நீலகிரி முதுமலையில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

முதுமலை புலிகள் சரணாலயம், 124 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது. கணக்கெடுப்பு பணி வருகிற 28-ந்தேதி வரை நடக்கும்.
நீலகிரி முதுமலையில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
Published on

ஊட்டி,

தமிழகத்தில் உள்ள சரணாலயங்களில் குறிப்பிடத்தக்கது முதுமலை புலிகள் சரணாலயம். முதுமலை புலிகள் சரணாலயம், 124 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது. இங்கு புலி, வரையாடு, யானை, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.

முதுமலை சரணாலயத்தில் பருவமழைக்கு முன்பாக வன உயிரின கணக்கெடுப்பு பணிகள் நடப்பது வழக்கம். இதற்காக 100-க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சிகள் தரப்பட்டு உள்ளன.

முதுமலை புலிகள் சரணாலயத்தில் இன்று காலை முதல் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. அப்போது வனவிலங்குகளின் எச்சம், நகக்கீறல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கெடுப்பு அமையும் என்று தெரிகிறது.

இதுதொடர்பாக முதுமலை புலிகள் சரணாலய வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'முதுலையில் பருவமழைக்கு முன்பான வனஉயிரின கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி உள்ளது. இது வருகிற 28-ந்தேதி வரை நடக்கும். முதுமலை சரணாலயத்தில் பருவமழைக்கு முன்பான கணக்கெடுப்பு பணிகள் முடிந்தபிறகு, இதற்கான அறிக்கை தேசிய புலிகள் இயக்கத்துக்கு அனுப்பி வைக்கப்படும்" என்று தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com