என் மலர்
நாமக்கல்
- 16-வது வார்டில் உள்ள செயல் படாத பொதுக்கழிப்பிடத் திற்கு முன்பு அப்பகுதியில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள், கழிவு பொருட்களை கொட்டப் பட்டு வருகின்றனர்.
- குப்பை கிடங்கிற்கு எடுத்துச் செல்லாமல் இப்பகுதியிலேயே குப்பைகளை டன் கணக்கில் சேகரித்து பேரூராட்சி தூய்மை பணியாளர் மூலம் தீ வைத்து எரிக்கப்பட்டு வருகின்றன.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் திருவள்ளு வர் சாலையில், வணிக நிறு வனங்கள் மற்றும் பத்திரப் பதிவு அலுவலகம், மற்றும் 100க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டில் உள்ள செயல் படாத பொதுக்கழிப்பிடத் திற்கு முன்பு அப்பகுதியில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள், கழிவு பொருட்களை கொட்டப் பட்டு வருகின்றனர்.
தீ வைத்து எரிப்பு
பேரூராட்சி நிர்வாகம் பழைய பை-பாஸ் அருகில் உள்ள குப்பை கிடங்கிற்கு எடுத்துச் செல்லாமல் இப்பகுதியிலேயே குப்பைகளை டன் கணக்கில் சேகரித்து பேரூராட்சி தூய்மை பணியாளர் மூலம் தீ வைத்து எரிக்கப்பட்டு வருகின்றன.
அதுபோல் நேற்று மாலை அதிக அளவில் குப்பைகளை சேகரித்து தீ வைத்ததில் காற்றின் காரணமாக தீ மள மள பரவி வேகமாக எரிய தொடங்கியது. இதன் காரணமாக கரும் புகையால் அப்பகுதியில் புகைமூட்டம் போல் ஆனது. இதனால் அப்பகுதியில் உள்ள குடி யிருப்பு வாசிகள் உடனே தங்கள் வீட்டை விட்டு வெளியே வந்து தீயை தண்ணீரை ஊற்றி அணைக்கமுயற்சித்தனர்.
மேலும் தூய்மை பணியா ளர்களும் தண்ணீரை ஊற்றி அணைக்க முயற்சித் தும் தீயை அணைக்க முடி யாததால் கரூர் மாவட்டம் புகலூர் தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரி விக்கப்பட்டது.
தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த தீயை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி தீ அனைத்து கட்டுப்படுத்தி தீ அருகி லுள்ள வீடுகள், கடைகள், பத்திரப்பதிவு அலுவலகம் ஆகிய பகுதிகளில் பரவா மல் தவிர்க்கப்பட்டது.
மேலும் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள், வணிக நிறுவனங்கள் வைத்திருக்கும் கடை உரிமையாளர்கள் கூறுகை யில் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதியில் பேரூ ராட்சி மூலம் சேகரிக்கப்படும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள், கழிவு பொருட் கள், கெட்டுப்போன, அழு கிய பழங்கள், காய்கறிகள் ஆகியவைகளை கொண்டு வந்து இப்பகுதியில் கொட்டி தீ வைப்பது தொடர்கதை யாகவே இருந்து வருகிறது.
பலமுறை பேரூராட்சி அலுவலகத்தில் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இதேபோல் தீ வைத்து எரித்து வருகின்றனர். இத னால் எங்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
மேலும் தீ வைப்பதால் புகை மூட்டத்தால் எங்கள் குழந்தைகளுக்கு மூச்சு திண றலும் பல்வேறு விதமான நோய்களும் ஏற்படுகிறது. ஆகையால் மாவட்ட நிர்வா கம் உடனடியாக தலையிட்டு குடியிருப்பு , பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளபகுதி அருகே குப்பைகள் கொட்டா மல் தீ வைக்காமல் பாது காக்க வேண்டும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
- முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்தனர்.
- கறிக்கோழி கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ.4.20 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதே போல முட்டைக்கோழி கிலோ ரூ.73-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்தனர்.
எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.78 ஆக அதிகரித்து உள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.3 உயர்த்தமுடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.103 ஆக அதிகரித்து உள்ளது.
