என் மலர்tooltip icon

    சேலம்

    • பார்வதி (வயது 60) சம்பவத்தன்று இவர் பஸ்சில் சேலம் பழைய பஸ் நிலையம் வந்தார்.
    • அங்கு வேலையை முடித்து மீண்டும் பஸ்சில் ஊருக்கு திரும்பினார்.

    சேலம்:

    சேலம் ஒமலூர் செம்மாண்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜி. இவரது மனைவி பார்வதி (வயது 60) சம்பவத்தன்று இவர் பஸ்சில் சேலம் பழைய பஸ் நிலையம் வந்தார். அங்கு வேலையை முடித்து மீண்டும் பஸ்சில் ஊருக்கு திரும்பினார். அப்போது கருப்பூர் அருகே சென்றபோது அவரது கழுத்தில் இருந்த 2½ பவுன் செயின் மாயமானது. இதனால் பதறிபோன பார்வதி கருப்பூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பார்வதி அருகில் இருந்தவர்கள் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலத்தில் இருந்து ஓமலூர் வழியாக அனைத்து தனியார் பஸ் நிறுத்தங்களில் நின்று செல்ல போக்குவரத்து துறை அனுமதி வழங்கி உள்ளது.
    • இந்த நிலையில் சில தனியார் பேருந்துகள் சில நிறுத்தங்களில் நிற்காமல் செல்வதால் பொது மக்கள் புகார் செய்து வந்தனர்.

    காடையாம்பட்டி:

    சேலத்தில் இருந்து ஓமலூர் வழியாக அனைத்து தனியார் பஸ்களும் பண்ணப்பட்டி, பூசாரிபட்டி, அக்கரகாரம், தீவட்டிப்பட்டி, ஜோடுகுழி உள்ளிட்ட பஸ் நிறுத்தங்களில் நின்று செல்ல போக்குவரத்து துறை அனுமதி வழங்கி உள்ளது.

    இந்த நிலையில் சில தனியார் பேருந்துகள் சில நிறுத்தங்களில் நிற்காமல் செல்வதால் பொது மக்கள் புகார் செய்து வந்தனர். இதை தொடர்ந்து இன்று காலை பூசாரிப்பட்டியை சேர்ந்த பா.ம.க. மாவட்ட தலைவர் மாணிக்கம், ஒன்றிய செயலாளர் பி. எஸ். கே. செல்வம் தலைமையில் பொது மக்கள் தனியார் பஸ்சை சிறை பிடித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இதனால் அச்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • வெள்ளைக்கரடு மலை கோவில் திம்மராய பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீதேவி- பூதேவி பெருமாள் சாமிக்கு 108 திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது.
    • அதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்தி அலங்க ரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    எடப்பாடி:

    எடப்பாடி அடுத்த வெள்ளைக்கரடு மலை கோவில் திம்மராய பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீதேவி- பூதேவி பெருமாள் சாமிக்கு 108 திரவியங்களால் சிறப்பு

    அபிஷேகம் நடை பெற்றது. இதையடுத்து மலர் அலங்கா ரத்தில் சாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    அதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்தி அலங்க ரிக்கப்பட்ட தேரில் எழுந்த ருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேளம், தாளம் முழங்க பெண்கள் சீர் தட்டுகளுடன் ஊர்வலமாக வெள்ளாண்டி வலசு, புதுப்பேட்டை, பழைய பேட்டை, நடுத்தெரு வீரப்பம்பாளையம் வழி யாக வந்து கோவிலை அடைந்தனர்.

    தொடர்ந்து கோவில் கொடிமரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது. பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோஷ மிட்டனர். அதைத் தொடர்ந்து திம்மராய பெருமாள் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. மேலும் திம்மராய பெருமாள் கோவிலில் உள்ள பிரம்மாண்ட ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம், துளசி மாலை, வெற்றிலை மாலை, வடை மாலை அலங்காரங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதான வழங்கப்பட்டது

    விழா ஏற்பாடுகளை 2-ம் சனிக்கிழமை கட்டளை தாரர்கள் மருத்துவர் சமுதா யத்தினர் ராமு பண்டிதர், கிட்டு பண்டிதர், ஞானப்பிரகாசம், சிவப்பிரகாசம், சண்முக சுந்தரம், ஜெய கிருஷ்ணன், சரவண பெருமாள், மதியழகன், ராமகிருஷ்ணன், ராஜமாணிக்கம், ஆனந்தராஜ், குப்புசாமி, முத்துவேல், காமராஜ், ராஜா, பிரபு, சூர்யா, தாமரைச்செல்வன், விஜயராஜ், சவுந்தர்ராஜன், பூபால கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர் .

