என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓச்சேரி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் கைது
Byமாலை மலர்28 July 2021 1:35 PM GMT (Updated: 28 July 2021 1:35 PM GMT)
ஓச்சேரி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கத்தை அடுத்த அவளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவி, மேஷீட் மற்றும் போலீசார் நேற்று மாலை சங்கரன்பாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஓடையில் சிலர் பொக்லைன் எந்திரம் மூலம் டிராக்டரில் மணல் ஏற்றிக்கொண்டிருந்தனர். போலீசார் வருவதை பார்த்ததும் டிராக்டர் டிரைவர், மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தவர், பொக்லைன் டிரைவர் ஆகியோர் ஓட்டம் பிடித்தனர். அவர்களில் பொக்லைன் டிரைவர் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த துளசி (வயது 22) என்பவரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
தப்பி ஓடிய டிராக்டர் டிரைவர் சங்கரன்பாடி பகுதியைச் சேர்ந்த சுந்தர் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சிவா ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X