என் மலர்
நாமக்கல்
- ஜெயபிரகாஷ் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
- ராசிபுரத்தை நோக்கி சென்றபோது பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் ஹெல்மெட் அணிந்த நிலையில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ஜெயப்பிரகாஷ் பரிதாபமாக இறந்தார்.
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள அனணப் பாளையம் கிரா மத்தைச் சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மகன் ஜெயப்பிரகாஷ் (வயது 29). எம்.எஸ்சி.பி.எட். பட்டதாரி. இன்னும் திருமணம் ஆகவில்லை.
இன்சூரன்ஸ் ஊழியர்
இந்த நிலையில் ஜெயபிரகாஷ் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று திருச்செங்கோட்டில் உள்ள இன்சூரன்ஸ் கம்பெனி அலுவலகத்திற்கு சென்று விட்டு மாலையில் அவரது மொபட்டில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
அவர் ஹெல்மெட் அணிந்து வண்டியை ஓட்டி சென்றது குறிப்பிடத்தக்கது. திருச்செங்கோடு-ராசிபுரம் சாலையில் குருசாமிபாளையம்-வண்டிப்பேட்டை அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அருகில் ராசிபுரத்தை நோக்கி சென்றபோது பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் ஹெல்மெட் அணிந்த நிலையில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ஜெயப்பிரகாஷ் பரிதாபமாக இறந்தார்.
விசாரணை
அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் ஜெயப்பிரகாஷ் இறந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் அவரது நண்பர்கள், உறவினர்கள், 500-க்கும் மேற்பட்டவர்கள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். ஜெயப்பிரகாஷ் விபத்தில் இறந்த சம்பவம் அணைப்பாளையம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
- கலைச்செல்வி (45). இவர்களது மகள் நிஷாந்தி (23). இவருக்கு கடந்த வாரம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
- இந்த நிலையில் கந்தசாமி குடும்பத்தினர் வெளியே சென்ற சிறிது நேரத்தில் 2 மர்ம நபர்கள் காரில் வந்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா குப்புச்சிபாளையம், குச்சிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (54). இவர் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் தாபா ஓட்டல் நடத்தி வருகிறார்.
திருமண நிச்சயம்
இவரது மனைவி கலைச்செல்வி (45). இவர்களது மகள் நிஷாந்தி (23). இவருக்கு கடந்த வாரம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வருகிற அக்டோபர் மாதம் திருமணம் நடக்க இருப்பதால் மணமக்களின் வீட்டார் குடும்பம் சகிதமாக நேற்று காலை திருமணத்திற்கு தேவையான துணிமணிகள் எடுக்க ஈரோட்டுக்கு காரில் புறப்பட்டு சென்றுவிட்டனர்.
காரில் வந்த மர்மநபர்கள்
இந்த நிலையில் கந்தசாமி குடும்பத்தினர் வெளியே சென்ற சிறிது நேரத்தில் 2 மர்ம நபர்கள் காரில் வந்தனர். தெருவின் முன்பகுதியிலேயே காரை நிறுத்திவிட்டு கந்தசாமியின் வீட்டிற்கு வந்தனர்.
அங்கு தனியாக இருந்த கந்தசாமியின் தாய் அருக்காணி (80) தோட்டத்திற்கு செல்வதற்கு தயாராக வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு நபர் மட்டும் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார். வீட்டு வேலைக்காக அண்ணன் வரச் சொன்னார் என மூதாட்டியிடம் தெரி வித்துள்ளார். வீட்டில் யாரும் இல்லை. அனைவரும் துணி எடுக்க சென்றுவிட்டனர். நாளைக்கு வாருங்கள் என மூதாட்டி கூறியுள்ளார்.
மூதாட்டியிடம் ஒருவர் பேசிக் கொண்டிருந்த இந்த வேளையில் மற்றொரு மர்மநபர் வீட்டின் அருகே சென்று முன்புற கதவை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். இதனிடையே மூதாட்டி அந்த மர்ம நபரிடம் பேசிவிட்டு அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று விட்டார்.
