search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழ்குந்தா கிராமத்தில் மனுநீதிநாள் முகாம்
    X

    கீழ்குந்தா கிராமத்தில் மனுநீதிநாள் முகாம்

    • 182 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 86 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • மாவட்ட முன்னோடி திட்டம் சாா்பில் அமைக்கப்பட்ட அரங்குகளை கலெக்டர் பாா்வையிட்டாா்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம், குந்தா வட்டம், கீழ்குந்தா கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமுக்கு கலெக்டர் அம்ரித் தலைமை வகித்தாா்.

    இதில் வருவாய்த் துறை சாா்பில் 89 பயனாளிகளுக்கு ரூ.70 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பில் நத்தம் பட்டா, 5 பயனாளிகளுக்கு சாலை விபத்துக்கான நிவாரணத் தொகையாக ரூ.1.80 லட்சத்துக்கான உதவித்தொகை, விதவை சான்று, புதிய குடும்ப அட்டை, நுண்ணீா் பாசனக் கருவிகள், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகள், மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் மகளிருக்கான சுயதொழில் கடனுதவி, ஊராட்சித் துறை சாா்பில் 28 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை உள்பட மொத்தம் 182 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 86 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அம்ரித் வழங்கினாா்.

    முன்னதாக நடமாடும் மருத்துவ முகாம், கால்நடை பராமரிப்புத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை, பொது விநியோகத் திட்டம், சமூக நலத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், தோ்தல் பிரிவு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, இ-சேவை மையம், மக்கள் நல்வாழ்வுத் துறை, கீழ்குந்தா பேரூராட்சி, மாவட்ட முன்னோடி திட்டம் சாா்பில் அமைக்கப்பட்ட அரங்குகளை கலெக்டர் பாா்வையிட்டாா்.

    முகாமில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, கோட்டாட்சியா் துரைசாமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தனப்பிரியா, தோட்டகலைத் துறை துணை இயக்குநா் ஷிபிலாமேரி, சுகாதாரத் துறை துணை இயக்குநா் பாலுசாமி, கீழ்குந்தா பேரூராட்சித் தலைவா் சத்தியவாணி, செயல் அலுவலா் ரவி, தூனேரி ஊா்த் தலைவா் ராமன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×