என் மலர்
நாமக்கல்
- சாலையின் அகலம் சுமார் 15 அடி என்ற அளவில் உள்ளது.
- குமாரபாளையம் - எடப்பாடி சாலையில் சின்னப்ப நாயக்கன் பாளையம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது.
குமாரபாளையம்
குமாரபாளையம் - எடப்பாடி சாலையில் சின்னப்ப நாயக்கன் பாளையம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது. அதிக போக்குவரத்து உள்ள இந்த சாலையில், சாலையின் அகலம் சுமார் 15 அடி என்ற அளவில் உள்ளது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரி பஸ்கள் வரும் நேரம், மாலையில் இதே போல் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் நேரம் உள்ளிட்ட பல சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சாலை நெடுக வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலை ஏற்படுகிறது.
வாரச்சந்தை கூடும் வெள்ளிக்கிழமை நாளன்று காலை முதல், இரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் சந்திக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. எடப்பாடி செல்லும் பேருந்துகள், பவானி பஸ் நிலையம் செல்லும் பேருந்துகள் உரிய நேரத்தில் செல்ல வழியில்லாமல் பயணிகள் தவிக்கும் நிலைக்கு ஆளாகி வருகிறார்கள்.
- கடந்த சில வாரங்களாக பூக்களின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது
- திருவிழா விசேஷங்கள் போன்ற காரணங்களால் பூ தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது.
பரமத்தி வேலூர்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நகப்பாளையம், செல்லப்பம்பாளையம், பாகம் பாளையம், பெரிய மருதூர், தண்ணீர் பந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டு மல்லி, முல்லைப்பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அரளி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக பூக்களின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. மேலும் சுப முகூர்த்த நாட்கள், கோவில் மற்றும் திருவிழா விசேஷங்கள் போன்ற காரணங்களால் பூ தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் ஒரு கிலோ குண்டு மல்லி ரூ.300-க்கு விற்பனையானது நேற்று 700 ரூபாய்க்கும்,கடந்த வாரம் 70 ரூபாய்க்கு விற்பனையான சம்பங்கி 180 ரூபாய்க்கும், 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி நேற்று 170 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. இதே போல் ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சாம்பந்தி பூ 170 ரூபாய்க்கும், 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லைப்பூ கிலோ 800 ரூபாய்க்கும் விற்பனையானது.
- குமாரபாளையம் - எடப்பாடி சாலையில் சின்னப்ப நாயக்கன் பாளையம் பகுதியில் ஆக்கிர மிப்புகள் அதிகம் உள்ளது.
- வாரச்சந்தை கூடும் வெள்ளிக்கிழமை நாளன்று காலை முதல், இரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் சந்திக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
குமாரபாளையம்:
குமாரபாளையம் - எடப்பாடி சாலையில் சின்னப்ப நாயக்கன் பாளையம் பகுதியில் ஆக்கிர மிப்புகள் அதிகம் உள்ளது. அதிக போக்குவரத்து உள்ள இந்த சாலையில், சாலையின் அகலம் சுமார் 15 அடி என்ற அளவில் உள்ளது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரி பஸ்கள் வரும் நேரம், மாலையில் இதே போல் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் நேரம் உள்ளிட்ட பல சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சாலை நெடுக வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலை ஏற்படுகிறது.
வாரச்சந்தை கூடும் வெள்ளிக்கிழமை நாளன்று காலை முதல், இரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் சந்திக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. எடப்பாடி செல்லும் பேருந்துகள், பவானி பஸ் நிலையம் செல்லும் பேருந்துகள் உரிய நேரத்தில் செல்ல வழியில்லாமல் பயணிகள் தவிக்கும் நிலைக்கு ஆளாகி வருகிறார்கள்.
- கடந்த 16.8.2023-ந்தேதி கடிதம் அனுப்பி மீண்டும் கோரிக்கையை வலியுறுத்தினேன்.
- தமிழக அரசு தற்போது அதற்கான பரிசீலனை செய்வதாக தெரிவித்து இருக்கிறது.
