என் மலர்
ராமநாதபுரம்
- மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் பெயரை சூட்ட வேண்டும்.
- பார்வர்ட் பிளாக் கோரிக்கை வைத்துள்ளனர்.
பசும்பொன்
கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராம லிங்கத்தேவர் சிலைக்கு பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் மாநில தலைவர் கதிரவன் மாலை அணி வித்து மரி யாதை செலுத்தப்பட்டது.
பின்னர் அவர் செய்தியாளரிடம் கூறியதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சிக்கு தொகுதி கேட்டு பெறப் படும். சுதந்திரப் போராட்ட தலைவர்களின் குருபூஜை, பிறந்தநாள் விழா நிகழ்ச்சி களின்போது 144 தடை உத்தரவு விதிப்பதை ஏற்க முடியாது. ஆனால் தடை களையும் மீறி லட்சக் கணக்கில் மக்கள் திரளுகின்றனர்.
அதனால் 144 தடை விதிக்கப்பட கூடாது. மக்கள் தொகை கணக் கெடுப்புடன், சாதி வாரி கணக் கெடுப்பு நடத்த வேண்டும். அதுவரை 20 சதவீத இட ஒதுக்கீட்டில் மாற்றம் செய்யக் கூடாது. கமுதி பகுதியில் குண்டாறு, மலட் டாறுகளை தூர்வாரி விவசாயிகளை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மத்தியக் கட்டுப்பாட்டு குழு தலைவர் மாநிலத்தலைவர் முத்துராம லிங்கம், மாநிலச் செயலாளர் இளங்கோ, ராமநாதபுரம் மாவட்ட அமைப்பு செய லாளர் பி.கீரந்தை வீரப் பெருமாள், சிவகங்கை மாவட்ட செயலாளர் கே.பி.யோகநாதன், மதுரை மாவட்ட நிர்வாகிகள் ஆசைகுமார், ஆதிசேசன், மாணவர் அணி மத்தியக் குழு உறுப்பினர் மு.வெள்ளைப்பாண்டியன், தேவர் நேதாஜி ஆராய்ச்சியாளர் மற்றும் ஆப்பநாடு ஆய்வு குழு தலைவர் மாயகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
- ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் அன்னாபிஷேகம், சாயரட்சை பூஜைகள் முடிந்த பின்னர் இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.
- இந்த தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ராமேசுவரம்
நாளை (28-ந்தேதி) சனிக்கிழமை நள்ளிரவு 1.05 மணி முதல் 2.23 மணி வரை சந்திர கிரகண நிகழ்வு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் அன்னாபிஷேகம், சாயரட்சை பூஜைகள் முடிந்த பின்னர் இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.
இரவு 12 மணிக்கு மேல் கோவிலில் இருந்து சுவாமி புறப்பாடாகி 1.44 மணிய ளவில் அக்னி தீர்த்த கட லில் தீர்்த்தவாரி உற்சவம் நடைபெறும். தொடர்ந்து சுவாமி வீதி உலா வந்து அதிகாலை 3.30 மணியளவில் கோவிலை வந்தடைவார். அதன் பின்னர் நடை திறக்கப்பட்டு கிரகண அபிஷேகமும், அர்்த்தஜாம பூஜையும் நடைபெறும்.
தொடர்ந்து திருப்பள்ளி எழுச்சி, ஸ்படிகலிங்க பூஜை, திருவனந்தல் பூஜைகள் நடைபெறும். சந்திர கிரகணத்தின் போது இரவு 10 மணி முதல் அதி காலை 3.30 மணி வரை கோவில் நடை சாத்தப்பட்டி ருக்கும். அந்த நேரத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். காலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக் கப்படுவார்கள்.
இந்த தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- முருங்கை விதை வழங்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- விதைகள் தோட்டக் கலைத்துறையில் கொள்முதல் செய்யப்பட்டு நடவு செய்யப்படுகின்றன.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி, கமுதி, மண்டபம் வட்டாரங்களில் முருங்கை விதைகளை வீடுகளில் நடவு செய்யும் பணிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை யின்மூலம் செயல்படுத்தப் படும் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தை களுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் செயல்பாடாக திருப்புல்லாணி, மண்டபம், கமுதி வட்டாரங்களில் உள்ள அனைத்து வீடுக ளுக்கும் முருங்கை விதை களை வழங்கும் பணி தொடங்கி வைக்கப் பட்டுள்ளது.
