என் மலர்
நாமக்கல்
- கேரளாவில் கடந்த ஆண்டு துரித உணவான ஷவர்மா சாப்பிட்ட 16 வயது சிறுமி உயிரிழந்தார். தற்போது நாமக்கல் சிறுமி உயிரிழந்துள்ளார்.
- முறையாக வேக வைக்காமல் சாப்பிடும்போது உயிர்கொல்லியாக மாறி விடுவதால் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்பட்டு விடுகின்றன.
நாமக்கல்:
கேரளாவில் கடந்த ஆண்டு துரித உணவான ஷவர்மா சாப்பிட்ட 16 வயது சிறுமி உயிரிழந்தார். தற்போது நாமக்கல் சிறுமி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இறைச்சியை பொறுத்தவரையில் அவற்றை முறையாக பதப்படுத்தாவிட்டாலும் வேக வைக்காவிட்டாலும் நஞ்சு பாக்டீரியா உருவாகி விடுகிறது. முறையாக வேக வைக்காமல் சாப்பிடும்போது உயிர்கொல்லியாக மாறி விடுவதால் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்பட்டு விடுகின்றன.
'சவர்மா' விற்க தடை
இதனால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் 'சவர்மா', கிரில் சிக்கன் போன்ற துரித வகை உணவுகளை தயாரிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா நிருபர்களிடம் கூறியதாவது:-
சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தி அங்கிருந்த உணவு வகைகள் அழிக்கப்பட்டு உணவகத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது. இந்த உணவகத்தில் உணவு வாங்கி சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த தகவல் திங்கட்கிழமை தெரியவந்தது. சிறுமியின் குடும்பத்தார் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றுள்ளனர். அங்கு போதிய சிகிச்சை அளிக்கவில்லை. இந்த நிலையில்தான் திங்கட்கிழமை காலை அச்சிறுமி தூக்கத்திலிருந்து எழுந்திருக்காமலேயே உயிரிழந்தார்.
ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
சம்பந்தப்பட்ட உணவகத்தில் இருந்து வழங்கப்பட்ட துரித உணவு, இறைச்சி ஆகியவை பரிசோதனைக்காக சேலம் உணவு பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முடி வுக்காக காத்திருக்கிறோம்.
வாந்தி, பேதி எனக் கூறி யார் வந்தாலும் உரிய சிகிச்சை அளிக்குமாறு தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் துரித உணவகங்களில் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்த சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்க தவறிய தனியார் மருத்துவமனையிடம் விளக்கம் கேட்டு தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஓட்டலில் உணவு சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி பலியாகி உள்ளார்.
- உணவகத்தில் உள்ள இறைச்சிகள் மற்றும் உணவுப் பொருட்களை அழித்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் பரமத்தி சாலையில் ஒரு தனியார் ஓட்டல் இயங்கி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஓட்டலில் உணவு சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை பலியாகி உள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் நேற்று முன் தினம் உணவகத்தில் சாப்பிட்ட கர்ப்பிணி, குழந்தைகள் உட்பட 44 பேருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது.
இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து ஓட்டலில் உள்ள பொருட்கள் அனைத்தையும் அழிக்க கலெக்டர் உமா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து உணவகத்தில் உள்ள இறைச்சிகள் மற்றும் உணவுப் பொருட்களை அழித்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
இதனை தொடர்ந்து ஓட்டல் உரிமையாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் துரித உணவு வகைகளான ஷவர்மா, கிரில் சிக்கன் ஆகியவற்றை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை ஆட்சியர் உமா, மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருண் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர்.
- உணவகத்தில் சாப்பிட்ட கர்ப்பிணி, குழந்தைகள் உட்பட 44 பேருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது.
- சிறுமி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து ஓட்டல் உரிமையாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்
நாமக்கல்:
நாமக்கல் பரமத்தி சாலையில் ஒரு தனியார் ஓட்டல் இயங்கி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஓட்டலில் உணவு சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை பலியாகி உள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் உணவகத்தில் சாப்பிட்ட கர்ப்பிணி, குழந்தைகள் உட்பட 44 பேருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது.
இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து ஓட்டலில் உள்ள பொருட்கள் அனைத்தையும் அழிக்க கலெக்டர் உமா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து உணவகத்தில் உள்ள இறைச்சிகள் மற்றும் உணவுப் பொருட்களை அழித்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
இதனை தொடர்ந்து ஓட்டல் உரிமையாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
- பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் தினசரி பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் குண்டு மல்லி, முல்லை பூ, சம்பங்கி, ரோஜா, செவ்வந்தி, அரளி, கனகாம்பரம் உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
இங்கு விளையும் பூக்களை கூலி ஆட்கள் மூலம் பறித்து விவசாயிகள் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் தினசரி பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.
