என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • வெங்கடேஷ் (வயது 54). இவர் ராசிபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.
    • அண்ணாதுரையின் மனைவி வெண்ணிலா கண்டக்டர் வெங்கடேசை தாக்கியதாக கூறப்படுகிறது.

    ராசிபுரம்:

    திருச்செங்கோடு அருகே உள்ள புள்ளாக் கவுண்டம்பட்டி சாணார்பாளையத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 54). இவர் ராசிபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து காளிப்பட்டிக்கு சென்ற அரசு டவுன் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். அப்போது அந்த பஸ்சில் ராசிபுரம் டவுன் வி.நகர் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை, அவரது மனைவி வெண்ணிலா(33) மகள் இசை ராணி(17) ஆகியோர் பயணம் செய்துள்ளனர்.

    அண்ணாதுரை பஸ்சின் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்த தாக கூறப்படுகிறது. அதை பார்த்த கண்டக்டர் வெங்கடேஷ் அண்ணாதுரையை படிக்கட்டில் இருந்து உள்ளே வரும்படி அழைத்துள்ளார். உள்ளே வந்த அண்ணாதுரை கண்டக்டர் வெங்கடேஷ் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதைப் பார்த்த அண்ணாதுரையின் மனைவி வெண்ணிலா கண்டக்டர் வெங்கடேசை தாக்கியதாக கூறப்படுகிறது. இது பற்றி கண்டக்டர் வெங்கடேஷ் வெண்ணிலா மீது ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். அதேபோல் வெண்ணிலாவும் கண்டக்டர் வெங்கடேஷ் மீது புகார் அளித்தார்.

    இருதரப்பினரும் ராசிபுரம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றனர். இரு தரப்பினரும் அளித்த புகார்களின் பேரில் போலீசார் தனித்தனியாக 2 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாமக்கல்லை மையமாக கொண்டு லாரி உரிமையாளர்கள் சங்கமான நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது.
    • தேர்தல் வாக்குப்பதிவு காலை காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்கு பதிவு நடைபெற உள்ளன.

    நாமக்கல்:

    நாமக்கல் தாலுக்கா லாரி உரி மையாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறன.

    தேர்தல்

    நாமக்கல்லை மையமாக கொண்டு லாரி உரிமையாளர்கள் சங்கமான நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் மொத்தம் 4,445 உறுப்பினர்கள் உள்ளனர்.

    தேர்தல் வாக்குப்பதிவு காலை காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்கு பதிவு நடைபெற உள்ளன.

    பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தலைவர், செயலாளர், பொருளாளர், உதவி தலைவர், உதவி செயலாளர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று மாலை எண்ணப்படும். தொடர்ந்து நாளை 11ந் தேதி காலை செயற்குழு உறுப்பினர்கள் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு கள் அறிவிக்கப்படஉள்ளன.

    இந்த நிலையில் நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்க தற்போதைய செயலாளர் அருள் தலைமையில் ஒரு அணியினரும், தற்போதைய உதவித் தலைவர் சுப்புரத்திணம் தலைமையில் ஒரு அணியினரும் புதிய நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.

    காலை 11 மணி நிலவரப்படி 1800 வாக்குகள் பதிவாகின. சங்க தேர்தல் நாமக்கல் பகுதி லாரி உரிமையாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • காவேரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (45). இவரது மனைவி குப்பம்மா (40). இவர்கள் கூலித்தொழில் செய்து வருகின்றனர்.
    • வளையபட்டி-தூசூர் சாலையில் உள்ள குருப்பம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது நாய்கள் சாலையின் குறுக்கே திடீரென ஓடி வந்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா பீமநாயக்கனூர் காவேரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (45). இவரது மனைவி குப்பம்மா (40). இவர்கள் கூலித்தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் வெங்கடேஷ் வளையபட்டி பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். வளையபட்டி-தூசூர் சாலையில் உள்ள குருப்பம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது நாய்கள் சாலையின் குறுக்கே திடீரென ஓடி வந்துள்ளது. இதை பார்த்த வெங்கடேஷ் பிரேக் போட்டதில் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வெங்கடேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வெங்கடேஷின் மனைவி குப்பம்மா மோகனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளைய சூரியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வடமாநிலங்களில் இருந்து கூலித் தொழிலாளிகளை அழைத்து வந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் பணியமர்த்தும் புரோக்கர் வேலை செய்து வந்தார்.
    • இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி மோகனூர் தாலுகா கே.புதுப்பாளையத்தில் உள்ள தோட்டத்தல் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    பரமத்திவேலூர்:

    அசாம் மாநிலத்தை சேர்ந்த வர் சிம்பு ஜாபர்(26). இவர் வடமாநிலங்களில் இருந்து கூலித் தொழிலாளிகளை அழைத்து வந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் பணியமர்த்தும் புரோக்கர் வேலை செய்து வந்தார்.