நகை, பணம் கொள்ளை
இதையடுத்து மர்ம நபர் வீட்டின் முன்புற கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் வைத்திருந்த சாவியை எடுத்து லாக்கரை திறந்து நிஷாந்தியின் திருமணத்திற்கு சீர்வரிசை கொடுப்பதற்காக வைத்திருந்த 60 பவுன் நகைகள் மற்றும் ரூ.9 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து திருடிக் கொண்டு அங்கிருந்து கண் இமைக்கும் நேரத்தில் தப்பி சென்று விட்டனர்.
இந்த நிலையில் மூதாட்டி அருக்காணி தோட்டத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து அருகில் உள்ள வர்களிடமும், தனது மகன் கந்தசாமிக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் வீட்டிற்கு வந்த கந்தசாமி பீரோவை திறந்து பார்த்த போது அதிலிருந்த மொத்த பணம், நகைகள் கொள்ளைபோயிருந்தது தெரியவந்தது.
கைரேகை நிபுணர்கள்
இது குறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு கந்தசாமி உடனடி யாக தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி, நாமக்கல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார் அங்கு தீவிர விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கைரேகை களை பதிவு செய்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கண்காணிப்பு கேமிரா ஆய்வு
இதையடுத்து பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ முரளி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பரமத்திவேலூர் முதல் குப்பிச்சிபாளையம், மோகனூர் வரை உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். திருட்டு நடந்த குறிப்பிட்ட நேரத்தில் அந்த வழியாக சென்ற வாகனங்கள், கந்தசாமி வீட்டிற்கு சென்ற வாகனம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாமக்கல் திருச்சி சாலை மாருதி நகரை சேர்ந்தவர் வெற்றிவேல். மளிகை கடை நடத்தி வருகிறார்.
- நேற்று வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வெற்றிவேல் தூங்க சென்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் திருச்சி சாலை மாருதி நகரை சேர்ந்தவர் வெற்றிவேல். மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது வீடு மளிகை கடையின் மேல்தளத்தில் உள்ளது. நேற்று வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வெற்றிவேல் தூங்க சென்றனர். இந்த நிலையில் நள்ளிரவில் மளிகை கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் கல்லாவில் இருந்த ரூ.4 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இன்று காலை மளிகை கடையை திறக்க சென்ற வெற்றிவேல் கல்லாவில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக நாமக்கல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
இதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து கைரேகைகளை பதிவு செய்தனர்.
மளிகை கடை உள்ள பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளையும் கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மளிகை கடையில் புகுந்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- குடிநீர் இணைப்பு பெற்று குடிநீர் பெரும் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவது தெரிய வருகிறது.
- குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பது சட்டப்படி அபராதத்திற்குரிய குற்றமாகும்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் சுப்ரமணியன் வெளியிடுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
பரமத்தி பேரூராட்சியில் பேரூராட்சி மூலம் குடிநீர் இணைப்பு பெற்று குடிநீர் பெரும் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவது தெரிய வருகிறது. மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவதால் அனைத்து இணைப்புகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பது சட்டப்படி அபராதத்திற்குரிய குற்றமாகும். எதிர்வரும் வறட்சிக்காலங்களில் இப் பேரூராட்சியில் சீரான குடிநீர் விநியோகம் செய்யும் பொருட்டு பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. எனவே குடிநீர் இணைப்பு பெற்றுள்ள உரிமையாளர்கள் மின்மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பதை உடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மீறி மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவது கண்டறியப்பட்டால் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 மற்றும் பரமத்தி பேரூராட்சி குடிநீர் திட்ட துணை விதிகளின் கீழ் அபராதம் விதிக்கப்படுவதுடன் மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டு குடிநீர் இணைப்புகள் முன்னறிவிப்பு இன்றி நிரந்தரமாக துண்டிப்பு செய்யப்படும் எனஅதில் கூறியுள்ளார்.
- சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.
- இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
நாமக்கல்:
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த 11-ந் ரூ.4.55 ஆக இருந்த முட்டை விலை 12-ந் தேதி 5 பைசா உயர்த்தப்பட்டு ரூ.4.60 ஆனது. நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை மீண்டும் 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.4.65 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
- தமிழ்நாடு அரசு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு முறை, கடன் திட்ட முகாம்களை நடத்த உத்தர விட்டுள்ளது.
- மானியத்துடன் இணைந்த கடன் திட்டங்களுக்கான சிறப்பு முகாம், நாளை (14-ந் தேதி) காலை 10.30 மணி முதல், நாமக்கல் கோஸ்டல் ஓட்டலில் நடைபெறுகிறது.
நாமக்கல்:
நாமக்கல் கலெக்டர் டாக்டர்.உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு முறை, கடன் திட்ட முகாம்களை நடத்த உத்தர விட்டுள்ளது. இதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், சமுதா யத்தின் அனைத்து பிரிவு மக்களும் பயன்பெறும் வகையில் அனைத்து துறைகளை உள்ளடக்கிய, மானியத்துடன் இணைந்த கடன் திட்டங்களுக்கான சிறப்பு முகாம், நாளை (14-ந் தேதி) காலை 10.30 மணி முதல், நாமக்கல் கோஸ்டல் ஓட்டலில் நடைபெறுகிறது.
இந்த முகாமில், மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சித் துறை, விவசாயத்துறை, கால்ந டைத்துறை, கைத்தறித்துறை, தாட்கோ, கதர்கிராம தொழில் வாரியம், கதர் கிராம தொழில் ஆணையம் உள்ளிட்ட துறைகள் மூலம் செயல்படுத்தப்படும், அனைத்து மானியத்துடன் இணைந்த கடன் திட்டங் களுக்கும், கடனுதவிக்கான வசதியமைப்புகள் வழங்கப்படும்.
மேலும் கடன்தொகை விடுவிப்பு குறித்து, பயனா ளிகளுக்கு தேவையாகன ஆலோசனைகள் மற்றும் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கவும் இக்கடன் திட்ட முகாமில் ஏற்பாடுகள் செய்து தரப்படும்.
எனவே தொழில் முனைவோர்கள், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், தொழில் விரிவாக்கம் செய்ய விரும்புவோர் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும், புதிய தாக கடனுதவி பெற விரும்புபவர்கள் தங்களது அசல் ஆவணங்கள் மற்றும் துவங்கப்படும் தொழில் குறித்த திட்ட அறிக்கைகளுடன் நேரில் வந்து முகாமில் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதி வேற்றம் பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- பரமேஸ்வரர் கோவிலில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் நந்திபெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
அதேபோல் பாண்ட மங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஸ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் ஆலயத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில், பிலிக்கல்பாளையம் கரட்டூர் விஜயகிரி வடபழனியாண்டவர் கோவிலில் எழுந்தரு ளியுள்ள பருவதீஸ்வரர் மற்றும் பரமத்திவேலூர் வல்லப விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி சமேத பானலிங்கவிஸ்வேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கு ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
- வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
- இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பிரபல எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
பரமத்தி வேலூர்:
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலுார் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் தங்களது தோட்டத்தில் விளை வித்த வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பிரபல எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
தேங்காய்
இந்த வாரம் நடந்த ஏலத்தில் 32.57 குவிண்டால் எடை கொண்ட 8 ஆயிரத்து 613 தேங்காய் விற்பனைக்கு வந்தது.இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.24.59-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.20.00-க்கும், சராசரி விலையாக ரூ.23.19-க்கும் என மொத்தம் ரூ. 74ஆயிரத்து 825-க்கு விற்பனையானது.
தேங்காய் பருப்பு
அதேபோல்511.34 குவிண்டால் எடை கொண்ட 1019-மூட்டை தேங்காய் பருப்பு விற்ப னைக்கு வந்தது.
இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.78.90-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.72.89-க்கும், சராசரி விலையாக ரூ.77.29-க்கும் விற்பனையானது.
2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.77-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.59.19-க்கும், சராசரி விலையாக ரூ.71.99-க்கும் என மொத்தம் ரூ.37லட்சத்து52ஆயிரத்து 905-க்கு விற்பனையானது.
சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 38 லட்சத்து27 ஆயிரத்து 730-க்கு விற்பனையானது.
- தனியார் கல்லூரியில் டிரைவராக சங்ககிரி அருகே மரவம்பா ளையத்தான் காடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(வயது 64) என்பவர் பணியாற்றி வருகிறார்.
- நிலை தடுமாறி, முனியப்பன் கோவில் அருகே செல்லும் போது சாலை நடுவில் வைக்கப்பட்டுள்ள டிவைடரில் மோதி பஸ் கவிழ்ந்தது.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பல்லக்கா பாளையம் அருகே மங்கரங்கம்பாளையம் தனியார் கல்லூரியில் டிரைவராக சங்ககிரி அருகே மரவம்பா ளையத்தான் காடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(வயது 64) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கல்லூரி யில் பணி யாற்றும் 19 பணி யாளர்களுடன் பேருந்தில் குமாரபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது நிலை தடுமாறி, முனியப்பன் கோவில் அருகே செல்லும் போது சாலை நடுவில் வைக்கப்பட்டுள்ள டிவைடரில் மோதி பஸ் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 19 பேரும் காயமடைந்தனர்.
இவர்கள் குமாரபாளையம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் நடை பெற்றது.
- முன்னாள் மாணவ, மாணவியர் தங்கள் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் நடை பெற்றது. முன்னாள் மாணவ, மாணவியர் தங்கள் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒவ்வொரு வரும் தாங்கள் படித்த தரு ணத்தில் நடந்த சம்பவங்கள் குறித்தும், தாங்கள் தற்போது பணியாற்றி வரும் நிறு வனங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர்.பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
வசதி இல்லாத மாணவ, மாண வியர்களுக்கு உதவு தல், பள்ளிக்கு தேவையான அத்தியாவசியமான உபக ரணங்கள் வாங்கி தருவது, ஒவ்வொரு ஆண்டும் சங்க கூட்டம் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டு, புதிய மாணவ, மாண வியர்களுக்கு அரசு பள்ளியின் சிறப்பம்சம் குறித்து எடுத்துரைத்தல், அரசு தேர்வுக்கு தேவையான உதவிகளை புதிய மாணவ, மாணவியர்களுக்கு செய்தல் என்பனஉள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகி லெவி பங்கேற்று, முன்னாள் மாணவர்களால் நன்கொடையாக வழங்கப் பட்ட குடிநீர் சுத்திகரிப்பு சாதனத்தை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். ஆசிரியைகள் ஹெலன் பிரசெல்லா, ஜாய்ஸ் அருள்செல்வி, மெர்சிபா குளோரி, ஸ்டெல்லா, சித்ரா, ஜமுனா, ராணி உள்பட பலர் பங்கேற்றனர்.
- நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
- நேற்று காலை முதல் மாலை வரை வெயில் பொது மக்களை சுட்டெரித்தது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நாமக்கல் நகரை பொறுத்த வரையில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் பொது மக்களை சுட்டெரித்தது. மாலை 5 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. அரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்ததால், சாலைகளில் மழைநீர்பெருக்கெடுத்து ஓடியது. பஸ் பயணிகளும், பொதுமக்களும் குடைபிடித்த வாறு சென்ற னர்.இந்த மழை யின் காரணமாக இரவில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- சேலத்தில் இருந்து கரூர் நோக்கி அதி வேகமாக சென்ற லாரி ஒன்று மணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- இதில் மணி மோட்டார் சைக்கிளுடன் தார் சாலையில் கீழே விழுந்தார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலூகா உழவர் பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் மணி( 55). கூலித் தொழிலாளி.
இவர் இன்று காலை வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு படமுடி பாளையத்தில் உள்ள தாலுகா அலுவலகம் அருகே சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது சேலத்தில் இருந்து கரூர் நோக்கி அதி வேகமாக சென்ற லாரி ஒன்று மணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மணி மோட்டார் சைக்கிளுடன் தார் சாலையில் கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் ஓடிவந்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை பரமத்திவேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே மணி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தனர்.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.