முருங்கை விதைகளை நடவு செய்வதன் நோக்கம் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வளரிளம் பெண்கள் ரத்த சோகை யின்றி ஆரோக்கியமான உடல்நிலையுடன் குழந்தைகள் பெற்றெடுக்க உதவுவது, 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்துடன் வளரவும் முருங்கை விதைகள் நடவு செய்யப்படுகின்றன. விதைகள் தோட்டக் கலைத்துறையில் கொள்முதல் செய்யப்பட்டு நடவு செய்யப்படுகின்றன.
நடவு செய்யப்படும் விதைகளை முறையாக பராமரித்து பயன்பெற்றிட பயனாளிகளுக்கு அறிவுறுத்தவும், மருத்துவ குணங்களை அறிந்திடவும், அங்கன்வாடி பணியா ளர்கள், சமூக நலத்துறை களப்பணியாளர்கள் ஒருங்கிணைந்து பராமரிக்கவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
எனவே பயனாளிகள் தங்கள் வீடுகளில் நடவு செய்யப்படும் முருங்கை விதைகளை முறையாக பராமரித்து அதன் மூலம் கிடைத்திடும் நன்மைகளை பெற்று ஊட்டச்சத்து குறை பாடு இல்லாமல் வாழ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) தேன்மொழி, திட்ட அலுவலர் (ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் விசுபாவதி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சமூக வலைதளங்களில் பொய் பிரசாரம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
- விரைவில் எங்களுக்கான சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என நாங்கள் நம்புகிறோம்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே மல்லல் கிராமத்திலிருந்து ஆலங்குளம் செல்லும் வழித்தடத்தில் போடாத சாலைக்கு கல்வெட்டு வைத்து அரசு நிதியை கையாடல் செய்ததாக சமூக வலைதளங்களில் விஷமிகளால் பரப்பப்படும் பொய் பிரச்சாரத்திற்கு சட்டப்படி தக்க பதிலடி கொடுப்போம் என்று தி.மு.க திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய செயலாளர் க.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பு ல்லாணி ஒன்றியம் மல்லல் கிராமத்தி லிருந்து ஆலங்கு ளம் செல்லும் வழித் தடத்தில் 2022-23-ம் நிதி யாண்டில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பி னர் மேம்பா ட்டு நிதியி லிருந்து ரூ.11 லட்சத்து 92 ஆயிரம் செலவில் சாலை அமைப்பதற்காக திட்ட மிடப்பட்டது.
பல்வேறு அலுவல் காரணமாக அந்த பணியானது தொடர்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.இந்த சூழலில் பணிக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த பணி செயல் கல்வெட்டினை அந்தப் பகுதியில் அமைத்து மறைத்து வைத்திருந்த நிலையில் மறைப்பை நீக்கிவிட்டு விஷமிகள் சிலர் அதனை படம் எடுத்து போடாத சாலைக்கு போட்டதாக போர்டு வைத்துள்ளதாக கூறி சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர்.
இந்தத் திட்டத்தின் கீழ் பணிக்கான அடிப்படை ஒப்பந்தம் மட்டுமே பெறப்பட்டுள்ளதோடு பணிக்கான செலவினத் தொகை ஏதும் எடுக்கவோ, விடுவிக்கப்படவோ இல்லாத நிலையில் அலுவல் பிரச்சினை காரணமாகவே இந்த சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இது குறித்து தவறான தகவல் களை பரப்புவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் தன்னுடைய ஊராட்சி மன்ற தலைவர் பதவி தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வருவதாகவும், விரைவில் சாலை பணியை முடிக்க ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இது தொடர்பாக தெற்கு மல்லல் கிராமத் தலைவர் பொ.செல்லக் கருங்கு கூறிய தாவது:-
சம்பந்தப் பட்ட வழித் தடத்தில் சாலை அமைக்க வேண்டும் என்பது தங்களு டைய நீண்ட நாள் கோரிக்கை. இந்த கோரிக்கையை ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார், காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.விடம் எடுத்து ரைத்ததோடு,அதற்கான திட்டத்தை வகுத்து செயல்படுத்த இருந்தார். இந்த சூழலில் அவருடைய ஊராட்சி மன்ற தலைவர் பதவி செல்லாது என மதுரை ஐகோர்ட்டு கிளை அறிவித்ததாகவும்,சாலை அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்ற நிலையில் நாங்கள் ஊர் பொதுமக்கள் சார்பாக அளந்து கொடுக்கிறோம் பிறகு சாலை அமைத்துக் கொள்ளலாம் என்று கோரிக்கை வைத்ததின் அடிப்படையிலேயே தற்காலிகமாக அந்த சாலை பணியானது நிறுத்தப்பட்டது.