- அங்கமுத்து நாமக்கல்லில் உள்ள லாரி பட்டறையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
- சம்பவத்தன்று நாமக்கல்-சேலம் சாலையில் நடந்து செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஜங்கலாபுரத்தை சேர்ந்தவர் அங்கமுத்து (73), இவரது மனைவி சர்மிளா, மகன் சக்திவேல். அங்கமுத்து நாமக்கல்லில் உள்ள லாரி பட்டறையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று நாமக்கல்-சேலம் சாலையில் நடந்து செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அங்கமுத்து இறந்துவிட்டார்.
- 60 அடி உயரமுள்ள திருப்பதி முனியப்பசாமி கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது.
- கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு தினந்தோறும் முனியப்பசாமிக்கு கட்டளைதாரர்கள் சார்பில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. மண்டலாபிஷேக 48-வது நாள் நிறைவு விழா நடைபெற்றது.
நாமக்கல்:
பரமத்திவேலூர் தாலுகா, பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சேளூர் சாணார்பாளையத்தில் சுமார் 60 அடி உயரமுள்ள திருப்பதி முனியப்பசாமி கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு தினந்தோறும் முனியப்பசாமிக்கு கட்டளைதாரர்கள் சார்பில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. மண்டலாபிஷேக 48-வது நாள் நிறைவு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு முனியப்பசாமிக்கு யாகவேள்வி பூஜையும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மகா தீபாராதனையும், பிரசாதம் வழங்குதலும், அன்னதானமும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை சேளூர் சாணார்பாளையம் திருப்பதி முனியப்பசாமி கோயில் விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்
- திருச்செங்கோடு ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமம் சாரதா சமதி இணைந்து நடத்தும் 23-ம் ஆண்டு 18 மகா திருவிழாக்கு பூஜை கைலாசநாதர் கோவில் சொக்கப்ப முதலியார் அரங்கத்தில் நடந்தது.
- 1008 பெண்கள் கலந்து கொண்டு குங்குமம் மற்றும் மலர்களால் போற்றி பாடல்கள் பாடி திருவிளக்கு பூஜை செய்து வணங்கினார்கள் திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு ஆன்மீக உரையாற்றினார்.
திருச்செங்கோடு:
உலக நன்மைக்காகவும் வன்முறை ஒழியவும் சகோதரத்துவம் நிலவும் சகிப்புத்தன்மை ஓங்கவும் சர்வ மத நல்லிணக்கம் ஏற்படவும் மழை வேண்டியும் நவகிரக தோஷ நிவர்த்திக்காகவும் திருச்செங்கோடு அருள்நெறி வார வழிபாட்டு திருக்கூட்டமும் திருச்செங்கோடு திருவிளக்கு பூஜை விழா கமிட்டியும் திருச்செங்கோடு ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமம் சாரதா சமதி இணைந்து நடத்தும் 23-ம் ஆண்டு 18 மகா திருவிழாக்கு பூஜை கைலாசநாதர் கோவில் சொக்கப்ப முதலியார் அரங்கத்தில் நடந்தது. இதில் 1008 பெண்கள் கலந்து கொண்டு குங்குமம் மற்றும் மலர்களால் போற்றி பாடல்கள் பாடி திருவிளக்கு பூஜை செய்து வணங்கினார்கள் திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு ஆன்மீக உரையாற்றினார்.நிகழ்ச்சியில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, உறுப்பினர்கள் கார்த்திகேயன், பிரபாகரன், அருணா சங்கர், அர்ஜுனன், தியாகராஜன், விசாகவேல், பரமசிவம் சாமி, லட்சுமண சாமி, மயில் முருகேசாமி, நீலமேகம், ஆசிரியர் மணி, ராஜேஷ்வரன், மீனாட்சி ரவிச்சந்திரன், ரேணுகா லட்சுமண சாமி, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
- பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளில் பல்வேறு வகையான வாழைகளை பயிர் செய்துள்ளனர்.
- வாழைத்தார்களை வாங்கி செல்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து வாழைத்தர்களை வாங்கி செல்கின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, ஓலப்பாளையம், குச்சிபாளையம், பாலப்பட்டி, மோகனூர், குப்புச்சிபாளையம், பொத்தனூர், பரமத்தி வேலூர், அனிச்சம் பாளையம், நன்செய் இடையாறு, பாண்டமங்கலம் வெங்கரை, பிலிக்கல் பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், கொத்த மங்கலம், சிறுநல்லிக் கோவில், தி.கவுண்டம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பூவன், பச்சநாடன், ரஸ்தாலி, கற்பூரவள்ளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகளை பயிர் செய்துள்ளனர்.
