என் மலர்
நீலகிரி
- கட்டுமான பொருட்கள் ஏற்றி வந்த லாரி மலைப்பாதையின் முதல் கொண்டை ஊசி வளைவில் பழுதாகியது.
- வாகனங்கள் 5 கிலோமீட்டர் தூரம் வரை சாலையில் அணிவகுத்து நின்றன.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை திருவிழா நடைபெற்று வருவதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
சுற்றுலா பயணிகள் நீலகிரிக்குள் வந்து செல்ல ஏதுவாக மாவட்ட நிர்வாகம் சாலைகளை ஒருவழிப்பாதையாக மாற்றி அமைத்துள்ளது. சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்குள் வருவதற்கு மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வழியாகவும் சுற்றுலாவை முடித்து விட்டு திரும்பி செல்ல கோத்தகிரி வழியாகவும் ஒருவழிப்பாதையாக உள்ளது.
இதனால் மாலை வேளைகளில் கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் மேட்டுப்பாளையம் வரை ஊர்ந்து செல்லும் நிலையில் இருக்கின்றன.
இதில் நேற்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி பகுதிக்கு கட்டுமான பொருட்கள் ஏற்றி வந்த லாரி மலைப்பாதையின் முதல் கொண்டை ஊசி வளைவில் பழுதாகி நின்று விட்டது.
காலை முதல் மாலை வரை அந்த லாரியை பழுது பார்த்து விட்டு மாலை லாரியை அங்கிருந்து கிளப்ப முற்பட்டபோது லாரி சாலை வளைவின் நடுவில் மீண்டும் பழுதாகி நின்று விட்டது. இதனால் வாகனங்கள் சுமார் 5 கிலோமீட்டர் வரை சாலையில் அணிவகுத்து நின்றன. மேலும் 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- கொள்ளையர்கள் காவலர்களை கத்தியால் வெட்டியதால் போலீசார் சுட்டு பிடித்தனர்.
- பாதுகாப்புக்காக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி :
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே இன்று அதிகாலை டாஸ்மாக் கடையில் கொள்ளை அடிக்க முயன்றவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். கொள்ளையர்கள் காவலர்களை கத்தியால் வெட்டியதால் போலீசார் சுட்டு பிடித்தனர்.
சுடப்பட்ட கொள்ளையன் சாம்பார் மணிக்கு தொடையில் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தப்பிச்சென்ற மற்றொரு கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.
அதிகாலை நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. பாதுகாப்புக்காக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- 182 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 86 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- மாவட்ட முன்னோடி திட்டம் சாா்பில் அமைக்கப்பட்ட அரங்குகளை கலெக்டர் பாா்வையிட்டாா்.
ஊட்டி
நீலகிரி மாவட்டம், குந்தா வட்டம், கீழ்குந்தா கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமுக்கு கலெக்டர் அம்ரித் தலைமை வகித்தாா்.
இதில் வருவாய்த் துறை சாா்பில் 89 பயனாளிகளுக்கு ரூ.70 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பில் நத்தம் பட்டா, 5 பயனாளிகளுக்கு சாலை விபத்துக்கான நிவாரணத் தொகையாக ரூ.1.80 லட்சத்துக்கான உதவித்தொகை, விதவை சான்று, புதிய குடும்ப அட்டை, நுண்ணீா் பாசனக் கருவிகள், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகள், மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் மகளிருக்கான சுயதொழில் கடனுதவி, ஊராட்சித் துறை சாா்பில் 28 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை உள்பட மொத்தம் 182 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 86 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அம்ரித் வழங்கினாா்.
முன்னதாக நடமாடும் மருத்துவ முகாம், கால்நடை பராமரிப்புத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை, பொது விநியோகத் திட்டம், சமூக நலத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், தோ்தல் பிரிவு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, இ-சேவை மையம், மக்கள் நல்வாழ்வுத் துறை, கீழ்குந்தா பேரூராட்சி, மாவட்ட முன்னோடி திட்டம் சாா்பில் அமைக்கப்பட்ட அரங்குகளை கலெக்டர் பாா்வையிட்டாா்.