    கொலை

    இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி மோகனூர் தாலுகா கே.புதுப்பாளையத்தில் உள்ள தோட்டத்தல் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுதொடர்பாக தோட்டத்தின் உரிமையாளர் பாலகிருஷ்ணன் அளித்த

    புகாரின் பேரில், பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    கமிஷன் பிரச்சினை

    இதில் கோழிப்பண்ணை களுக்கு கூலி ஆட்களை அனுப்பி வைப்பத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ரஜ்மன் (21), சாம்லுராம் (21) ஆகியோருக்கும், சிம்பு ஜாபருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்து. மேலும் கமிஷன் பிரச்சினையில் இருவரும் சிம்பு ஜாபரை படுகொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் அறிவழகன் வாதாடி வந்தார்.

    ஆயுள்தண்டனை

    இந்த நிலையில் அந்த வழக்கிற்கான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இதில் ரஜ்மன், சாம்லுராம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இருவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து இருவரும் ேநற்று இரவு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதனிடையே வழக்கு விசாரணையில் சிறப்பாக செயல்பட்ட பரமத்திவேலூர் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் பாராட்டினார்.

    • பரமத்தி வேலுார் பகுதியில் செயல்பட்டு வரும் மீன் உணவு கடைகள் மற்றும் இறைச்சி கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் செல்வகுமார் தணிக்கை மேற்கொண்டார்.
    • தற்பொழுது பரவி வருவ தால் காய்ச்சிய குடிநீரை வாடிக்கையாளா்க ளுக்கு வழங்க அறிவுரை வழங்கினார்.

    பரமத்திவேலுார்:

    உணவு பாதுகாப்பு மருந்து நிர்வாகத் துறை ஆணையா் உத்தரவின் பேரில், நாமக்கல் கலெக்டர் டாக்டர் உமா அறிவுரையின் பேரில் பரமத்தி வேலுார் பகுதியில் செயல்பட்டு வரும் மீன் உணவு கடைகள் மற்றும் இறைச்சி கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் செல்வகுமார் தணிக்கை மேற்கொண்டார்.

    பருவநிலை மாற்றத்தினால் வடிக்கையாளா்களுக்கு வைரஸ் காய்ச்சல், தற்பொழுது பரவி வருவ தால் காய்ச்சிய குடிநீரை வாடிக்கையாளா்க ளுக்கு வழங்க அறிவுரை வழங்கி னார்.

    தொடர்ந்து பழைய எண்ணையை மீண்டும் மீண்டும் பொறிப்ப தற்கு பயன்படுத்திய 2 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

    மழைக்காலம் முடியும் வரை தொடர் ஆய்வுகள் நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் நடத்தப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் தெரிவித்தார்.

    • திருச்செங்கோடு உட்கோட்டத்திற்கு உட்பட்ட 8 போலீஸ் நிலையங்களுக்கான ஆய்வு பணி திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.
    • சேலம் சரக டி.ஐ.ஜி.ராஜேஸ்வரி ஆய்வு பணி மேற்கொண்டார், இந்த ஆய்வின் போது திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு இமய வரம்பன் மற்றும் அனைத்து இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு உட்கோட்டத்திற்கு உட்பட்ட 8 போலீஸ் நிலையங்களுக்கான ஆய்வு பணி திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.

