search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காடையாம்பட்டி அருகே தனியார் பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்
    X

    காடையாம்பட்டி அருகே தனியார் பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்

    • சேலத்தில் இருந்து ஓமலூர் வழியாக அனைத்து தனியார் பஸ் நிறுத்தங்களில் நின்று செல்ல போக்குவரத்து துறை அனுமதி வழங்கி உள்ளது.
    • இந்த நிலையில் சில தனியார் பேருந்துகள் சில நிறுத்தங்களில் நிற்காமல் செல்வதால் பொது மக்கள் புகார் செய்து வந்தனர்.

    காடையாம்பட்டி:

    சேலத்தில் இருந்து ஓமலூர் வழியாக அனைத்து தனியார் பஸ்களும் பண்ணப்பட்டி, பூசாரிபட்டி, அக்கரகாரம், தீவட்டிப்பட்டி, ஜோடுகுழி உள்ளிட்ட பஸ் நிறுத்தங்களில் நின்று செல்ல போக்குவரத்து துறை அனுமதி வழங்கி உள்ளது.

    இந்த நிலையில் சில தனியார் பேருந்துகள் சில நிறுத்தங்களில் நிற்காமல் செல்வதால் பொது மக்கள் புகார் செய்து வந்தனர். இதை தொடர்ந்து இன்று காலை பூசாரிப்பட்டியை சேர்ந்த பா.ம.க. மாவட்ட தலைவர் மாணிக்கம், ஒன்றிய செயலாளர் பி. எஸ். கே. செல்வம் தலைமையில் பொது மக்கள் தனியார் பஸ்சை சிறை பிடித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இதனால் அச்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×