முகாமில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, கோட்டாட்சியா் துரைசாமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தனப்பிரியா, தோட்டகலைத் துறை துணை இயக்குநா் ஷிபிலாமேரி, சுகாதாரத் துறை துணை இயக்குநா் பாலுசாமி, கீழ்குந்தா பேரூராட்சித் தலைவா் சத்தியவாணி, செயல் அலுவலா் ரவி, தூனேரி ஊா்த் தலைவா் ராமன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
- கோத்தகிரி வளம் மீட்பு பூங்காவில் 4 டன் இயற்கை உரம் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.
- தற்போது விவசாயிகள் நலன் கருதி கிலோ ரூ.5-க்கு விற்பனை செய்ய உள்ளோம்.
அரவேனு,
கோத்தகிரி பேரூராட்சியில் வளம் மீட்பு பூங்கா உள்ளது. இது 4½ ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு பேரூராட்சியின் 21 வார்டுகளில் இருந்து தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது.
அதன்பிறகு இங்கு மக்கும்- மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது. கோத்தகிரி வளம் மீட்பு பூங்காவில் தயாரிக்கப்படும் இயற்கை உரம், குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை வாங்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் மற்றும் சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் கூறுகையில், கோத்தகிரி நகரை குப்பை இல்லாத நகரமாக மாற்றி, சுற்றுச்சூழலை பாதுகாக்க பேரூராட்சி நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.
கோத்தகிரி வளம் மீட்பு பூங்காவில் குப்பைகள் அனைத்தும் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யபட்டு அங்கு தற்போது 4 டன் இயற்கை உரம் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. இதற்கு முன்பு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தற்போது விவசாயிகள் நலன் கருதி கிலோ ரூ.5-க்கு விற்பனை செய்ய உள்ளோம். எனவே தேவைப்படும் விவசாயிகள் இயற்கை உரம் வாங்கி பயன் பெறலாம் என்றனர்
- போதைப்பொருள் சம்பந்தமான தகவல்கள் இருந்தால் புகார் தெரிவிக்க வேண்டும்.
- ெகாடநாடு ஊராட்சி துணைத்தலைவர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரவேனு,
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், ெகாடநாடு ஊராட்சிக்கு உட்பட்ட கெரடாமட்டம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு ஏராளமான பொதுமக்களும் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சோலூர்மட்டம் போலீசார் சார்பில் பொதுமக்கள் மத்தியில் போதைப்பொருட்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் ெகாடநாடு ஊராட்சி துணைத்தலைவர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து சோலூர்மட்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி கூறுகையில் போதைப்பொருளுக்கு ஏராளமான இளைஞர்கள் பலியாகி உள்ளனர். அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டாலும் பொதுமக்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும். எனவே பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும். அவர்கள் எங்கு செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதை உற்று நோக்க வேண்டும்.
உங்கள் பகுதியில் போதைப்பொருள் சம்பந்தமான தகவல்கள் இருந்தால் எங்களிடம் தெரிவிக்க வேண்டும். போதைப் பொருள் இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்க காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அப்போது போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு கோடநாடு ஊராட்சி சார்பாக பல்வேறு உதவிகள் செய்யப்படுவதாகவும் துணைத் தலைவர் ரவி தெரிவித்தார்.
- தேயிலைத் தோட்டங்களில் ஊடுபயிராக காபி, ஏலக்காய் விவசாயமும் மேற்கொள்ளப்படுகிறது
- 'பைகஸ் கேரிகா' என்ற தாவரவியல் பெயா் கொண்ட அத்திப்பழம் ஆஸ்திரேலியா, மலேசியாவை அடுத்து இந்தியாவில் அதிக அளவில் விளைகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக காய்கறி விவசாயம் முக்கியத்தொழிலாக விளங்கி வருகிறது.
மேலும் தேயிலைத் தோட்டங்களில் ஊடுபயிராக காபி, ஏலக்காய் விவசாயமும் மேற்கொள்ளப்படுகிறது. இதுதவிர ஆரஞ்சு, கொய்யா, சீதா, அத்தி, எலுமிச்சை உள்ளிட்ட பழ வகைகளும் பயிரிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குன்னூா் மற்றும் மஞ்சூரில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்டங்களில் அத்திப் பழங்கள் கொத்து கொத்தாக விளைந்துள்ளன.
இதனை உள்ளூா் மக்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளும் ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா்.
