search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Construction of sewers"

    • நெடுஞ்சாலை துறை மூலமாக நிதி பெற்று அங்கு சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.
    • நேரில் சென்று பணி நடைபெறும் இடத்தை அருள் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களை சந்தித்து பேசினார்.

    சேலம்:

    சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட 22-வது கோட்டம் சிவதாபுரத்தில் பெரு மழை காலங்களில் சேலத்தாம்பட்டி ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர் மற்றும் மழை நீர் ஒரு சொட்டு கூட ஊருக்குள் தேங்காமல் வெளியேற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பிரச்சனை குறித்து பா.ம.க. அருள் எம்.எல்.ஏ. எடுத்துக் கூறினார்.

    இதையடுத்து நெடுஞ்சாலை துறை மூலமாக நிதி பெற்று அங்கு சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.

    ஆய்வு

    இந்த நிலையில் சித்தர் கோவில் மெயின் ரோட்டில் நடைபெற்று வரும் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி மிகவும் தொய்வு ஏற்பட்ட காரணத்தினால் சாக்கடை கால்வாய் அருகில் உள்ள வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி செய்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்து உடனடியாக நேரில் சென்று பணி நடைபெறும் இடத்தை அருள் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களை சந்தித்து பேசினார்.

    நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக பணியினை தொடங்க வேண்டும். இல்லை என்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்க ளுடன் சேர்ந்து நானும் சாலை மறியல் ஈடுபடுவேன் கூறினார். அதன் அடிப்படையில் உடனடியாக அதிகாரிகள் பணியை தொடங்கினார்கள்.

    அப்போது அவருடன் மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜயகுமார், மாவட்ட துணைச் செயலாளர் சேகர், பகுதி செயலாளர் சமயவேல், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் அருண், கோட்டச் செயலாளர் குமார், கோட்ட தலைவர் சுரேஷ், பகுதி அமைப்புச் செயலாளர் கோவிந்தன், மாணவரணி சஞ்சய், ஸ்ரீகாந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×