்றுலா தலமான ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக சாரல்மழை, பனிப்பொழி, கடும் குளிர் என மாறிமாறி சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று காலை வெயில் ஏற்பட்ட நிலையில் நேற்று மாலை முதல் மீண்டும் பனிப்பொழிவுடன் கடுங்குளிர் நிலவி வருகிறது.

    இன்று காலை முதல் ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் சுற்றுலா தலங்கள் மற்றும் மலைப்பாதைகளில் பனிப்பொழிவும் அதிகளவில் நிலவியது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் கம்பளி ஆடைகளை அணிந்து கொண்டும், குடை பிடித்த படியும் சென்றனர்.

    இதே போல் மலை பகுதி முழுவதும் பனிபடர்ந்து காணப்பட்டதால் பகல் நேரத்திலேயே வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்கை ஒளிரவிட்டப்படி மெதுவாக வாகனங்களை இயக்கினர். ஏற்காடு படகு இல்லம் பனிப்பொழிவால் சூழப்பட்டு இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு மாறிவிட்டது.

    தொடர் பனிப்பொழிவு மற்றும் குளிரின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் நடமாட்டமின்றி ஏற்காடு வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் சமவெளி பகுதிகளிலும் தற்போது பரவலாக மழை மற்றும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்து விட்டது. இதனால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    • அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • மேட்டூர் அணையில் தற்போது 74.82 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    தமிழக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.

    இந்த நிலையில் நேற்று அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரத்து 449 கனஅடியாக இருந்த நிலையில் இன்று நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரத்து 542 கனஅடியாக குறைந்தது. ஆனாலும் நீர்வரத்தை விட குறைந்த அளவிலேயே தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.44 அடியாக உயர்ந்தது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதே போல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் தற்போது 74.82 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.

    • விழாவில் பங்கேற்ற அரசு பள்ளி ஆசிரியர் தம்பயா தலைமை உரையாற்றினார்.
    • தமிழக அரசு ஊழியர் ஒழுங்கு நடவடிக்கை விதிகள்படி தம்பயாவிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

    சேலத்தில் நேற்று காவிரி- சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்திய அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் பங்கேற்ற அரசு பள்ளி ஆசிரியர் தம்பயா தலைமை உரையாற்றினார்.

    இந்நிலையில், விழாவில் பங்கேற் தம்பயாவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    முறையாக பள்ளிக்கு செல்லாமல், அதிமுக பணிகளில் ஈடுபட்டு வந்ததால் தொடக்க பள்ளி கல்வித்துறை ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

    மேலும், தமிழக அரசு ஊழியர் ஒழுங்கு நடவடிக்கை விதிகள்படி தம்பயாவிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

    ஆசிரியர் தம்பயா கொடுக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொடக்க கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

    • நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அக்கட்சியில் இருந்து விலகினார்.
    • நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து இளவஞ்சி விலகினார்.

    நாம் தமிழர் கட்சியில் இருந்து சில பொறுப்பாளர்கள் தொடர்ந்து விலகி வருகின்றனர்.

    கடந்த மாதம் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினர். மேலும் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து சுகுமார் விலகினார். அவர்கள் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சாட்டினர்.

    இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அக்கட்சியில் இருந்து விலகினார். சீமான் தன்னிடம் பேசியது வருத்தத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறியிருந்தார்

    இதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சியில் இருந்து விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் விலகினார்.

    இவரை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து இளவஞ்சி விலகினார். கட்சி தலைமையின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை, பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை, புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதே இளவஞ்சியின் குற்றம் சாட்டி இருந்தார்.

    இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து சேலம் மாநகர மாவட்ட செயலாளர் விலகுவதாக அறிவித்துள்ளார்.

    சேலம் மாநகர மாவட்ட செயலாளர் அழகாபுரம் தங்கம் நாம் தமிழர் கட்சியில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

    • பனிப்பொழிவும் அதிகரித்துள்ளதால் ஏற்காட்டில் மரம், செடி கொடிகளிலும் பனி படர்ந்து காணப்படுகிறது
    • சேலம் மாநகரில் நேற்று லேசான சாரல் மழை பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்வார்கள். இதனால் ஏற்காட்டில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

    இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஏற்காட்டிலும் தொடர் மழை பெய்து வரும் நிலையில் நேற்றும் பகல் மற்றும் இரவு நேரங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.

    மேலும் பனிப்பொழிவும் அதிகரித்துள்ளதால் ஏற்காட்டில் மரம், செடி கொடிகளிலும் பனி படர்ந்து காணப்படுகிறது. இதனால் அருகில் நிற்பவர்களை கூட பார்க்க முடிவதில்லை. தொடர் மழை மற்றும் பனி காரணமாக ஏற்காட்டில் வரலாறு காணாத அளவில் கடும் குளிர் நிலவி வருகிறது.