ஒருசில தோட்ட உரிமையாளா்கள் அத்திப்பழங்களை பறித்து, உலர வைத்து பாக்கெட்டுகளில் அடைத்து ஊட்டி, குன்னூா், கோவை உள்ளிட்ட சந்தைகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வருகின்றனா்.
'பைகஸ் கேரிகா' என்ற தாவரவியல் பெயா் கொண்ட அத்திப்பழம் ஆஸ்திரேலியா, மலேசியாவை அடுத்து இந்தியாவில் அதிக அளவில் விளைகிறது. இந்த பழத்தில் நாா்ச்சத்துடன் இரும்புச்சத்து அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த பழத்தில் 45 சதவீத கலோரி உள்ளது. இதில் வைட்டமின் ஏ மற்றும் சி அடங்கியுள்ளன. மருத்துவ குணமிக்க அத்திப்பழங்கள் கோடை சீசனின் இறுதி நிகழ்ச்சியாக குன்னூா் சிம்ஸ் பூங்காவில் வருகிற சனிக்கிழமை நடக்க உள்ள 63-வது பழக்கண்காட்சியில் இடம்பெற உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
- ஊட்டி, சேரிங்கிராஸ், மாா்க்கெட், கமா்ஷியல் சாலை, பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
- ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட வி.சி.காலனியில் பெய்த மழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெயில் காணப்பட்டது.
தற்போது கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் குறைந்து இதமான கால நிலை நிலவி வருகியது. அவ்வப்போது மூடுபனியுடன் மழையும் பெய்து வந்தது.
இந்த நிலையில் நேற்று பிற்பகலில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
ஊட்டி, சேரிங்கிராஸ், மாா்க்கெட், கமா்ஷியல் சாலை, பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
இதனால் அந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
மழையில் இருந்து தப்பிக்க வாகனங்களில் சென்றவர்கள், வாகனங்களை சாலையோரம் நிறுத்தி விட்டு, பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட வி.சி.காலனியில் பெய்த மழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் வீடுகளுக்குள் இருந்த பொருட்கள் அனைத்தும் மழை நீரில் சேதம் அடைந்தது.
வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வாளியை கொண்டு வெளியேற்றினர்.
திடீரென பெய்த மழையால் ஊட்டியில் கடும் குளிா் நிலவியது. இதனால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வெளியில் வராமல் தங்கும் விடுதிகளிலேயே முடங்கினா். குளிா் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
- இத்திட்டம் நீலகிரி மாவட்டத்தில் 1 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 3 அரசு மருத்துவமனைகளிலும், 6 தனியார் மருத்துவ மனைகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- விபத்தினால் ஏற்படும் உயிர்சேதங்களை தவிர்க்கும் பொருட்டு இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 மணி நேர திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர்.
ஊட்டி,
இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 மணி நேரம் திட்டம், நீலகிரி மாவட்டத்தில் 1 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 3 அரசு மருத்துவமனைகளிலும், 6 தனியார் மருத்துவ மனைகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்தில் 787 நபர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48 மணி நேர திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்ற குமார் கூறியதாவது:-
என் பெயர் குமார் (வயது 24). என் தகப்பனார் பெயர் தயாளன், நாங்கள் கேத்தி பாலாடா அருகே வசித்து வருகிறோம். நான் 05.05.2023 அன்று மோட்டார் சைக்கிளில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
உடனே என்னை ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி அழைத்து சென்று இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 நேரம் திட்டத்தின் கீழ் உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது நான் நலமாக உள்ளேன். இதுபோன்ற திட்டத்தினை அறிவித்த முதலமைச்சருக்கு எனது மனமார்ந்த நன்றி. இவ்வாறு தெரிவித்தார்.
இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 மணி நேர திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்ற அருண் பிரசாத் கூறியதாவது:-
என் பெயர். அருண் பிரசாத் எனக்கு 30 வயதாகிறது. என் தகப்பனார் பெயர் செல்வராஜ். நான் 16.04.2023 அன்று, கல்லட்டி அருகே உள்ள பைசன் வியூ பாயிண்டில் எனது நான்கு சக்கர வாகனத்தில் சென்ற போது திடீரெனெ வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் நான் காயம் அடைந்தேன்.
உடனே ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி அழைத்து சென்று நம்மை காக்கும் 48 மணி நேரம் திட்டத்தின் கீழ் போதிய சிகிச்சை அளிக்கப் பட்டது.
