என் மலர்
நாமக்கல்
- பரமத்திவேலூர் காவிரி கரை யோர பகுதிகளில் பல்லாயி ரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.
- விவசாயிகள் பரமத்தி வேலூர் ஏலச்சந்தைக்கு நேரடியாக வாழைத்தார்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி கரை யோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம் பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயி ரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.
இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
ஏலச்சந்தை
சிறு விவசாயிகள் பரமத்தி வேலூர் ஏலச்சந்தைக்கு நேரடியாக வாழைத்தார்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், ரஸ்தாலி அதிகபட்சமாக ரூ.300-க்கும், பச்சைநாடன் அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.350-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5-க்கும் ஏலம் போனது.
விலை உயர்வு
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.500-க்கும், ரஸ்தாலி அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.450-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.10-க்கு விற்பனையானது.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வாழைத்தார்கள் விலை உயர்வடைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- சுப்பிரமணி விவசாயம் பார்த்துக்கொண்டு பால் வியாபாரம் செய்து வந்தார்.
- சாலையில் வந்து கொண்டிருந்தபோது ஜேடர்பாளையத்திலிருந்து பரமத்தி நோக்கி அதிவேகமாக வந்த லாரி சுப்பிரமணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே அரசம்பாளையம் காலனி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (57). இவரது மனைவி விஜயா (53). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
இந்நிலையில் சுப்பிரமணி விவசாயம் பார்த்துக்கொண்டு பால் வியாபாரம் செய்து வந்தார். நேற்று மதியம் ஜாதகம் பார்ப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் பரமத்திவேலூர் சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
பரமத்தி- ஜேடர்பாளையம் சாலையில் வந்து கொண்டிருந்தபோது ஜேடர்பாளையத்திலிருந்து பரமத்தி நோக்கி அதிவேகமாக வந்த லாரி சுப்பிரமணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சுப்பிரமணி நிலைத்தடுமாறி விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுப்பிரமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனிடையே லாரி டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டார்.
விபத்து குறித்து சுப்பிரமணியின் மனைவி விஜயா ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- சின்னகரசப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (60) விவசாயி.
- அவருக்கு சொந்தமான விவசாய கிணறு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கினார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா சின்னகரசப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (60) விவசாயி.
இவர் நேற்று இரவு சின்னக்கரசபாளையம் கூலக்காடு பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான விவசாய கிணறு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கினார்.
இதனிடையே இரவு வெகுநேரம் ஆகியும் பாலசுப்பிரமணியன் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு பகுதிகளில் தேடி பார்த்தனர். அப்போது பாலசுப்பிரமணியன் செருப்பு தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது.
உடனடியாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் கிணற்றுக்குள் தேடி பாலசுப்ரமணியனை பிணமாக மீட்டனர். பின்னர் இது குறித்து பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலசுப்ரமணியன் உடலை பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருச்செங்கோடு தலைமையகத்தில் நடைபெற்ற கொப்பரை ஏலத்தில் 165 மூட்டைகள் வந்தது.
- மொத்தம் ரூ.5லட்சத்து 66ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கம் திருச்செங்கோடு தலைமையகத்தில் நடைபெற்ற கொப்பரை ஏலத்தில் 165 மூட்டைகள் வந்தது. முதல் தரம் கிலோ ரூ 69 முதல் ரூ 77 வரையிலும், 2-ம் தரம் கிலோ ரூ 55 முதல் ரூ.68 வரையிலும் விலை போனது. மொத்தம் ரூ.5லட்சத்து 66ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தொழில் மையம் சார்பில், மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மேம்பாட்டுக்கான சிறப்பு கடன் வழங்கும் முகாம், நாமக்கல்லில் நடைபெற்றது.
- இதனைத் தொடர்ந்து முகாமில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சகுந்தலா பல்வேறு கடன் உதவி திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட தொழில் மையம் சார்பில், மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மேம்பாட்டுக்கான சிறப்பு கடன் வழங்கும் முகாம், நாமக்கல்லில் நடைபெற்றது.
மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி சார்பில், மத்திய அரசின் கடனுதவி திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு வாகனத்தை இந்தியன் வங்கியின் திருப்பூர் மண்டல மேலாளர் ஸ்ரீனிவாஸ் தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் செல்லும் வாகனங்கள் பொதுமக்களிடையே, மத்திய அரசின் கடன் திட்டங்கள், வங்கி சேவைகள் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்த உள்ளன.
