என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • அரிச்சல்முனை கடற்கரையில் உள்ள புனித தூணிற்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • தொடர்ந்து, பிரதமர் மோடி கோதண்டராமர் சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்து, அங்கு பூஜைகள் செய்தார்.

    ராமேஸ்வரம்:

    மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோவில் மற்றும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.

    இந்நிலையில், இன்று காலை தனுஷ்கோடியின் அரிச்சல்முனை பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு புனித நீராடினார். தொடர்ந்து அரிச்சல்முனை கடற்கரையை பார்வையிட்ட அவர் அங்குள்ள புனித தூணிற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். வண்ண மலர்களை தூவி கடற்கரையில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.

    இதையடுத்து, பிரதமர் மோடி கோதண்டராமர் சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பின் அங்கு பூஜை செய்தார்.

    • ராமேஸ்வரம் வருகை தந்த பிரதமர் மோடி, அக்னி தீர்த்த கடலில் புனித நீராடியதோடு 22 புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடினார்.
    • கடற்கரையில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து பிராணாயாமம் எனப்படும் மூச்சுப்பயிற்சியை சில நிமிடங்கள் மேற்கொண்டார்.

    ராமேசுவரம்:

    அயோத்தி ராமர் கோவில் சிறப்பு விழாவை யொட்டி தென்னகத்தில் உள்ள ராமாயணத்துடன் தொடர்புடைய முக்கிய வழிபாட்டு தலங்களுக்கு பிரதமர் மோடி ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு உள்ளார். அதன் ஒரு பகுதியாக தமிழகம் வந்த அவர் நேற்று காலை ஸ்ரீரங்கத்தில் ராமரின் குலதெய்வமான ரெங்கநாத பெருமாளை வழிபட்டார்.

    பிற்பகலில் ராமேஸ்வரம் வருகை தந்த பிரதமர் மோடி, அக்னி தீர்த்த கடலில் புனித நீராடியதோடு 22 புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடினார். இதையடுத்து இன்று காலை தான் தங்கி இருந்த ராமகிருஷ்ண மடத்தி லிருந்து சாலை மார்க்கமாக ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அரிச்சல் முனை கடற்கரைக்கு சென்றார்.

    ராமாயணத்தில் ராவணனால் சிறைபிடிக்கப்பட்ட சீதையை மீட்க அரிச்சல் முனை பகுதியில் இருந்து ராமர் பாலம் அமைத்து இலங்கைக்கு சென்ற இடத்தில் பிரதமர் மோடி வழிபட்டார். அதேபோல் ராமர் மணலால் சிவலிங்கத்தை உருவாக்கி சிறப்பு பூஜை செய்தார் என்று ராமாயண இதிகாசத்தில் கூறப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி இன்று அரிச்சல்முனை கடற்கரையில் மணலால் சிவலிங்கம் உருவாக்கப்பட்ட இடத்தில் வண்ண மலர்களை தூவி சிறப்பு வழிபாடு செய்தார்.

    பின்னர் கடற்கரை பகுதியில் காலார நடந்த அவர் அதிநவீன கேமிரா மூலம் கடலின் இயற்கை அழகை பார்த்து ரசித்தார். தொடர்ந்து கடல் நீரை கையில் எடுத்து சூரியனை நோக்கி தெளித்து சூரிய வழிபாடு செய்தார். மேலும் கடற்கரையில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து பிராணாயாமம் எனப்படும் மூச்சுப்பயிற்சியை சில நிமிடங்கள் மேற்கொண்டார்.

    இதையடுத்து அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட தூணிற்கு பூக்களை தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்ட பிரதமர் மோடி, ராமாயணத்தில் ராவணனின் தம்பி விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்த கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார்.

