என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • பரமக்குடிக்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பரமக்குடி

    பரமக்குடியில் 11-ந்தேதி தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. அன்று தி.மு.க. சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இமானு வேல்சேகரன் நினை விடத்தில் அஞ்சலி செலுத்து கின்றனர்.

    அஞ்சலி செலுத்த வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான செயற்குழு ஆலோசனை கூட்டம் பரமக்குடியில் நடந்தது.

    முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தரராஜ் தலைமை தாங்கினார். ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் வரவேற்று பேசினார். இதில் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலி னுக்கு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் மரிச்சிகட்டியில் இருந்து பரமக்குடி வரை உற்சாக வரவேற்பு அளிக்கப்படும். இதில் பொதுமக்களும், தி.மு.க. தொண்டர்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் செய்ய வேண்டும். அதே போல் இளைஞரணி மாநில மாநாட்டில் மாவட்டத்தில் இருந்து ஏராளமான இளைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் கருப்பையா, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் இன்பா ரகு, பரமக்குடி நகர் மன்றத் தலைவர் சேது கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர்கள் அருளாந்து, வக்கீல் பூமிநாதன், போகலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சத்யா குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் வாசு தேவன், ஜெயக்குமார், கிருஷ்ணமூர்த்தி, சக்தி, அண்ணா மலை, மாவட்ட வக்கீல் பிரிவு அமைப்பாளர் வக்கீல் கருணாநிதி, வக்கீல் கள் கதிரவன், குணசேகரன், இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா, துணை அமைப்பாளர்கள் குமரகுரு, சண்.சம்பத்குமார், சத்தி யேந்திரன், பொறியாளர் அணி அமைப்பாளர் பாஸ்கர பாண்டியன், பகுத்தறிவு பாசறை பிரிவு அமைப்பாளர் செந்தில் செல்வானந்த், விவசாய அணி அமைப்பாளர் அய்ய னார், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகி துரைமுருகன், கவுன்சிலர் நதியா மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வில்லானேந்தல் கிராமத்திற்கு முதல்முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
    • இதனை கிராம பொதுமக்கள் பட்டாசு வெடிக்கும் இனிப்பு வழங்கி விழாவாக கொண்டாடினர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள எம். புதுக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட வில்லானேந்தல் கிராமத்தில், பல ஆண்டு களாக மக்கள் கண்மாய் தண்ணீரை தேக்கி வைத்து, அதனை குடிநீராகவும், மற்ற உபயோகத்திற்கும் பயன்படுத்தி வந்தனர்.தற்போது உள்ள கால கட்டத்தில், தனியாரிடம் குடிநீரை குடம் ஒன்று ரூ.7 க்கு விலைக்கு வாங்கும் நிலை உள்ளது. இந்த நிலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில், பல்வேறு இடங்களில் போர் வெல் மூலம் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் விநியோ கிக்க பல முறை முயற் சித்தும், அது உப்பு தண்ணீராகவும் குடிநீருக்கு உகந்த தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டதால், பயனளிக்காமல் போய் விட்டது.

    இது குறித்து ஊராட்சித் தலைவர் முருகன் மற்றும் கிராம பொது மக்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு குடிநீர் கேட்டு பல்வேறு மனுக்களை நேரில் சென்றும் பதிவு தபால் மூலமா கவும் கோரிக்கை மனுவை அளித்தனர். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், ஊராட்சியின் உபரி நிதியின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் குண்டாற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரையின் கீழ் பைப் லயன் அமைத்து வில்லானேந்தல் கிராமத்திற்கு முதல் முறையாக குடிநீர் வினி யோகம் வழங்கப்பட்டது.

    இதனை கிராம பொதுமக்கள் பட்டாசு வெடிக்கும் இனிப்பு வழங்கி விழாவாக கொண்டாடினர்.

    • 7.50 கோடி பச்சை வரி இறால் குஞ்சுகள் பாக்ஜல சந்தி கடலில் விடப்பட்டன.
    • பச்சை வரி இறால் வளத்தை காக்க இந்நடவடிக்கை உதவியாக இருக்கும் என்றார்.