தற்போது சிகிச்சைக்கு பின் நான் நலமாக உள்ளேன். திடீரென ஏற்படும் விபத்துக்களை சாதாரணமாக என்னாமல் உயிர் சேதத்தினை தவிர்க்கும் வகையில், உயிர்காக்கும் நோக்கத்தில் இதுபோன்ற திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
தற்போதைய காலத்தில் வாகனம் இல்லாமல் பயணிப்பது என்பது மிகவும் சிரமமான ஒன்றாகும். இது போன்ற சூழ்நிலையில், விபத்தினால் ஏற்படும் உயிர்சேதங்களை தவிர்க்கும் பொருட்டு இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 மணி நேர திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி வரும் முதல்-அமைச்சர் தலைமையிலான தமிழக அரசிற்கு நீலகிரி மாவட்ட மக்கள் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
- தமிழக சுற்றுலா அமைச்சர். கா.ராமசந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
- ஜே.எஸ்.எஸ் கல்லூரிக்கு சுழற் கோப்பை வழங்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் 125-வது மலர் கண்காட்டி கடந்த 19-ந்தேதி தொடங்கியது.
இது 5 நாட்கள் தொடர்ந்து நடந்தது. இந்த நிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நிறைவு விழா நேற்று நடந்தது.
இதில் மாவட்ட கலெக்டர்அம்ரித் தலைமை தாங்கினார். தமிழக சுற்றுலா அமைச்சர். கா.ராமசந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
ஊட்டி மலர் கண்காட்சி நிறைவு விழா நிகழ்ச்சியில் சிறந்த மருத்துவ செடிகள் வளர்ப்புக்காக, ஜே.எஸ்.எஸ் கல்லூரிக்கு சுழற் கோப்பை வழங்கப்பட்டது. இதனை கல்லூரி பேராசிரியர்கள் சண்முகம், ராமு ஆகியோர் பெற்று கொண்டனர்.
- 5 நாட்களில் ஊட்டி மலர் கண்காட்சியை 1 லட்சத்து 22 ஆயிரத்து 708 பேர் கண்டு ரசித்துள்ளனர்.
- நிறைவு விழாவையொட்டி பரிசளிப்பு விழா நடந்தது. தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சிபிலா மேரி வரவேற்றார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் 125-வது மலர் கண்காட்சி கடந்த 19-ந்தேதி தொடங்கியது. கண்காட்சியை அமைச்சர் ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல ஆயிரம் வண்ண மலர்களை கொண்டு அலங்கார உருவங்கள் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதுதவிர மலர்தொட்டிகளில் மலர்களும் பூத்து குலுங்கின.
கண்காட்சியின் சிறப்பம்சமாக 50 ஆயிரம் கார்னேஷன் மலர்களை கொண்டு 40 அடி அகலம், 48 அடி உயரத்தில் தேசிய பறவையான மயில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருந்தது.
இது பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுத்தது. மேலும் ஊட்டி 200-யை கொண்டாடும் வகையில் ஊட்டி 200 வடிவம், மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு உருவம், ஊட்டி தாவரவியல் பூங்கா உருவாகி 175-வது ஆண்டை குறிக்கும் வகையிலான உருவ வடிவம், குழந்தைகளுக்கு பிடித்த வனவிலங்குகள், பொம்மைகளின் உருவங்களும் இடம்பெற்றன.
இதுதவிர பூங்காவில் 35 ஆயிரம் மலர் தொட்டிகள் மற்றும் 125 நாடுகளின் தேசிய மலர்களும் காட்சிப்படுத்தப்பட்டன. கண்காட்சியை காண நீலகிரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் கண்காட்சியை குடும்பத்துடன் பார்வையிட்டு ரசித்தனர்.
5 நாட்கள் நடந்த கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. 5 நாட்களில் ஊட்டி மலர் கண்காட்சியை 1 லட்சத்து 22 ஆயிரத்து 708 பேர் கண்டு ரசித்துள்ளனர்.