    • முன்னதாக ராமேசுவரம் வருகை தந்த அண்ணாமலை, பிரதமர் மோடியின் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
    • ராணுவ பிரிவு மாவட்டத்த லைவர் பூபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்திற்கு பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக வருகை தந்தார். நேற்று அக்னி தீர்த்த கடல், 22 புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடிய அவர் கோவிலில் ராமநாதசுவாமி-பர்வ தவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற ராமாயண பாராயண நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

    முன்னதாக ராமேசுவரம் வருகை தந்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடியின் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதையடுத்து அவர் ராமேசுவரம் ராமர் தீர்த்தம் வடக்கு பகுதியில் உள்ள ஸ்ரீராமர் கோவிலில் தூய்மைபணி மேற்கொண்டார்.

    இதில், மாநில பொதுச் செயலாளர் பாலகணபதி, மாவட்டத்தலைவர் தரணி ஆர்.முருகேசன், மாவட்ட பார்வையாளர் கே.முரளிதரன், நகர் தலைவர் ஸ்ரீதர், தமிழ் இலக்கிய மாவட்ட தலைவர் ஆறுமுக லிங்கம், ராணுவ பிரிவு மாவட்டத்த லைவர் பூபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதனைதொடர்ந்து, ராமநாதசுவாமி கோவிலில் அவர் தரிசனம் செய்தார்.

    • அரிச்சல்முனை பகுதி ராமாயணத்துடன் நெருங்கிய தொடர்புடைய பகுதியாக கருதப்படுகிறது.
    • பிரதமரின் வருகையொட்டி 7 ஆயிரம் போலீசார் தீவிர கண்காணிப்பு.

    ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தனுஷ் கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதி. சாலையின் இருபுறமும் கடல் சூழ காட்சி தரும் தனுஷ்கோடி உலகில் உள்ள சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

    நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமேஸ்வரம் வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் தனுஷ்கோடி செல்லாமல் ஊர் திரும்புவதில்லை.

    தனுஷ்கோடிக்கு எளிதாக சென்று வரும் வகையில் முகுந்தராயர் சத்திரத்தில் இருந்து அரிச்சல்முனை வரை புதிதாக சாலை அமைக்கப்பட்டு கடந்த 2017-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த அரிச்சல்முனை பகுதி ராமாயணத்துடன் நெருங்கிய தொடர்புடைய பகுதியாக கருதப்படுகிறது. 

    அதாவது, இலங்கையை ஆண்ட ராவணன் சீதா தேவியை சிறைபிடித்து சென்றபோது, அவரை மீட்க ராமர் முதலில் தனுஷ்கோடி வந்தார். முன்னதாக திருப்புல்லாணி ஆதிஜெகநாதரிடம் வில், அம்பு பெற்றார் என்றும் பின்னர் அரிச்சல்முனையில் இருந்து பாலம் அமைத்து இலங்கை சென்றார் என்றும் ராமாயண காவியம் கூறுகிறது.

    மேலும், அந்த பகுதியில் ராமர் மணலால் சிவனை உருவாக்கி வழிபட்டார். அதேபோல் ராவணனை கொன்று சீதையை மீட்டு வந்த பின்னர் இதே அரிச்சல்முனையில் பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவலிங்க பூஜை நடத்தியுள்ளார்.

    எனவே இங்கு வரும் பக்தர்கள் கடலில் இறங்கி புனித நீரை தெளித்து செல்வது வழக்கம். அந்த வகையில் ராமேஸ்வரம் வருகை தரும் பிரதமர் மோடி நாளை காலை தான் தங்கியிருக்கும் ஸ்ரீராம கிருஷ்ண மடத்தில் இருந்து சாலை மார்க்கமாக அரிச்சல் முனை செல்கிறார்.

    அங்கு கடலின் அழகை ரசிப்பதோடு, கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிவ லிங்க பூஜையில் கலந்து கொள்கிறார். 

    பின்னர், அங்கிருந்து தனுஷ்கோடி வரும் வழியில் அமைந்துள்ள கோதண்ட ராமர் கோவிலுக்கு செல்கிறார். இலங்கையை ஆண்ட ராவணின் தம்பியான விபீஷணன் ராமபிரான் மீது கொண்ட பற்று காரணமாக அண்ணனுக்கு எதிராக போரிட்டார்.