அதற்கிடையில் தி.மு.க அரசுக்கும், எம்.எல்.ஏ. காதர்பாட்சா முத்துராம லிங்கத்திற்கும் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற கெட்ட நோக்கில் சிலர் தவறாக சித்தரித்து சமூக வலை தளங்களில் பரப்பி யுள்ளனர். ஊராட்சி மன்ற தலைவர் பதவி செல்லாது என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உதயக்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்காடி வருகிறார். விரைவில் எங்களுக்கான சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என நாங்கள் நம்புகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ராமநாதபுரத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடப்பதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
- திருத்தம் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத் தில் உள்ள வாக்குச் சாவடி களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடை பெறுகிறது என மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்தி அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
தேர்தல் ஆணைய அறிவு றுத்தலின்படி, நாளை (27-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அன்று முதல் ஒரு மாதத் திற்கு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடக்க உள் ளன. 2024-ம் ஆண்டு ஜன வரி மாதம் 1-ந் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிறம்பிய தங்களது பெயரை வாக்காளர் பட்டிய லில் சேர்க்கலாம். இதற்கான படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, உரிய ஆவணங் களுடன் தாலுகா அலுவல கங்களில் உள்ள வாக்காளர் பதிவு அதிகாரியிடம் வழங்க லாம்.
தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல் (https://www.nvsp.in) அல்லது கைபேசி செயலியின் மூல மாகவும் வாக்காளர் பட்டிய லில் சேர்க்க லாம். இதுதவிர, பெயர் நீக்கம், முகவரி மாற் றம், தொகுதிக்குள் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணி களையும் மேற்கொள்ளலாம்.
பணிக்கு செல்வோரின் வசதிக்காக சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வாக்காளர் பட்டியல் திருத் தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெறும். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1,374 வாக்குச் சாவடிகளிலும் வருகிற 4, 5 மற்றும் 18, 19 ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு, பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், திருத்தம் தொடர்பான மனுக்களை அளித்து பயன் பெறலாம்.
இந்த சிறப்பு முகாம்களை பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.
- ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் அனைவருக்குமான சமூக நீதி காக்கப்படும்.
- முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிறுவனர் சேது.கருணாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பரமக்குடி
முக்குலத்தோர் புலிப் படை கட்சியின் நிறுவனரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சேது.கரு ணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
கள்ளர், மறவர், அகமு டையர் ஆகியோர் "தேவரி னம்" என்று 1994 ஆம் ஆண்டு அரசு அறிவித்த அரசாணையை நடை முறைப்படுத்த வேண்டும். மதுரை விமான நிலையத் திற்கு சுதந்திரப் போராட்டத் வீரர் பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வேண்டும். தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெ டுப்பு நடத்தி அதன் அடிப் படையிலேயே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 2016-ல் சட்டமன்ற உறுப்பி னராக தேர்வு செய்யப்பட்ட நாளிலிருந்து பலமுறை சட்டப்பேரவையில் வலியு றுத்தி வந்துள்ளேன்.
தமிழ்நாட்டில் ஜாதிவாரி யான புள்ளி விவரங்களை திரட்டி அரசுக்கு அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.குலசேகரன் தலைமையில் 2020 ஆம் ஆண்டு இறுதியில் எடப் பாடி கே.பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது ஆணையம் அமைக்கப்பட் டது. இந்த ஆணையம் அமைக்கப்பட்டு மூன்று மாதங்களில் தேர்தல் அறி விக்கப்பட்டதால் ஆணையத் தின் காலக்கெடு நீட்டிக்கப்ப டாமல் செயல் இழந்தது.
அதற்கு முன்பாகவே பிற்படுத்தப்பட்ட ஜாதியி னர் குறித்து ஆராய 1969-ல் சட்டநாதன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட் டது. இந்த ஆணையம் பழைய புள்ளி விவரங்க ளின்படியே தனது பரிந்து ரைகளை அளித்தது. 1983-ல் அம்பாசங்கர் தலைமை யில் அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்படுத்தப் பட்டோர் ஆணையமும் மாதிரி கணக்கீடு முறையில் ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி பரிந்துரைகள் அளித் தது.
இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ண மூர்த்தி பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். 1931 ஆங்கிலேயர் காலத்துக்கு பின்பு இந்தியாவில் ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வில்லை என்றும், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெ டுப்பு நடத்த வேண்டும் என்றும் தனது மனுவில் கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதி அரசர்கள் இந்தியா முழுவதும் ஜாதிவா ரியான கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என 2010-ல் தீர்ப்பு வழங்கினர். இதற்கு மத்திய அரசும் ஒப்பு தல் அளித்தது. இவ்வாறு நீதிமன்றங்களில் பல்வேறு கருத்துகள் இருப்பதால், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 10.5 சதவீத உள்இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கூடாது என முக்குலத்தார் புலிப்படை கட்சி, முக்குலத்தோர் முன் னேற்ற சங்கம் உள்பட 13 மேற்பட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கு விசாரனையில் 2021 நவம்பரில் உச்சநீதி மன்றம் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை நிறுத்தி வைத் தது. தமிழகத்தில் ஒரு ஜாதிக்கு தனியாக இட ஒதுக்கீடு கொடுக்கும்போது இன்னொரு ஜாதியினர் தங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோருகின்றனர். ஆனால் அரசிடம் ஜாதி தொடர்பாக எந்த புள்ளி விபரமும் கிடையாது. எனவே நாங்கள் ஜாதி வாரியாக கணக்கெ டுப்பை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கி றோம்.
தமிழக அரசு புள்ளிவிவர சேகரிப்பு சட்டம் 2008-ன் படி ஜாதிவாரி சமூக, கல்வி, பொருளாதார கணக்கெ டுப்பு நடத்தி தமிழகத்தில் பி.சி., எம்.பி.சி., டி.என்.டி., எஸ்.சி., எஸ்.டி. சமூகங்க ளுக்கு வழங்கப்பட்டு வரும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும். எல்லா ஜாதியினரை பற்றி யும் துல்லியமாக தகவல்க ளும், புள்ளி விவரங்களும் ஜாதி வாரி கணக்கெடுப்பின் மூலம் கிடைத்தால் மட்டுமே அரசு நலத்திட்டங்களில் உண்மையான பலன்கள், இதுவரை கிடைக்காமல் இருக்கும் மக்களுக்கும் கிடைக்கபடும் என்ற வாத மும் உள்ளது.
எனவே ஜாதிவாரி கணக்கு எடுப்பு மட்டுமே இதனை உறுதிப்படுத்தும் ஒரே கருவி. கல்வி நிறுவ னங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் அனைத்து ஜாதியினருக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்றால் தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி புள்ளி விவரங்களை வெளிக்கொண்டு வந்தால் தான் அனைவருக்குமான சமூக நீதி காக்கப்படும். எனவே தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டா லின் உடனடியாக ஜாதி வாரி யான மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான ஆணையம் அமைத்து, புள்ளி விவரங்கள் அடிப்ப டையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
- அ.தி.மு.க. சார்பில் தேவா் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.
- முன்னாள் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் நினைவிடத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. சாா்பில் 2014-ம் ஆண்டு ரூ.4.50 கோடியில் 13 கிலோ எடையுள்ள தங்கக் கவசத்தை மறைந்த முன்னாள் முதல் வர் ஜெயலலிதா அணி வித்தாா்.
இந்த தங்க கவசமானது குரு பூஜை விழாவுக்குப் பிறகு, மதுரையில் உள்ள வங்கிப் பெட்டகத்தில் இந்தக் கவசம் வைக்கப்பட்டு, பாதுகாக்கப்படும். பின்னா், குரு பூஜை விழாவின் போது, போலீஸ் பாதுகாப்பு டன் மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு எடுத்து வரப்பட்டு தேவா் சிலைக்கு அணிவிப்பது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு குரு பூஜை விழாயொட்டி வங்கியில் இருந்த தங்கக் கவசத்தை அ.தி.மு.க. பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன் எடுத்து வந்தார். பசும்பொன் தேவா் நினை விட பொறுப்பாளா் காந்தி மீனாள் அம்மாள் முன்னிலையில் தேவா் சிலையில் இருந்த வெள்ளி கவசம் கலையப்பட்டு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் சட்ட மன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், மணிகண்டன், மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ. முனியசாமி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன் நினை வாலய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இன்று முதல் தேவர் நினைவிடத்தில் தங்ககவசம் ஒருவாரம் அணிவிக்கபட்டு அடுத்த வாரம் மதுரை வங்கி லாக்கருக்கு கொண்டு செல்லப்படும்.