    இதே போல் பழைய எடப்பாடி சென்றாய பெருமாள் கோவில், மேட்டுதெரு சவுந்தரராஜ பெருமாள் சன்னதி, எடப்பாடி மூக்கரை நரசிம்ம பெருமாள் ஆலயம், பூலாம்பட்டி பகுதியில் உள்ள மாட்டு பெருமாள் மலைக்கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாதம் 2-ம் சனிக்கிழ .மையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்களை கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ராஜா (62) கூலி தொழிலாளியான. இவர் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் ஹனி மேடு சென்று கொண்டிருந்தார்.
    • தனக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு மயக்க ம் அடைந்தார்.

    சேலம்:

    தாரமங்கலம் அருகில் உள்ள கோட்டைமேடு. எருமக்காரன் வளவு பகுதியை சேர்ந்தவர் ராஜா (62) கூலி தொழிலாளியான. இவர் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் ஹனி மேடு சென்று கொண்டிருந்தபோது, தனக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு மயக்க ம் அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராஜாவின் மகன் மணி தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தனக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு மயக்க ம் அடைந்தார்.

    • தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • செடிகள், நீர்வீழ்ச்சி முன்பு குடும்பத்துடன் நின்று செல்போன் மூலமாக செல்பி எடுத்துக்கொண்டனர்.

    ஏற்காடு:

    ஏற்காட்டில் வானுயர்ந்த மரங்கள், காபி செடிகள், அரிய வகை தாவரங்கள், உள்ளன. இங்கு கிளியூர் நீர்வீழ்ச்சி, பூங்கா, ஏரி என பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன.

    ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சேலம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சனிக்கிழமை, ஞாயிறு மற்றும் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி என தொடர்ந்து 3 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் வழக்கத்தை விட இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர். இதனால் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாக காணப்பட்டது.

    ஏற்காடு அண்ணா பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், தாவரவியல் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

    செடிகள், நீர்வீழ்ச்சி முன்பு குடும்பத்துடன் நின்று செல்போன் மூலமாக செல்பி எடுத்துக்கொண்டனர். பலர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    மேலும் பூங்காவில் உள்ள சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் உள்ளிட்டவைகளில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் விளையாடி மகிழ்ந்தனர். ஏற்காட்டில் தற்போது வானம் மேக மூட்டத்துடன் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மேலும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய படகு இல்லத்தில் குவிந்தனர். அங்கு மிதி படகு, மோட்டார் படகு, துடுப்பு படகில் சென்றவாறு சிலுசிலு காற்றுடன் இயற்கை காட்சிகளை ரசித்தனர். சுற்றுலா பயணிகள் அழகு சாதன பொருட்கள், அழகு செடிகள் உள்ளிட்டவைகளும் வாங்கினார்கள். தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்ததால் அங்குள்ள ஓட்டல்கள், விடுதிகள், கடைகளில் வியாபாரம் களை கட்டியுள்ளது.

    தற்போது தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தப்படி உள்ளது. இதனால் பெரும்பாலான தங்கும் விடுதி அறைகள் முழுவதும் நிரம்பின. இதனால முன்பதிவு செய்யாத சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளில் இடம் கிடைக்காமல் அவதிக்குள்ளாகினர். அவர்கள் தங்களது கார்களை சாலையோரமாக நிறுத்தி அதில் உறங்கியதை காண முடிந்தது.

    • ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்தி மற்றும் தேங்காய் பருப்புகள் பொது ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டது.
    • பொது ஏலத்தில் பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ.5,488 முதல் ரூ.7,342 வரை விற்பனையானது.

    எடப்பாடி:

    எடப்பாடி நெடுங்குளம் சாலையில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்தி மற்றும் தேங்காய் பருப்புகள் பொது ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டது. பொது ஏலத்தில் பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ.5,488 முதல் ரூ.7,342 வரை விற்பனையானது. இது போல் நடைபெற்ற தேங்காய் பருப்புகளுக்கான பொது ஏலத்தில் முதல் தர தேங்காய் பருப்புகள் குவிண்டால் ஒன்று ரூ.7,485 முதல் 7,585 வரை வேலை போனது. 2-ம் தர தேங்காய் பருப்பு குவிண்டால் ஒன்று ரூ.6,675 முதல் ரூ.7025 வரை விற்பனையானது. நாள் முழுவதும் நடைபெற்ற பொது ஏலத்தின் மூலம் ரூ.10 லட்சம் மதிப்பிலான தேங்காய் பருப்பு மற்றும் பருத்தி வணிகம் நடைபெற்றது.