    இறுதியில் ராவணன் இறக்கவே அவரது தம்பியான விபீஷணனை ராமர் இலங்கை அரசனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தார். அது நடந்த இடம் இந்த கோதண்டராமர் கோவில் என்பதால் ராமாயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது.

    இந்த கோவிலில் பிரதமர் மோடி சங்கல்பம் செய்து சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு நடத்துகிறார்.

    பிரதமர் கடற்கரை பகுதிக்கு வருவதையொட்டி இந்திய கடலோர காவல் படை, கடற்படையினர் உள்பட 7 ஆயிரம் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி ராமேஷ்வரம் வந்தடைந்தார்.
    • சாலை மார்க்கமாக பிரதமர் மோடி ராமகிருஷ்ணா மடத்திற்கு சென்றனர்.

    ஆன்மிக சுற்றுப்பயணமாக 3 நாள் தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் "கேலோ இந்தியா" போட்டியை தொடங்கி வைத்தார்.

    இன்று திருச்சி சென்ற பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர், திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி ராமேஷ்வரம் வந்தடைந்தார்.

    அங்கிருந்து காரில் புறப்பட்ட பிரதமர் மோடியை வரவேற்க வழிநெடுகிலும் தொண்டர்கள் மேள தாளங்களுடன் வரவேற்பு அளித்தனர்.

    சாலை மார்க்கமாக பிரதமர் மோடி ராமகிருஷ்ணா மடத்திற்கு சென்றனர். அங்கு சற்று இளைப்பாறிவிட்டு அங்கிருந்து கிழக்கு வாசல் வழியாக ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு சென்றார். அங்கு, கோவிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் பிரதமர் மோடி நீராடினார். 

    பிறகு, பிரதமர் மோடி, ருத்ராட்ச மாலைகள் அணிந்து கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பிரதமருக்கு தீபாராதனை மற்றும் தீர்த்தம் வழங்கப்பட்டது. மேலும், அங்கு பிரதமருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது.

    பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் 3 அடுக்கு பாடுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ராமநாத சுவாமி கோவிலுக்கு கடந்த 2 நாட்களில் பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
    • 50-க்கும் மேற்பட்ட விடுதிகளில் தங்கியிருந்த அவர்கள் இன்று காலி செய்த நிலையில் எங்கு செல்வது என்று தெரியாமல் ஒரே இடத்தில் குவிந்துள்ளனர்.

    ராமேசுவரம்:

    பிரதமர் மோடி 2 நாள் ஆன்மீக பயணமாக இன்று பிற்பகல் ராமேசுவரம் வருகை தருகிறார். இதையொட்டி போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ராமநாதபுரத்தில் இருந்து இன்று மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    அதேபோல் நாளை காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை ராமேசுவரத்தில் அனைத்து விதமான போக்குவரத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த 2 நாட்களும் ராமேசுவரத்தில் கனரக வாகனங்களுக்கு அனுமதியில்லை. 3,400 போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு கடந்த 2 நாட்களில் பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்களில் ராஜஸ்தானை சேர்ந்த 1,200 பக்தர்கள் ஆன்மீக சுற்றுலாவாக நேற்று முன்தினம் சிறப்பு ரெயில் மூலம் மதுரை வந்து, அங்கிருந்து பேருந்துகளில் ராமேசுவரம் வந்தனர்.

    இன்று அவர்கள் மீண்டும் மதுரைக்கு திரும்பவேண்டிய நிலையில், பிரதமர் மோடி வருகையால் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் தவித்து வருகிறார்கள். 50-க்கும் மேற்பட்ட விடுதிகளில் தங்கியிருந்த அவர்கள் இன்று காலி செய்த நிலையில் எங்கு செல்வது என்று தெரியாமல் ஒரே இடத்தில் குவிந்துள்ளனர்.