    ஆய்வு

    சேலம் சரக டி.ஐ.ஜி.ராஜேஸ்வரி ஆய்வு பணி மேற்கொண்டார், இந்த ஆய்வின் போது திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு இமய வரம்பன் மற்றும் அனைத்து இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். திருச்செங்கோடு உட்கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செங்கோடு நகரம், ஊரகம், எலச்சிபாளையம், மல்ல சமுத்திரம், மொளசி, பள்ளிபாளையம் வெப்படை ஆகிய போலீஸ் நிலையங்களை தணிக்கை செய்யும் விதமாக சேலம் சரக டி.ஐ.ஜி.ராஜேஸ்வரி ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

    துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவரம்பன் மற்றும் 8 இன்ஸ்பெக்டர் களிடம் ம் போலீஸ் நிலைய பதிவேடுகளையும் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் டி.ஐ.ஜி. ஆய்வு செய்தார்.

    • நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.
    • ஆர்ப்பாட்டத்தில் 2002-ம் ஆண்டு 41 மாத பணி நீக்ககாலத்தை ஓய்வூதியத்திற்கு பொறுந்தும் வகையில் முறைப்படுத்த வேண்டும்.

    நாமக்கல்:

    தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. நாமக்கல் மாவட்ட தலைவர் செந்தில் குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தங்கவேல் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் 2002-ம் ஆண்டு 41 மாத பணி நீக்ககாலத்தை ஓய்வூதியத்திற்கு பொறுந்தும் வகையில் முறைப்படுத்த வேண்டும்.இறந்த சாலை பணியாளர்களுக்கு விதிமுறையை தளர்த்தி வாரிசுதாரர்களுக்கு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா என்.புதுப்பட்டி அருகே மேலப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கொண்டப்பன். இவரது மனைவி சாந்தி (51). இவரது கணவன் கொண்டப்பன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகன் சுரேஷ் (33). இவருக்கு திருமணம் ஆகவில்லை. சுரேஷ் அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் சுரேசுக்கு பல்வேறு பகுதிகளில் திருமணத்திற்காக பெண் பார்த்தும் பெண் கிடைக்கவில்லை. இதனால் சுரேஷ் ஏக்கத்தில் இருந்து வந்துள்ளார். அதன் காரணமாக தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து சோகத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது சுரேஷ் தனியாக இருந்தபோது வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்துள்ளார். இதன் காரணமாக மயக்க நிலையில் கடந்த சுரேஷை ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக அவரை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி

    இறந்தார். இது குறித்து சுரேஷின் தாய் மோகனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையசூரியன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • பாரம்பரிய கலைகளை உயிர்ப்புடன் வைத் திருக்கவும், வாய்ப்பாட்டு இசை, கருவி இசை, நடனம், கலை, நாடகம் ஆகிய 5 தலைப்பு களில் கலைப் பண்பாட்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகி றது.
    • மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி கலையரங்கத்தில் தொடங்கியது.

    நாமக்கல்:

    தமிழக பள்ளி கல்வித் துறை மூலம் 9 முதல் 12-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவ, மாணவிகளின் படைப்பாற்றலை வளர்க்கவும், பாரம்பரிய கலைகளை உயிர்ப்புடன் வைத் திருக்கவும், வாய்ப்பாட்டு இசை, கருவி இசை, நடனம், கலை, நாடகம் ஆகிய 5 தலைப்பு களில் கலைப் பண் பாட்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகி றது.2023-2024 -ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி கலையரங்கத்தில் தொடங்கியது. இதனை மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் ப.மகேஸ் வரி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி மாவட்ட திட்ட அலுவலர் பாஸ்கரன் வரவேற்றார்.

    இப்போட்டிகளில் மாவட் டத்தில் இருந்து 500-க்கும்

    மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவி கள் மண்பொம்மை செய்தல், நாட்டுப்புற நடனம் போன்றவை நடைபெறுகிறது. இதில் முதல் 3 இடங்களை பெறுபவர் களுக்கு சான்றிதழ்கள் வழங் கப்படும். மேலும், முதலிடம் பெறுபவர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவாறு உத்தரவு பிறப்பிக்க கோரி ஒரு தரப்பினர் திருச்செங்கோடு உதவி கலெக்டரிடம் மனு கொடுத்திருந்தனர்.
    • இதில் சுமூக தீர்வு ஏற்படாததால் அமைதி பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா,

    வெங்கரையில் எழுந்தருளியுள்ள வெங்கரைகாளியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