இதனைத் தொடர்ந்து முகாமில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சகுந்தலா பல்வேறு கடன் உதவி திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து, மத்திய, மாநில அரசு துறைகள் மூலம் பல்வேறு தொழில்களின் மேம்பாட்டுக்காக 120 தொழில் முனைவோருக்கு ரூ. 16.50 கோடி கடனுதவிகளை, நாமக்கல் மாவட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் சங்கத் தலைவர் கோஸ்டல் இளங்கோ வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் தாட்கோ மாவட்ட மேலாளர் ராமசாமி, கனரா வங்கியின் துணை பொது மேலாளர் மோகன், மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் ஜான்சிராணி, கடன் ஆலோகர் அசோகன், முன்னோடி வங்கி மாவட்ட மேலாளர் முருகன் மற்றும் திரளான தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.
- நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கம், மாவட்ட திட்ட அலுவலகம் மற்றும் மாவட்ட ஆசிரியா் கல்வி நிறுவனத்தில் பயிற்சி நடைபெற்றது.
- இப்பயிற்சி முகாமை முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, மாவட்ட ஆசிரியா் கல்வி நிறுவன முதல்வா் பாஸ்கரன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் மாவட்டக் கல்வி அலுவலா்கள் (இடைநிலை, தொடக்கநிலை), முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் (மேல்நிலை, உயா்நிலை), உதவி திட்ட அலுவலா்-1, உதவி திட்ட அலுவலா்-2, பள்ளி துணை ஆய்வாளா்கள், அரசு மேல்நிலை, உயா்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள், வட்டார வளமைய மேற்பாா்வையாளா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள் ஆகியோருக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட்டது.
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கம், மாவட்ட திட்ட அலுவலகம் மற்றும் மாவட்ட ஆசிரியா் கல்வி நிறுவனத்தில் பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமை முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, மாவட்ட ஆசிரியா் கல்வி நிறுவன முதல்வா் பாஸ்கரன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். அவா்கள் பள்ளிகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடா்பான வழிகாட்டுதல்களை வழங்கினா்.
குறிப்பாக, பள்ளி வகுப்பறை செயல்பாடுகளை எவ்வாறு பாா்வையிடுவது, ஆசிரியா்கள், மாணவா்களின் கலந்துரையாடலை பாா்வையிட்டு தகவல்கள் சேகரிப்பது, தகவல்களின் உண்மைத் தன்மை, அதன் முக்கியத்துவம், பள்ளிப் பாா்வை செயலியில் பதிவிடுவது போன்றவை குறித்து கலந்துரையாடப்பட்டது.
இதில் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளா் முருகன், மல்லசமுத்திரம் வட்டாரக் கல்வி அலுவலா் சக்திவேல், நாமக்கல் வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா் ரவிக்குமாா், பள்ளி துணை ஆய்வாளா்கள் கை.பெரியசாமி, கிருஷ்ணமூா்த்தி உள்பட 268 போ் கலந்து கொண்டனர்.
- திருச்சியில் இருந்து நாமக்கல் வழியாக பெங்களூரு நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
- பிற்பகல் 3.25 மணியளவில் பொம்மைக் குட்டைமேடு பஸ் நிறுத்தம் பகுதியில் பஸ் வந்தபோது அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
நாமக்கல்:
திருச்சியில் இருந்து நாமக்கல் வழியாக பெங்களூரு நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. நேற்று பிற்பகல் 3.25 மணியளவில் பொம்மைக் குட்டைமேடு பஸ் நிறுத்தம் பகுதியில் பஸ் வந்தபோது அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் அந்த வாகனத்தில் சென்ற பேளுக்குறிச்சி மலைவேப்பன்குட்டையைச் சோ்ந்த ராஜேந்திரனின் மனைவி ஜீவா(40) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவருடன் வந்த நல்லுசாமியின் மனைவி கோமதி (27) என்பவா் பலத்த காயமடைந்தாா்.
அங்கிருந்த வா்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
- இதனை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாமக்கல்:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டம் ரா.புதுப்பட்டி பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.
இதில் ரா.புதுப்பட்டி பஸ் நிறுத்தம் மற்றும் மாரியம்மன் கோவில் பகுதியில் பேரூராட்சி தலைவர் சுமதி தலைமையில் துணைத் தலைவர் ஜெயக்குமார், செயல் அலுவலர் கோபி ராஜா மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினர். இதனை தொடர்ந்து பேரூராட்சி பகுதியில் உள்ள ஒவ்வொரு வார்டிலும் வீடு, வீடாக சென்று நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி நடைபெற்றது.
- மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது.
- என்இசிசி கூட்டத்தில், முட்டை விலை மேலும் 5 காசு உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.75 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
நாமக்கல்:
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மாலை நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில், முட்டை விலை மேலும் 5 காசு உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.75 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இதேபோல் பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 114 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 86 ஆக தென்னிந்திய கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.
- அங்கக விவசாயம் செய்யும் விவசாயிகள் இலவ சமாக அங்கக சான்றிதழ் பெற முடியும் என நாமக்கல் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர், சித்திரைசெல்வி தெரிவித்துள்ளார்.
- அங்கக விவசாயிகள் குறைந்தபட்சம் 5 முதல் அதிகபட்சம் 25 பேர் சேர்ந்து, ஒரு குழுவினை அமைக்க வேண்டும்.
பரமத்தி வேலூர்:
அங்கக விவசாயம் செய்யும் விவசாயிகள் இலவ சமாக அங்கக சான்றிதழ் பெற முடியும் என நாமக்கல் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர், சித்திரைசெல்வி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியி ருப்பதாவது:-
அங்கக சான்றிதழ் பெற விரும்பும் ஒரே கிராமத்தை சேர்ந்த அல்லது அருகிலுள்ள கிராமங்களை சேர்ந்த அங்கக விவசாயிகள் குறைந்தபட்சம் 5 முதல் அதிகபட்சம் 25 பேர் சேர்ந்து, ஒரு குழுவினை அமைக்க வேண்டும். பிறகு குழுவிற்கான பெயர் மற்றும் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். குழுவில் போதுமான அளவு பெண் உறுப்பினர்கள் இருப்பது அவசியம். குழுவினை அமைத்த பிறகு, உறுப்பினர்களின் அடிப்படை விவரங்களுடன், பங்கேற்பாளர் உத்தரவாத அமைப்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய ஆவணங்க ளுடன் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து, அதற்கான ஆவணங்களை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு பதிவு செய்யப்படும் குழுக்களுக்கு குழு உறுப்பினர்களின் சக மதிப்பீட்டின் அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்பட்டு, சான்றிதழ்கள் இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு பதிவு செய்யப்படும் குழுக்களுக்கு ஆண்டு பயிர்களுக்கு 3 ஆண்டுகளும் நிரந்தர பயிர்களுக்கு 4 ஆண்டுகளும் மாறுதல் காலம் கடை பிடிக்கப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் வாய்ப்பு சான்றிதழ் மூலம், அங்கக விவசாயிகள், தங்களது விளை பொருட்களை மதிப்பு கூட்டு செய்து அதிக விலைக்கு விற்றுக் கூடுதல் லாபம் பெற முடியும் என அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் வைத்தல் மற்றும் ஊர்வலம் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவ லகத்தில் நடைபெற்றது.
- ஆலோசனை கூட்டத்திற்கு பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி தலைமை வகித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி முன்னிலை வகித்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டா ரத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் வைத்தல் மற்றும் ஊர்வலம் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவ லகத்தில் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்திற்கு பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி தலைமை வகித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி முன்னிலை வகித்தார். ஆலோசனை கூட்டத்தில் கடந்த வருடம் போலீசாரின் அனுமதியுடன் வைக்கப்பட்ட இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகள் வைக்க வேண்டும்.
சிலைகள் வைக்கப்படும் இடம் ஓலை மேய்ந்த குடிசையாக இருக்கக்கூடாது. தகரம் அல்லது சிமெண்ட் அட்டைகளால் தான் அமைக்கப்பட வேண்டும். சிலைகள் அனுமதிக்கப்பட்ட உயரத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது. போக்கு வரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சிலைகள் வைக்க வேண்டும். விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும் போது பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டது.
கூட்டத்தில் இந்து முன்னணி நாமக்கல் மாவட்ட பொதுச்செயலாளர் கோபிநாத், மாவட்ட செயலா ளர்கள் ஜெகதீசன், சரவணன், பொருளாளர் பிரபாகரன், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- வீட்டிற்கு திரும்பிய போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது
- பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.12 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை
பரமத்திவேலூர்
நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டம்பட்டி அருகே உள்ள அக்கலாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கொட்டாம்பட்டியை சேர்ந்த வர் மகேஷ் (42) விவசாயி. இவர் தனது குடும்பத்துடன் நேற்று கோவிலுக்கு சென்றார்.
பூட்டு உடைப்பு
பின்னர் வீட்டிற்கு திரும்பிய போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மகேஷ் உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.12 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை யடித்து சென்றது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து மகேஷ் உடனடியாக வேலகவுண்டம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி மற்றும் வேலகவுண்டம்பட்டி போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் பரமத்திவேலூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகைகள் மற்றும் ரூ.9 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இந்த நிலையில் இந்த 2 கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பலா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பகுதியில் தொடர்ந்து நடக்கும் கொள்ளை சம்பவங்கள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.