    பிரதமர் மோடி பிற்பகலில் ராமேசுவரம் வந்தபிறகு மாலை 4 மணிக்கு மேல் போக்குவரத்து சரிசெய்யப்பட்டு, ராஜஸ்தான் மாநில பக்தர்கள் பத்திரமாக மதுரைக்கு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று சுற்றுலா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ராமேசுவரம் கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி இரவில் இந்த மடத்தில் ஓய்வெடுக்கிறார்.
    • பிரதமர் தங்குவதையொட்டி அந்த ராமகிருஷ்ண மடம் கடந்த 3 நாட்களுக்கு முன்பே பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதையொட்டி உலகம் முழுவதும் வாழும் ராம பக்தர்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ராமரின் புகழை பஜனைகள் பாடியும், கீர்த்தனைகளாக ஒலித்தும், வழிபாடுகள் நடத்தியும் வருகிறார்கள்.

    அந்த வகையில் சாஸ்திரங்களில் கூறியுள்ளபடி, கடவுளை வழிபடுவதற்கு நமக்குள் உள்ள தெய்வீக உணர்வை எழுப்பும் விதமாக விதிகளின் படியும், வேதங்களின் படியும் கடந்த 12-ந்தேதி முதல் 11 நாட்கள் விரதத்தை பிரதமர் மோடி தொடங்கினார்.

    இதையடுத்து ராமாயணம் மற்றும் ராமருடன் தொடர்புடைய ஸ்தலங்களுக்கு பிரதமர் மோடி ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். ஆந்திர மாநிலம் லெபாக்ஷியில் உள்ள வீர பத்திரர் கோவிலில் தொடங்கிய இந்த பயணம் தென்னகத்து காசியாக போற்றப்படும் ராமேசுவரம் கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் நிறைவு செய்கிறார்.

    இதற்காக இரண்டு நாள் பயணமாக ராமேசுரத்திற்கு இன்று மாலை வருகை தரும் பிரதமர் மோடி பல்வேறு பூஜைகள் மற்றும் வழிபாடுகளில் பங்கேற்கிறார். பின்னர் இரவு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் அருகில் மேற்கு ரத வீதியில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணர் மடம் எனப்படும் ராம கிருஷ்ண தபோவனத்தில் தங்குகிறார்.

    இந்த மடத்தில் வழக்கமான வழிபாடுகள், பஜனைகள், 15 நாட்களுக்கு ஒரு முறை ராம்நாம சங்கீர்த்தனம், சமய சொற்பொழிவுகள், கலாச்சாரம் தொடர்பான போட்டிகள் நடத்தப்படுகிறது. எளிமையுடன் கூடிய ஆன்மீகத்தை நாடுவோர் இங்கு தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

    அதன்படி ராமேசுவரம் கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி இரவில் இந்த மடத்தில் ஓய்வெடுக்கிறார். அப்போது தரையில் படுத்து உறங்குகிறார். முன்னதாக அந்த மடத்தில் தங்கியிருக்கும் துறவிகளையும், சன்னியாசிகளையும் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பிரதமர் தங்குவதையொட்டி அந்த ராமகிருஷ்ண மடம் கடந்த 3 நாட்களுக்கு முன்பே பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 21.01.2024 அன்று ராமேசுவரம் நகரில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • தனுஷ்கோடி சுற்றுலா தளத்திற்கு 20.01.2024 நண்பகல் 12 மணி முதல் 21.01.2024 நண்பகல் 12 மணி வரை போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்திற்கு பிரதமர் மோடி வருகை தருவதையொட்டி பாதுகாப்பு கருதி நாளை (20.01.2024) மற்றும் 21.01.2024 ஆகிய 2 நாட்கள் போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    20.01.2024 அன்று நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை ராமநாதபுரத்திலிருந்து ராமேசுவரத்திற்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் ராமேஸ்வரம் நகர் பகுதியிலும் இதே நேரத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    21.01.2024 அன்று ராமேசுவரம் நகரில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 20.01.2024 மற்றும் 21.01.2024 ஆகிய இரு தினங்களுக்கு கனரக வாகனங்கள் ராமேஸ்வரம் நகர் பகுதிக்குள் சென்று வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    தனுஷ்கோடி சுற்றுலா தளத்திற்கு 20.01.2024 நண்பகல் 12 மணி முதல் 21.01.2024 நண்பகல் 12 மணி வரை போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.