    மண்டபம்

    மன்னார் வளைகுடா, பாக்ஜல சந்தி கடல் பகுதியில் இறால் மீன்வளம் குறைந்து வருவதையடுத்து, பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு உதவும் வகையிலும், மீன்பிடியை மேம்படுத்தவும் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் இறால் குஞ்சுகளை பொரிப்ப கங்களில் வளர்த்து கடலில் விடும் திட்டம் கடந்த பல வருடங்களாக செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அங்கு வளர்த்த 68 லட்சம் பச்சை வரி இறால் குஞ்சுகள் மீனவர்களுக்கு உதவும் வகையில் மண்டபம் கோவில்வாடி பாக்ஜல சந்தி கடல்பகுதியில் நேற்று மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய தலைவர் வினோத் தலைமையில் விடப்பட்டது. திட்ட தலைவர் தமிழ்மணி, விஞ்ஞானி ஜான்சன் உட்பட மீன் துறை அதிகாரிகள் மற்றும் மீனவ அமைப்பினர் பங்கேற்றனர்.

    இதுகுறித்து மீன்வள ஆராய்ச்சி நிலைய தலைவர் வினோத் கூறுகையில், இத்திட்டம் தொடங்கிய பிப்.2022-ல் இருந்து இதுவரை 7.50 கோடி பச்சை வரி இறால் குஞ்சுகள் பொரிப் பகங்களில் வளர்க்கப்பட்டு மன்னார் வளைகுடா, பாக்ஜல சந்தி கடற்பகுதியில் விடப்பட்டுள்ளன. பச்சை வரி இறால் வளத்தை காக்க இந்நடவடிக்கை உதவியாக இருக்கும் என்றார்.

    • கொத்தடிமை தொழிலாளர் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்.
    • அலுவலர்கள், பணியாளர்கள் உரிய பயிற்சிகளை பெற்று களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்க ளுக்கான ஒருநாள் பயிற்சி நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசுகை யில், மாவட்டத்தில் கொத்த டிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து கொத்தடிமை முறை (ஒழிப்பு) சட்டம் 1976-ன் படி போதிய விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை இருந்து வருகிறதா? என்பதை மாவட்ட தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை, சமூக நலத்துறை மற்றும் பிற துறைகளும் ஒருங்கிணைந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கொத்தடிமைத் தொழிலாளர் முறை முற்றிலும் தவிர்க்கப்பட்டது என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

    அதற்கேற்ப அலுவ லர்கள், பணியாளர்கள் உரிய பயிற்சிகளை பெற்று களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் ராஜா, ஜப பிரின்ஸ், எசக்கியேல், மலர்விழி ஆகியோர் பணியாளர்களுக்கு கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு குறித்த பயிற்சி வழங்கினர்.

    • தென்கடல் பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சூறைக்காற்று வீசி வருகிறது.
    • தனுஷ்கோடியில் இன்று வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்பட்டது.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் தென்கடல் பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சூறைக்காற்று வீசி வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

    தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் தங்களின் படகுகளின் பாதுகாப்பு கருதி துறைமுகங்களில் நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 50 மீட்டர் வரை கடல் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் கரையோரம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் மணலில் சிக்கிக்கொண்டது. இதனை மீட்க முடியாத நிலையில் மீனவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மாலையில் கடல் நீர்மட்டம் உயர்ந்தவுடன் தான் படகை மீட்க முடியும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

    இதேபோல் தனுஷ்கோடியில் இன்று வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்பட்டது. சூறாவளி காற்று காரணமாக அரிச்சல்முனை-தனுஷ்கோடி சாலையை மணல் மூடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    • செப்டம்பர் 9-ம் தேதி முதல் ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • வெளிமாவட்ட வாகனங்கள் ராமநாதபுரத்திற்குள் உரிய அனுமதியின்றி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9-ம் தேதி முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    செப்டம்பர் 11-ம் தேதி இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை என மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.

    வெளிமாவட்டத்தைச் சேர்ந்த வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் உரிய அனுமதியின்றி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • பரமக்குடியில் வ.உ.சி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • இந்த நிகழ்ச்சிக்கு சபையின் தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.

    பரமக்குடி

    பரமக்குடியில் அனைத்து வெள்ளாளர் மகாசபையின் சார்பில் வ.உ.சி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சபையின் தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். செயலாளர் மகேஸ்வரன், பொருளாளர் ராமலிங்கம் வரவேற்றனர். திரைப்பட நடிகர் ஆனந்தராஜ், அனைத்து வெள்ளாளர் மகாசபையின் நிறுவனர் டாக்டர் கார்த்திகேயன், பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன், உயர் மட்ட நிர்வாகி கோவிந்தராஜ் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் அமைப்பு செயலாளர் இருளப்பன், உயர்மட்ட குழு நிர்வாகி முனியாண்டி, வின்சென்ட் ஜெயக்குமார், ராதாகிருஷ்ணன், தி.மு.க. சார்பில் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, ஓ.பி.எஸ் அணி சார்பில் தர்மர் எம்.பி., அ.தி.மு.க. சார்பில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. சதன்பிரபாகர், நகர் தலைவர் ஜமால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கமுதி சத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.
    • வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. உறவின்முறை முறைகாரர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். அம்பலகாரர் சக்திவேல் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை சிந்துமதி விழாவிற்கு வரவேற்றார். பள்ளியின் செயலர் சங்கர் ஒலிம்பிக் கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். ஓட்டப் பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், கபடி உட்பட ஏராளமான போட்டிகளில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.