வாழைத்தார்
வாழைத்தார் விளைந்த வுடன் கூலி ஆட்கள் மூலம் வெட்டி உள்ளூர் பகுதி களுக்கு வரும் வியாபாரி களுக்கும், பரமத்தி வேலூ ரில் செயல்பட்டு வரும் தினசரி வாழைத்தார் ஏல மார்க்கெட்டிற்க்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். வாழைத்தார்களை வாங்கி செல்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து வாழைத்தர்களை வாங்கி செல்கின்றனர்.
வாங்கிய வாழைத்தார் களை கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங் களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப் பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.450-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.350-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.250-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.500-க்கும் ஏலம் போனது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.350-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.700-க்கு விற்பனையானது.
- எலச்சிபா ளையம் அருகே மோர்பா ளையம் பிரிவு சாலையில் உள்ள ஒரு செல்போன் கடையில் கடந்த 18-ந் தேதி 10 செல்போன்களை திருடிச் சென்றதும் தெரிய வந்துள் ளது.
- மேலும் அவரிடம் இருந்த 10 செல்போன்களையும் பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
திருச்செங்கோடு:
எலச்சிபாளையம் அடுத்த கொன்னையார் பஸ்நிறுத்தத்தில் எலச்சி பாளையம் சப்-இன்ஸ் பெக்டர் ராமச்சந்தி ரன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் சிக்கி னார். அப்போது அங்கு வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின்னாக பேசினார்.
சந்தேகமடைந்து போலீ சார் விசாரித்த போது அவர் சேலம் மாவட்டம், பெரியசீரகாபாடியைச் சேர்ந்த மோகன்குமார் (39) என்பதும், அவர், எலச்சிபா ளையம் அருகே மோர்பா ளையம் பிரிவு சாலையில் உள்ள ஒரு செல்போன் கடையில் கடந்த 18-ந் தேதி 10 செல்போன்களை திருடிச் சென்றதும் தெரிய வந்துள் ளது.
கைது
மேலும் அவரிடம் இருந்த 10 செல்போன்களையும் பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல்:
ஆடி மாதம் 2-வது வெள்ளிக் கிழமையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சந்தனகாப்பு
நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல், செல்லாண் டியம்மன் கோவில், வண் டிக்காரன்தெரு பகவதி யம்மன் கோவில், அன்புநகர் சுய வேம்பு மாரியம்மன் கோ வில், கொண்டிசெட்டிபட்டி காளியம்மன் கோவில், மாருதிநகர் மகா மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
ராசிபுரம்
ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் வளையல் அலங்காரம் செய்யப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராத னைகள் நடைபெற்றது. எல்லை மாரியம்மன் கோவில், அங்காள பர மேஸ்வரி அம்மன் கோவில், அழியா இலங்கை அம்மன் கோவில், அத்தனூர் மாரியம்மன் கோவில்களிலும் அம்ம னுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.
பரமத்திவேலூர்
இதேபோல் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதி களில் உள்ள நன்செய் இடை யாறு மகா மாரி யம்மன், செல்லாண்டி யம்மன், மகாமாரியம்மன், பேட்டை மாரியம்மன், பகவதி யம்மன், கொந்தளம் மாரியம்மன், பாண்ட மங்கலம் மாரியம்மன், பகவதியம்மன், சேளூர் மாரியம்மன், குன்னத்தூர் மாரியம்மன், அய்யம்பாளை யம் பகவதி அம்மன், பர மத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன், ஆனங்கூர் மாரி யம்மன், செல்லாண்டி அம்மன், வடகரை யாத்தூர் பகவதிஅம்மன் கோவில்களில் பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். சேந்த மங்கலத்தில் பச்சு டையாம்பட்டி காளியம்மன் கோவில், கொல்லி மலை நாச்சியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்க ளில் சிறப்பு வழி பாடு மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
எருமப்பட்டி
எருமப்பட்டி அருகே பொட்டிரெட்டிபட்டி கிராமத்தில் உள்ள கன்னி மார் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையை யொட்டி சாமிக்கு மலர் அலங்காரங்கள் செய்யப் பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் பொட்டி ரெட்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வருகின்ற ஆகஸ்ட் 1, 2 மற்றும் 3-ந் தேதிகளில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட உள்ளது.