    ராமநாத சுவாமி கோவிலில் 20.01.2024 அன்று பிரதமர் மோடி வருகையையொட்டி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி இல்லை. பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதை தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    பாதுகாப்பு நலன் கருதி ராமேசுவரம் நகர்ப்பகுதி முழுவதும் 20.01.2024 மற்றும் 21.01.2024 ஆகிய இருதினங்களுக்கு டிரோன் கேமரா பயன்படுத்துவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ராமேசுவரத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • மோடி ராமேசுவரத்தில் இருந்து திரும்பும் வரை இந்த தடை நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ராமேசுவரம்:

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு பிரதமர் மோடி முக்கிய கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகிறார். அதன்படி வருகிற 20-ந் தேதி ஸ்ரீரங்கத்திலும், மறுநாள் ராமேசுவரம் கோவிலிலும் பிரதமர் மோடி வருகை தர உள்ளார்.

    இதையொட்டி ராமேசுவரத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் இந்திய கடற்படையினர் ரோந்து சுற்றி வருகின்றனர். ஹெலிகாப்டரிலும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மோடி ராமேசுவரத்தில் இருந்து திரும்பும் வரை இந்த தடை நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில்நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 12 பேரை எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனை கண்டித்தும், மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி நாளை (19-ந் தேதி) ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என பாம்பன் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • பிரதமர் வருகையை முன்னிட்டு மண்டபம் முகாம் ஹெலிபேட் தளத்தில் மராமத்து பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    • தனுஷ்கோடி, கோதண்டராமர் கோவில் உள்ள பகுதிகளில் மத்திய, மாநில உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியை தொடங்கி உள்ளனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் ஸ்ரீராமன், சீதையால் பூஜிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவன் ஆலயமாகும். இந்துக்களின் புனித ஸ்தலங்களில் ராமேசுவரம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக திகழ்கிறது.

    உத்தரபிரேதச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு விழா வருகிற 22-ந்தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி ராமரின் குழந்தை வடிவிலான சிலையை பிரதிஷ்டை செய்ய உள்ளார்.

    இதற்காக கடந்த 12-ந்தேதி முதல் விரதம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி 20-ந்தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் கேம்ப் வருகை தர உள்ளார். ராமரின் வாழ்க்கை வரலாற்றுடன் நெருங்கிய தொடர்புடைய ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கிறார். அப்போது 22 தீர்த்தங்களிலும் புனித தீர்த்தத்தை சேகரிக்கிறார். பின்னர் சுவாமி, அம்பாளை தரிசனம் செய்வதுடன் சிறப்பு பூஜையிலும் கலந்து கொள்கிறார்.

    இதன் பின் மேற்கு வாசல் பகுதியில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் இரவு தங்கி ஓய்வு எடுத்துக்கொள்கிறார். 21-ந்தேதி காலை ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 கி.மீ. தொலைவில் உள்ள விபீஷணனுக்கு ஆறுதல் கூறிய வரலாற்றை எடுத்துரைக்கும் கோதண்டராமர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து சிறப்பு வழிபாட்டிலும் கலந்துகொள்கிறார்.

    பின்னர் கலசத்தில் சேகரித்த, 22 புனித தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு அன்று காலை 11.20 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதியம் 12.20 மணிக்கு மதுரை விமான நிலையம் செல்கிறார். 12.25 மணிக்கு விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார். 

    பிரதமர் மோடி வருகையையொட்டி மண்டபத்தில் உள்ள ஹெலிபேடு தயார்படுத்தும் பணி நடைபெற்று வரும் காட்சி

    பிரதமர் மோடி வருகையையொட்டி மண்டபத்தில் உள்ள ஹெலிபேடு தயார்படுத்தும் பணி நடைபெற்று வரும் காட்சி

    முன்னதாக பிரதமர் வருகையை முன்னிட்டு மண்டபம் முகாம் ஹெலிபேட் தளத்தில் மராமத்து பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ராமேசுவரத்திற்கு பிரதமர் வருகையை முன்னிட்டு சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்துறையினர் கப்பல்கள் மற்றும் கரையோரம் பகுதிகளில் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அதிவேக ரோந்து படகுகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இதே போன்று ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகள் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் செ.சிவ ராம்குமார் தலைமையில் தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கி உள்ளனர்.

