search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    வாலாஜாவில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

    வாலாஜாவில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை கச்சால நாயக்கர் தெருவில் வசிப்பவர் சுரேஷ். இவரது மகன் நித்திஷ்குமார் (வயது22) கூலி தொழிலாளி.

    இவர் சரிவர வேலைக்கு போகாமல் இருந்ததால் இவரது மனைவி வேலைக்கு செல்லுமாறு கண்டித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனையில் இருந்த நித்திஷ்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவலறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து நித்திஷ்குமாரின் மனைவி அளித்த புகாரின் பேரில் வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×