என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரி தலைமறைவு"

    • தனசேகருக்கும் பாலுக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது.
    • சாந்தி கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தலைமறைவான பாலுவை தேடி வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கே.ஆர். தோப்பூர் தம்பி டாக்டர் தெருவை சேர்ந்தவர் தனசேகர் ( வயது 60). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார்.

    அதே பகுதியில் இவருக்கு சொந்தமான வீட்டில் பாலு என்கிற பாலசுப்பிரமணியம் (42) என்பவர் கடந்த 3 மாதங்களாக வாடகைக்கு குடியிருந்து கொண்டு பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வீட்டு வாடகை பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் வீட்டின் உரிமையாளர் தனசேகர், பாலுவிடம் வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் பாலு தனது வீட்டை காலி செய்து கொண்டிருந்தார்.

    அப்போது தனசேகருக்கும் பாலுக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாலு மரக்கட்டையால் தாக்கியதில் தனசேகர் பலத்த காயமடைந்து மயங்கி கீழே விழுந்தார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தனசேகரின் மனைவி சாந்தி அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்துள்ளார். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த தனசேகர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுபற்றி சாந்தி கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தலைமறைவான பாலுவை தேடி வருகின்றனர்.

    • வியாபாரி கடந்த 2-ந்தேதி குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.
    • கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலைச் சேர்ந்த சில பிரபல நகைக்கடை உரிமையாளர்கள் வியாபாரியிடம் பணம் கொடுத்து ஏமாந்து இருப்பதாக தெரிகிறது.

    கன்னியாகுமரி:

    நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 58 வயது மதிக்கத்தக்க தங்க நகை வியாபாரி ஒருவர் நகைக்கடைகளுக்கு தங்கம் மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    இவர் நெல்லை, நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி பகுதியில் உள்ள சிறிய மற்றும் பெரிய நகைக்கடைகளுக்கு தங்கம் விற்பனை செய்து வந்தார். பல நகைக்கடைகளில் அவர், தங்கத்துக்காக முன் பணம் பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த வியாபாரி கடந்த 2-ந்தேதி குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் நகைக்கடை உரிமையாளர்கள் அவருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலைச் சேர்ந்த சில பிரபல நகைக்கடை உரிமையாளர்கள் இவரிடம் பணம் கொடுத்து ஏமாந்து இருப்பதாக தெரிகிறது.

    இதே நபர் ஏற்கனவே 2013-ம் ஆண்டில் இதே போல பலரை ஏமாற்றி விட்டு தலைமறைவாகி பின்னர் 2 வருடம் கழித்து வந்து எல்லோரிடமும் ஏதோ ஒரு சிறு தொகையை கொடுத்து சமரசம் செய்து மீண்டும் வியாபாரத்தை தொடங்கியவர் என கூறப்படுகிறது.

    இப்போது சுமார் 20 கிலோ தங்கத்துடன் தலைமறைவாகி விட்டார். இவர் தலைமறைவான தகவல் வியாபாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×