- இதையொட்டி டாஸ்மாக் மது கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வருகின்ற ஆகஸ்ட் 1, 2 மற்றும் 3-ந் தேதிகளில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட உள்ளது.
இதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விடுமுறை
இந்த நிலையில் விழா நடைபெறும் நாட்க ளான ஆகஸ்ட் 1, 2 மற்றும் 3-ந் தேதிகளில் கொல்லிமலை பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை விட மாவட்ட கலெக்டர் உமா மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.
இதை தொடர்ந்து கொல்லி மலையில் உள்ள செங்கரை, சோளக்காடு, செம்மேடு, காரவள்ளி, அடிவாரம் பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகளுக்கு 1,2,3 தேதிகளில் விடுமுறை அளித்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கமலக்கண்ணன் உத்தரவிட்டு உள்ளார்.
- தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் செயல் பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வு களுக்கான பயிற்சி வகுப்பு கள் இலவசமாக நடத்தப் பட்டு வருகிறது.
- பயிற்சி பெற்ற மாணவர்கள் 2022-ம் ஆண்டு சீருடைப்பணியா ளர்கள் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் 5 பேர், காவலர் தேர்வில் 17 பேர் என 22 பேர் தேர்ச்சி பெற்று தற்போது அரசு பணியில் சேர்ந்துள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் செயல் பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வு களுக்கான பயிற்சி வகுப்பு கள் இலவசமாக நடத்தப் பட்டு வருகிறது.
22 பேர் தேர்ச்சி
இங்கு பயிற்சி பெற்ற மாணவர்கள் 2022-ம் ஆண்டு சீருடைப்பணியா ளர்கள் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் 5 பேர், காவலர் தேர்வில் 17 பேர் என 22 பேர் தேர்ச்சி பெற்று தற்போது அரசு பணியில் சேர்ந்துள்ளனர்.
இதேபோல டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வில் 17 பேர் நல்ல மதிப்பெண் பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு பெற்றுள்ளனர். குரூப்-2-ல் 34 பேர் முதல்நிலை தேர்வு எழுதி உள்ளனர்.
இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா கூறியதாவது:
போட்டி தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அலுவல கத்தில் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சி காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை அளிக்கப்படு கிறது. வாரந்தோறும் 2 தேர்வு நடத்தப்படுகின்றன. தேர்விற்கான பாடக்குறிப்பு கள், அன்றாட பயிற்சி தாள்கள் மாண வர்களுக்கு அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்பு கள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கொல்லிமலை அருகே வாழவந்தி நாடு ஊராட்சி கரையாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி விவசாயியான இவர் நேற்று தோட்டத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
- அப்போது அங்கு மறைந்திருந்த கரடி அவரை தாக்கியது. இதில் காயமடைந்த அவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கொல்லிமலை அருகே வாழவந்தி நாடு ஊராட்சி கரையாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி (51). விவசாயியான இவர் நேற்று தோட்டத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த கரடி அவரை தாக்கியது. இதில் காயமடைந்த அவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நாமக்கல் ஆர்.டி.ஓ. சரவணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் சிகிச்சை பெற்று வரும் பழனிசாமி உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார். அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
- பரமத்திவேலூர் பேட்டையில் திருஞானசம்பந்தர் மடாலயம் உள்ளது. இந்த மடாலயத்தில் சம்பவத்தன்று இரவு சிவனடியார்கள் இரவு தூங்கிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
- 20-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சேர்கள், ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ஆம்ளிபார், மைக் மற்றும் உபகரணங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
பரமத்திவேலூர் பேட்டையில் திருஞானசம்பந்தர் மடாலயம் உள்ளது. இந்த மடாலயத்தில் சம்பவத்தன்று இரவு சிவனடியார்கள் இரவு தூங்கிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. சிவனடியார்கள் காலையில் எழுந்து பார்த்தபோது அங்கிருந்த 20-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சேர்கள், ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ஆம்ளிபார், மைக் மற்றும் உபகரணங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தனர். இவரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