    இதனால் ஏற்காட்டில் வசிக்கும் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் தவியாய் தவித்து வருகிறார்கள். மேலும் கடும் குளிரில் இருந்து தப்பிக்க ஸ்வெட்டர் மற்றும் ஜர்கின் அணிந்த படியும் சாலையில் நடமாடுகின்றனர். ஆனாலும் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பெரும்பாலானோர் வீட்டில் முடங்கி உள்ளதால் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

    மேலும் ஏற்காடு மலைப்பாதையில் அதிக அளவில் பனி மூட்டம் நிலவுவதால் மலைப்பாதையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே ஊர்ந்து செல்கின்றன. ஏற்காட்டில் நிலவும் கடும் குளிரால் அங்குள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் அனைத்தும் கடந்த சில நாட்களாக வெறிச்சோடி காணப்படுகிறது.

    சேலம் மாநகரில் நேற்று லேசான சாரல் மழை பெய்தது. இந்த மழையை தொடர்ந்து சேலம் மாநகரில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதே போல சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை மற்றும் பனியால் கடும் குளிர் நிலவி வ ருகிறது. இதனால் காலை நேரங்களில் வாகனங்களில் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் குளிரில் இருந்து தப்பிக்க ஸ்வெட்டர் மற்றும் ஜெர்கின்கள், கம்பளி பெட்சீட், போர்வைகள் பொது மக்கள் அதிக அளவில் வாங்கி வருகிறார்கள். இதனால் அதன் விற்பனையும் சூடு பிடித்துள்ளது.

    • மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
    • தற்போது அணையின் நீர்மட்டம் 106.98 அடியாக உள்ளது.

    சேலம்:

    தமிழக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது. அதே நேரம் காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்கு தண்ணீர் தேவை குறைந்தது. இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 9 ஆயிரத்து 154 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 10 ஆயிரத்து 449 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 106.98 அடியாக உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 74.18 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • சேலம் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் 106 ஏரிகள் உள்ளன.
    • 41 ஏரிகள் நீர்வரத்தின்றி குட்டை போல காட்சி அளிக்கிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு மாதத்திற்கு மேலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றும் மழை பெய்தது.

    குறிப்பாக தம்மம்பட்டி, வீரகனூர், ஆனைமடுவு, ஏற்காடு உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக தம்மம்பட்டியில் 12 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் 1.7, ஏற்காடு 7.4, வாழப்பாடி 1.4, ஆனைமடுவு 8, ஆத்தூர் 1.8, கரியகோவில் 5, வீரகனூர் 10, நத்தக்கரை 1, சங்ககிரி 6, மேட்டூர் 2.2, மி.மீ. என மாவட்டம் முழுவதும் 56.5 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    மாவட்டத்தில் ஏற்கனவே தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழையும் தொடர்ந்து பெய்வதால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    சேலம் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் 106 ஏரிகள் உள்ளன. இந்த ஏரியில் தேக்கப்படும் 1750 மில்லியன் கன அடி நீரை பயன்படுத்தி 22 ஆயிரத்து 56 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

    நீர்வளத்துறையின் புள்ளி விவரப்படி 12 ஏரிகளில் 25 சதவீதத்திற்கும் குறைவாக நீர் இருப்பு உள்ளது. 9 ஏரிகளில் 25 சதவீதத்திற்கும் மேலும், 6 ஏரிகள் 50 சதவீதத்திற்கும் மேலும் நிரம்பி உள்ளது. 17 ஏரிகளில் 75 சதவீதம் அளவுக்கு நீர் நிரம்பி உள்ளது. 21 ஏரிகள் முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறும் நிலையில் உள்ளது. 41 ஏரிகள் நீர்வரத்தின்றி குட்டை போல காட்சி அளிக்கிறது.

    இதில் சரபங்கா உட்கோட்டத்தில் உள்ள 37 ஏரிகளில் கன்னங்குறிச்சி புது ஏரி, வீராணம் ஏரி, காமலாபுரம் பெரிய ஏரி, சின்ன ஏரி, பூலாவாரி ஏரி, மானாத்தாள் ஏரி, டி.மாரமங்கலம் ஏரி, பேரியோரிப்பட்டி ஏரி, தாரமங்கலம் ஏரி, குளத்தாம்பட்டி ஏரி ஆகிய 10 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. இதே போல 8 ஏரிகள் 75 சதவீதமும், 3 ஏரிகள் 50 சதவீதமும், 6 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி உள்ளன. 10 ஏரிகள் நீர்வரத்தின்றி குட்டை போல காட்சி அளிக்கின்றன.

