என் மலர்
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த சித்தஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் தயாளன் கூலி தொழிலாளி. இவருடைய மனைவி வெண்ணிலா (வயது 35). இவர்களது மகன் கீர்த்தி (5) மகள் ஹரிதா (3).
தயாளனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. நேற்று இரவு தயாளன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து தயாளன் வெளியே சென்றுவிட்டார். அவரது தாயார் தாயம்மாள் வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கினார்.
வெண்ணிலா தனது குழந்தைகளுடன் வீட்டுக்குள் படுத்திருந்தார். கணவன் தகராறு செய்ததால் மனமுடைந்து காணப்பட்ட வெண்ணிலா மகன் கீர்த்தியின் கையை வீட்டுக்குள் இருந்த ஒரு நாற்காலியில் கட்டி வைத்தார்.
பின்னர் மகள் ஹரிதாவை தூக்கிக்கொண்டு வீட்டுக்கு பின்புறம் வந்தார். அங்குள்ள மரத்தில் குழந்தைகள் விளையாட கட்டப்பட்டிருந்த சேலையால் ஆன தொட்டிலில் சிறுமி ஹரிதாவை தூக்கில் தொங்க விட்டார்.
இதில் குழந்தை துடிதுடித்து இறந்தது. தொடர்ந்து வெண்ணிலாவும் அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இன்று காலையில் வெண்ணிலா மற்றும் குழந்தை தூக்கில் தொங்குவதை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த அவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகளை கொன்று தாய் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த சர்வந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 30). தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி மஞ்சுளா (24) இவர்களுக்கு சுதர்சன் (3) என்ற மகனும், டிசிகா என்ற மகளும் (2) உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் கிரிவாசன் (20) இவருக்கும் நாகேந்திரனுக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த பகுதியில் நெல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று திருவிழா நடந்தது. இதற்காக மேளதாளம் அமைத்து ஏற்பாடுகளை ஊர் கிராம மக்கள் செய்திருந்தனர்.
இதில் கலந்து கொள்வதற்காக கிரிவாசன் நண்பர்களான ராமநாதபுரம் மோட்டூர் பகுதியை சேர்ந்த அன்பரசன் (19), கேசவன் (19), ஹேமபிரசாத் (20), ஹரிஷ் (19) ஆகியோர் வந்தனர்.
சாமி ஊர்வலத்தில் நாகேந்திரன் வந்த போது இவருக்கும், கிரிவாசன் கூட்டாளிகளுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.
கிரிவாசன் வைத்திருந்த பீர் பாட்டிலால் நாகேந்திரனை தாக்கி கழுத்தில் குத்தினர். இதில் படுகாயமடைந்த நாகேந்திரனை ரத்தம் கொட்டிய நிலையில் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இதுகுறித்து நாகேந்திரனின் மனைவி மஞ்சுளா ஆற்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கிரிவாசன் உள்பட 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை கச்சால நாயக்கர் தெருவில் வசிப்பவர் சுரேஷ். இவரது மகன் நித்திஷ்குமார் (வயது22) கூலி தொழிலாளி.
இவர் சரிவர வேலைக்கு போகாமல் இருந்ததால் இவரது மனைவி வேலைக்கு செல்லுமாறு கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனையில் இருந்த நித்திஷ்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து நித்திஷ்குமாரின் மனைவி அளித்த புகாரின் பேரில் வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு தினமும் இயக்கப்படும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் அனைத்து பெட்டிகளும் முன்பதிவில்லா பயணிகளுக்காக இருந்து வந்தது.
கொரோனா பொது முடக்கத்தால் அனைத்து பெட்டிகளும் முன்பதிவு பயணிகளுக்கான பெட்டியாக மாற்றப்பட்டது. இதில் மாதாந்திர பயண சீட்டு உள்ள பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.
இந்த ரெயிலை அன்வர்திகான்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்தி வந்த நிலையில் மாதாந்திர பயணச்சீட்டு பயணிகள் அனுமதிக்கப்படாததால் அவர்கள் வேதனையில் இருந்தனர்.
