என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • மணிப்பூர் கலவரத்தை கண்டித்து த.மு.மு.க. கண்டன பொதுக்கூட்டம் நடத்தியது.
    • கூட்டத்தில் த.மு.மு.க. 50 மாணவர்கள் த.மு.மு.க.வில் சேர்ந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மத்திய மாவட்டம் சார்பில் தங்கச்சிமடத்தில் கண்டன பொதுக்கூட்டம் த.மு.மு.க. மாநில துணை பொது செயலாளர் சலிமுல்லா கான் தலைமையில் நடந்தது.

    சிறப்பு அழைப்பாளராக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹி ருல்லா எம்.எல்.ஏ., பத்திரிகையாளர் செந்தில் வேல், திராவிடர் கழகம் துணை பொதுச்செயலாளர் மதிவதனி மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

    மணிப்பூர் இனப்படு கொலை, இலங்கை அரசால் தமிழக மீனவர்க ளின் தொடர் கைது, பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை ஏற்றத்தை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் த.மு.மு.க. 50 மாணவர்கள் த.மு.மு.க.வில் சேர்ந்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை மண்டபம் ஒன்றியம், தங்கச்சிமடம் கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் 51 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • தனி போலீஸ் படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடுவதுடன் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ள–னர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மூலக் கொத்தளம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த–வர் தங்கமணி (வயது 62). இவர் கூட்டுறவு வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 28-ந்தேதி பெங்களூ–ரில் உள்ள மகன்கள் வீட் டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இவரது வீட்டுக்குள் புகுந்து கைவரிசையை காட்டி உள்ளனர்.

    இவரது வீட்டை ராமநா–தபுரம் அருகே புத்தேந்தல் பகுதியைச் சேர்ந்த அம்மாசி என்பவர் மனைவி பஞ்ச–வர்ணம் (55) என்பவர் பரா–மரித்து வந்துள்ளார். இந்த நிலையில் பஞ்சவர்ணம் நேற்று முன்தினம் காலை–யில் வீட்டை சுத்தம் செய்வ–தற்காக சென்றபோது அங்கு முன்வாசல் கதவு உடைக் கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. இதுகுறித்து உடனடியாக ராமநாதபுரம் பஜார் போலீ–சாருக்கு தகவல் தெரிவித் தார். அதன்பேரில் போலீ–சார் விரைந்து வந்தனர். இதற்கிடையே பெங்களூர் சென்ற ஓய்வு பெற்ற அதி–காரி தங்கமணி ராமநாதபு–ரத்திற்கு விரைந்து வந்து சோதனை செய்த போது வீட்டுக்குள் இருந்த 51 பவுன் நகை, ரொக்க பணம் ரூ.40 ஆயிரம், வெள்ளி பொருட் கள் கொள்ளை போயிருப் பது தெரிய வந்தது.

    இதுகுறித்து ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்க–துரை உத்தரவின் பேரில் ராமநாதபுரம் பஜார் போலீ–சார் தனிப்படை அமைத்து திருடர்களை தேடி வரு–கின்றனர். நேற்று மோப்ப–நாய், கைரேகை நிபுணர்கள் திருடு போன வீடுகளுக்கு சென்றும் எவ்வித முன்னேற் றமும் இல்லை. அதேபோல் இவரது வீட்டிற்கு நீண்ட தூரத்தில் சி.சி.டி.வி. கேமரா பொருத் தப்பட்டிருப்பதால் திருடர் களை அடையாளம் கண்டு–பிடிப்பது போலீச ருக்கு பெரும் சவாலாக உள்ளது. இருப்பினும் திருடர்களை பிடிக்க தனி போலீஸ் படை அமைக்க ப்பட்டு தீவிரமாக தேடுவ துடன் கண்காணிப்பு பணியி லும் ஈடுபட்டுள்ள–னர்.

    • பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • 27 வருடங்களுக்கு பிறகு, ஒன்றாக கூடி விழா நடத்தினர்.

    பசும்பொன்

    கமுதி அருகே பெருநாழி சத்திரிய இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில், 1996-97-ம் வருடம்

    10-ம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் 27 வருடங் களுக்கு பிறகு, ஒன்றாக கூடி விழா நடத்தினர்.

