என் மலர்tooltip icon

    சேலம்

    • ஓமலூர் வட்டங்களில் செயல்படுத்தப்பட்டுவரும் அரசின் பல்வேறு திட்டப்பணிகளை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • சேலம் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 778 ஊரக குடியிருப்புகளுக்கு 5.24 லட்சம் மக்களுக்கு நாளொன்றுக்கு 50.70 மில்லியன் லிட்டர் அளவு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் ஓமலூர் வட்டங்களில் செயல்படுத்தப்பட்டுவரும் அரசின் பல்வேறு திட்டப்பணிகளை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:-

    முதல்-அமைச்சர் கடந்த 11.6.2023 அன்று திறந்து வைத்த எடப்பாடி வட்டம் கோரணம்பட்டியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இடைநிலை நீருந்து நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து பார்வையிடப்பட்டது.

    இந்நீருந்து நிலையத்திலிருந்து சேலம் மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை, ஆட்டை யாம்பட்டி, பனமரத்துப்பட்டி, மல்லூர், இடங்கணச்சாலை பேரூராட்சிகள் மற்றும் வீரபாண்டி, சேலம் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 778 ஊரக குடியிருப்புகளுக்கு 5.24 லட்சம் மக்களுக்கு நாளொன்றுக்கு 50.70 மில்லியன் லிட்டர் அளவு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    தற்போது இத்திட்டத்தின் கீழ் இடங்கணச்சாலை நகராட்சி, இளம்பிள்ளை, ஆட்டை யாம்பட்டி, பன மரத்துப்பட்டி, மல்லூர் பேரூராட்சிகளில் 620 குடியிருப்புகளில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி களில் சோதனை ஓட்டம் மூலம் குடிநீர் ஏற்றப்பட்டு குடிநீர் வழங்கப்படுகிறது.

    இதன் தொடர்ச்சியாக வருகிற 1.11.2023-க்குள் 778 குடியிருப்புகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படவுள்ளது.

    சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 11 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் 4 நகராட்சிகள், 29 பேரூராட்சிகள், 4,475 கிராம குடியிருப்புகள் என 29.21 லட்சம் மக்களுக்கு நாள்தோறும் 180 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக ரூ.347.47 கோடி மதிப்பீட்டில் ஊரக பகுதிகளில் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு வழங்கப்படும் குடிநீர் அளவினை 40 லிட்டரிலிருந்து 55 லிட்டராக உயர்த்தி வழங்கும் வகையில் சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பு பிரிவால் 5 கூட்டுக் குடிநீர் திட்டங்களை மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்தவகையில் ராசிபுரம்- எடப்பாடி கூட்டுக் குடிநீர் திட்ட மறுசீரமைப்பு பணிகள் ரூ.9.48 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு பராமரிப்பில் உள்ளது. கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள காவேரி புரம் மற்றும் 141 குடியிருப்பு களுக்கான கூட்டு குடிநீர் திட்ட மறுசீரமைப்பு பணிகள் ரூ.89.87 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

    மேலும், இருப்பாளியில் 236 குடியிருப்புகள் மற்றும் 1,237 வழியோர கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்ட மறுசீரமைப்பு பணிகள் ரூ.119.62 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. சங்ககிரி, தேவூர் பேரூராட்சிகள் மற்றும் சங்ககிரி ஒன்றியத்தின் 248 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்ட மறுசீரமைப்பு பணிகள் ரூ.42.87 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

    அதேபோன்று காடை யாம்பட்டி மற்றும் 3 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 136 குடியிருப்புகள் மற்றும் 604 வழியோர குடியிருப்பு களுக்கான கூட்டு குடிநீர் திட்ட சீரமைப்பு பணிகளுக்கு ரூ.85.63 கோடி மதிப்பீட்டில் தற்பொழுது பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சின்னப்பம்பட்டியில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலைப்பணிகள் குறித்தும், அப்பகுதியில் பொது மக்களை சந்தித்து கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் பெற்ற மகளிர் மற்றும் மேல்முறையீடு செய்துள்ளவர்களின் விபரம் குறித்தும், அப்பகுதியில் உள்ள வீடுகளில் ரேசன் கடைகளில் வாங்கப்பட்ட அரிசியின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது எடப்பாடி தாசில்தார் (பொறுப்பு) வாசுகி, ஓமலூர் தாசில்தார்புருஷோத்தமன், சங்ககிரி தாசில்தார் அறிவுடை நம்பி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர். 

