என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் தேசிய மகளிர் போலீஸ் தினம் கொண்டாட்டம்
    X

    அரசு பள்ளியில் தேசிய மகளிர் போலீஸ் தினம் கொண்டாட்டம்

    தேசிய மகளிர் போலீஸ் தினம் விடியல் ஆரம்பம் நிகழ்ச்சி

    குமாரபாளையம்

    குமாரபாளையம் நாராயண நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தேசிய மகளிர் போலீஸ் தினம் விடியல் ஆரம்பம் சார்பில், அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. குமாரபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சந்தியா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அவருக்கு பள்ளி தலைமை ஆசிரியை பாரதி சால்வை அணிவித்து பாராட்டினார்.இதன் பின் பேசிய சந்தியா, காவல்துறை பணி கள் பற்றியும்,அந்த துறையில் தன்னுடைய பணியை பற்றியும், மாணவிகளுக்கு உடற் பயிற்சியால் ஏற்படும் நன்மைகளையும் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, ஆரோக்கியம் பற்றியும் பேசினார். உதவி தலைமை ஆசிரியர் நவநீதன், ஆங்கில உச்சரிப்பு பயிற்சியாளர் சண்முகம், தீனா ஆகியோர் பங்கேற்றனர். போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சந்தியாவிற்கு மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில் சித்ரா, மல்லிகா, வினோதினி, மாவட்ட செயலாளர் காமராஜ் உள்பட பலர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதர பெண் போலீசாருக்கும் சால்வை அணிவிக்கப்பட்டது.

    Next Story
    ×