search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு: பண்ணையாளர்கள் மகிழ்ச்சி
    X

    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு: பண்ணையாளர்கள் மகிழ்ச்சி

    • முட்டை விலை படிப்படியாக உயர்ந்து நேற்று ஒரு முட்டையின்விலை ரூ. 4.65 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
    • பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 122 ஆக பிசிசி அறிவித்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த 8 நாட்களில், 40 பைசா உயர்ந்துள்ளது. ஒரு முட்டை விலை ரூ. 4.70 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர். கடந்த செப். 6-ந் தேதி ஒரு முட்டையின் விலை ரூ.4.30-ல் இருந்து 5 பைசா உயர்த்தப்பட்டு ரூ. 4.35 ஆனது. பின்னர் தொடர்ந்து முட்டை விலை படிப்படியாக உயர்ந்து நேற்று ஒரு முட்டையின்விலை ரூ. 4.65 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை மீண்டும் 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.4.70 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 8 நாட்களில் ஒரு முட்டையின் விலை 40 பைசா உயர்ந்துள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 122 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக் கோழி ஒரு கிலோ ரூ. 86 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    Next Story
    ×