    சரபங்கா ஆத்தூர் உப கோட்டத்தில் மொத்தம் உள்ள 51 ஏரிகளில் அம்மாபாளையம் முட்டல் ஏரி, அபிநவம் எரி, ஜங்கமசமுத்திரம் ஏரி, செந்தாரப்பட்டி ஏரி, ஆத்தூர் புது ஏரி, புத்திரகவுண்டம்பாளையம் ஏரி, கல்லேரிப்பட்டி ஏரி, சின்னசமுத்திரம் ஏரி ஆகிய 8 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. 5 ஏரிகள் 75 சதவீதமும், 1 ஏரி 50 சதவீதமும் தண்ணீர் நிரம்பி உள்ளது. 28 ஏரிகள் நீர்வரத்தின்றி குட்டை போல காட்சி அளிக்கின்றன.

    மேட்டூர் உப கோட்டத்தில் உள்ள 18 ஏரிகளில் 3 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. 4 ஏரிகள் 75 சதவீதமும், 2 ஏரிகள் 50 சதவீதமும், 2 ஏரிகளில் 25 சதவீதத்திற்கு கூடுதலாகவும், 4 ஏரிகளில் 25 சதவீதத்திற்கும் கு றைவாகவும் நீர் இருப்பு உள்ளது. 3 ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு உள்ளன.

    தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை நடப்பாண்டில் சராசரிக்கும் கூடுதலாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மழைக்காலம் டிசம்பர் வரை நீடிக்கும் என்பதால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்ப வாய்ப்புள்ளது.

    ஆனால் தற்போது வரை நீர்வரத்து இல்லாத ஏரிகளிலும் தண்ணீர் நிரம்பும் வகையில் ஏரிகளின் நீர்வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றை விரைந்து தூர்வாரி ஏரிகள் நிரம்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என்பது விவசாயிகளின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • எதையும் எதிர்கொள்ளும் சக்தி அ.தி.மு.க.விற்கு உள்ளது.
    • விவசாயிகளைப் பற்றி தி.மு.க. அரசுக்கு கவலை இல்லை என்றார்.

    சேலம்:

    காவிரி-சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்திய அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

    அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்காக ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. தி.மு.க. திறந்து வைத்த பெரும்பாலான திட்டங்கள் கடந்த ஆட்சியில் அ.தி.மு.க. கொண்டு வந்தது. விவசாயிகளைப் பற்றி தி.மு.க. அரசுக்கு கவலை இல்லை.

    காவிரி நதி நீர் பிரச்சனையை தீர்க்க கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை கொண்டுவர வேண்டும்.

    கோட்டையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திடுவது மட்டும் வேலை இல்லை. விவசாயிகளுக்கு என்ன தேவை என்பதை அறிந்து ஆட்சி செய்ய வேண்டும்.

    விவசாயிகள் காலில் அணிவதற்கு காலணிகூட இல்லாத நிலையில், பல கோடி ரூபாய் செலவு செய்து கார் பந்தயம் நடத்துவது தேவைதானா?

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து 42 மாத காலம் ஆகியும் சரபங்கா வெள்ள உபரிநீர் நீரேற்று திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது.

    நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் உதயநிதி. அப்பா மகனைப் புகழ்ந்து பேசுகிறார். மகன் அப்பாவைப் புகழ்ந்து பேசுகிறார். இதுதான் வேடிக்கை.

    உதயநிதி ஸ்டாலின் அவர்களே நாவடக்கம் தேவை. செல்வ செழிப்பில் வளர்ந்த உங்களுக்கே இவ்வளவு திமிர் என்றால், உழைப்பால் உயர்ந்தவர்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்.

    ரெய்டை பார்த்து எங்களுக்கு பயமில்லை. எதையும் எதிர்கொள்ளும் சக்தி அ.தி.மு.க.விற்கு உள்ளது என தெரிவித்தார்.

    • உபரி நீர் பிலிகுண்டுலு பகுதியை கடந்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வருகிறது.
    • பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் 124.80 அடி உயரம் உள்ள கே.ஆர்.எஸ். அணை மற்றும் 84 அடி உயரம் கொண்ட கபினி அணை ஆகியவற்றிக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்த உபரி நீர் பிலிகுண்டுலு பகுதியை கடந்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வருகிறது.

    நேற்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,084 கன அடியாக இருந்தது. இன்று காலை நீர்வரத்து அதிகரித்து விநாடிக்கு 9,154 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் 106.51 அடியாகவும், நீர் இருப்பு 73.53 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 3000 கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ×