என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • வடிவேல் (45). மோட்டார் சைக்கிள் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • கிழக்கு பெருமாபாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர் திசையில் வந்த முட்டை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு லாரி ஒன்று வடிவேல் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், சிங்கிலிப்பட்டி அருகே உள்ள கணவாய்பட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி அருக்காணி(62). இவரது மகன் வடிவேல் (45). மோட்டார் சைக்கிள் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் பரமத்தி வேலூர் அருகே உள்ள கீழ்சாத்தம்பூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்காக தனது தாய் அருக்காணியை தனது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமரவைத்துக் கொண்டு பரமத்தி நோக்கி நாமக்கலில் இருந்து கரூர் செல்லும் பை-பாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தார். கிழக்கு பெருமாபாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர் திசையில் வந்த முட்டை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு லாரி ஒன்று வடிவேல் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வடிவேலுவின் தாயார் அருக்காணி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த அவரை காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவரை பரிசோதனை செய்து மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    • பொத்தனூர் பேரூராட்சிக்கு ட்பட்ட பகுதியில் பரமத்திவே லூர்- ஜேடர்பா ளையம் செல்லும் நெடுஞ்சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது.
    • பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும் பொருட்டு சாலையில் நடுப்பகுதியில் சிமெண்ட் மைய தடுப்பான் அமைக்க பேரூராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சி மன்ற தலைவர் கருணாநிதியின் முயற்சியின் காரணமாக பொத்தனூர் பேரூராட்சிக்கு ட்பட்ட பகுதியில் பரமத்திவே லூர்- ஜேடர்பா ளையம் செல்லும் நெடுஞ்சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது பொது மக்களின் நலன் கருதியும் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும் பொருட்டு சாலையில் நடுப்பகுதியில் சிமெண்ட் மைய தடுப்பான் அமைக்க பேரூராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதையடுத்து உடனடியாக ந வடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை த்துறை உதவி கோட்டப் பொறியாளர் பொத்தனூர் பேரூராட்சி மன்றத்தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

    தார் சாலை யின் நடுவில் தடுப்புகள் அமைத்து விபத்து களை தடுக்க நட வடிக்கை எடுத்த பொத்தனூர் பேரூராட்சி தலைவர் கருணாநிதிக்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நன்றியினை தெரிவித்தனர்.

    • மாசி பெரியண்ணசாமி, கன்னி மார் சுவாமிகளுக்கு கடந்த மாதம் 27-ந் தேதி கும்பாபி ஷேகம் நடந்தது.
    • அதனைத் தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடை பெற்றது.

    நாமக்கல்:

    பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறு காவிரியின் வடகரையில் அரசமர விநாயகர், மாசி பெரியண்ணசாமி, கன்னி மார் சுவாமிகளுக்கு கடந்த மாதம் 27-ந் தேதி கும்பாபி ஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடை பெற்றது.நேற்று மண்டல பூஜை நிறைவை முன்னிட்டு காலை நன் இடையாறு காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனித நீராடி தீர்த்த குடம் எடுத்து வந்தனர். அதில் 100-க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து அரசமர விநாயகர், மாசி பெரியண்ணசாமி, கன்னிமார் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடந்தது.மண்டல பூஜை 12 நாள் நிறைவு விழாவை முன்னிட்டு சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • விதிமுறைகளை மீறி இந்த குடோன் செயல்படுவதாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் கிடைத்தது.
    • 10 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் குடோனில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் வளையப்பட்டி ரோடு கூட்டுறவு தொடக்க வேளாண்மை சங்கம் அருகே செவிட்டு ரங்கன்பட்டி பகுதியில் மணல் சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது.

    இங்கு கூடுதல் விலைக்கு மணல் விற்கப்படுவதாகவும், நேரிடையாக மணல் விற்பனை செய்வதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தது. குறிப்பாக ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மணல் வழங்க வேண்டும். ஆனால் விதிமுறைகளை மீறி இந்த குடோன் செயல்படுவதாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் கிடைத்தது.

    இதையடுத்து இன்று காலை 9.30 மணி அளவில் 2 கார்களில் வந்த 10 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் குடோனில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையையொட்டி துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • பாஸ்ட் புட் கடைக்கு சென்று தான் வாங்கி சென்ற பிரியாணியில் வெட்டுக்கிளி இறந்து கிடப்பதாக கூறியுள்ளார்.
    • டேவிட் பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் 4 ரோடு அருகே கேரளா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் பாஸ்ட்புட் உணவகம் நடத்தி வருகிறார்.

    இங்கு பரமத்தியைச் சேர்ந்த டேவிட் (35) என்பவர் தனது வீட்டிற்கு சிக்கன் பிரியாணியை பார்சல் செய்து வாங்கிச் சென்றுள்ளார். வீட்டிற்கு சென்று பிரியாணியை பிரித்து சாப்பிட முயன்ற போது அதில் வெட்டுக்கிளி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் உடனடியாக பரமத்திவேலூரில் உள்ள பாஸ்ட் புட் கடைக்கு சென்று தான் வாங்கி சென்ற பிரியாணியில் வெட்டுக்கிளி இறந்து கிடப்பதாக கூறியுள்ளார். ஆனால் பிரியாணி கடை உரிமையாளர் நீங்களாக வெட்டுக்கிளியை பிரியாணியில் போட்டு கொண்டு வந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து டேவிட் பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரிடையே பேசி வாடிக்கையாளர் வாங்கிய பிரியாணி பார்சலை நீங்களே எடுத்துச் செல்லுங்கள் நீங்கள் உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் வழங்கி அதை சோதனை செய்யுங்கள் என அறிவுறுத்தினர்.

    இதுகுறித்து பிரியாணி கடையில் இருந்த வாடிக்கையாளர் கூறியதாவது:-

    பிரியாணியில் கிடந்த வெட்டுக்கிளி நன்றாக பிரியாணியில்தான் வெந்துள்ளது தெரிகிறது. சமைக்கும் அடுப்பிற்கு மேலே அதிக வெளிச்சம் கொண்ட எல்.இ.டி., பல்புகளை உபயோகிப்பதால் அதிக வெளிச்சத்தில் அங்கு வரும் பூச்சிகள், வெட்டுக்கிளிகள், மற்றும் பூச்சிகள் விழுந்தாலும் இவர்கள் அதை கவனத்தில் கொள்வதில்லை.

    சாலைகளின் ஓரத்திலேயே அடுப்புகள் அமைத்து சமைப்பதால் ரோட்டில் செல்லும் வாகனங்களில் இருந்து வரும் மாசுக்கள் நிறைந்த புகை, தூசுகள், புழுதி, உணவுகளில் கலக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனை மேற்கொள்ள வேண்டும் என கூறினர்.

    • நாமக்கல் மண்டலத்தில் தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • இந்த நிலையில் நடைபெற்ற என்.இ.சி.சி கூட்டத்தில் முட்டை விலை மீண்டும் 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.50 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர். கடந்த செப். 6ந் தேதி ஒரு முட்டை விலை ரூ. 4.30-ல் இருந்து ரூ. 4.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது. 9ந் தேதி முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டை விலை ரூ. 4.40 ஆனது. இந்த நிலையில் நடைபெற்ற என்.இ.சி.சி கூட்டத்தில் முட்டை விலை மீண்டும் 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.50 ஆக நிர்ணயிக்கப்பட்டது.இதை அனைத்து பண்ணையாளர்களுக்கு தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும், என்இசிசி விலையை விட முட்டை விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டாம் எனவும், என்இசிசி மற்றும் தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 122 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 88 ஆக தென்னிந்திய கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    • தமிழகம் முழுவதும், தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வு நேற்று நடைபெற்றது.
    • இந்த தேர்விற்காக, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 1,409 பேர் விண்ணப்பம் செய்து ஹால் டிக்கட் பெற்றிருந்தனர்.

    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும், தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வு நேற்று நடைபெற்றது.

    தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் இந்த போட்டித் தேர்வு நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 மையங்களில் இந்த போட்டித் தேர்வு நடைபெற்றது.