    • டெலிகிராம் மூலம் அறிமுகமான நபர் ஒருவர் பகுதி நேர வேலை மூலம் தினமும் ரூ.1,000 முதல் ரூ.3,000 வரை வருவாய் சம்பாதிக்கலாம்.
    • போலீசார் டெலிகிராம் லிங்கை கைப்பற்றி நூதன முறையில் மோசடி செய்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் இரும்பாலை என்.ஜி.ஜி.ஓ. காலனி சாந்தி நகரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 40).

    இவர் சேலத்தில் உள்ள தனியார் பார்மசி கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு டெலிகிராம் மூலம் அறிமுகமான நபர் ஒருவர் பகுதி நேர வேலை மூலம் தினமும் ரூ.1,000 முதல் ரூ.3,000 வரை வருவாய் சம்பாதிக்கலாம். எனவே அதில் முதலீடு செய்யுங்கள், உங்களுக்கு பெரும் தொகை கிடைக்கும் என தெரிவித்து அதற்கான இணையதள லிங்கை அனுப்பி உள்ளார்.

    அதை பதிவிறக்கம் செய்து முழு விபரங்களை பதிவிட்ட லோகநாதன் முதற்கட்டமாக ரூ.10 ஆயிரம் முதலீடு செய்தார். தொடர்ந்து அவருக்கு 17 ஆயிரம் ரூபாய் கமிஷன் கிடைத்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அவர் தொடர்ந்து 7 தவணைகளில் ரூ.7.61 லட்சம் அனுப்பி உள்ளார்.

    இந்த பணப்பரிவர்த்தனை முடிந்ததும் மர்மநபர் பேசிய டெலிகிராம் லிங்க் செயலிழந்துவிட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த லோகநாதன் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு இருந்த பணத்தை இழந்ததால் சேலம் மாநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் டெலிகிராம் லிங்கை கைப்பற்றி நூதன முறையில் மோசடி செய்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2179 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
    • கபினி அணையின் நீர்மட்டம் 73.85 அடியாக உள்ளது.

    சேலம்:

    கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 98 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4156 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2179 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    கபினி அணையின் நீர்மட்டம் 73.85 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4565 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் வினாடிக்கு 3179 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • வீட்டில் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.
    • பீரோவை பார்த்தபோது அதில் வைத்து இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர்-ராசிபுரம் பிரதான சாலை புது ஹவுசிங் போர்டு குறிச்சி நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவர் ஆத்தூர் நகராட்சியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி புஷ்பா. இவர் சீலியம்பட்டி அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒரு மகள் சென்னையில் வருமான வரித்துறையில் உதவி கமிஷனராக பணியாற்றி வருகிறார். மற்றொரு மகள் சென்னையில் படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று நாகராஜ், அவரது மனைவி புஷ்பா ஆகியோர் வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள மகள்களை பார்க்க சென்றனர். பின்னர் மீண்டும் அவர்கள் இன்று காலை ஆத்தூரில் உள்ள தங்களது வீட்டிற்கு வந்தனர்.

    அப்போது அவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.

    மேலும் பீரோவை பார்த்தபோது அதில் வைத்து இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து ஆத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.மேலும் வீட்டில் வேறு ஏதாவது திருட்டு போனதா என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவ இடத்துக்கு கை ரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினர்.

    ஆத்தூரில் தலைமை தபால் நிலையம் எதிரே நேற்று முன்தினம் வெங்காய வியாபாரி வீட்டில் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் திருட்டு போனது. நேற்று ஆத்தூர் பழைய ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் உறவினர் வீட்டில் 13 பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் திருட்டு போனது. இந்த நிலையில் இன்று வருவாய் ஆய்வாளர் வீட்டில் திருட்டு நடந்துள்ளது.

    ஆத்தூர் பகுதியில் நடந்து வரும் தொடர் திருட்டு சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியும்.
    • தற்போது அணையில் குறைந்த அளவிலேயே தண்ணீர் இருப்பதால் நீர்த்தேக்க பகுதிகள் வறண்டு விட்டது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாகவும், கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்பட்டதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதற்கிடையே தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதாலும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.

    நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 524 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 446 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 36.94 அடியானது. மேலும் அணையில் இருந்து பாசனத்துக்கு தொடர்ந்து வினாடிக்கு 6500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 10.5 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.

    எனவே இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியும். தற்போது அணையில் குறைந்த அளவிலேயே தண்ணீர் இருப்பதால் நீர்த்தேக்க பகுதிகள் வறண்டு விட்டது. தற்போது அணையில் தண்ணீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது.

    • வெங்கடேஷ் புற்றுநோய் சிகிச்சைக்கு தேவைப்படும் செங்காந்தள் விதை விற்பனை செய்து வருகிறார்.
    • நீண்ட நேரமாகியும் யாரும் வராததால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ் இதுகுறித்த இரும்பாலை போலீசில் புகார் செய்தார்.

    சேலம்:

    திருப்பூர் காங்கேயம் ரோடு வெங்கடாசல கவுண்டர் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் வெங்டேஷ் (37). இவர் புற்றுநோய் சிகிச்சைக்கு தேவைப்படும் செங்காந்தள் விதை விற்பனை செய்து வருகிறார்.

    இவரிடம் சேலத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் உள்பட 6 பேர் கொண்ட கும்பல் தொடர்பு கொண்டு ரூ.50 லட்சம் புழக்கத்தில் உள்ள பழைய 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் புதிய வரிசை எண் கொண்ட கரண்சி நோட்டுகளாக ரூ.60 லட்சம் கொடுப்பதாக கூறியுள்ளனர்.

    இதை உண்மை என்று நம்பிய வெங்கடேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ. 50 லட்சத்துடன் ராஜேஷ் கூறியபடி சேலம் மாரமங்கலத்துப்பட்டிக்கு வந்து உள்ளார். அப்போது அவரிடம் நூதனமாக பணத்தை பறித்து கொண்ட கும்பல் வெங்கடேசிடம் சற்று நேரத்தில் வந்து பணத்தை தருவதாக கூறி ஏமாற்றி பணத்துடன் தப்பி ஓடிவிட்டனர்.

    நீண்ட நேரமாகியும் யாரும் வராததால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ் இதுகுறித்த இரும்பாலை போலீசில் புகார் செய்தார். இந்த கொள்ளை சம்பவம் பற்றி தெரியவந்ததும் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, துணை கமிஷனர்கள் கவுதம் கோயல், மதிவாணன் மேற்பார்வையில் உதவி கமிஷனர்கள் ராமமூர்த்தி, ஆனந்தி உள்பட இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்பு உடைய திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள காளிபாளையம் பகுதியை சேர்ந்த சுப்ரமணி என்பவரது மகன் மோகன் பாரதி (26), காங்கேயம் அருகே உள்ள சின்னபுதூர் பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவரது மகன் பிரகதீஷ்வரன் (24), திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த வீராசாமி என்பவரது மகன் வினித் குமார் (27), விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி சின்னசெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த ராமராஜன் என்பவரது மகன் முத்துமாரி (30), சிவகாசி அருகே உள்ள திருத்தாங்கல் ரோடு பகுதியை சேர்ந்த கணேசன் (58), ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கிரையனூர் பகுதியை சேர்ந்த குமார் (41) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள சேலத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரை தனிப்படை போலீசார் கர்நாடக மாநிலம் பெங்களுரு, மைசூருவில் தேடி வருகிறார்கள்.

    • அப்துல் காதர் (44) இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2 தவணைகளாக 91.1/2 கிராம் தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.4லட்சத்து11 ஆயிரத்து 280 பணத்தைப் பெற்றுள்ளார்.
    • நகைகளை சோதித்து பார்த்த போது அனைத்தும் கவரிங் நகை என்பது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் ஓமலூர் மெயின் ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் தங்க நகை அடமான நிறுவனத்தில் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் காதர் (44) இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2 தவணைகளாக 91.1/2 கிராம் தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.4லட்சத்து11 ஆயிரத்து 280 பணத்தைப் பெற்றுள்ளார்.

    சமீபத்தில் அந்த நகைகளை சோதித்து பார்த்த போது அனைத்தும் கவரிங் நகை என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அந்த தனியார் நிறுவனத்தின் மேலாளர் மதியழகன் (40) என்பவர் அழகாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×