இந்த ரெயிலுக்கு அன்வர்திகான்பேட்டையில் பயண சீட்டு தருவதும் இல்லை. இதனால் சென்னைக்கு தினமும் செல்ல வேண்டிய பலர் அரக்கோணம் வரை பஸ்சில் பயணம் செய்து அங்கிருந்து மின்சார ரெயிலில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவில்லா பயணிகளையும், மாதாந்திர பயணச்சீட்டு பயணிகளையும் அனுமதிக்கக் கோரி அன்வர்திகான்பேட்டை ரெயில் நிலையத்துக்கு நேற்று அந்த ரெயில் வந்தபோது ரெயிலை மறித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் மற்றும் ரெயில்வே போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பிரச்சனை குறித்து ரெயில்வே நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்க செய்வதாக உறுதியளிக்கப்பட்டது.
இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நடந்த போராட்டத்தால் 7 ரெயில்கள் தாமதமானது.
இந்த போராட்டம் குறித்து சித்தேரி ரெயில் நிலைய அதிகாரி அரக்கோணம் ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.
இது தொடர்பாக போலீசார் மறியலில் ஈடுபட்ட பயணிகள் 200 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 24 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 23 பேருக்கு தொற்று உறுதியானது. மாவட்டம் முழுவதிலும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 237 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று 32 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டம் முழுவதும் 315 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2 மாவட்டங்களிலும் நேற்று கொரோனாவிற்கு உயிரிழப்பு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான அரசு அதிகாரிகள், ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், கூலித் தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் தினமும் ரெயிலில் சென்னைக்கு சென்று வருகின்றனர்.
கொரோனா 2-வது அலை காரணமாக ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் வேலைக்கு சென்று வருபவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்று குறைந்ததால் கடந்த மாதம் முதல் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் சென்னைக்கு செல்வோர் மீண்டும் ரெயிலில் பயணம் செய்து வருகின்றனர்.
தினமும் ரெயிலில் வேலைக்கு சென்று வருபவர்கள் சீசன் டிக்கெட் பயன்படுத்தி வந்தனர். கொரோனா தொற்றுக்கு பிறகு பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சீசன் டிக்கெட் மீண்டும் வழங்காமல் ரெயில்வே நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது.
இதனால் மாத சம்பளம் வாங்கும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூடுதலாக பணம் செலவழிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ரெயில்வே நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தனர்.
ஆனால் ரெயில்வே நிர்வாகம் பயணிகளின் கோரிக்கையை கண்டு கொள்ளாமல் கிடப்பில் போட்டுள்ளது.
இந்த நிலையில் அன்வர்திகான்பேட்டை ரெயில் நிலையத்தில் இன்று காலை சென்னை செல்வதற்காக ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். சீசன் டிக்கெட் கிடைக்காமல் ஆத்திரத்தில் இருந்த பயணிகள் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி வந்த ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து மறியலில் ஈடுபட்டனர்.
பயணிகள் தண்டவாளத்தில் அமர்ந்து சீசன் டிக்கெட் வழங்கக் கோரி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ரெயிலில் வந்த பயணிகள் அவதியடைந்தனர்.
இதையடுத்து அன்வர்திகான்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்த அதிகாரிகள் சீசன் டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மறியலில் ஈடுபட்ட பயணிகளிடம் கூறினர்.
அரக்கோணத்தில் இருந்து உயர் அதிகாரிகள் வந்து சீசன் டிக்கெட் வழங்குவதாக உறுதி அளித்தால் மட்டுமே ரெயில் மறியலை கைவிடுவோம் என்று அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து உயர் அதிகாரிகளின் உறுதியை ஏற்று பயணிகள் மறியலை கைவிட்டனர். அதைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு தொடங்கிய ரெயில் மறியல் போராட்டம் 10 மணியளவில் முடிவுக்கு வந்தது. 2 மணி நேரம் பயணிகள் மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ரெயில் மறியல் போராட்டத்தால் சென்னை மார்க்கமாக செல்லும் சதாப்தி, லால்பாக் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது. மற்ற ரெயில்களும் தாமதமாக சென்றன. இதனால் பயணிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் மிகுந்த சிரமம் அடைந்தனர்.