    பல்வேறு பகுதிகளில் இருந்து ஒன்று கூடிய இவர்கள் பெருநாழி யில் தாங்கள் படித்த பள்ளியில், கல்வி கற்றுத் தந்த ஆசிரிய, ஆசிரியை களை அழைத்து, அவர்கள் முன்னிலையில், தங்களது பள்ளி பருவ கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

    மேலும் ஆசிரியர்கள் தங்களிடம் கண்டிப்புடன் நடந்து கொண்டதால் தான், தற்போது, ஒழுக்க மாகவும் உயர்ந்த நிலையில் இருக்கிறோம் என்று ஆசிரி யர்கள் முன்பு, பகிர்ந்து கொண்டனர். பின்னர் அனைவரும் ஆசிரியர் களுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தனர். மேலும் ஆசிரியர்கள் முன்பு, வரிசையாக நின்று, பள்ளி நினைவுகளை ஞாபகப் படுத்தும் வகையில், கம்பால் அடி வாங்கி கொண்டனர்.

    • சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    • சாலைகளை சீரமைப்பதுடன் உரிய எச்சரிக்கை விளம்பரப்பலகை வைக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை முன்னிலை வகித்தார். கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் தகுந்த பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் முக்கிய சந்திப்பு சாலைகளில் உரிய பாதுகாப்பு எச்சரிக்கை விளம்பரங்களை வைத்து கண்காணித்திட வேண்டும். அதேபோல் காவல்துறை, வட்டாரப் போக்கு வரத்துத்துறை, நெடுஞ்சா லைத்துறை ஒருங்கிணைந்து தேசிய சாலைகளில் அதிக விபத்து ஏற்படும் இடங்களை கண்டறிந்து விபத்துகளை தடுக்கும் வகையில் சாலைகளை சீரமைப்பதுடன் உரிய எச்சரிக்கை விளம்ப ரப்பலகை வைக்க வேண்டும்.

    மக்கள் அதிகம் பயன்ப டுத்தும் நகர் பகுதியில் உள்ள சாலைகளில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டி தேவையான விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

    அதேபோல் கிராம சாலைகளுக்கும், தேசிய நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்தில் உரிய எச்சரிக்கை பலகை வைத்திட வேண்டும். மாலை நேரங்களில் வட்டாரப் போக்கு வரத்துத்துறை, காவல்துறை ஒருங்கிணைந்து கால ஆய்வு செய்து அதிக வேகத்தில் வரும் வாகன ஓட்டிகளை எச்சரிப்பதுடன் வாகன ஓட்டிகள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டு எவ்வித விபத்தும் ஏற்படாத வகையில் பயணம் செய்ய போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சேக் முகமது, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) மாரிச்செல்வி, வருவாய் கோட்டாட்சியர் கோபு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அருண், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் பிரேம் ஆனந்த் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடலில் 48 லட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டன.
    • ஏற்பாடுகளை மூத்த விஞ்ஞானி ஜான்சன் செய்திருந்தாா்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள மரைக்காயா்பட்டனம் பகுதியில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் செயல் பட்டு வருகிறது.

    இங்கு பிரதமா் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பொறிப்பகத்தில் வளர்க் கப்பட்ட பச்சை இறால் குஞ்சுகள் கடலில் விடப் பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் விஞ் ஞானி வினோத் தலை மையில் பொறிப்பகத்தில் வளா்க்கப்பட்ட 48 லட்சம் பச்சை இறால் குஞ்சுகளை படகில் எடுத்துச் சென்று பாக். ஜலசந்தி முனை பகுதியில் கடலில் விட்டனர்.

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரையில் 6.85 கோடி இறால் குஞ்சுகள் கடலில் விடப் பட்டுள்ளதாக மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் தெரிவித்தனா். இதற்கான ஏற்பாடுகளை மூத்த விஞ்ஞானி ஜான்சன் செய்திருந்தாா்.

    • புதிய பஸ் நிலைய பழைய கட்டிடம் இடிக்கும் பணி நடந்து வருகிறது.
    • ஜே.சி.பிஎந்திரம் கொண்டு இடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு புதிய பஸ் நிலையத்தை நவீனமாக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இதையடுத்து புதிய பஸ் நிலையத்தில் இருந்த கடைகள் காலி செய்யப்பட்டது.

    தொடர்ந்து இந்த பஸ் நிலையத்திற்கு மாற்றாக ராமநாதபுரம் பஸ் நிலையம் எதிர்புறம் உள்ள சந்தைதிடல் பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் புதிய நவீன பஸ் நிலைய வரைபடம் முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் கடந்த 2 நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்தன. புதிய பஸ் நிலையம் 4.1 ஏக்கர் பரப்பளவில் 35 பஸ்கள் ஒரே நேரத்தில் நின்று செல்வதோடு, 92 கடைகள், வாகன நிறுத்துமிடம் போன்றவை அமைக்கப்பட உள்ளது.

    மேலும் தாய்மார்கள் பாலூட்டும் அறை, புறக்காவல் நிலையம், முன்பதிவு அறை, உணவகங்கள், 16 கழிப்பறைகள், பேவர் பிளாக் நடைபாதை வசதிகள் போன்றவை ஏற்படுத்தப்பட உள்ளன.

