என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.
    • ஆர்ப்பாட்டத்தில் 2002-ம் ஆண்டு 41 மாத பணி நீக்ககாலத்தை ஓய்வூதியத்திற்கு பொறுந்தும் வகையில் முறைப்படுத்த வேண்டும்.

    நாமக்கல்:

    தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. நாமக்கல் மாவட்ட தலைவர் செந்தில் குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தங்கவேல் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் 2002-ம் ஆண்டு 41 மாத பணி நீக்ககாலத்தை ஓய்வூதியத்திற்கு பொறுந்தும் வகையில் முறைப்படுத்த வேண்டும்.இறந்த சாலை பணியாளர்களுக்கு விதிமுறையை தளர்த்தி வாரிசுதாரர்களுக்கு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா என்.புதுப்பட்டி அருகே மேலப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கொண்டப்பன். இவரது மனைவி சாந்தி (51). இவரது கணவன் கொண்டப்பன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகன் சுரேஷ் (33). இவருக்கு திருமணம் ஆகவில்லை. சுரேஷ் அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் சுரேசுக்கு பல்வேறு பகுதிகளில் திருமணத்திற்காக பெண் பார்த்தும் பெண் கிடைக்கவில்லை. இதனால் சுரேஷ் ஏக்கத்தில் இருந்து வந்துள்ளார். அதன் காரணமாக தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து சோகத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது சுரேஷ் தனியாக இருந்தபோது வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்துள்ளார். இதன் காரணமாக மயக்க நிலையில் கடந்த சுரேஷை ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக அவரை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி

    இறந்தார். இது குறித்து சுரேஷின் தாய் மோகனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையசூரியன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • பாரம்பரிய கலைகளை உயிர்ப்புடன் வைத் திருக்கவும், வாய்ப்பாட்டு இசை, கருவி இசை, நடனம், கலை, நாடகம் ஆகிய 5 தலைப்பு களில் கலைப் பண்பாட்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகி றது.
    • மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி கலையரங்கத்தில் தொடங்கியது.

    நாமக்கல்:

    தமிழக பள்ளி கல்வித் துறை மூலம் 9 முதல் 12-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவ, மாணவிகளின் படைப்பாற்றலை வளர்க்கவும், பாரம்பரிய கலைகளை உயிர்ப்புடன் வைத் திருக்கவும், வாய்ப்பாட்டு இசை, கருவி இசை, நடனம், கலை, நாடகம் ஆகிய 5 தலைப்பு களில் கலைப் பண் பாட்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகி றது.2023-2024 -ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி கலையரங்கத்தில் தொடங்கியது. இதனை மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் ப.மகேஸ் வரி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி மாவட்ட திட்ட அலுவலர் பாஸ்கரன் வரவேற்றார்.

    இப்போட்டிகளில் மாவட் டத்தில் இருந்து 500-க்கும்

    மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவி கள் மண்பொம்மை செய்தல், நாட்டுப்புற நடனம் போன்றவை நடைபெறுகிறது. இதில் முதல் 3 இடங்களை பெறுபவர் களுக்கு சான்றிதழ்கள் வழங் கப்படும். மேலும், முதலிடம் பெறுபவர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவாறு உத்தரவு பிறப்பிக்க கோரி ஒரு தரப்பினர் திருச்செங்கோடு உதவி கலெக்டரிடம் மனு கொடுத்திருந்தனர்.
    • இதில் சுமூக தீர்வு ஏற்படாததால் அமைதி பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா,

    வெங்கரையில் எழுந்தருளியுள்ள வெங்கரைகாளியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

    இக்கோவில் விழா மற்றும் வழிபாட்டு நிகழ்ச்சிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவாறு உத்தரவு பிறப்பிக்க கோரி ஒரு தரப்பினர் திருச்செங்கோடு உதவி கலெக்டரிடம் மனு கொடுத்திருந்தனர். இது தொடர்பாக அமைதிப் பேச்சுவார்த்தை கடந்த 1-ந் தேதி பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகத்தில் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

    இதில் சுமூக தீர்வு ஏற்படாததால் அமைதி பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. இது தொடர்பாக அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் நேற்று முன்தினம் பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

