search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sewage treatment"

    • கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    • நிலத்தடி நீர் பாதிக்கும் எனக்கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    காக்காப்பாளையம்:

    இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட கே.கே. நகர் சின்ன ஏரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின் மயானம் அமைத்தனர்.

    இந்நிலையில் மயானத்தின் எதிர்ப்புறம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நகராட்சி நிர்வாகம் சார்பாக இன்று 4 ஜே.சி.பி. எந்திரத்தை கொண்டு நிலத்தை சமன் செய்யும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

    கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் பணிகள் முடக்கப்பட்டது.

    இந்த பகுதியில் ஏற்கனவே மின் மயானம், குப்பை கிடங்கு ஆகியன உள்ளது. மேலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் நிலத்தடி நீர் பாதிக்கும் எனக்கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், அருள் ஆகிய 2 பேரும் அங்குள்ள உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது அவர்கள் ஏற்கனவே இப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிப்படைந்துள்ளது. மேலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வந்தால் மேலும் பாதிப்படையும் எனவே மாவட்ட கலெக்டர் வந்தால் மட்டுமே கீழே இறங்குவதாக கூறி கோபாலகிருஷ்ணன் மற்றும் அருள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

    இதையடுத்து அப்பகுதி மக்களிடம் இடங்கணசாலை நகராட்சி கமிஷனர் ஜேம்ஸ் கிங்ஸ்டன் மற்றும் மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் தங்கவேல், சங்ககிரி டி.எஸ்.பி. ராஜா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சம்பந்தப்பட்ட பகுதிக்கு ஆய்வு செய்து கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று அப்பகுதி மக்களிடம் உறுதி அளித்தார்.
    • எம்.எல்.ஏ., மேயர், எம்.பி., அமைச்சர், முதல்-அமைச்சர் ஆகியோருக்கும், தமிழக அரசுக்கும் வார்டு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி 45-வது வார்டு காயிதே மில்லத் நகரில் மாநகராட்சியின் சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க முற்பட்டபோது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் திட்டம் நிறுத்தப்பட்டது. மேலும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சம்பந்தப்பட்ட பகுதிக்கு ஆய்வு செய்து கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று அப்பகுதி மக்களிடம் உறுதி அளித்தார்.

    இந்தநிலையில் அனைத்து இஸ்லாமிய குழு தலைவர் ஷாஜகான் நிருபர்களிடம் கூறும்போது, காயிதேமில்லத் நகர் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க கடந்த 6 மாதமாக எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். மேயர், எம்.எல்.ஏ., எம்.பி. ஆகியோரிடம் முறையிடப்பட்டது. முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, காயிதேமில்லத் நகர் பகுதிக்கு வந்து முஸ்லிம் மக்களிடம் விவரங்களை கேட்டார். வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று ஒட்டுமொத்தமாக வைத்த கோரிக்கையை ஏற்று, கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதாக அமைச்சர் உறுதியளித்தார்.

    இதற்காக எம்.எல்.ஏ., மேயர், எம்.பி., அமைச்சர், முதல்-அமைச்சர் ஆகியோருக்கும், தமிழக அரசுக்கும் வார்டு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார். இதில் முஸ்லிம் அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விழா நடந்தது
    • சுமார் 250 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    ராணிப்பேட்டை:

    ராணிடெக் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பூஜ்ய கழிவுநீர் புதிய சமன்படுத்தப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்பினை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

    இதனைதொடர்ந்து ராணிடெக் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

    ராணிடெக் தலைவர் ரமேஷ்பிரசாத் வரவேற்றார். நிர்வாக இயக்குனர் ஜபருல்லா வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் இணை தலைமை பொறியாளர் ராஜன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிசந்திரன் ஆகியோர் பேசினார்.

    நிகழ்ச்சியில் ராணிடெக் பொது மேலாளர் சிவகுமார் உலக சுற்றுச்சூழல் தினவிழா உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    நிகழ்ச்சியில் தோல் பதனிடும் அங்கத்தினர்கள், தொழிலதிபர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொது மேலாளர் சிவகுமார் நன்றி கூறினார்.முன்னதாக ராணிடெக் நிலைய வளாகத்தில் 250 மரக்கன்றுகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நட்டார்.

    ×