திருச்செங்கோடு எம்.எல்.ஏ. ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு காலிங்கராயன் அத்திக்கடவு அவிநாசி என்று பெயர் வைத்தால்தான் உண்மை நிலையை மக்கள் அறிய உதவும் என்று நான் கடந்த 10.4.2023 அன்று சட்டசபையில் பேசினேன். அதற்கு அன்றே நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பரிசீலிக்கப்படும் என்று அறிவித்தார். அதன் பிறகு கடந்த 16.8.2023-ந்தேதி கடிதம் அனுப்பி மீண்டும் கோரிக்கையை வலியுறுத்தினேன். தமிழக அரசு தற்போது அதற்கான பரிசீலனை செய்வதாக தெரிவித்து இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- முட்டை விலை படிப்படியாக உயர்ந்து நேற்று ஒரு முட்டையின்விலை ரூ. 4.65 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
- பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 122 ஆக பிசிசி அறிவித்துள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த 8 நாட்களில், 40 பைசா உயர்ந்துள்ளது. ஒரு முட்டை விலை ரூ. 4.70 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர். கடந்த செப். 6-ந் தேதி ஒரு முட்டையின் விலை ரூ.4.30-ல் இருந்து 5 பைசா உயர்த்தப்பட்டு ரூ. 4.35 ஆனது. பின்னர் தொடர்ந்து முட்டை விலை படிப்படியாக உயர்ந்து நேற்று ஒரு முட்டையின்விலை ரூ. 4.65 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை மீண்டும் 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.4.70 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 8 நாட்களில் ஒரு முட்டையின் விலை 40 பைசா உயர்ந்துள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 122 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக் கோழி ஒரு கிலோ ரூ. 86 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.
- மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை, விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
- சுய உதவிக் குழுக்கள் மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்று அரங்கு அமைக்க விரும்பினால், வருகிற 20-ந் தேதிக்குள் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர்.உமா வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை, விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் 3 கண்காட்சிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடத்தப்படுகிறது.
தற்போது நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டி கையை முன்னிட்டு வரு கின்ற வருகிற 7-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மாநில அளவிலான கண்காட்சி நடைபெற வுள்ளது.
இக்கண்காட்சியில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்கள், கைத்தறி பொருட்கள், உணவுப் பொருட்கள், பாரம்ப ரிய அரிசிகள், சிறுதானிய மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள், பனை ஓலைப் பொருட்கள் போன்ற பொருட்களும், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு பயன்பாட்டிற்கு கொலு பொம்மைகள், மண் பொம்மைகள், காகித கூழ் பொம்மைகள், விருந்தின ருக்கு வழங்கக் கூடிய நினைவு பரிசு பொருட்க ளான சிறிய சணல் பைகள், பனையோலை பெட்டிகள், சிறிய அளவிலான வண்ண காகித பைகள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு சேலைகள், காட்டன் சேலைகள், காட்டன் வேட்டி கள் போன்ற துணி வகைகள், சிவகங்கை மாவட்ட காரைக்குடி பலகாரங்கள் போன்ற தீபாவளி பலகாரங்கள் காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது
எனவே நாமக்கல் மாவட்டத்தில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்று அரங்கு அமைக்க விரும்பினால், வருகிற 20-ந் தேதிக்குள் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- ஜெயபிரகாஷ் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
- ராசிபுரத்தை நோக்கி சென்றபோது பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் ஹெல்மெட் அணிந்த நிலையில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ஜெயப்பிரகாஷ் பரிதாபமாக இறந்தார்.
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள அனணப் பாளையம் கிரா மத்தைச் சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மகன் ஜெயப்பிரகாஷ் (வயது 29). எம்.எஸ்சி.பி.எட். பட்டதாரி. இன்னும் திருமணம் ஆகவில்லை.
இன்சூரன்ஸ் ஊழியர்
இந்த நிலையில் ஜெயபிரகாஷ் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று திருச்செங்கோட்டில் உள்ள இன்சூரன்ஸ் கம்பெனி அலுவலகத்திற்கு சென்று விட்டு மாலையில் அவரது மொபட்டில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
அவர் ஹெல்மெட் அணிந்து வண்டியை ஓட்டி சென்றது குறிப்பிடத்தக்கது. திருச்செங்கோடு-ராசிபுரம் சாலையில் குருசாமிபாளையம்-வண்டிப்பேட்டை அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அருகில் ராசிபுரத்தை நோக்கி சென்றபோது பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் ஹெல்மெட் அணிந்த நிலையில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ஜெயப்பிரகாஷ் பரிதாபமாக இறந்தார்.