    இந்த தேர்விற்காக, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 1,409 பேர் விண்ணப்பம் செய்து ஹால் டிக்கட் பெற்றிருந்தனர். ஆசிரியர் தேர்வு வாரிய விதிமுறைப்படி தேர்வு நடைபெற்றது. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வு மையத்தை, மாவட்ட கலெக்டர் டாக்டர். உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அனைத்து தேர்வு மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 4 மையங்களில் நடைபெற்ற தேர்வில், மொத்தம் 1,196 தேர்வர்கள் பங்கேற்றனர். 213 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.

    • மேல்சாத்தம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.காம் படித்து கொண்டிருந்த இவர் கடந்த 1 மாதமாக கல்லூரிக்கு போகாமல் வீட்டில் இருந்து வருகிறார்.
    • இந்நிலையில் கடந்த 8-ந் தேதி இரவு குடும்பத்தினர் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது ரீனாவை காணவில்லை.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்பட்டி அருகே சிங்கிலிபட்டி பகுதியை சேர்ந்தவர் வீரமணி (45). இவரது மனைவி நல்லம்மாள் (38). இவர்கள் கூலி வேலை செய்து வருகிறார்கள். இவரது மகள் ரீனா (19).

    மேல்சாத்தம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.காம் படித்து கொண்டிருந்த இவர் கடந்த 1 மாதமாக கல்லூரிக்கு போகாமல் வீட்டில் இருந்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 8-ந் தேதி இரவு குடும்பத்தினர் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது ரீனாவை காணவில்லை. இதையடுத்து பெற்றோர் பல்வேறு இடங்களில் ரீனாவை தேடி பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து நல்லம்மாள் வேலகவுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவி ரீனாவை தேடி வருகின்றனர்.

    • போலீஸ் துறை சார்பில் மன மகிழ் மன்ற மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியம் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
    • இதில் சிறப்பு விருந்தினர்களாக கோவை சரக ஐ.ஜி.பவானீஸ்வரி, சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

    ராசிபுரம்:

    போலீஸ் துறை சார்பில் மன மகிழ் மன்ற மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியம் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற சேலம், நாமக்கல் மாவட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி ராசிபுரம் அருகே உள்ள வநேத்ரா முத்தாயம்மாள் கல்வி நிறுவனங்களில் நடைபெற்றது.

    பரிசளிப்பு

    இதில் சிறப்பு விருந்தினர்களாக கோவை சரக ஐ.ஜி.பவானீஸ்வரி, சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

    மேலும் சேலம் மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசாருக்கு பரிசு கோப்பை களையும், சான்றிதழ்களையும் வழங்கினர். இதில் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செந்தில்குமார் (ராசிபுரம்), முத்துகிருஷ்ணன், நாமகிரி பேட்டை இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், வநேத்ரா முத்தாயம்மாள் கல்வி நிறுவனங்களின் செயலாளர் முத்துவேல் ராமசாமி, தொழிலதிபர் பாலசுப்பிர மணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் ஐ.ஜி. பவானீஸ்வரி பேசுகையில் பள்ளி மாணவ, மாணவிகள் நல்ல ஒழுக்கத்துடன் இருந்தால்தான் குடும்பமும் நாடும் நன்றாக இருக்கும். நாடு நன்றாக வளர்ந்தால் அனைத்து துறையும் வளர்ச்சி அடையும்.

    காவல்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கம் வழங்கப்பட்டு வருகிறது. படிப்பின் முக்கியத்துவத்தால் ஆண்களுக்கு இணையாக பெண்களும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வருகின்றனர் என்றார்.

    டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி பேசும்போது, மாணவ, மாணவிகள் தீய பழக்கங்களில் இருந்து விடுபட மனமகிழ் மன்றம் சார்பில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. தாய், தந்தை இல்லாத குழந்தைகளை பாதுகாக்க போலீசார் தயாராக உள்ளனர் என்றார்.

    • ஜேடர்பாளையம் கரப்பாளை யத்தை சேர்ந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.
    • இந்த வழக்கு தொடர்பாக அப்பகுதியில் செயல்பட்டு வந்த கரும்பு ஆலையில் பணியாற்றிய 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் கரப்பாளை யத்தை சேர்ந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக அப்பகுதியில் செயல்பட்டு வந்த கரும்பு ஆலையில் பணியாற்றிய 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.