கடந்த வாரம் குண்டுமல்லி ஒரு கிலோ ரூ.400- க்கும்,சம்பங்கி கிலோ ரூ.120- க்கும், அரளி கிலோ ரூ.130- க்கும், ரோஜா கிலோ ரூ.200- க்கும், முல்லைப் பூ ரூ.400- க்கும், செவ்வந்திப்பூ ரூ.200- க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் விற்பனையானது.நேற்று குண்டு மல்லி ஒரு கிலோ ரூ.1200-க்கும், சம்பங்கி கிலோ ரூ.300- க்கும், அரளி கிலோ ரூ.250- க்கும், ரோஜா கிலோ ரூ.300- முல்லைப் பூ கிலோ ரூ.1200-க்கும், செவ்வந்திப்பூ ரூ.320- க்கும், கனகாம்பரம் ரூ.1100-க்கும் விற்பனையானது. பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதால் பூ பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகுவிம ரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- விநாயகர் சதுர்த்தியையொட்டி போலீசார் அனுமதியுடன் பல்வேறு இடங்களில் சிறிய சிலைகள் முதல் பெரிய சிலைகள் வரை 730 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பொதுமக்கள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்:
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகுவிம ரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி போலீசார் அனுமதியுடன் பல்வேறு இடங்களில் சிறிய சிலைகள் முதல் பெரிய சிலைகள் வரை 730 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பொதுமக்கள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது. இதற்காக பந்தலில் மின் விளக்குகள் அலங்காரம், ரேடியோ செட் ஆகியவை அமைத்துள்ளனர். பந்தலில் வாழைதார்கள், பூக்கள் அலங்காரம் செய்துள்ளனர்.
சக்தி விநாயகர்
இன்று காலை முதல் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் விநாயகர் சதுர்த்தி யையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்க ளிலும் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
நாமக்கல் கடைவீதியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் சாமிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன் உள்பட 21 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர்.
நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை செய்யப்பட்டது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
இதேபோல் நாமக்கல் கோட்டை பிள்ளையார் கோவில், கணேசபுரம் விநாயகர் கோவில் உள்பட பல்வேறு விநாயகர் கோவில்களில் சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் பஞ்சமுக ஹேரம்ப விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு பஞ்சமுகஹேரம்ப விநாயகப் பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் நன்செய் இடையாறு மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள விநாயகர், பேட்டை விநாயகர், பாண்ட மங்கலம் விநாயகர், கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள விநாயகர், ஆனங்கூர் விநாயகர், அய்யம்பாளையம் விநாயகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விநாயகர் கோவிலில் இன்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள்பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பள்ளிப்பாளையம்
பள்ளிபாளையம் பஸ் நிலையம் அருகில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில், சாமிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இதேபோல் ராஜவீதியில் உள்ள ராஜகணபதி, காந்திபுரம் முதல் தெருவில் உள்ள விநாயகர் கோவில், காவிரி ஆறு பகுதியில் உள்ள விநாயகர் கோவில், அக்ரஹாரம் விநாயகர் கோவில், எஸ்.பி.பி. காலனியில் உள்ள விநாயகர் கோவில்களில் சதுர்த்தியையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
ராசிபுரம்
ராசிபுரம் இ.பி. காலனியில் உள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடத்தப்பட்டது. பின்னர் சாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டதுடன் பொறி, லட்டு, கொழுக்கட்டை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து வலம்புரி விநாயகர் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
இதேபோல் பட்டணம் ரோட்டில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜை, ஆராதனை நடத்தப்பட்து. கடைவீதியில் உள்ள இரட்டை விநாயகர் கோவில், சிவானந்தசாலை சக்தி விநாயகர் கோவில் உள்பட ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதேபோல் வெண்ணந்தூர் தினசரி மார்க்கெட்டில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையடுத்து சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே சிறிய அளவிலான சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர். அவர்கள் புத்தாடைகள் அணிந்து, பொறி, கொழுக்கட்டை உள்ளிட்ட பலகாரங்களை படைத்து விநாயகரை வழிபட்டனர்.
வயர்லெஸ் கேமரா அமைப்பு
விநாயகர் சிலை ஊர்வலத்தை சென்னையில் இருந்து கண்காணிக்கும் வகையில் வயர்லெஸ் கேமரா அமைக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இது குறித்து கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு 938 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள் ளனர். 8 சோதனை சாவடிகள் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளன. விநாயகர் சிலை உரிய அனுமதி பெற்றுள்ளனவா? என்பது குறித்தும் கண்காணித்து வருகின்றனர்.
மோகனூர், பரமத்தி வேலூர், இறையமங்கலம், பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் சிலைகள் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் இதுவரை 730 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி பெற்றுள்ளனர்.