    பள்ளியின் தலைவர் சண்முகராஜ் பாண்டியன், பொருளாளர் சரவணன், உறுப்பினர் ஜெகன் உள்பட நிர்வாக குழுவினர் பலர் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியைகள் திருவளர்ச்செல்வி, மீனு பிரியங்கா ஆகியோர் மேற்பார்வையில் போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • இமானுவேல் சேகரன் நினைவு தின பாதுகாப்பு ஏற்பாடுகளை கலெக்டர், எஸ்.பி ஆய்வு செய்தார்.
    • தேவேந்திரர் பண்பாட்டு கழக தலைவர் பரம்பை பாலா உள்ளிட்ட நிர்வாகி கள் உடனிருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வருகிற 11-ந்தேதி இமானுவேல் சேகரன் 66-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. தமிழக அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளனர்.

    இந்த நிலையில் இமானு வேல் சேகரன் நினைவி டத்தில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, முருகேசன் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் அப்தாப் ரசூல் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு காமிராக்கள், வி.ஐ.பி.க்கள் வந்து செல்லும் வழித்தடங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம், புற காவல் நிலையங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது தேவேந்திரர் பண்பாட்டு கழக தலைவர் பரம்பை பாலா உள்ளிட்ட நிர்வாகி கள் உடனிருந்தனர்.

    • சம்பா நெல் நடவு பணிகள் விறுவிறுப்பு நடைபெற்று வருகிறது.
    • தொடர் மழை விவசாயி களை மட்டுமின்றி பொது மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    ராமநாதபுரம்

    தமிழகம் முழுவதும் கோடை காலம் முடிவடைந்த பின்னரும் வழக்கத்தைவிட வெயில் கொளுத்தி வந்தது. பகல் நேரங்களில் வெளியில் நடமாடக்கூட முடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது.

    மதுரை, ராமநாதபுரம் உள்பட 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக திக ழும் வைகை அணை வறண்டதால் விவசாயம் கேள்விக்குறியானது. வழக்க மாக விவசாயிகள் சம்பா நெல் நடவு பணிகளை தொடங்காமல் இருந்தனர். மேலும் பருவ மழையை எதிர்பார்த்தும் காத்திருந்தனர்.

    இந்தநிலையில் தென் மேற்கு பருவமழை நிறைவ டைய உள்ள நிலையில், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத் தின் பல்வேறு மாவட்டங்க ளில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

    இந்த தொடர் மழையால், ராமநாத புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், குறிப் பாக திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் வட்டா ரங்களில் உள்ள விவசாயி கள், நேரடி விதைப்பு முறை யில் சம்பா பருவ சாகுப டியை தொடங்கியுள்ளனர்.

    மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வெளி யான அதிகாரப்பூர்வ தக வல்களால் சம்பா நடவு பணியில் விவசாயிகள் முழு வீச்சில் இறங்கியுள்ள னர். இந்த பருவத்தில் மாவட்டத் தில் 1.3 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, ராமநாத புரம் மாவட்டத்தில் செப்டம் பர் மாதத்தில் 5.4 மி.மீ. மழை பெய்யும் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை சராசரியாக 13.3 மி.மீ. மழை பெய்துள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு நூற்றுக்கணக்கான ஹெக்டேர்களில் விதைப்பு பணிகள் தொடங்கியுள்ளது.

    மீதமுள்ள பகுதிகளில் சாகுபடிக்கான ஆயத்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதுகுறித்து ஆர்.எஸ்.மங்கலம், திருவா டானை விவசாயிகள் சங்க அமைப்பாளரும், விவசாயி யுமான கவாஸ்கர் கூறுகை யில், சம்பிரதாயப்படி, சில விவசாயிகள் தமிழ் மாத மான ஆவணி (ஆகஸ்ட்–-செப்டம்பர்) மற்றும் புரட் டாசி (செப்டம்பர்-ஆகஸ்ட்) ஆகிய மாதங்களில் சாகுபடி பணிகளை தொடங்கினர்.