    இதில் பரமத்திவேலூர் இன்ஸ்பெக்டர் இந்திராணி, இந்து சமய அறநிலையத்துறை செயல்அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

    ஆனால் மீண்டும் சுமூக தீர்வு ஏற்படாததால், திருச்செங்கோடு உதவி கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வெங்கரை காளியம்மன் கோவில் திருவிழா பேச்சு வார்த்தை 2-வது முறையாக தோல்வியடைந்தது பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

    • கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சம்மந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் முன்னிலை வகித்தார்.
    • சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சம்மந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசியதாவது:-

    விநாயகர் சிலை

    விநாயகர் சிலை வைப்பதற்கு சம்பந்தப்பட்ட சிலை அமைப்பாளர்கள் ஆர்.டி.ஓ.விடம் முன்கூட்டியே தடையில்லா சான்று பெற விண்ணப்பிக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரீஸ் போன்ற மாசு விளைவிக்கும் ரசாயணங்களை பயன்படுத்துதலை தவிர்க்க வேண்டும்.

    சிலை அமைப்பவர்கள் தற்காலிக கட்டுமானங்களை தீப்பற்றாத உபகரணங்கள் கொண்டு அமைத்திட வேண்டும். சிலை வழிபாடு மேற்கொள்வதற்கான பகுதிகளில் எவ்வித இடையூறும் இல்லாதவாறு போதிய அளவில் அகலமான பந்தல்கள் அமைத்திட வேண்டும். விநாயகர் சிலையின் உயரத்தினை 10 அடிக்கு மேல் உயர்த்தி அமைக்க கூடாது.

    மதம் தொடர்பான இடங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் சிலை அமைப்பதினை தவிர்க்க வேண்டும். ஒலிபெருக்கிகள் காலை, மாலை ஆகிய இரு நேரங்களில் வழிபாட்டு நேரங்களில் மட்டும் பயன்படுத்த வேண்டும். தடைசெய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை தவிர்க்க வேண்டும்.

    விநாயகர் சிலைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் அடையாளமிடப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்திட வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் குமாரபாளையம், பள்ளிபாளையம், மோகனூர், பரமத்தி வேலூர் ஆகிய 4 இடங்களில் உள்ள காவிரி ஆற்று பகுதிகளில் படித்துறைகளில் மட்டுமே சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    விநாயகர் சிலைகள் நிறுவப்பட்ட நாளிலிருந்து 5 நாட்களில் வழிபாடுகள் முடிவுற்று சிலையினை அனுமதிக்கப்பட்ட இடங்களில் கரைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் அறிவுரைப்படி அனைவரும் நடந்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாஸ்து பிரகாரம் சாலையை விட வீடு பள்ளமாக இருக்கக் கூடாது என்பதால் வீட்டை எடுத்துவிட்டு புதியதாக கட்டலாம் என திட்டமிட்டோம்.
    • நாமக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக சுதாகர் வீட்டை எங்கள் தொழில்நுட்பத்தில் உயர்த்தி வருகிறோம்

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கள்ளிப்பாளையம் திட்டமேடு பகுதியை சேர்ந்தவர் சுதாகர்( 45 ). விவசாயி. இவர் கடந்த 20 வருடத்திற்கு முன்பு கட்டிய வீடு தற்போது பள்ளத்தில் இருப்பதால் வீட்டை இடிக்க மனமின்றி அதை உயர்த்த நவீன தொழில்நுட்ப மூலம் தனது வீட்டை வானங்களுக்கு பயன்படுத்தும் ஜாக்கிகள் மூலம் 3 அடி உயரம் தூக்கி கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    இது குறித்து வீட்டின் உரிமையாளர் சுதாகர் கூறியதாவது:-

    எங்களது பூர்வீக இடத்தில் கடந்த 2003-ம் ஆண்டில் புது வீடு கட்டினோம். கீழ்த்தளம் 2000 சதுர அடியில் கட்டப்பட்டது. தற்போது சாலை உயரமாகி போய் வீடு பள்ளமானது. மேலும் வாஸ்து பிரகாரம் சாலையை விட வீடு பள்ளமாக இருக்கக் கூடாது என்பதால் வீட்டை எடுத்துவிட்டு புதியதாக கட்டலாம் என திட்டமிட்டோம். மேலும் பழைய வீட்டை இடிக்க மனம் இல்லாததால் மிகவும் குழம்பிப்போனோம்.

