search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The conductor complained to the police"

    • வெங்கடேஷ் (வயது 54). இவர் ராசிபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.
    • அண்ணாதுரையின் மனைவி வெண்ணிலா கண்டக்டர் வெங்கடேசை தாக்கியதாக கூறப்படுகிறது.

    ராசிபுரம்:

    திருச்செங்கோடு அருகே உள்ள புள்ளாக் கவுண்டம்பட்டி சாணார்பாளையத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 54). இவர் ராசிபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து காளிப்பட்டிக்கு சென்ற அரசு டவுன் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். அப்போது அந்த பஸ்சில் ராசிபுரம் டவுன் வி.நகர் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை, அவரது மனைவி வெண்ணிலா(33) மகள் இசை ராணி(17) ஆகியோர் பயணம் செய்துள்ளனர்.

    அண்ணாதுரை பஸ்சின் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்த தாக கூறப்படுகிறது. அதை பார்த்த கண்டக்டர் வெங்கடேஷ் அண்ணாதுரையை படிக்கட்டில் இருந்து உள்ளே வரும்படி அழைத்துள்ளார். உள்ளே வந்த அண்ணாதுரை கண்டக்டர் வெங்கடேஷ் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதைப் பார்த்த அண்ணாதுரையின் மனைவி வெண்ணிலா கண்டக்டர் வெங்கடேசை தாக்கியதாக கூறப்படுகிறது. இது பற்றி கண்டக்டர் வெங்கடேஷ் வெண்ணிலா மீது ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். அதேபோல் வெண்ணிலாவும் கண்டக்டர் வெங்கடேஷ் மீது புகார் அளித்தார்.

    இருதரப்பினரும் ராசிபுரம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றனர். இரு தரப்பினரும் அளித்த புகார்களின் பேரில் போலீசார் தனித்தனியாக 2 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×