என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருமணம் ஆகாத ஏக்கத்தில் புரோட்டா மாஸ்டர் விஷம் குடித்து தற்கொலை
நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா என்.புதுப்பட்டி அருகே மேலப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கொண்டப்பன். இவரது மனைவி சாந்தி (51). இவரது கணவன் கொண்டப்பன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகன் சுரேஷ் (33). இவருக்கு திருமணம் ஆகவில்லை. சுரேஷ் அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் சுரேசுக்கு பல்வேறு பகுதிகளில் திருமணத்திற்காக பெண் பார்த்தும் பெண் கிடைக்கவில்லை. இதனால் சுரேஷ் ஏக்கத்தில் இருந்து வந்துள்ளார். அதன் காரணமாக தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து சோகத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது சுரேஷ் தனியாக இருந்தபோது வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்துள்ளார். இதன் காரணமாக மயக்க நிலையில் கடந்த சுரேஷை ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக அவரை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி
இறந்தார். இது குறித்து சுரேஷின் தாய் மோகனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையசூரியன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.