    இக்கோவில் விழா மற்றும் வழிபாட்டு நிகழ்ச்சிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவாறு உத்தரவு பிறப்பிக்க கோரி ஒரு தரப்பினர் திருச்செங்கோடு உதவி கலெக்டரிடம் மனு கொடுத்திருந்தனர். இது தொடர்பாக அமைதிப் பேச்சுவார்த்தை கடந்த 1-ந் தேதி பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகத்தில் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

    இதில் சுமூக தீர்வு ஏற்படாததால் அமைதி பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. இது தொடர்பாக அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் நேற்று முன்தினம் பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

    இதில் பரமத்திவேலூர் இன்ஸ்பெக்டர் இந்திராணி, இந்து சமய அறநிலையத்துறை செயல்அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

    ஆனால் மீண்டும் சுமூக தீர்வு ஏற்படாததால், திருச்செங்கோடு உதவி கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வெங்கரை காளியம்மன் கோவில் திருவிழா பேச்சு வார்த்தை 2-வது முறையாக தோல்வியடைந்தது பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

    • கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சம்மந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் முன்னிலை வகித்தார்.
    • சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சம்மந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசியதாவது:-

    விநாயகர் சிலை

    விநாயகர் சிலை வைப்பதற்கு சம்பந்தப்பட்ட சிலை அமைப்பாளர்கள் ஆர்.டி.ஓ.விடம் முன்கூட்டியே தடையில்லா சான்று பெற விண்ணப்பிக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரீஸ் போன்ற மாசு விளைவிக்கும் ரசாயணங்களை பயன்படுத்துதலை தவிர்க்க வேண்டும்.

    சிலை அமைப்பவர்கள் தற்காலிக கட்டுமானங்களை தீப்பற்றாத உபகரணங்கள் கொண்டு அமைத்திட வேண்டும். சிலை வழிபாடு மேற்கொள்வதற்கான பகுதிகளில் எவ்வித இடையூறும் இல்லாதவாறு போதிய அளவில் அகலமான பந்தல்கள் அமைத்திட வேண்டும். விநாயகர் சிலையின் உயரத்தினை 10 அடிக்கு மேல் உயர்த்தி அமைக்க கூடாது.

    மதம் தொடர்பான இடங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் சிலை அமைப்பதினை தவிர்க்க வேண்டும். ஒலிபெருக்கிகள் காலை, மாலை ஆகிய இரு நேரங்களில் வழிபாட்டு நேரங்களில் மட்டும் பயன்படுத்த வேண்டும். தடைசெய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை தவிர்க்க வேண்டும்.

    விநாயகர் சிலைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் அடையாளமிடப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்திட வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் குமாரபாளையம், பள்ளிபாளையம், மோகனூர், பரமத்தி வேலூர் ஆகிய 4 இடங்களில் உள்ள காவிரி ஆற்று பகுதிகளில் படித்துறைகளில் மட்டுமே சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    விநாயகர் சிலைகள் நிறுவப்பட்ட நாளிலிருந்து 5 நாட்களில் வழிபாடுகள் முடிவுற்று சிலையினை அனுமதிக்கப்பட்ட இடங்களில் கரைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் அறிவுரைப்படி அனைவரும் நடந்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாஸ்து பிரகாரம் சாலையை விட வீடு பள்ளமாக இருக்கக் கூடாது என்பதால் வீட்டை எடுத்துவிட்டு புதியதாக கட்டலாம் என திட்டமிட்டோம்.
    • நாமக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக சுதாகர் வீட்டை எங்கள் தொழில்நுட்பத்தில் உயர்த்தி வருகிறோம்

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கள்ளிப்பாளையம் திட்டமேடு பகுதியை சேர்ந்தவர் சுதாகர்( 45 ). விவசாயி. இவர் கடந்த 20 வருடத்திற்கு முன்பு கட்டிய வீடு தற்போது பள்ளத்தில் இருப்பதால் வீட்டை இடிக்க மனமின்றி அதை உயர்த்த நவீன தொழில்நுட்ப மூலம் தனது வீட்டை வானங்களுக்கு பயன்படுத்தும் ஜாக்கிகள் மூலம் 3 அடி உயரம் தூக்கி கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    இது குறித்து வீட்டின் உரிமையாளர் சுதாகர் கூறியதாவது:-

    எங்களது பூர்வீக இடத்தில் கடந்த 2003-ம் ஆண்டில் புது வீடு கட்டினோம். கீழ்த்தளம் 2000 சதுர அடியில் கட்டப்பட்டது. தற்போது சாலை உயரமாகி போய் வீடு பள்ளமானது. மேலும் வாஸ்து பிரகாரம் சாலையை விட வீடு பள்ளமாக இருக்கக் கூடாது என்பதால் வீட்டை எடுத்துவிட்டு புதியதாக கட்டலாம் என திட்டமிட்டோம். மேலும் பழைய வீட்டை இடிக்க மனம் இல்லாததால் மிகவும் குழம்பிப்போனோம்.

