search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The temple will be walked"

    • ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் அன்னாபிஷேகம், சாயரட்சை பூஜைகள் முடிந்த பின்னர் இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.
    • இந்த தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ராமேசுவரம்

    நாளை (28-ந்தேதி) சனிக்கிழமை நள்ளிரவு 1.05 மணி முதல் 2.23 மணி வரை சந்திர கிரகண நிகழ்வு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் அன்னாபிஷேகம், சாயரட்சை பூஜைகள் முடிந்த பின்னர் இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.

    இரவு 12 மணிக்கு மேல் கோவிலில் இருந்து சுவாமி புறப்பாடாகி 1.44 மணிய ளவில் அக்னி தீர்த்த கட லில் தீர்்த்தவாரி உற்சவம் நடைபெறும். தொடர்ந்து சுவாமி வீதி உலா வந்து அதிகாலை 3.30 மணியளவில் கோவிலை வந்தடைவார். அதன் பின்னர் நடை திறக்கப்பட்டு கிரகண அபிஷேகமும், அர்்த்தஜாம பூஜையும் நடைபெறும்.

    தொடர்ந்து திருப்பள்ளி எழுச்சி, ஸ்படிகலிங்க பூஜை, திருவனந்தல் பூஜைகள் நடைபெறும். சந்திர கிரகணத்தின் போது இரவு 10 மணி முதல் அதி காலை 3.30 மணி வரை கோவில் நடை சாத்தப்பட்டி ருக்கும். அந்த நேரத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். காலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக் கப்படுவார்கள்.

    இந்த தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×