என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
நாமக்கல் அருகே மணல் சேமிப்பு கிடங்கில் அமலாக்கத்துறை சோதனை
ByMaalaimalar12 Sep 2023 8:04 AM GMT (Updated: 12 Sep 2023 8:04 AM GMT)
- விதிமுறைகளை மீறி இந்த குடோன் செயல்படுவதாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் கிடைத்தது.
- 10 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் குடோனில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் வளையப்பட்டி ரோடு கூட்டுறவு தொடக்க வேளாண்மை சங்கம் அருகே செவிட்டு ரங்கன்பட்டி பகுதியில் மணல் சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது.
இங்கு கூடுதல் விலைக்கு மணல் விற்கப்படுவதாகவும், நேரிடையாக மணல் விற்பனை செய்வதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தது. குறிப்பாக ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மணல் வழங்க வேண்டும். ஆனால் விதிமுறைகளை மீறி இந்த குடோன் செயல்படுவதாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் கிடைத்தது.
இதையடுத்து இன்று காலை 9.30 மணி அளவில் 2 கார்களில் வந்த 10 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் குடோனில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையையொட்டி துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X