search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோடை விழாவில் மகளுடன் பரதநாட்டியம் ஆடிய நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலர்
    X

    கோடை விழாவில் மகளுடன் பரதநாட்டியம் ஆடிய நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலர்

    • ஊட்டி தாவரவியல் பூங்காவில் கடந்த 19-ந்தேதி மலர் கண்காட்சி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது.
    • கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, சிலம்பம் சுற்றியது குறிப்பிடத்தக்கது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் தொடங்கி நடைபெறும். இந்த ஆண்டுக்கான கோடை விழா கடந்த 6-ந்தேதி தொடங்கியது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் கடந்த 19-ந்தேதி மலர் கண்காட்சி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது.

    இதன் ஒரு பகுதியாக ஊட்டி பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் கலை நிகழ்ச்சி, இன்னிசை கச்சேரி, நாடகம், பட்டிமன்றம், ஆடல், பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இந்நிலையில், குழந்தைகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பரதநாட்டிய குழுவினருடன் இணைந்து நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, பரதநாட்டியம் ஆடி அசத்தினாா். பின்னா் மற்றொரு பாடலுக்கு தனது மகள் சம்ருதி வர்ணமாலிகாவுடன் பரத நாட்டியம் ஆடியது பாா்வையாளா்களை கவா்ந்தது.

    கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, சிலம்பம் சுற்றியது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷின் கூறியதாவது:-

    திண்டுக்கல் மாவட்டம், அண்ணாமலையாா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயின்றேன். அங்கு எனது தாய் தலைமை ஆசிரியராக பணியாற்றினாா். அப்போது மாணவிகளுக்கு நடனம் சொல்லிக் கொடுப்பாா். அதிலிருந்து நானும் பரதம் கற்றுக்கொண்டேன். அப்போது, கவிதை, பேச்சு, நடனப் போட்டிகளில் கலந்து கொள்வேன். பின்னா் சிலம்பம் கற்றுக் கொண்டேன். கோடை விழாவில் எனது மகளுடன் சோ்ந்து பரதநாட்டியம் ஆடியது பெருமையாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினர்.

    Next Story
    ×