search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    ரோட்டரி சங்கம், கிருஷ்ணா கல்வி குழுமம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம்

    அரக்கோணம் கிருஷ்ணா கல்வி குழுமம் இணைந்து கொரோனா தடுப்பூசி முகாம் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக்கில் உள்ள துளசியம்மாள் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
    அரக்கோணம்:

    ரோட்டரி சங்கம் மற்றும் அரக்கோணம் கிருஷ்ணா கல்வி குழுமம் இணைந்து கொரோனா தடுப்பூசி முகாம் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக்கில் உள்ள துளசியம்மாள் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார் . முகாமில் 18 வயதுக்கு மேற்பட்ட 200 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    இதில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழும செயலாளரும், ரோட்டரி முன்னாள் துணை ஆளுநருமான டி.எஸ். ரவிக்குமார், பாலிடெக்னிக் முதல்வர் சுரேஷ், ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஜி.மணி, மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸ் இளங்கோ, கே.பி.கே.பிரபாகரன், நரேந்திர குமார், ஜி.கே.வெங்கடேசன், மனோகர் பிரபு, வெங்கடாசலபதி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை கிருஷ்ணா கல்வி குழு மேனேஜர் குமார் மற்றும் நிர்வாக அலுவலர் கோபிநாத் செய்திருந்தனர்.
    Next Story
    ×