    இதனை தொடர்ந்து புதுப்பாளையத்தில் வெல்லம் தயாரிக்கும் ஆலையில் வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். தொடர் வன்முறையால் ஒருவர் உயிரிழந்தார். மேலும் அதே பகுதியை சேர்ந்த விவசாயிகளின் தோட்டத்தில் பாக்குமரங்கள், வாழை மரங்கள், மரவள்ளி பயிர்கள் வெட்டி சாய்க்கப்பட்டன.

    நிவாரண உதவி

    இந்த நிலையில் கொலை யுண்ட இளம்பெண் குடும்பத்தாருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல்-அமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் நிவாரண தொகையை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் கலெக்டர் டாக்டர் உமா ஆகியோர் கபிலர்மலை யூனியன் அலுவலகத்தில் வழங்கினார்கள்.

    மேலும் அவரது 2 குழந்தைகளுக்கு வருங்கால வைப்பு நிதியாக தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார்கள். வாழை, பாக்கு மரம் மற்றும் டிராக்டர் எரித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரண தொகை வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் நாமக்கல் எம்.பி. சின்ராஜ், தி.மு.க. நாமக்கல் மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. சுகந்தி, கபிலர்மலை ஒன்றிய செயலாளர் சண்முகம், பரமத்தி ஒன்றிய செயலாளர் தனராஜ், கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிரிஜா, புஷ்பராஜன், பொத்தனூர் பேரூராட்சி தலைவர் கருணாநிதி, பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவர் டாக்டர்.சோமசேகர், துணைத்தலைவர் முருகவேல், பிலிக்கல் பாளையம் ஊராட்சி தலைவர் மணிமேகலை லோகநாதன், அ. குன்னத்தூர் ஊராட்சி தலைவர் எம்.ஜி.ஆர் என்கிற ரமேஷ், ஆனங்கூர் ஊராட்சி தலைவர் மோகன்ராஜ், வடகரையாத்தூர் ஊராட்சி தலைவர் மஞ்சுளா குணசேகரன் மற்றும் ஊராட்சி செயலர்கள் சசிகுமார், பொன்னுவேல், ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ராமாவரம்புதூர் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த 2- ந் தேதி உண்டியல் உடைத்து பணம்கொள்ளை அடிக்கப்பட்டன.
    • இந்த திருட்டு குறித்து நாமக்கல் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் செல்லதுரை ஆகியோர் தீவிர வீசாரணைமேற்கொண்டு வந்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் அன்புநகரில் உள்ள பகவதி அம்மன் கோவில், ராமாவரம்புதூர் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த 2- ந் தேதி உண்டியல் உடைத்து பணம்கொள்ளை அடிக்கப்பட்டன. இந்த திருட்டு குறித்து நாமக்கல் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் செல்லதுரை ஆகியோர் தீவிர வீசாரணைமேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சிசிடிவி ஆதாரம், மற்றும் கோவில் அருகே பொதுமக்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இன்று காலை நாமக்கல் கணேசபுரத்தில் பெருச்சாளி என்ற பிரவீன்பாண்டியனை (22) போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிரவீன்பாண்டியன் பல்வேறு திருட்டு வழக்கில் தொடர்புடையவர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இவரிடம் போலீஸார் தீவிர வீசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஆலையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை கரும்புகை எழும்பியது.
    • தீ விபத்துக்கான காரணம் குறித்து எருமப்பட்டி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள முட்டாஞ்செட்டி பகுதியில் ரவி என்பவருக்கு சொந்தமான தேங்காய் நார் உற்பத்தி செய்யும் ஆலை உள்ளது. இங்கு உற்பத்தி செய்யும் தேங்காய் நார்களை இருப்பு வைக்க குடோன் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குடோனில் இன்று காலை 9 மணி அளவில் தேங்காய் நார்கள் திடீரென தீப்பிடித்து கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் ஆலையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை கரும்புகை எழும்பியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    உடனடியாக எருமப்பட்டி, நாமக்கல் பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வாகனங்களில் கொண்டு வந்த தண்ணீரை குடோன் முழுவதும் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    தீ விபத்தில் குடோனில் இருந்த சுமார் ரூ.8 லட்சம் மதிப்பிலான தேங்காய் நார் சேதமானதாக கூறப்படுகிறது.

    இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து எருமப்பட்டி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×