    • கணவன்-மனைவிக்கிைடயே அடிக்கடி தகராறு ஏற்பட்டு
    • ரம்யா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் தர்மபுரி மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் மாைதயன். இவரது மகள் ரம்யா (30),

    இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஓமலூரை சேர்ந்த சீனிவாச பெருமாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் மாதையன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து ரம்யா தனது கணவருடன் ஓமலூரை அடுத்த காமாண்டபட்டியில் வசித்து வந்தார். மேலும் ரம்யா பெற்றோர் வீட்டிற்கு வந்து தாய் ராணியிடம் அடிக்கடி பணம் பெற்று செல்வது வழக்கம், அதன்படி கடந்த 10-ந் தேதி பணம் பெற்று சென்றார்.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கிைடயே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் மேலும் அவரது மாமியார் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ரம்யா வீட்டில் இருந்த தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே ரம்யாவின் தந்தை மாதையன் ஓமலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி உ ள்ளார். அதன் பேரில் ேபாலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உணவு, இயற்கை காய்கறிகள், பழ வகைகள், சிறு தானியங்கள் குறித்து விழிப்புணர்வு
    • வாழப்பாடி புதுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான அடுப்பில்லா சமையல் போட்டி

    வாழப்பாடி:

    பள்ளி குழந்தைகளிடையே சரிவிகித ஊட்டச்சத்து உணவு, இயற்கை காய்கறிகள், பழ வகைகள், சிறு தானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

    வாழப்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வாழப்பாடி புதுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான அடுப்பில்லா சமையல் போட்டி நடத்தப்பட்டது.

    பள்ளி தலைமையாசிரியை ஜெயலட்சுமி தலைமையில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் கீர்த்திகா தேவி, மேற்பார்வையாளர் பிரேமா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மாணவிகளிடையே போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். இதனைத்தொடர்ந்து சரிவிகித சத்துணவு, சுகாதாரம் மற்றும் ரத்த சோகை தவிர்ப்பு இயற்கை காய்கறிகள், பழ வகைகள், சிறுதானியங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதின் நன்மைகள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு வழங்கினர். நிறைவாக, அங்கன்வாடி பணியாளர் வசந்தி நன்றி கூறினார்.

    • மழையை தொடர்ந்து ஏற்காட்டில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
    • சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக குறைவாக உள்ளதால் ஏற்காட்டில் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை 5 மணியளவில் சேலம் மாநகரில் திடீரென மழை பெய்தது.

    அஸ்தம்பட்டி, 4 ரோடு, புதிய பஸ்நிலையம், அம்மாப்பேட்டை , ஜங்சன். கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளில் திடீரென பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இரு சக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்த படியே சாலைகளில் சென்றனர்.

    ஏற்காட்டில் நேற்று மாலை 5 மணியளவில் லேசான சாரல் மழை பெய்தது. இந்த மழையை தொடர்ந்து ஏற்காட்டில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இன்று காலையும் குளிர் நீடிக்கிறது. இதனால் ஏற்காட்டில் வசிக்கும் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக குறைவாக உள்ளதால் ஏற்காட்டில் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக சேலம் மாநகரில் 5.6 மி.மீ. மழையும், ஓமலூரில் 2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 7.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மழையை தொடர்ந்து நேற்றிரவு குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. இன்று காலையும் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்ததுடன் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.

    • பிலிகுண்டு, ஒகேனக்கல், கொளத்தூர், மேட்டூர் உள்ளிட்ட தமிழக எல்லை பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • மேட்டூர் அணைக்கு ஓரளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    சேலம்:

    மேட்டூர் அணை மூலம் காவிரி டெல்டா மாவட்டத்தில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை நம்பி குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சல் நடந்து வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும். அணையில் உள்ள நீர் இருப்பை பொறுத்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும்.