விசாரணை
அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் ஜெயப்பிரகாஷ் இறந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் அவரது நண்பர்கள், உறவினர்கள், 500-க்கும் மேற்பட்டவர்கள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். ஜெயப்பிரகாஷ் விபத்தில் இறந்த சம்பவம் அணைப்பாளையம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
- கலைச்செல்வி (45). இவர்களது மகள் நிஷாந்தி (23). இவருக்கு கடந்த வாரம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
- இந்த நிலையில் கந்தசாமி குடும்பத்தினர் வெளியே சென்ற சிறிது நேரத்தில் 2 மர்ம நபர்கள் காரில் வந்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா குப்புச்சிபாளையம், குச்சிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (54). இவர் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் தாபா ஓட்டல் நடத்தி வருகிறார்.
திருமண நிச்சயம்
இவரது மனைவி கலைச்செல்வி (45). இவர்களது மகள் நிஷாந்தி (23). இவருக்கு கடந்த வாரம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வருகிற அக்டோபர் மாதம் திருமணம் நடக்க இருப்பதால் மணமக்களின் வீட்டார் குடும்பம் சகிதமாக நேற்று காலை திருமணத்திற்கு தேவையான துணிமணிகள் எடுக்க ஈரோட்டுக்கு காரில் புறப்பட்டு சென்றுவிட்டனர்.
காரில் வந்த மர்மநபர்கள்
இந்த நிலையில் கந்தசாமி குடும்பத்தினர் வெளியே சென்ற சிறிது நேரத்தில் 2 மர்ம நபர்கள் காரில் வந்தனர். தெருவின் முன்பகுதியிலேயே காரை நிறுத்திவிட்டு கந்தசாமியின் வீட்டிற்கு வந்தனர்.
அங்கு தனியாக இருந்த கந்தசாமியின் தாய் அருக்காணி (80) தோட்டத்திற்கு செல்வதற்கு தயாராக வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு நபர் மட்டும் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார். வீட்டு வேலைக்காக அண்ணன் வரச் சொன்னார் என மூதாட்டியிடம் தெரி வித்துள்ளார். வீட்டில் யாரும் இல்லை. அனைவரும் துணி எடுக்க சென்றுவிட்டனர். நாளைக்கு வாருங்கள் என மூதாட்டி கூறியுள்ளார்.
மூதாட்டியிடம் ஒருவர் பேசிக் கொண்டிருந்த இந்த வேளையில் மற்றொரு மர்மநபர் வீட்டின் அருகே சென்று முன்புற கதவை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். இதனிடையே மூதாட்டி அந்த மர்ம நபரிடம் பேசிவிட்டு அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று விட்டார்.
நகை, பணம் கொள்ளை
இதையடுத்து மர்ம நபர் வீட்டின் முன்புற கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் வைத்திருந்த சாவியை எடுத்து லாக்கரை திறந்து நிஷாந்தியின் திருமணத்திற்கு சீர்வரிசை கொடுப்பதற்காக வைத்திருந்த 60 பவுன் நகைகள் மற்றும் ரூ.9 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து திருடிக் கொண்டு அங்கிருந்து கண் இமைக்கும் நேரத்தில் தப்பி சென்று விட்டனர்.
இந்த நிலையில் மூதாட்டி அருக்காணி தோட்டத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து அருகில் உள்ள வர்களிடமும், தனது மகன் கந்தசாமிக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் வீட்டிற்கு வந்த கந்தசாமி பீரோவை திறந்து பார்த்த போது அதிலிருந்த மொத்த பணம், நகைகள் கொள்ளைபோயிருந்தது தெரியவந்தது.
கைரேகை நிபுணர்கள்
இது குறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு கந்தசாமி உடனடி யாக தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி, நாமக்கல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார் அங்கு தீவிர விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கைரேகை களை பதிவு செய்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கண்காணிப்பு கேமிரா ஆய்வு
இதையடுத்து பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ முரளி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பரமத்திவேலூர் முதல் குப்பிச்சிபாளையம், மோகனூர் வரை உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். திருட்டு நடந்த குறிப்பிட்ட நேரத்தில் அந்த வழியாக சென்ற வாகனங்கள், கந்தசாமி வீட்டிற்கு சென்ற வாகனம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாமக்கல் திருச்சி சாலை மாருதி நகரை சேர்ந்தவர் வெற்றிவேல். மளிகை கடை நடத்தி வருகிறார்.