    அப்போது கரூரை சேர்ந்த என்ஜினீயர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டபோது, அப்போது வீட்டை இடிக்காமல் பெயர்த்து வாகனங்களுக்கு டயர் மாற்ற பயன்படுத்தும் ஜாக்கிகளை பயன்படுத்தி தேவையான உயரத்துக்கு மாற்றி அமைக்கும் தொழில்நுட்பம் குறித்து கூறினார். உயரமாக்கப்பட்டு கட்டப்படும் சில வீடுகளில் நேரில் சென்று பார்த்து அதிசயத்தோம். தற்போது எங்கள் வீட்டையும் அதே தொழில்நுட்பம் மூலம் மூன்றடிக்கு உயர்த்தி வருகிறோம். இவ்வாறு கூறினார்.

    இந்த புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்தி வரும் சென்னையைச் சேர்ந்த பில்டிங் காண்ட்ராக்டர் சுந்தரமூர்த்தி என்பவர் கூறியதாவது:- ஜாக்கிகள் மூலம் பழைய வீடுகளை தரை மட்டத்திலிருந்து பெயர்த்து தேவையான அளவு உயர்த்தும் கட்டிட தொழில்நுட்ப முறையை நாங்கள் பல ஆண்டுகளாக செய்து வருகிறோம். தமிழகத்தில் இதுவரை 500-க்கும் மேற்பட்ட வீடுகளை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம். நாமக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக சுதாகர் வீட்டை எங்கள் தொழில்நுட்பத்தில் உயர்த்தி வருகிறோம். கடந்த 1-ந் தேதி பணிகளை தொடங்கினோம்.

    இன்னும் 30 நாட்களில் பணிகள் முடிந்து விடும். கட்டிடத்தை உயர்த்த ஒரு சதுர அடிக்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறோம். மேலும் கட்டடத்துக்கு ஏற்ற போல் 600 ஜாக்கிகள் வரை பயன்படுத்துகிறோம். தற்போது இந்த கட்டிடத்திற்கு 175 ஜாக்கிகள் மூலம் உயர்த்தி வருகிறோம்.

    வீட்டை தூக்கும் நவீன தொழில்நுட்ப முறை பரமத்திவேலூர் தாலுகா கள்ளிப்பாளையம் திட்டமேட்டில் உள்ள சுதாகர் வீட்டில் 15 பேர் கொண்ட குழுவினர் பணி புரிந்து வருகின்றனர். 2000 சதுர அடி, 40 டன் எடை கொண்ட அவரின் வீட்டை தரை மட்டத்திலிருந்து 3 அடி உயர்த்தி வருகின்றனர். முதலில் சுவர்களில் இருபுறம் தோண்டி. அதன் கீழ் ஒவ்வொரு பக்கமாக ஜாக்கிகள் வைக்கின்றனர்.

    அந்த வீட்டிற்கு 175 ஜாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன, தேவையான உயரத்துக்கு 15 பேரும் ஒரே நேரத்தில் ஜாக்கிகளை இயக்கி உயர்த்துகின்றனர். தயாரிக்கப்பட்ட சிமெண்ட் செங்கல்களை வைத்து கட்டுகின்றனர் .இந்த முறையில் வீட்டில் தரைத்தளம் மட்டும் சேதம் அடைகிறது. சுவர்களில் விரிசல் கூட விழுவதில்லை. 3 அடி வரை உயர்த்துவதற்கு ஒரு சதுர அடிக்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றோம். தற்போது பணி நடைபெறும் இந்த கட்டிடம் புதிதாக கட்டினால்ரூ 40 லட்சம் வரை செலவாகும். தற்போது உயரம் தூக்கி கட்ட 5 லட்சத்திலிருந்து 6 லட்சம் வரை செலவாகும் என திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜேடர்பாளையம் வடக்கு தோட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டருக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
    • கைது செய்யப்பட்ட 10 பேரையும் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சேலம் சிறையில் அடைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள வி.கரபாளையத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் கடந்த மார்ச் 11-ந்தேதி கொலை செய்யப்பட்டது தொடர்பாக அருகே உள்ள வெல்லம் ஆலை கொட்டைகையில் பணிபுரிந்து வந்த 19 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. மேலும் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரியும் ஆலை கொட்டகைகள், குடிசைகள், டிராக்டர்களுக்கு தீ வைப்பது, குளத்தில் விஷம் கலப்பது போன்ற அடுக்கடுக்கான வன்முறை சம்பவங்களும் நடந்தது.