    அப்போது கரூரை சேர்ந்த என்ஜினீயர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டபோது, அப்போது வீட்டை இடிக்காமல் பெயர்த்து வாகனங்களுக்கு டயர் மாற்ற பயன்படுத்தும் ஜாக்கிகளை பயன்படுத்தி தேவையான உயரத்துக்கு மாற்றி அமைக்கும் தொழில்நுட்பம் குறித்து கூறினார். உயரமாக்கப்பட்டு கட்டப்படும் சில வீடுகளில் நேரில் சென்று பார்த்து அதிசயத்தோம். தற்போது எங்கள் வீட்டையும் அதே தொழில்நுட்பம் மூலம் மூன்றடிக்கு உயர்த்தி வருகிறோம். இவ்வாறு கூறினார்.

    இந்த புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்தி வரும் சென்னையைச் சேர்ந்த பில்டிங் காண்ட்ராக்டர் சுந்தரமூர்த்தி என்பவர் கூறியதாவது:- ஜாக்கிகள் மூலம் பழைய வீடுகளை தரை மட்டத்திலிருந்து பெயர்த்து தேவையான அளவு உயர்த்தும் கட்டிட தொழில்நுட்ப முறையை நாங்கள் பல ஆண்டுகளாக செய்து வருகிறோம். தமிழகத்தில் இதுவரை 500-க்கும் மேற்பட்ட வீடுகளை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம். நாமக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக சுதாகர் வீட்டை எங்கள் தொழில்நுட்பத்தில் உயர்த்தி வருகிறோம். கடந்த 1-ந் தேதி பணிகளை தொடங்கினோம்.

    இன்னும் 30 நாட்களில் பணிகள் முடிந்து விடும். கட்டிடத்தை உயர்த்த ஒரு சதுர அடிக்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறோம். மேலும் கட்டடத்துக்கு ஏற்ற போல் 600 ஜாக்கிகள் வரை பயன்படுத்துகிறோம். தற்போது இந்த கட்டிடத்திற்கு 175 ஜாக்கிகள் மூலம் உயர்த்தி வருகிறோம்.

    வீட்டை தூக்கும் நவீன தொழில்நுட்ப முறை பரமத்திவேலூர் தாலுகா கள்ளிப்பாளையம் திட்டமேட்டில் உள்ள சுதாகர் வீட்டில் 15 பேர் கொண்ட குழுவினர் பணி புரிந்து வருகின்றனர். 2000 சதுர அடி, 40 டன் எடை கொண்ட அவரின் வீட்டை தரை மட்டத்திலிருந்து 3 அடி உயர்த்தி வருகின்றனர். முதலில் சுவர்களில் இருபுறம் தோண்டி. அதன் கீழ் ஒவ்வொரு பக்கமாக ஜாக்கிகள் வைக்கின்றனர்.

    அந்த வீட்டிற்கு 175 ஜாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன, தேவையான உயரத்துக்கு 15 பேரும் ஒரே நேரத்தில் ஜாக்கிகளை இயக்கி உயர்த்துகின்றனர். தயாரிக்கப்பட்ட சிமெண்ட் செங்கல்களை வைத்து கட்டுகின்றனர் .இந்த முறையில் வீட்டில் தரைத்தளம் மட்டும் சேதம் அடைகிறது. சுவர்களில் விரிசல் கூட விழுவதில்லை. 3 அடி வரை உயர்த்துவதற்கு ஒரு சதுர அடிக்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றோம். தற்போது பணி நடைபெறும் இந்த கட்டிடம் புதிதாக கட்டினால்ரூ 40 லட்சம் வரை செலவாகும். தற்போது உயரம் தூக்கி கட்ட 5 லட்சத்திலிருந்து 6 லட்சம் வரை செலவாகும் என திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

    ×