    தொடர்ந்து பல நாட்க ளாக பெய்த மழையால், ஆவணி மாதத்தில், விதைப்பு பணிகளை துவக்கியுள்ள விவசாயிகள், 15, 20 நாட்களில் பயிர்களுக்கு தண்ணீர் வரவில்லை என்றால், மீண்டும் விதைக்க வேண்டிய நிலை ஏற்படும். ஒரு ஏக்க ருக்கு சராசரியாக 25,000 முதல் 26,000 வரை செலவ ழிக்க வேண்டும் என்றார். தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை விவசாயி களை மட்டுமின்றி பொது மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    • ஏர்வாடி தர்ஹா நகர் ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளியில் நன்றி பாராட்டு விழா நடந்தது.
    • அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசாக புத்தகம் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றி யம், ஏர்வாடி ஊராட்சிக்குட் பட்ட தர்ஹா நகர் (தண்ணீர் பந்தல்) பகுதியில் அமைந் துள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி–யில் பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து பணியாற்றியவர்களுக்கு ஆசிரியர் தினமான நேற்று நன்றி பாராட்டு விழா நடை பெற்றது.

    நிகழ்ச்சியில் பள்ளிக்கு புதிதாக இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு உறுது ணையாக இருந்த தற்கும், மாணவர்கள் நிழலில் அமர்ந்து கல்வி பயில இரண்டு பள்ளிக் கட்டிடங்க ளுக்கு இடையில் உள்ள பகுதிக்கு ஊராட்சியின் மூலம் செட் அமைத்து கொடுத்ததற்கும், பள்ளி வளாகத்தில் வெண்ணி லப்பகுதி முழுவதும் ஊராட் சியின் மூலம் இண்டர்லாக் தளம் அமைத்து கொடுத்த தற்கும் நன்றி தெரிவிக்கப்பட் டது.

    ஏர்வாடி ஊராட்சி மன்றத் தலைவர் கே.எம்.வி.செய்யது அப்பாஸ், ஊராட்சி மன்ற துணைத்த லைவர் ஜாஹிர் அப்பாஸ், இப்பள்ளியில் பயிலும் சுமார் 140 மாணவ, மாணவி களுக்கும் இலவசமாக 2 செட் பள்ளி சீருடை, இரண்டு செட் சாக்ஸ், இரு ஜோடி ஷூ ஆகியவைகளை வழங்கிய மலேசியாவை சேர்ந்த குட் பீப்புள் கிளப் என்ற தொண்டு அமைப்பை சேர்ந்த நாகூர் மற்றும் அவரின் மனைவிக்கும்,

    மலேசிய குட் பீப்புள் கிளப் தொண்டு நிறுவ னத்தை இப்பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு இந்த இலவச சீருடை சேவையை செய்ய தூண்டு தலாக செயல்பட்ட பள்ளி யின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பரக்கத் ஹோட்டல் உரிமையாளர் ஆசிக், பள்ளியின் வளர்ச்சி யில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் ஏர்வாடி கல்வி தொண்டு அறக் கட்டளை தலைவர் ஏர்பாத் பாதுஷா, சமூக சேவகர் நல்லா (எ) நல்ல இபுராஹிம் ஆகியோருக்கும் பள்ளியின் சார்பில் நன்றி தெரிவிக் கப்பட்டு அனை வருக்கும் பொன்னாடை அணிவித்து, நினைவு பரி சாக புத்தகம் வழங்கப்பட் டது.

    இவ்விழாவில் பள்ளியின் முன்னாள் பெற்றோர் ஆசி ரியர் கழகத் தலைவர் துல் கருணை பாட்ஷா, பள்ளி யின் தலைமை ஆசிரியை ஜோதி மற்றும் ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • வகுப்பறை கட்டிட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • பணிகளை உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டுமென பொறியாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள மல்லல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார். மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கப்பட்டதை பார்வையிட்டு உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அந்த உணவை அவரும் சாப்பிட்டார்.

    நாள்தோறும் காலை உணவு சாப்பிட்டு விட்டு வகுப்பறைக்கு செல்ல வேண்டுமென மாணவ-மாணவிகளிடம் கூறினார். அரசு வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு நாளும் திட்டமிட்டபடி காலை உணவுகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்க வேண்டுமென பணியாளர்களிடம் கலெக்டர் அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, சாம்பக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.22.50 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு வருவதை கலெக்டர் பார்வையிட்டார். பணிகளை உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டுமென பொறியாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    ×