search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thank"

    • நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சம்பந்தப்பட்ட பகுதிக்கு ஆய்வு செய்து கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று அப்பகுதி மக்களிடம் உறுதி அளித்தார்.
    • எம்.எல்.ஏ., மேயர், எம்.பி., அமைச்சர், முதல்-அமைச்சர் ஆகியோருக்கும், தமிழக அரசுக்கும் வார்டு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி 45-வது வார்டு காயிதே மில்லத் நகரில் மாநகராட்சியின் சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க முற்பட்டபோது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் திட்டம் நிறுத்தப்பட்டது. மேலும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சம்பந்தப்பட்ட பகுதிக்கு ஆய்வு செய்து கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று அப்பகுதி மக்களிடம் உறுதி அளித்தார்.

    இந்தநிலையில் அனைத்து இஸ்லாமிய குழு தலைவர் ஷாஜகான் நிருபர்களிடம் கூறும்போது, காயிதேமில்லத் நகர் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க கடந்த 6 மாதமாக எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். மேயர், எம்.எல்.ஏ., எம்.பி. ஆகியோரிடம் முறையிடப்பட்டது. முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, காயிதேமில்லத் நகர் பகுதிக்கு வந்து முஸ்லிம் மக்களிடம் விவரங்களை கேட்டார். வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று ஒட்டுமொத்தமாக வைத்த கோரிக்கையை ஏற்று, கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதாக அமைச்சர் உறுதியளித்தார்.

    இதற்காக எம்.எல்.ஏ., மேயர், எம்.பி., அமைச்சர், முதல்-அமைச்சர் ஆகியோருக்கும், தமிழக அரசுக்கும் வார்டு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார். இதில் முஸ்லிம் அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • இத்திட்டம் நீலகிரி மாவட்டத்தில் 1 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 3 அரசு மருத்துவமனைகளிலும், 6 தனியார் மருத்துவ மனைகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • விபத்தினால் ஏற்படும் உயிர்சேதங்களை தவிர்க்கும் பொருட்டு இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 மணி நேர திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர்.

    ஊட்டி,

    இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 மணி நேரம் திட்டம், நீலகிரி மாவட்டத்தில் 1 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 3 அரசு மருத்துவமனைகளிலும், 6 தனியார் மருத்துவ மனைகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்தில் 787 நபர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.

    இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48 மணி நேர திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்ற குமார் கூறியதாவது:-

    என் பெயர் குமார் (வயது 24). என் தகப்பனார் பெயர் தயாளன், நாங்கள் கேத்தி பாலாடா அருகே வசித்து வருகிறோம். நான் 05.05.2023 அன்று மோட்டார் சைக்கிளில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

    உடனே என்னை ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி அழைத்து சென்று இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 நேரம் திட்டத்தின் கீழ் உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது நான் நலமாக உள்ளேன். இதுபோன்ற திட்டத்தினை அறிவித்த முதலமைச்சருக்கு எனது மனமார்ந்த நன்றி. இவ்வாறு தெரிவித்தார்.

    இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 மணி நேர திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்ற அருண் பிரசாத் கூறியதாவது:-

    என் பெயர். அருண் பிரசாத் எனக்கு 30 வயதாகிறது. என் தகப்பனார் பெயர் செல்வராஜ். நான் 16.04.2023 அன்று, கல்லட்டி அருகே உள்ள பைசன் வியூ பாயிண்டில் எனது நான்கு சக்கர வாகனத்தில் சென்ற போது திடீரெனெ வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் நான் காயம் அடைந்தேன்.

    உடனே ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி அழைத்து சென்று நம்மை காக்கும் 48 மணி நேரம் திட்டத்தின் கீழ் போதிய சிகிச்சை அளிக்கப் பட்டது.

    தற்போது சிகிச்சைக்கு பின் நான் நலமாக உள்ளேன். திடீரென ஏற்படும் விபத்துக்களை சாதாரணமாக என்னாமல் உயிர் சேதத்தினை தவிர்க்கும் வகையில், உயிர்காக்கும் நோக்கத்தில் இதுபோன்ற திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    தற்போதைய காலத்தில் வாகனம் இல்லாமல் பயணிப்பது என்பது மிகவும் சிரமமான ஒன்றாகும். இது போன்ற சூழ்நிலையில், விபத்தினால் ஏற்படும் உயிர்சேதங்களை தவிர்க்கும் பொருட்டு இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 மணி நேர திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி வரும் முதல்-அமைச்சர் தலைமையிலான தமிழக அரசிற்கு நீலகிரி மாவட்ட மக்கள் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

    ×