    இந்த பணிக்கான பூமிபூஜை கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்தது. தற்போது புதிய பஸ் நிலையத்தில் உள்ள கட்டிங்களை ஜே.சி.பிஎந்திரம் கொண்டு இடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    • ராமநாதபுரத்தில் வருகிற அக்டோபர் மாதம் தென்னிந்திய கபடி போட்டி நடந்தது.
    • இந்த தகவலை தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கபடி அணி தலைவர் ரமேஷ்கண்ணன் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கபடி அணியின் தலைவர் ரமேஷ் கண்ணன் ராமநாதபுரத்தில் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கபடி அணி கடந்த 4 முறை நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. வருகிற 11,12,13-ந் தேதிகளில் மாற்றுத் திறனாளிகள் ஆல் இந்தியா சாம்பியன்ஷிப் கபடி போட்டி சென்னை யில் நடக்க இருக்கிறது.

    இப்போட்டியில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளி கபடி அணி கலந்து கொள்கிறது.அதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்றும், நாளையும் கடற்கரை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் வருகின்ற செப்டம்பர் 9,10-ம் தேதிகளில் மாற்றுத் திறனாளிகள் தமிழ்நாடு அணிக்கான வீரர்கள் தேர்வு ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ளது.

    அதனை தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் தென் இந்தியா அளவிலான மாற்றுதிறனாளிகள் சாம்பியன்ஷிப் போட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற திட்ட மிடப்பட்டுள்ளது.

    இந்த போட்டிகள் நடத்து வதற்காகவும், மாவட்ட ஆட்சியரின் வாழ்த்து பெறுவதற்காகவும், இன்று அவரை நேரில் சந்திக்க உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இப்பேட்டியின் போது தமிழக மாற்றுத் திறனாளிகள் அணி கேப்டன் மகேஸ், துணை கேப்டன் ரமேஷ் மற்றும் அணி வீரர்கள் பிரவின், சரவணன், மோகன், அன்பு ஆகியோர் உடனிருந்தனர்.

    • பரமக்குடியில் புத்தக திருவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடந்தது.
    • துப்புரவு பணியாளர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    பரமக்குடி

    பரமக்குடியில் உள்ள மக்கள் நூலகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் இணைந்து இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை புத்தக கண்காட்சி திருவிழாவை நடத்துகின்றனர். இதில் 20-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் கலந்து கொள்கின்றன. மேலும் புத்தக கண்காட்சியில் தினந்தோறும் மாணவ மாணவிகள் பங்குபெறும் கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பிரபலங்கள் பங்கேற்கும் பட்டிமன்றங்கள் நடைபெற உள்ளன. புத்தகத் திருவிழா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியினை துப்புரவு பணியாளர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    பரமக்குடி தனியார் மெட்ரிக் பள்ளியில் தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி சுமார் 7 கிலோமீட்டர் தூரம் கடந்து பரமக்குடி பேருந்து நிலையம் அருகில் உள்ள சந்தை திடலில் முடிவடைந்தது. இதில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்த போட்டியினை புத்தகக் கண்காட்சி வரவேற்பு குழு தலைவர் சேகர் செயலாளர் வழக்கறிஞர் பசுமலை,ஒருங்கிணைப்பாளர்கள் சந்தியாக பெருமாள் ராஜா உள்ளிட்ட புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பு குழுவினர் கலந்து கொண்டனர்.

    • பரமக்குடியில் புத்தக திருவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடந்தது.
    • துப்புரவு பணியாளர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    பரமக்குடி

    பரமக்குடியில் உள்ள மக்கள் நூலகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் இணைந்து இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை புத்தக கண்காட்சி திருவிழாவை நடத்துகின்றனர். இதில் 20-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் கலந்து கொள்கின்றன. மேலும் புத்தக கண்காட்சியில் தினந்தோறும் மாணவ மாணவிகள் பங்குபெறும் கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பிரபலங்கள் பங்கேற்கும் பட்டிமன்றங்கள் நடைபெற உள்ளன. புத்தகத் திருவிழா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியினை துப்புரவு பணியாளர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    பரமக்குடி தனியார் மெட்ரிக் பள்ளியில் தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி சுமார் 7 கிலோமீட்டர் தூரம் கடந்து பரமக்குடி பேருந்து நிலையம் அருகில் உள்ள சந்தை திடலில் முடிவடைந்தது. இதில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்த போட்டியினை புத்தகக் கண்காட்சி வரவேற்பு குழு தலைவர் சேகர் செயலாளர் வழக்கறிஞர் பசுமலை,ஒருங்கிணைப்பாளர்கள் சந்தியாக பெருமாள் ராஜா உள்ளிட்ட புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பு குழுவினர் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் முதல்வர் கருணாநிதி 5-வது ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
    • மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர்பாட்சா முத்துராம–லிங்கம் எம்.எல்.ஏ. வழிகாட் டுதலின் படி மண்டபம் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் ஒன்றிய செயலாளர் பிரவீன் தலைமையில் பாரதி நகர் பேருந்து நிலை–யத்தில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

