என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பத்திரப்பதிவு அலுவலகம் அருகேதீப்பிடித்து எரிந்த குப்பை
    X

    குடியிருப்பு மற்றும் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே கொட்டப்பட்டு இருந்த பேரூராட்சி குப்பையில் ஏற்பட்ட தீயை தீயணைப்புவீரர்கள் அணைத்த போது எடுத்த படம்.

    பத்திரப்பதிவு அலுவலகம் அருகேதீப்பிடித்து எரிந்த குப்பை

    • 16-வது வார்டில் உள்ள செயல் படாத பொதுக்கழிப்பிடத் திற்கு முன்பு அப்பகுதியில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள், கழிவு பொருட்களை கொட்டப் பட்டு வருகின்றனர்.
    • குப்பை கிடங்கிற்கு எடுத்துச் செல்லாமல் இப்பகுதியிலேயே குப்பைகளை டன் கணக்கில் சேகரித்து பேரூராட்சி தூய்மை பணியாளர் மூலம் தீ வைத்து எரிக்கப்பட்டு வருகின்றன.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் திருவள்ளு வர் சாலையில், வணிக நிறு வனங்கள் மற்றும் பத்திரப் பதிவு அலுவலகம், மற்றும் 100க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டில் உள்ள செயல் படாத பொதுக்கழிப்பிடத் திற்கு முன்பு அப்பகுதியில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள், கழிவு பொருட்களை கொட்டப் பட்டு வருகின்றனர்.

    தீ வைத்து எரிப்பு

    பேரூராட்சி நிர்வாகம் பழைய பை-பாஸ் அருகில் உள்ள குப்பை கிடங்கிற்கு எடுத்துச் செல்லாமல் இப்பகுதியிலேயே குப்பைகளை டன் கணக்கில் சேகரித்து பேரூராட்சி தூய்மை பணியாளர் மூலம் தீ வைத்து எரிக்கப்பட்டு வருகின்றன.

    அதுபோல் நேற்று மாலை அதிக அளவில் குப்பைகளை சேகரித்து தீ வைத்ததில் காற்றின் காரணமாக தீ மள மள பரவி வேகமாக எரிய தொடங்கியது. இதன் காரணமாக கரும் புகையால் அப்பகுதியில் புகைமூட்டம் போல் ஆனது. இதனால் அப்பகுதியில் உள்ள குடி யிருப்பு வாசிகள் உடனே தங்கள் வீட்டை விட்டு வெளியே வந்து தீயை தண்ணீரை ஊற்றி அணைக்கமுயற்சித்தனர்.

    மேலும் தூய்மை பணியா ளர்களும் தண்ணீரை ஊற்றி அணைக்க முயற்சித் தும் தீயை அணைக்க முடி யாததால் கரூர் மாவட்டம் புகலூர் தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரி விக்கப்பட்டது.

    தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த தீயை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி தீ அனைத்து கட்டுப்படுத்தி தீ அருகி லுள்ள வீடுகள், கடைகள், பத்திரப்பதிவு அலுவலகம் ஆகிய பகுதிகளில் பரவா மல் தவிர்க்கப்பட்டது.

    மேலும் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள், வணிக நிறுவனங்கள் வைத்திருக்கும் கடை உரிமையாளர்கள் கூறுகை யில் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதியில் பேரூ ராட்சி மூலம் சேகரிக்கப்படும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள், கழிவு பொருட் கள், கெட்டுப்போன, அழு கிய பழங்கள், காய்கறிகள் ஆகியவைகளை கொண்டு வந்து இப்பகுதியில் கொட்டி தீ வைப்பது தொடர்கதை யாகவே இருந்து வருகிறது.

    பலமுறை பேரூராட்சி அலுவலகத்தில் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இதேபோல் தீ வைத்து எரித்து வருகின்றனர். இத னால் எங்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

    மேலும் தீ வைப்பதால் புகை மூட்டத்தால் எங்கள் குழந்தைகளுக்கு மூச்சு திண றலும் பல்வேறு விதமான நோய்களும் ஏற்படுகிறது. ஆகையால் மாவட்ட நிர்வா கம் உடனடியாக தலையிட்டு குடியிருப்பு , பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளபகுதி அருகே குப்பைகள் கொட்டா மல் தீ வைக்காமல் பாது காக்க வேண்டும்.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

    Next Story
    ×