இதையடுத்து நினை விடத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- ரூ.41 கோடி மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல்துறை சார்பில் வேளாண் எந்திரமயமாக்குதல் திட்டத் தின் கீழ் மானியவிலையில் வேளாண் எந்திரங்களை வழங்கி வருகிறது. இத் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படுவதோடு, குறுகியகாலத்தில் பயிர்சாகுபடி மேற்கொள்ள வும் வழி வகை செய்யப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் வேளாண் நிதிநிலை 2023-24 அறிக்கையின்படி சிறு, குறு விவசாயிகள் சிறிய எந்திரங்கள் மானியத்தில் பெற்று பயன் பெறும் நோக்கத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 5 ஆயிரம் பவர் டில்லர்கள், விசை களை யெடுப்பான் கருவி கள் ரூ.41.23 கோடி மானியத்தில் வழங்க இலக்குகள் நிர்ணயிக்கப் பட்டு 'உழவன் செயலி" மூலம் செயல்படுத்தப் பட்டு வருகிறது.
தனிப்பட்ட விவசாயி களுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானிய அடிப்படையில் அதிகபட்சமாக பவர் டில்லர்களுக்கு 85 ஆயிரமும், விசைகளை யெடுப்பான்களுக்கு ரூ.65 ஆயிரமும் மானியமாக வழங்கப்படுகிறது. மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைசார்ந்த சிறுகுறுவிவசாயிகளுக்கு அவர்களின் பங்களிப்பு தொகையினை குறைத்து உதவிடும் வகையில் நடைமுறையில் உள்ள மானியத்துடன் 20 சதவீதம் கூடுதல் மானியம் மாநில அரசுநிதியில் இருந்து வழங்கப்படுகிறது.
அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் 564 பயனாளிகளுக்கு ரூ.1081 லட்சம் மானியத்தில் ரூ.1613.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு முறையும் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது இந்த பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியதுள்ளது.
- சிறிய படகுகள் மட்டும் கடந்த சனிக்கிழமை மீண்டும் கடலுக்கு சென்று வருகிறது
ராமேசுவரம்:
இந்தியாவின் 2-வது நீண்ட கடற்கரையை கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களில் மீன்பிடி தொழில் பிரதானமாக உள்ளது.
இங்கிருந்து விலையுயர்ந்த மீன்கள், இறால், நண்டு உள்ளிட்டவை வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மீன்பிடி தொழிலால் மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான மீனவர்களும் மற்றும் பலர் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.
தென் தமிழகத்தில் உள் கடற்கரை மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, தொண்டி, தங்கச்சி மடம் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கானோர் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர்.
மற்ற கடற்கரை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களுக்கு இல்லாத சிக்கலை ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் அடிக்கடி எதிர்கொண்டு வருகின்றனர். ராமேசுவரத்தில் இருந்து அண்டை நாடான இலங்கை சில நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து சில மணி நேரங்கள் கடலில் பயணித்தாலே சர்வதேச கடல் எல்லையை அடைந்துவிட முடியும்.
சர்வதேச கடற்பகுதி என்பதால் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை மற்றும் இந்திய-இலங்கை கடல் எல்லையில் இருநாட்டு கடற்படை வீரர்கள் ரோந்து சுற்றி வருவார்கள். இந்த சூழலில் மீன்பிடிக்க செல்லும் ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் அடிக்கடி எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்படுவதும் அல்லது அவர்களை தாக்கி விரட்டியடிப்பதும் தொடர்கதையாக உள்ளது. இதனால் ராமேசுவரம் மீனவர்கள் முழுமையாக மீன்பிடி தொழிலை மேற்கொள்ள முடிவதில்லை.