    இந்நிகழ்வில் ஒன்றிய அவைத்தலைவர் பாலசுப்பி–ரமணி, ஒன்றிய பொருளா–ளர் கணேசன், மாவட்ட கவுன்சிலர் கவிதா கதிரே–சன், பொதுக்குழு உறுப்பி–னர் தண்டபானி, மாவட்ட தொண்டரணி அமைப்பா–ளர் ராஜா, முன்னாள் ஒன்றிய செயலாளர் கனகு, மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் பகத்சிங் சேதுபதி,

    மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அசாரு–தீன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஜெகன், மாவட்ட பிரதிநிதி. கார்மேகம், முருகபூபதி, இளைஞரணி யூசுப், வினோத், பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி கெளதம், பிரசாத், அசாரு–தீன், கிளை செயலாளர்கள் பூசைத்துரை, செல்வம், ஆனந்த், சோமசுந்தரம், மோகன், விசுவநாதன், நாக–லிங்கம் மேலும் தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    • குழந்தைகள்-கர்ப்பிணிகள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.
    • விடுபட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி அளித்து பயன்பெற வேண்டும்.

    ராமநாதபுரம்

    தமிழகம் முழுவதும் பொது சுகாதார துறையின் மூலம் தீவிர இந்திர தனுஷ் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரத்தில் இந்த முகாமை மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்திய அரசின் ஆரோக்கியம் மற்றும் குடும்ப நலஅமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி தேசிய தடுப்பூசி முகாமில் 5 வயதிற்குட்பட்ட குழந்தை களுக்கும், கர்ப்பிணி தாய்மார்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்ப டுகின்றன. இத்தகைய ஊசி 12 வகையான நோய்களை தடுக்கும் சக்தி கொண்டதாகும். பல்வேறு காரணங்களால் சில குழந்தைகளுக்கு உரிய தடுப்பூசி போட்டுக்கொள் வதில்லை. ஆதனால் பல்வேறு நோய்கள் தாக்குவது கண்டறி யப்பட்டுள்ளது. எனவே 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும், கர்ப்பிணி தாய்மார்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

    ராமநாதபுரம் மாவட்ட த்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1,13,577 பேர் உள்ளனர். அதில் 1845 குழந்தைகள் பல்வேறு காரணங்களால் முறையான தவணைகளில் தடுப்பூசி அளிக்கப்படாமல் உள்ளனர். இவர்களுக்கு தடுப்பூசி முகாம்களின் மூலமாக தடுப்பூசி அளிக்கப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு மருத்துவனைகள் உட்பட 823 மையங்களில் தடுப்பூசி அளிக்கப்படும். விடுபட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி அளித்து பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் பொது சுகாதாரத் துறை துணை இயக்குநர் இந்திரா, வட்டார மருத்துவஅலுவலர் சுகந்தி,பூச்சியல் வல்லுநர் பாலசுப்பிரமணியன், கண்காணிப்பு அலுவலர் பக்கீர் முகமது மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி ராமேசுவரம், மண்டபம் மீனவர் சங்கத்தினர் மத்திய-மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
    • விடுதலையான 9 பேரும் இன்னும் ஓரிரு நாட்களில் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடந்த மாதம் 25-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் இந்திய கடல் எல்லையை ஒட்டியுள்ள கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை விரட்டி அடித்ததோடு, எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி பாம்பன், மண்டபத்தை சேர்ந்த ஆறுமுகம், மணிகண்டன், குமார், வேலு, ஜெயசீலன், முத்து, இருளாண்டி உள்பட 9 மீனவர்களை கைது செய்து படகையும் சிறை பிடித்து சென்றனர்.

    இலங்கையில் உள்ள ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் நீதிபதி உத்தரவுப்படி யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி ராமேசுவரம், மண்டபம் மீனவர் சங்கத்தினர் மத்திய-மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

    இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மண்டப மீனவர்கள் 9 பேரும் ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மீண்டும் இலங்கை கடல் எல்லையில் மீன் பிடிக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் 9 மீனவர்களையும் விடுதலை செய்வதாக உத்தரவிட்டார். இதையடுத்து விடுதலையான 9 பேரும் இன்னும் ஓரிரு நாட்களில் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×