    இதையடுத்து இந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் புதுப்பாளையம் பகுதியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான வாழை தோப்பில் புகுந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட வாழை மற்றும் பாக்கு மரங்களை மர்மநபர்கள் வெட்டி சாய்த்தனர்.

    இதேபோல் பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் (55) என்பவருக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 3,200 பாக்கு மரங்கள் மற்றும் மரவள்ளிக்கிழங்கு செடிகள் வெட்டிச் சாய்க்கப்பட்டன.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜேடர்பாளையம் வடக்கு தோட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணி(42) என்பவரது தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டருக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

    மேலும் அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி(70) என்பவரது தோட்டத்தில் பயிர் செய்திருந்த மரவள்ளி கிழங்கு செடிகளையும், வீரமணி(42) என்பவரது தோட்டத்தில் வாழை மரங்களையும் மர்மநபர்கள் வெட்டி சென்றனர்.

    இந்த சம்பவங்கள் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமையில் ஏற்கனவே 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 21 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் சவுந்தர்ராஜன் என்பவரது நிலத்தில் பாக்கு மரங்களை சேதப்படுத்திய வழக்கில் தனிப்படை போலீசார் ஜேடர்பாளையம், பாகம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சிவராஜ் (44), பாலசுப்ரமணி (50), பழனிச்சாமி என்கிற மணி (55), விஜய் (25), பூபதி (46), பிரகாஷ் (25), மெய்யழகன் (21), தனுஷ் (20) மற்றும் 18, 19 வயது சிறுவர்கள் ஆகிய 10 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 இருசக்கர வாகனங்கள் மற்றும் 9 கத்திகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 10 பேரையும் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சேலம் சிறையில் அடைத்தனர்.

    இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்துள்ளார்.

    • பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    • அதனை தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதேபோல் நன்செய் இடையாரில் உள்ள திருவேலீஸ்வரர் கோவில், பரமத்திவேலூர் காவிரி ஆற்றங்கரையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் கோவில்,ஜேடர்பாளையம் ஈஸ்வரன் கோவில், வடகரையாத்தூர் ஈஸ்வரன் கோவில், பாண்டமங்கலம் ஈஸ்வரன் கோவில்,மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசிவிஸ்வநாதர்,பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், வேலூர் எல்லையம்மன் மற்றும் வல்லப விநாயகர் கோயில் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுக்கா வெங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட குச்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தென்னை மரத்தில் ஆயிரக்கணக்கான விஷக்கதண்டுகள் கூடுகட்டி இருந்தது.
    • தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று தென்னை மரத்தில் கூடு கட்டி இருந்த விஷக்கதண்டுகளை தண்ணீரை பீச்சி அடித்து அகற்றினர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுக்கா வெங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட குச்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தென்னை மரத்தில் ஆயிரக்கணக்கான விஷக்கதண்டுகள் கூடுகட்டி இருந்தது. இந்நிலையில் அந்த வழியாக செல்பவர்களை விஷக்கதண்டுகள் தீண்டி அச்சுறுத்தி வந்தது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினரிடம் புகார் மனு கொடுத்து விஷக் கதண்டுகளை அகற்றிதருமாறு கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று தென்னை மரத்தில் கூடு கட்டி இருந்த விஷக்கதண்டுகளை தண்ணீரை பீச்சி அடித்து அகற்றினர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்

    • நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள அம்பாயிபாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சின்னசாமி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் தீபக் இவரது மகன் தினேஷ் முன்விரோதம் இருந்து வந்தது.
    • தீபக் மற்றும் அவரது நண்பரான பவித்திரத்தைச் சேர்ந்த அஜித் ஆகிய இருவரும் தினேஷை தாக்கியதாக தெரிகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள அம்பாயிபாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் தினேஷ் (33). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் தீபக் (21) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு தினேஷ் அம்பாயிபாளையம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தீபக் மற்றும் அவரது நண்பரான பவித்திரத்தைச் சேர்ந்த அஜித் ஆகிய இருவரும் தினேஷை தாக்கியதாக தெரிகிறது.இதுகுறித்து எருமப்பட்டி போலீசில் தினேஷ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீபக்கை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தன்(42). விவசாயியான இவர் சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் ரெட்டிபட்டியில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • அலங்காநத்தம் பிரிவு ரோட்டில் இருந்து சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஆனந்தன் வந்த மோட்டார் சைக்கிள், பழனிவேல் வந்த சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தடுமாறி விழுந்து காயமடைந்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தன்(42). விவசாயியான இவர் சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் ரெட்டிபட்டியில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சம்பாமேடு அருகே வந்த போது ஈச்சவாரியை சேர்ந்த பழனிவேல் (50) அலங்காநத்தம் பிரிவு ரோட்டில் இருந்து சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஆனந்தன் வந்த மோட்டார் சைக்கிள், பழனிவேல் வந்த சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தடுமாறி விழுந்து காயமடைந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். இதில் ஆனந்தன் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். பழனிவேல் லேசான காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் வேளாண் இடுபொருட்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
    • 50 சதவீதம் மானியத்திலும் கபிலர்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பில் வைக்கப்பட்டு உள்ளன.

    பரமத்தி வேலூர்Namakkal District News,

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் வேளாண் இடுபொருட்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

    பயிர் சாகுபடியை ஊக்குவிக்கவும், பயிர்களில் மகசூல் அதிகரிக்கவும் தமிழக அரசு வேளாண்மைத்துறையின் மூலம் பல்வேறு இடுபொருட்களை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்பட்டு வரும் சூழலில், சிறுதானிய சாகுபடிக்கான நுண்ணூட்டங்கள் 50 சத மானியத்திலும், நிலக்கடலை பயிருக்கான நுண்ணூட்டங்கள் மற்றும் இதர பயிர்களுக்கான நுண்ணூட்டங்கள் 50 சதவீதம் மானியத்திலும் கபிலர்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பில் வைக்கப்பட்டு உள்ளன.

    இது தவிர கரும்பு, நெல் மற்றும் தென்னைக்கான நுண்ணூட்டங்களும் இருப்பில் வைக்கப்பட்டு உள்ளன. பயிர்களை பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்கும் இயற்கையான பயிர் பாதுகாப்பு மருந்துகளான சூடோமோனாஸ் மற்றும் விரிடி ஆகியவையும் 50 சத மானியத்தில் இருப்பில் உள்ளது.

    விவசாயிகளுக்கு உரச்செலவினை குறைத்து, மண்ணிலுள்ள சத்துக்களை பயிர்கள் எளிதில் எடுத்துக்கொள்ளும் வகையில் செயல்படக்கூடிய உயிர் உரங்களான பாஸ்போபாக்டீரியா மற்றும் அசோஸ்பைரில்லம் ஆகியன 50 சதவீதம் மானியத்திலும், பயிர்களுக்கு தெளிப்பான்கள் மூலம் எளிதாக தெளிக்கும் வடிவிலான திரவ அசோஸ்பைரில்லம் ஆகியனவும் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு விநியோகிக்க இருப்பில் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் நெல், பாசிப்பயறு, உளுந்து, சோளம், சாமை, நிலக்கடலை மற்றும் எள் விதைகளும் விவசாயிகளுக்கு மானியத்தில் விநியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளது.

    மேற்கண்ட வேளாண் இடுபொருட்கள் தேவைப்படும் விவசாயிகள் வட்டார உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டோ அல்லது கபிலர்மலை வேளாண் விரிவாக்க மையத்திற்கு நேரில் வந்து இடுபொருட்களை பெற்று பயனடையுமாறு கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

    ×