ஒவ்வொரு முறையும் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது இந்த பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியதுள்ளது. கடந்த 14-ந்தேதி கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் ராமேசுவரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம, மண்டபம் பகுதிகளை சேர்ந்த 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இலங்கை கடற்படையின் நடவடிக்கை ராமேசுவரம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மீனவர் சங்கங்களின் அவசர கூட்டம் நடந்தது. இதில் சிறையில் வாடும் மீனவர்களை உடனே விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 16-ந்தேதி முதல் ராமேசுவரம் மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் சிறிய படகுகள் மட்டும் கடந்த சனிக்கிழமை மீண்டும் கடலுக்கு சென்று வருகிறது. இந்த வேலைநிறுத்தம் காரணமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழந்து தவிக்கின்றனர். ரூ.10 கோடிக்கும் மேல் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மீனவர்கள் ராஜா, எடிசன் ஆகியோர் கூறியதாவது:-
ஆண்டுதோறும் மீன்பிடிக்க ஏற்ற ஒரே இடமாக ராமேசுவரம் இருந்து வருகிறது. ஆனால் இலங்கை கடற்படையினரின் தொந்தரவால் பாரம்பரிய இடத்தில் கூட மீன்பிடிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மீன்பிடிக்க ஏற்ற சூழல் இல்லாத நிலையில் நாள்தோறும் அவதிப்பட்டு வருகிறோம்.
மீன்பிடிக்க முடியாமலும், படகை இயக்க முடியாமலும் முடங்கிப்போய் உள்ளோம். ஒருமுறை கடலுக்கு சென்றால் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை வருமானம் கிடைக்கும். அதுதான் எங்களுடைய வாழ்வாதாரம். தற்போது நடந்துவரும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தால் குடும்பம் நடத்த கடன் வாங்கும் சூழலில் இருக்கிறோம்.
மேலும் மீன்பிடி தொழிலின் சார்பு தொழில்கள் அனைத்தும் முடங்கி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுமே கடலுக்கு செல்லும் எங்களுக்குரூ.5 வரை கிடைத்தது. தற்போது அந்த வருவாய் இன்றி தவிக்கிறோம். மறுபுறம் கடலுக்கு சென்றாலும் இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு ஆளாகி இழப்புடன் தான் கரை திரும்பும் நிலை உள்ளது.
எனவே மத்திய, மாநில அரசுகள் மீன்பிடி தொழிலை பாதுகாப்புடன் மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும். வெளிமாநிலங்களை போன்று குத்தகை அடிப்படையில் பாரம்பரிய இடத்தில் சிரமமின்றி மீன்பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மீன்பிடி தொழிலை முறைப்படுத்தும் வகையில் படகுகளின் நீளம், அகலம் உள்ளிட்டவைகளை மீன்வளத்துறையினர் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.பி.ஆறுமுகம் இல்ல திருமண விழா நடந்தது.
- தொழிலதிபர் மனோகரன், சேர்மன் கே.டி.பிரபாகரன் ஆகியோர் தலைமையில் நடந்தது.
ராமநாதபுரம்
திருச்சி மாவட்டம், கீரம்பூர் எஸ்.பன்னீர்-சண்முகவள்ளி ஆகியோர் மகன் சிங்கப்பூரில் வசிக்கும் டி.எம்.இ பட்டதாரி
ப.கர்ணமுருகனுக்கும் ராமநாதபுரம் மாவட்டம் பேராவூர் வடக்கு யாதவர் தெருவில் வசித்து வரும் தி.மு.க ராமநாதபுரம் தெற்கு ஒன்றிய விவசாய அணி துணைச் செயலாளர் எம்.பி.ஆறுமுகம், தி.மு.க. ராமநாதபுரம் தெற்கு ஒன்றிய துணைச் செய லாளர் ஆ.மேனகா தம்பதி யினரின் மகள் பி.எஸ்.சி பட்டதாரி ஆ.மீனா (எ) ஐஸ்ஸிற்கும் பெரியோர்க ளால் திருமணம் நிச்ச யிக்கப்பட்டு இருந்தது.
இவர்களது திருமணம் ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவிலில் இன்று காலை நடைபெற்றது. இத்திருமணத்திற்கு ராம நாதபுரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ராமநாதபுரம் ஒன்றிய பெருந்தலைவ ருமான கே.டி.பிரபாகரன், தமிழ்நாடு யாதவ மகாசபை பொதுச்செயலாளரும், தொழிலதிபருமான வேலு மனோகரன் ஆகியோர் தலைமையேற்று நடத்தி வைத்தனர்.