    இந்த ஆண்டு குறிப்பிட்ட நாளில், அதாவது ஜூன் 12-ந் தேதியே மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. பாசனத் தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வந்தது.

    அணைக்கு வரும் தண்ணீரின் அளவு மிகவும் குறைந்ததால் அணையின் நீர்மட்டம் கடந்த 10-ந்தேதி 30.99 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 7.88 டி.எம்.சி.யாக இருந்தது.

    இதனால் டெல்டா பாசனத்துக்காக அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடந்த 10-ந்தேதி காலை 6 மணி முதல் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு பெயரளவிலேயே அம்மாநில அரசு தண்ணீர் திறந்து விட்டுள்ளது.

    இதனிடையே பிலிகுண்டு, ஒகேனக்கல், கொளத்தூர், மேட்டூர் உள்ளிட்ட தமிழக எல்லை பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதனால் மேட்டூர் அணைக்கு ஓரளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,528 கன அடியாக இருந்த நிலையில் நேற்று காலையில் 9,345 கன அடியாக அதிகரித்தது.

    மேலும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து மாலை முதல் 18,978 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்தது.

    இன்று காலையில் நீர்வரத்து சற்று குறைந்து அணைக்கு 15,606 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. நீர் இருப்பு 10.11 டி.எம்.சி. ஆக உள்ளது.

    அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை விட அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.

    கடந்த 10-ந்தேதி 30.99 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 35.98 அடியாக உயர்ந்தது. 4 நாட்களில் 4.99 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சேலம் மண்டலத்தில் 1047 பஸ்களும், தர்மபுரி மண்டலத்தில் 853 பஸ்களும் சேர்த்து மொத்தமாக 1900 பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது.
    • அமாவாசையை முன்னிட்டு பல்வேறு வழித் தடங்களில் நாளை முதல் வருகிற 16-ந்தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக 150 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குநர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் சேலம் மண்டலத்தில் 1047 பஸ்களும், தர்மபுரி மண்டலத்தில் 853 பஸ்களும் சேர்த்து மொத்தமாக 1900 பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது.

    150 சிறப்பு பஸ்கள்

    இந்த நிலையில் வார இறுதி நாளான நாளை மறுநாள் (14-ந்தேதி) மற்றும் அமாவாசையை முன்னிட்டு பல்வேறு வழித் தடங்களில் நாளை முதல் வருகிற 16-ந்தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக 150 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த பஸ்கள் சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருவுக்கும், சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி மற்றும் மேட்டூருக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும் இயக்கப்பட உள்ளது.

    மேலும் முன்பதிவு பஸ்கள் பெங்களுருவில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலையில் இருந்து பெங்களுருவுக்கும், ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூருக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சிபுரத்துக்கும், ஈரோட்டில் இருந்து பெங்களூருவுக்கும் இயக்கப்பட உள்ளது.

    சித்தர்கோவில்

    அமாவாசையை முன்னிட்டு சேலம் நகர பஸ் நிலையத்தில் இருந்து சித்தர்கோவிலுக்கும், சேலம் புதிய பஸ் நிலையம், மேட்டூர் மற்றும் தருமபுரி பஸ் நிலையத்தில் இருந்து மாதேஷ்வரன்மலைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    இந்த சிறப்பு பஸ்களில் பயணிகள் அனைவரும் பயண நெரிசலை தவிர்த்து, பாதுகாப்பான பயணம் செய்திடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேரறிஞர் அண்ணா சைக்கிள் ஓட்டும் போட்டிகள் நாளை மறுநாள் (14-ந்தேதி) காலை 6.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
    • இதில் 13 வயதிற்குட்பட்ட வர்கள் 15 கி.மீட்டர், 15, 17 வயதிற்குட்பட்ட வர்கள் 20 கி.மீ. தூரம் கடக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேரறிஞர் அண்ணா சைக்கிள் ஓட்டும் போட்டிகள் நாளை மறுநாள் (14-ந்தேதி) காலை 6.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

    இப்போட்டி யில் பங்கேற்கும் 13 வயது, 15 வயது மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் 1.1.2011, 1.1.2009 மற்றும் 1.1.2007-க்குப் பின்னர் பிறந்திருக்க வேண்டும். இதில் 13 வயதிற்குட்பட்ட வர்கள் 15 கி.மீட்டர், 15, 17 வயதிற்குட்பட்ட வர்கள் 20 கி.மீ. தூரம் கடக்க வேண்டும்.