- நேற்று வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வெற்றிவேல் தூங்க சென்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் திருச்சி சாலை மாருதி நகரை சேர்ந்தவர் வெற்றிவேல். மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது வீடு மளிகை கடையின் மேல்தளத்தில் உள்ளது. நேற்று வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வெற்றிவேல் தூங்க சென்றனர். இந்த நிலையில் நள்ளிரவில் மளிகை கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் கல்லாவில் இருந்த ரூ.4 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இன்று காலை மளிகை கடையை திறக்க சென்ற வெற்றிவேல் கல்லாவில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக நாமக்கல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
இதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து கைரேகைகளை பதிவு செய்தனர்.
மளிகை கடை உள்ள பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளையும் கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மளிகை கடையில் புகுந்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- குடிநீர் இணைப்பு பெற்று குடிநீர் பெரும் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவது தெரிய வருகிறது.
- குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பது சட்டப்படி அபராதத்திற்குரிய குற்றமாகும்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் சுப்ரமணியன் வெளியிடுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
பரமத்தி பேரூராட்சியில் பேரூராட்சி மூலம் குடிநீர் இணைப்பு பெற்று குடிநீர் பெரும் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவது தெரிய வருகிறது. மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவதால் அனைத்து இணைப்புகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பது சட்டப்படி அபராதத்திற்குரிய குற்றமாகும். எதிர்வரும் வறட்சிக்காலங்களில் இப் பேரூராட்சியில் சீரான குடிநீர் விநியோகம் செய்யும் பொருட்டு பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. எனவே குடிநீர் இணைப்பு பெற்றுள்ள உரிமையாளர்கள் மின்மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பதை உடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மீறி மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவது கண்டறியப்பட்டால் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 மற்றும் பரமத்தி பேரூராட்சி குடிநீர் திட்ட துணை விதிகளின் கீழ் அபராதம் விதிக்கப்படுவதுடன் மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டு குடிநீர் இணைப்புகள் முன்னறிவிப்பு இன்றி நிரந்தரமாக துண்டிப்பு செய்யப்படும் எனஅதில் கூறியுள்ளார்.
- சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.
- இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
நாமக்கல்:
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த 11-ந் ரூ.4.55 ஆக இருந்த முட்டை விலை 12-ந் தேதி 5 பைசா உயர்த்தப்பட்டு ரூ.4.60 ஆனது. நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை மீண்டும் 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.4.65 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
- தமிழ்நாடு அரசு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு முறை, கடன் திட்ட முகாம்களை நடத்த உத்தர விட்டுள்ளது.
- மானியத்துடன் இணைந்த கடன் திட்டங்களுக்கான சிறப்பு முகாம், நாளை (14-ந் தேதி) காலை 10.30 மணி முதல், நாமக்கல் கோஸ்டல் ஓட்டலில் நடைபெறுகிறது.
நாமக்கல்:
நாமக்கல் கலெக்டர் டாக்டர்.உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு முறை, கடன் திட்ட முகாம்களை நடத்த உத்தர விட்டுள்ளது. இதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், சமுதா யத்தின் அனைத்து பிரிவு மக்களும் பயன்பெறும் வகையில் அனைத்து துறைகளை உள்ளடக்கிய, மானியத்துடன் இணைந்த கடன் திட்டங்களுக்கான சிறப்பு முகாம், நாளை (14-ந் தேதி) காலை 10.30 மணி முதல், நாமக்கல் கோஸ்டல் ஓட்டலில் நடைபெறுகிறது.
இந்த முகாமில், மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சித் துறை, விவசாயத்துறை, கால்ந டைத்துறை, கைத்தறித்துறை, தாட்கோ, கதர்கிராம தொழில் வாரியம், கதர் கிராம தொழில் ஆணையம் உள்ளிட்ட துறைகள் மூலம் செயல்படுத்தப்படும், அனைத்து மானியத்துடன் இணைந்த கடன் திட்டங் களுக்கும், கடனுதவிக்கான வசதியமைப்புகள் வழங்கப்படும்.
மேலும் கடன்தொகை விடுவிப்பு குறித்து, பயனா ளிகளுக்கு தேவையாகன ஆலோசனைகள் மற்றும் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கவும் இக்கடன் திட்ட முகாமில் ஏற்பாடுகள் செய்து தரப்படும்.
எனவே தொழில் முனைவோர்கள், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், தொழில் விரிவாக்கம் செய்ய விரும்புவோர் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும், புதிய தாக கடனுதவி பெற விரும்புபவர்கள் தங்களது அசல் ஆவணங்கள் மற்றும் துவங்கப்படும் தொழில் குறித்த திட்ட அறிக்கைகளுடன் நேரில் வந்து முகாமில் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதி வேற்றம் பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.