ஒன்றிய துணைப் பெருந்தலைவர் ராஜவேணி பார்த்தசாரதி,உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள், தொண் டர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்,பேராவூர் வடக்கு யாதவர் தெரு முதியோர் சங்கம்,மாவீரன் அழகு முத்துக்கோன் இளை ஞர் சங்கத்தைச் சேர்ந்த வர்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
- தேவர் குருபூஜைக்கு வருகை தரும் அன்புமணி ராமதாசுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
- மாவட்ட செயலாளர் தேனி.சை.அக்கீம் தலைமை தாங்கினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் அவசர ஆலோ சனை கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செய லாளர் தேனி.சை.அக்கீம் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் சந்தன தாஸ் கலந்து கொண்டார்.மாவட்ட துணை செயலாளர் தொண்டி ராசிக், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், மாணவர் சங்க செயலாளர் சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் நகர செயலாளர் வர வேற்றார். ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பொறி யாளர் சரீப் நன்றி கூறினார்.
வருகிற 30-ந் தேதி பசும்பொன்னில் நடைபெற இருக்கிற தேவர் குருபூஜை அரசு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிற பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாசுக்கு ராமநாதபுரம் மாவட்ட பா.ம.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.
கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக மாவட்ட செயலாளர் தலைமையில் 50 வாக னங்களில் சென்று அழைத்து வரவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாட்டாளி தொழிற்சங்க செயலாளர் லட்சுமணன், மாவட்ட மாணவர் சங்க அமைப்பா ளர் கபில், நகர அமைப்பு செயலாளர் கார்த்திக், மண்டபம் ஒன்றிய செய லாளர் வெங்கடேசன், திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் ராஜேந்தி ரன், ஒன்றிய செயலாளர் மக்தூம் கான், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இப்ராகிம், மாவட்ட துணை அமைப்பா ளர் இஸ்மாயில், நகர துணை செயலாளர் பாலா, உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்ட னர்.
இதுகுறித்து கிழக்கு மாவட்ட செயலாளர் தேனி.சை.அக்கிம் கூறுகையில், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் தேவரின் நினைவிடத்தில் நடைபெற உள்ள குருபூஜை விழாவில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார். அதற் காக வருகிற 30-ந் தேதி மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக வரும் அன்புமணி ராமதாசுக்கு எனது தலைமையில் கிழக்கு மாவட்ட பா.ம.க நிர்வாகி கள், தொண்டர்கள் பாரதி நகரில் இருந்து 50 அனுமதிக் கப்பட்ட வாகனங்களில் ராமநாதபுரம் எல்லை பார்த்திபனூர் சென்று உற்சாக வரவேற்பு கொடுக் கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.
- தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
- இந்த மாட்டு வண்டி பந்தையத்தில் வெற்றி பெறு பவர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்படுகிறது.
சாயல்குடி
கடலாடி நகர் தேவர் உற வின்முறைக்கு பாத்தியப் பட்ட பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவரின் 116-ம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜையை முன்னிட்டு வருகிற 28-ந் ேததி ஆப்பநாடு மாட்டு வண்டி பந்தய குழுவினர் சார்பில் மாட்டு வண்டி போட்டி நடக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கு ராம நாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை தாங்குகிறார். கடலாடி நகர் தேவர் உறவின்முறை தலைவர் சக்திவேல் முன்னிலை வகிக்கிறார். மாட்டு வண்டி பந்தயத்தை ஆப்பநாடு மாட்டு வண்டி பந்தய குழு தலைவரும் கடலாடி ஒன்றிய அ.தி.மு.க. குழு தலைவரு மான முனியசாமி பாண்டியன் போட்டியை நடத்தி வைக்கிறார்.
பெரிய மாடு பந்தயத்தை முன்னாள் அமைச்சர் சத்திய மூர்த்தி தொடங்கி வைக்கிறார். நடு மாடு பந்த யத்தை ஆப்பநாடு மறவர் சங்கத் தலைவர் தூரி முனிய சாமி தொடங்கி வைக்கிறார். சின்ன மாடு மாட்டு வண்டி பந்தயத்தை முன்னாள் ஆப்பநாடு மறவர் சங்கத் தலைவர் ராமசாமி தொடங்கி வைக்கிறார். இந்த மாட்டு வண்டி பந்தையத்தில் வெற்றி பெறு பவர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்படுகிறது.