    பிரதமர் மோடி இரவு ஓய்வு எடுக்கும் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 பேர் முதல்கட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தனுஷ்கோடி, கோதண்டராமர் கோவில் உள்ள பகுதிகளில் மத்திய, மாநில உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியை தொடங்கி உள்ளனர். மண்டபத்தில் ஹெலிகாப்டர் தரை இறக்கி பாதுகாப்பு ஒத்திகையை மேற்கொள்ள உள்ளனர்.

    முன்னதாக கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது ராமேசுவரம் வருகை தந்த பிரதமர் மோடி, தற்போது சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை தருவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    • அனைத்து பிரகாரங்களையும் சுற்றி வந்த கவர்னர் ஆர்.என்.ரவி மூலவர் மற்றும் உற்சவரை தரிசனம் செய்தார்.
    • கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு தரப்பட்டது.

    ராமேசுவரம்:

    தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகை தந்தார். விமான நிலையத்தில் அவரை கலெக்டர் சங்கீதா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்ட கவர்னர் ஆர்.என்.ரவி ராமநாதபுரம் சென்றார். அங்கு கலெக்டர் விஷ்ணுசந்திரன் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதையடுத்து திருப்புல்லாணியில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த ராமாயண காவியத்துடன் நெருங்கிய தொடர்புடைய ஆதிஜெகநாத பெருமாள் கோவிலுக்கு சென்றார்.

    அங்கு அனைத்து பிரகாரங்களையும் சுற்றி வந்த கவர்னர் ஆர்.என்.ரவி மூலவர் மற்றும் உற்சவரை தரிசனம் செய்தார். முன்னதாக அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டு ராமேசுவரம் ராமநாத சாமி கோவிலுக்கு சென்றார். அங்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு தரப்பட்டது. கோவில் மூலவரை தரிசனம் செய்த கவர்னருக்கு பட்டர்கள் பிரசாதம் வழங்கினர்.

    பின்னர் கோவிலை விட்டு வெளியே வந்த கவர்னர் ராமநாத சாமி கோவில் பகுதியில் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்திருந்த தூய்மை பாரத திட்டத்தின்கீழ் நடைபெற்ற பணியில் கலந்துகொண்டார். மேலும் அதில் பங்கேற்ற தன்னார்வலர்கள், மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

    மீண்டும் ராமேசுவரத்தில் இருந்து காரில் புறப்பட்ட கவர்னர் ஆர்.என்.ரவி மதுரை சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். முன்னதாக திருப்புல்லாணி, ராமேசுவரம் கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி பட்டு வேட்டி, சட்டை, தோளில் துண்டு அணிந்து வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விபத்தில் 2 வேனில் இருந்த பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு வடமாநிலத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் இன்று அதிகாலை அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினார். பின்னர் அவர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தனுஷ்கோடி செல்ல திட்டமிட்டனர்.

    இதற்காக ராமேசுவரத்தில் உள்ள 2 சுற்றுலா வேன்களில் அவர்கள் இன்று காலை புறப்பட்டு சென்றனர். தனுஷ்கோடி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோதண்டராமர் கோவில் அருகே வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு சுற்றுலா வேன் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் ஒரு வேன் ரோட்டில் கவிழ்ந்தது. மற்றொரு வேனின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. வேனில் இருந்த 2 வடமாநில பயணிகள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர். அவர்களின் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை.

    விபத்தில் 2 வேனில் இருந்த பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அந்த வழியாக வந்தவர்கள் அவர்களை மீட்டு ராமேசுவரம் அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயமடைந்த 10 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து தொடர்பாக ராமேசுவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×