    அதேபோல் 13 வயது, 15 வயது மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவிகள் 1.1.2011, 1.1.2009 மற்றும் 1.1.2007- க்குப் பின்னர் பிறந்திருக்க வேண்டும். இதில் 13 வயதிற்குட்பட்ட வர்கள் 10 கி.மீ. 15,17 வயதிற்குட்பட்ட வர்கள் 15 கி.மீ. தூரம் கடக்க வேண்டும்.

    ஒவ்வொரு பிரிவிலும் முதல்ப ரிசாக ரூ.5,000, 2-ம் பரிசாக ரூ.3,000, 3-ம் பரிசாக ரூ.2,000 மற்றும் 4 முதல் 10 இடங்களைப் பெறுபவர்களுக்கு தலா ரூ.250 வழங்கப்படும்.

    போட்டியில் பங்கு கொள்ள விரும்பும் பள்ளி மாணவ, மாணவிகள் தலைமை யாசிரியர் கையொப்பமிட்ட வயது சான்றுடன் போட்டி நடக்கும் தேதிக்கு முன்னரோ அல்லது போட்டி நடக்கும் அன்றோ பதிவு செய்து கொள்ள வேண்டும். போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகள் இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அகல கிராங்க் பொருத்தப்பட்டி ருத்தல் கூடாது.

    சைக்கிள் பந்தயத்தில் ஏதேனும் தனிப்பட்ட பொது இழப்பு ஏற்படின் பங்குபெறும் மாணவ, மாணவியரே பொறுப்பாவர். போட்டியில் பங்குபெறும் மாணவ, மாணவிகள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை அலுவலக நேரத்தில் அணுகி பெயரினைப் பதிவு செய்து கொள்ளலாம்.

    13 வயதிற்குட்பட்ட மாணவிகள் 10 கி.மீ. தூரத்திற்கு மகாத்மா காந்தி விளையாட்ட ரங்கத்தில் தொடங்கி கோரிமேடு சென்று மீண்டும் மகாத்மா காந்தி விளையாட்ட ரங்கத்தில் நிறைவடைகிறது. 15, 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் 15 கி.மீ. தூரத்திற்கு மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் தொடங்கி ஏற்காடு அடிவாரம் வழியாக மீண்டும் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் நிறைவடைகிறது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • கார்த்திகேயன் (21). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
    • சேலம் கருப்பூர் என்ஜினீயரிங் கல்லூரி அருகே சாலையை நடந்து சென்று கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    சேலம்:

    சேலம் காடையாம்பட்டி அருகே உள்ள பூசாரிபட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ்குமார். இவரது மகன் கார்த்திகேயன் (21). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி சேலம் கருப்பூர் என்ஜினீயரிங் கல்லூரி அருகே சாலையை நடந்து சென்று கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் படுகாயம் அடைந்த அவரை சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை கார்த்திகேயன் பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இந்த சம்பவம் குறித்து கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த 8-ந் தேதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் (47). தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 8-ந் தேதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி அவர் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்திய போது ராமநாதன் குடும்பப் பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்ததும் அதனால் ஏற்பட்ட விரக்தியில் தற்கொலை செய்ததும் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஜங்ஷன் முருகன் கோவில் அருகே கடந்த 6-ந் தேதி சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.
    • இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் செவ்வாய்பேட்டை சண்முகா ஜங்ஷன் முருகன் கோவில் அருகே கடந்த 6-ந் தேதி சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்த விவரங்கள் ஏதும் தெரியவில்லை. அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் எருமாபாளையத்தை சேர்ந்தவர் தமிழழகன் (32), இவர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து 2 குழந்தைகள் உள்ளனர்.
    • மகள் காலாண்டு தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்தது தொடர்பாக தமிழழகன் கேட்டதால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருேக உள்ள காக்காவேரி பகுதியை சேர்ந்தவர் ஜெயலெட்சுமி (32), இவருக்கும் தருமபுரியை சேர்ந்த நாகராஜன் என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 14 மற்றும் 11 வயதுகளில் 2 மகள்கள் உள்ளனர். இருவரும் அம்மாப்பேட்டையில் உள்ள அரசு பள்ளிகளில் 9 மற்றும் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவன்-மனைவி பிரிந்தனர்.

