என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இலவச பயிற்சி பெற்ற 22 பேர் அரசு பணி பெற்றனர்
- தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் செயல் பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வு களுக்கான பயிற்சி வகுப்பு கள் இலவசமாக நடத்தப் பட்டு வருகிறது.
- பயிற்சி பெற்ற மாணவர்கள் 2022-ம் ஆண்டு சீருடைப்பணியா ளர்கள் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் 5 பேர், காவலர் தேர்வில் 17 பேர் என 22 பேர் தேர்ச்சி பெற்று தற்போது அரசு பணியில் சேர்ந்துள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் செயல் பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வு களுக்கான பயிற்சி வகுப்பு கள் இலவசமாக நடத்தப் பட்டு வருகிறது.
22 பேர் தேர்ச்சி
இங்கு பயிற்சி பெற்ற மாணவர்கள் 2022-ம் ஆண்டு சீருடைப்பணியா ளர்கள் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் 5 பேர், காவலர் தேர்வில் 17 பேர் என 22 பேர் தேர்ச்சி பெற்று தற்போது அரசு பணியில் சேர்ந்துள்ளனர்.
இதேபோல டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வில் 17 பேர் நல்ல மதிப்பெண் பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு பெற்றுள்ளனர். குரூப்-2-ல் 34 பேர் முதல்நிலை தேர்வு எழுதி உள்ளனர்.
இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா கூறியதாவது:
போட்டி தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அலுவல கத்தில் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சி காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை அளிக்கப்படு கிறது. வாரந்தோறும் 2 தேர்வு நடத்தப்படுகின்றன. தேர்விற்கான பாடக்குறிப்பு கள், அன்றாட பயிற்சி தாள்கள் மாண வர்களுக்கு அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்பு கள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்