search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பதி முனியப்பசாமி கோவில் மண்டலாபிஷேகம்
    X

    முனியப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

    திருப்பதி முனியப்பசாமி கோவில் மண்டலாபிஷேகம்

    • 60 அடி உயரமுள்ள திருப்பதி முனியப்பசாமி கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது.
    • கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு தினந்தோறும் முனியப்பசாமிக்கு கட்டளைதாரர்கள் சார்பில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. மண்டலாபிஷேக 48-வது நாள் நிறைவு விழா நடைபெற்றது.‌

    நாமக்கல்:

    பரமத்திவேலூர் தாலுகா, பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சேளூர் சாணார்பாளையத்தில் சுமார் 60 அடி உயரமுள்ள திருப்பதி முனியப்பசாமி கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு தினந்தோறும் முனியப்பசாமிக்கு கட்டளைதாரர்கள் சார்பில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. மண்டலாபிஷேக 48-வது நாள் நிறைவு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு முனியப்பசாமிக்கு யாகவேள்வி பூஜையும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மகா தீபாராதனையும், பிரசாதம் வழங்குதலும், அன்னதானமும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை சேளூர் சாணார்பாளையம் திருப்பதி முனியப்பசாமி கோயில் விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்

    Next Story
    ×