    2-வது திருமணம்

    சேலம் எருமாபாளையத்தை சேர்ந்தவர் தமிழழகன் (32), இவர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து 2 குழந்தைகள் உள்ளனர். தமிழழகனும் மனைவியை பிரிந்து வசித்து வந்தார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்த போது ஜெயலெட்சுமிக்கும், தமிழழ கனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு சேலம் அம்மாப்பேட்டை பூவாத்தாள் தெருவில் மகள்களுடன் வசித்து வந்தனர்.

    நேற்று மாலை குடிபோதையில் வீட்டிற்கு வந்த தமிழழகன், ஜெயலெட்சுமியுடன் தகரா றில் ஈடுபட்டார். அப்போது மகள் காலாண்டு தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்தது தொடர்பாக தமிழழகன் கேட்டதால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஜெயலெட்சுமி குக்கர் மூடியால் தமிழழகனை தாக்கினார். இதையடுத்து ஜெயலெட்சுமியை தமிழழகனும் தாக்கினார்.

    தற்கொலை

    இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயலெட்சுமி சமையல் அறையில் ஏற்கனவே உடைத்து தயாராக வைத்திருந்த பீ ர் பாட்டிலை எடுத்து நான் இருந்தால் தான் பிரச்சினை, நான் செத்து விடுகிறேன் என்ற கூறிய படி கழுத்தில் பீர் பாட்டிலால் தனக்கு தானே குத்தி கொண்டார்.

    இதனை பார்த்த தமிழழகனும், அவரது 2 மகள்களும் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். பின்னர் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதிக அளவில் ரத்தம் வெளியேறி அவர் சிறிது நேரத்தில் துடி துடித்து சம்பவ இடத்திேலயே இறந்து விட்டார்.

    தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தமிழழகன் மற்றும் 2 மகள்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது-

    தமிழழகன் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து ஜெயலெட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும் ஜெயலெட்சுமியின் மூத்த மகள் மதிப்பெண் குறைந்தது குறித்து தமிழழகன் நேற்று கேட்டார். அப்போது ஏற்பட்ட தகராறில் தமிழழகனும், ஜெயலெட்மியும் மாறி, மாறி தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரம் உடைந்த ஜெயலெட்சுமி பீர் பாட்டிலை எடுத்து தனக்கு தானே கழுத்தில் குத்தி தற்கொலை செய்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து ேபாலீசார் தமிழழகனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் கோட்டையில் தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம் சார்பில் சேலம் மண்டல அளவிலான உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
    • இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர்கள் ஜெயச்சந்திரன், பன்னீர்செல்வம், அழகிரி, மோகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    சேலம்:

    சேலம் கோட்டையில் தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம் சார்பில் சேலம் மண்டல அளவிலான உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர்கள் ஜெயச்சந்திரன், பன்னீர்செல்வம், அழகிரி, மோகன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் கால்நடை பராமரிப்பு துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், 6-வது ஊதிய குழுவில் கால்நடை ஆய்வாளர் நிலை 1 மற்றும் முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர்களுக்கு வழங்கப்படாத நியாயமான ஊதியத்தை பெற்றிட சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினை சங்க கோரிக்கையின் வழி அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கால்நடை ஆய்வாளர் சங்க நீண்ட நாள் கோரிக்கையான முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர்களுக்கு அடுத்த கட்ட பதவி உயர்வு வழங்க வேண்டும். விடுபட்ட அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் கால்நடை ஆய்வாளர் பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    ×