பதட்டமான பகுதிகள்
குறிப்பாக பதட்டமான பகுதிகளாக கருதப்படும் பரமத்தி வேலூர், பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமரா அதிகப்படுத்தப்பட்டுள்ளன. விநாயகர் சிலை வைத்துள்ள வர்களே கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளோம்.
விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் போது டிரோன் கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு விழா கொண்டாட அறிவுறுத்தப் பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தை சென்னையில் இருந்து கண்காணிக்கும் வகையில் வயர்லெஸ் கேமரா அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாணவி கலையரசி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
- உணவுப் பொருட்களை அழித்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
நாமக்கல்:
நாமக்கல்லில் பரமத்தி சாலையில் ஒரு தனியார் ஓட்டல் இயங்கி வருகிறது. இங்கு நேற்று முன்தினம் இரவு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகள் 10 பேர் ஷவர்மா, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவு வகைகளை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. மேலும் விடுதியில் தங்கியிருந்த சில மாணவர்களுக்கும் சவர்மாவை பார்சல் வாங்கிச் சென்றனர். இதையடுத்து விடுதியில் இருந்த மாணவர்கள் இரவு 10 மணியளவில் சவர்மாவை சாப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் திடீரென 6 மாணவிகள், 7 மாணவர்கள் என மொத்தம் 13 பேருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் மற்றும் காய்ச்சல் போன்ற உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து அவர்கள் அனைவரும் நாமக்கல் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள காய்ச்சலுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா, அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவக்கல்லூரி மாணவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவர்கள் ஓட்டலில் என்ன உணவை சாப்பிட்டார்கள் என கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து அந்த ஓட்டலுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் கலெக்டர் உமா நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
இதைத்தொடர்ந்து ஓட்டலில் உள்ள பொருட்கள் அனைத்தையும் அழித்து, கடைக்கு நோட்டீஸ் வழங்கி 'சீல்' வைக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உமா உத்தரவிட்டார். இதையடுத்து உணவகத்தில் உள்ள இறைச்சிகள் மற்றும் உணவுப் பொருட்களை அழித்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே ஓட்டலில் உணவு சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் பலியாகி உள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் சந்தைப்பேட்டை புதூர் பழனிசாமி தெருவை சேர்ந்தவர் சுஜாதா. இவரது மகள் கலையரசி (14). இவர் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சனிக்கிழமை மாலையில் சுஜாதா, கலையரசி, மற்றும் கலையரசியின் மாமா, அத்தை உள்ளிட்டோர் ஓட்டலுக்கு சென்று பார்சல் வாங்கி வந்து வீட்டில் வைத்து சாப்பிட்டனர். அதன் பிறகு மாணவி கலையரசிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுஜாதா, மகளை நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து வீட்டில் இருந்து மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு மாணவி சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை மாணவி கலையரசி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மாணவி உடலை பார்த்து அவரது தாய் சுஜாதா கதறி அழுதார். இது அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது.
இது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு, இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவிக்கு என்ன மாதிரி சிகிச்சை அளிக்கப்பட்டது, மாணவி வீடு திரும்பும்போது அவரது உடல் நிலை எவ்வாறு இருந்தது, என டாக்டர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- எஸ்.வாழவந்தி துணைமின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மின் சாதனப் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்நிறுத்தம்.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
நாமக்கல்:
எஸ்.வாழவந்தி துணைமின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மின் சாதனப் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (19- ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதே போல் மோகனூர், ஒருவந்தூர், வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வடுகப்பட்டி , நெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவ்வந்திபட்டி, குரும்பட்டி, நல்லூர், திப்ரமாதேவி, அரூர்மேடு ஆகிய பகுதிகளில் நாளை (19- ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
- அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்தது. இரவு முழுவதும் மழை பெய்து கொண்டிருந்தது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, பரமத்தி, ஒத்தக்கடை, கந்தம்பாளையம், நல்லூர், மணியனூர் ,பெருங்குறிச்சி, குப்பிக்காபாளையம், சுள்ளிப் பாளையம், சோளசிராமணி, ஜமீன் இளம்பள்ளி, குரும்பல மகாதேவி, கொத்தமங்கலம், சிறுநல்லிகோவில், திடுமல், தி.கவுண்டம்பாளையம், பெரியசோளிபாளையம், கபிலக்குறிச்சி, இருக்கூர், வடகரை யாத்தூர், கு.அய்யம்பா ளையம், பிலிக்கல்பாளையம், சேளூர், கொந்தளம், கோப்ப ணம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்தது. இரவு முழுவதும் மழை பெய்து கொண்டிருந்தது. இதன் காரணமாக தார் சாலை வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நனைந்து கொண்டு அவதிப்பட்டு சென்றனர் .அதேபோல் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், சிற்றுண்டி கடைகள், பூக்கடைகள் பழக்கடைகள் ,பலகார கடைகள், துணிக்கடைகள், மண்பாண்டம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பல்வேறு கடைக்காரர்கள் மழையின் காரணமாக வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.
தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மழையின் காரணமாக வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டது. கடும் வெயிலின் காரணமாக பயிர்கள் வாடிய நிலையில் இருத்தது. மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையின் காரணமாக வியாபாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
- குணசேகரன் மகன் வசந்தகுமார் (22). இவர் பள்ளி பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.
- சவுந்தர்யா (21). இவர் ஈரோடு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடமாக ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சேளூர் பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் வசந்தகுமார் (22). இவர் பள்ளி பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.
திருச்செங்கோடு அருகே உள்ள ஆவாரம்பாளையம் ஆயக்காட்டை சேர்ந்தவர் சவுந்தர்யா (21). இவர் ஈரோடு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடமாக ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இவர்களது காதல் பெற்றோர்களுக்கு தெரிய வந்ததால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் காதல் ஜோடியினர் இருவரும் ஈரோடு மாவட்டம், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர்களுக்கு பயந்து பரமத்தி வேலூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இரு தரப்பு பெற்றோர்க ளையும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் சவுந்தர்யா தனது காதல் கணவருடன்தான் செல்வேன் என கூறியதால் போலீசார் அவரை வசந்தகுமாருடன் அனுப்பி வைத்தனர்.
- பஞ்சமுக ஹேரம்ப விநாயகர் கோவிலில் கடந்த 15-ந் தேதி முதல் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
- விழாவை முன்னிட்டு 108 வலம்புரி சங்கு மற்றும் 1008 சங்காபிஷேகமும் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேட்டையில் பஞ்சமுக ஹேரம்ப விநாயகர் கோவிலில் கடந்த 15-ந் தேதி முதல் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவை முன்னிட்டு 108 வலம்புரி சங்கு மற்றும் 1008 சங்காபிஷேகமும் நடைபெற்றது. சங்காபி ஷேகத்தை முன்னிட்டு வலம்புரி சங்குகள் வைக்கப்பட்டு சங்குகளுக்கு புனித நீரூற்றி அதில் பல்வேறு வகையான பூக்கள் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அக்னி குண்டத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓதி ஹோமம் செய்தனர்.
தொடர்ந்து பஞ்சமுக ஹேரம்ப விநாயகருக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பஞ்சமுகஹேரம்ப விநாயகரை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் மருத்துவ படிப்பு படித்து வருகின்றனர்.
- நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் உணவு சாப்பிட்டனர். இதையடுத்து அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் மருத்துவ படிப்பு படித்து வருகின்றனர். இதில் 13 மாணவர்கள் நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் உணவு சாப்பிட்டனர். இதையடுத்து அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் 13 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்தி ரியில் சேர்ந்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர்கள் சாப்பிட்ட உணவு சுகாதார இல்லாத உணவு என கூறப்படுகிறது. இதனால் அந்த உணவு விஷமாக மாறியதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- கபிலர்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சித்த மருத்துவ பிரிவு இணைந்து நடத்திய இலவச சித்த மருத்துவ முகாம் பரமத்திவேலூரில் நடைபெற்றது.
- முகாமிற்கு முன்னாள் நிலவள வங்கி தலைவர் சந்துரு தலைமை வகித்தார்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அரசு மருத்துவமனை சித்தமருத்துவ பிரிவு மற்றும் கபிலர்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சித்த மருத்துவ பிரிவு இணைந்து நடத்திய இலவச சித்த மருத்துவ முகாம் பரமத்திவேலூரில் நடைபெற்றது. முகாமிற்கு முன்னாள் நிலவள வங்கி தலைவர் சந்துரு தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற கூட்டுறவு கட்டிட சங்க செயலாளர் ஆறுமுக குமரன், ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னத்தம்பி, வேலூர் பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் பரமசிவம், அரசு வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் வழக்கறிஞர் முத்துவீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் பேரூராட்சி தலைவர் லட்சுமி முரளி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் மூட்டு வலி, தோல் நோய்கள், சுவாச நோய்கள், மூலம், பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சனை உள்ளிட்ட நோய்களுக்கு சித்த மருத்துவ டாக்டர்கள் ஆலோசனைகள் வழங்கி இலவசமாக மருந்து மாத்திரைகளை வழங்கினர். முகாமில் வேலூர் சித்த மருத்துவர் பிரிவு டாக்டர் பிரவேஷ்பாபு, கபிலர்மலை அரசு ஆரம்ப சுகாதார சித்த மருத்துவ பிரிவு டாக்டர் சித்ரா மற்றும் டாக்டர்கள் கோகிலா, செல்வராஜ் உள்ளிட்ட டாக்டர்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டனர். பரமத்தி வேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 205 பேர் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.