நிறைவு விழாவையொட்டி பரிசளிப்பு விழா நடந்தது. தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சிபிலா மேரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
நடப்பு ஆண்டுக்கான தமிழ்நாடு தங்கசுடா் கவர்னர் சுழற்கோப்பை விருது வெலிங்டன் ராணுவ மையக் கல்லூரிக்கும், முதலமைச்சா் சுழற்கோப்பை விருது ஜென்சி கிஷோருக்கும் வழங்கப்பட்டது. ஊட்டி மலர் கண்காட்சி நிறைவு விழாவில் 36 சுழற்கோப்பைகள், 145 பேருக்கு முதல் பரிசு, 131 பேருக்கு 2-வது பரிசு, 30 பேருக்கு 3-வது பரிசு, 85 பேருக்கு சிறப்புப் பரிசுகள் உள்பட மொத்தம் 427 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவ அதிகாரிகள் ஊட்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மாயன் எ.மாதன், உதகை நகராட்சி துணை தலைவர் ரவிக்குமார், 4-வது வார்டு உறுப்பினர் அனிதாலட்சுமி, அரசு தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பிருந்தாதேவி, மக்கள் செய்தி தொடர்பு துறை அலுவலர் சையதுமுகமது உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- ஊட்டி தாவரவியல் பூங்காவில் கடந்த 19-ந்தேதி மலர் கண்காட்சி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது.
- கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, சிலம்பம் சுற்றியது குறிப்பிடத்தக்கது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் தொடங்கி நடைபெறும். இந்த ஆண்டுக்கான கோடை விழா கடந்த 6-ந்தேதி தொடங்கியது.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் கடந்த 19-ந்தேதி மலர் கண்காட்சி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது.
இதன் ஒரு பகுதியாக ஊட்டி பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் கலை நிகழ்ச்சி, இன்னிசை கச்சேரி, நாடகம், பட்டிமன்றம், ஆடல், பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிலையில், குழந்தைகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பரதநாட்டிய குழுவினருடன் இணைந்து நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, பரதநாட்டியம் ஆடி அசத்தினாா். பின்னா் மற்றொரு பாடலுக்கு தனது மகள் சம்ருதி வர்ணமாலிகாவுடன் பரத நாட்டியம் ஆடியது பாா்வையாளா்களை கவா்ந்தது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, சிலம்பம் சுற்றியது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷின் கூறியதாவது:-
திண்டுக்கல் மாவட்டம், அண்ணாமலையாா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயின்றேன். அங்கு எனது தாய் தலைமை ஆசிரியராக பணியாற்றினாா். அப்போது மாணவிகளுக்கு நடனம் சொல்லிக் கொடுப்பாா். அதிலிருந்து நானும் பரதம் கற்றுக்கொண்டேன். அப்போது, கவிதை, பேச்சு, நடனப் போட்டிகளில் கலந்து கொள்வேன். பின்னா் சிலம்பம் கற்றுக் கொண்டேன். கோடை விழாவில் எனது மகளுடன் சோ்ந்து பரதநாட்டியம் ஆடியது பெருமையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினர்.
- முதுமலை புலிகள் சரணாலயம், 124 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது.
- கணக்கெடுப்பு பணி வருகிற 28-ந்தேதி வரை நடக்கும்.
ஊட்டி,
தமிழகத்தில் உள்ள சரணாலயங்களில் குறிப்பிடத்தக்கது முதுமலை புலிகள் சரணாலயம். முதுமலை புலிகள் சரணாலயம், 124 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது. இங்கு புலி, வரையாடு, யானை, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.
முதுமலை சரணாலயத்தில் பருவமழைக்கு முன்பாக வன உயிரின கணக்கெடுப்பு பணிகள் நடப்பது வழக்கம். இதற்காக 100-க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சிகள் தரப்பட்டு உள்ளன.
முதுமலை புலிகள் சரணாலயத்தில் இன்று காலை முதல் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. அப்போது வனவிலங்குகளின் எச்சம், நகக்கீறல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கெடுப்பு அமையும் என்று தெரிகிறது.
இதுதொடர்பாக முதுமலை புலிகள் சரணாலய வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'முதுலையில் பருவமழைக்கு முன்பான வனஉயிரின கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி உள்ளது. இது வருகிற 28-ந்தேதி வரை நடக்கும். முதுமலை சரணாலயத்தில் பருவமழைக்கு முன்பான கணக்கெடுப்பு பணிகள் முடிந்தபிறகு, இதற்கான அறிக்கை தேசிய புலிகள் இயக்கத்துக்கு அனுப்பி வைக்கப்படும்" என்று தெரிவித்து உள்ளனர்.






