என் மலர்
நாமக்கல்
- முட்டையின் விலை மீண்டும் 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் ரூ. 4.90 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.
- பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 104 ஆக பிசிசி அறிவித்துள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர். கடந்த செப். 15-ந்தேதி ஒரு முட்டை விலை ரூ.4.70-ல் இருந்து 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் விலை ரூ. 4.75 ஆனது. 18-ந்தேதி 10 பைசா உயர்த்தப்பட்டு ரூ. 4.85 ஆனது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில், முட்டையின் விலை மீண்டும் 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் ரூ. 4.90 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.
இதை அனைத்து பண்ணையாளர்களுக்கு தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும், என்இசிசி விலையை விட முட்டை விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டாம் எனவும், என்இசிசி மற்றும் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 104 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 92 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.
- பழனியாண்டி (89) விவசாயி. இவரது மனைவி ஏற்கெனவே இறந்து விட்டார்.
- பழனியாண்டிக்கு அவரது மகள்கள் உதவி எதுவும் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் எஸ்.வாழவந்தி அருகே உள்ள வள்ளியப்பம்பட்டிபுதூரைச் சேர்ந்தவர் பழனியாண்டி (89) விவசாயி. இவரது மனைவி ஏற்கெனவே இறந்து விட்டார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். 2 மகள்களும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். பழனியாண்டிக்கு அவரது மகள்கள் உதவி எதுவும் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வெகு நேரமாகியும் பழனியாண்டி வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அருகில் இருந்தவர்கள் கதவை திறந்து பார்த்துள்ளனர்.
அப்போது பழனியாண்டி வீட்டில் உள்ள விட்டத்தில் கயிற்றால் தூக்கு போட்டு இறந்த நிலையில் தொங்கிக்கொண்டு இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் பரமத்தி போலீசாருக்கும், அவரது மகள்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் பழனியாண்டியின் உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள கருக்கம்பாளையத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் தீபன் சக்ரவர்த்தி என்கிற நந்தகுமார் (22). கூலித்தொழிலாளி.
- காலையில் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த நந்தகுமார் வீட்டில் இருந்த சுவிட்சை போட்டுள்ளார். அப்போது மின் கசிவு காரணமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
பரமத்திவேலூர்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள கருக்கம்பாளையத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் தீபன் சக்ரவர்த்தி என்கிற நந்தகுமார் (22). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா (21). இவர்களுக்கு இளமதி என்ற 1½ வயது பெண் குழந்தை உள்ளது. நந்தகுமாரின் மனைவி சங்கீதா கடந்த 15-ந் தேதி பெருமாபாளையத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு திருவிழாவிற்கு சென்று விட்டார். நந்தகுமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். காலையில் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த நந்தகுமார் வீட்டில் இருந்த சுவிட்சை போட்டுள்ளார். அப்போது மின் கசிவு காரணமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட நந்தகுமார் உயிருக்கு போராடியுள்ளார்.
அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று நந்தகுமாரை காப்பாற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கெனவே நந்தகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணேஷ் (38). இவர் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
- திருச்சியிலிருந்து நாமக்கல் வழியாக சேலத்திற்கு அரசு பஸ்சில் வந்துள்ளார். நாமக்கல்லில் பஸ் நின்றபோது கழிப்பறைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது இவரது பையை காணவில்லை.
நாமக்கல்:
உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்சி பகுதியை சேர்ந்தவர் ராஜா ஐயர் மகன் கணேஷ் (38). இவர் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். கடந்த 16-ந் தேதி திருச்சியில் உள்ள உறவினர் ராகவனை பார்க்க வந்துள்ளார். பின்னர் நேற்று திருச்சியிலிருந்து நாமக்கல் வழியாக சேலத்திற்கு அரசு பஸ்சில் வந்துள்ளார். நாமக்கல்லில் பஸ் நின்றபோது கழிப்பறைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது இவரது பையை காணவில்லை. அதில் லேப்டாப், அலுவலகம் தொடர்பான ஆவணங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நாமக்கல் போலீசில் கணேஷ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நாமக்கல் நகரில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது.
- கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பகுதியில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
நாமக்கல் நகரில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. அரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்தது.
கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பகுதியில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
இதேபோல் ராசிபுரம், புதுச்சத்திரம், மங்களபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 7 மணிக்கு ஆரம்பித்த மழை 1 மணி நேரம் விடாமல் கொட்டியது. இதனால் சாலைகளில் பெருமளவு வெள்ளம் தேங்கி நின்றது. இதில் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.
சேந்தமங்கலம் கொல்லிமலை பகுதிகளில் மாலை 5 மணிக்கு தொடங்கிய மழை இரவு 7 மணி வரை நீடித்தது. பின்னர் மீண்டும் இரவு 9 மணிக்கு ஆரம்பித்து 10 மணி வரை பெய்தது. இதனால் இரவு முழுவதும் இந்த பகுதியில் குளிர் நிலவியது.
மழையளவு
மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
எருமப்பட்டி-3, குமாரபாளையம்-1.6, மங்களபுரம்-22.4, நாமக்கல்-13.5, கலெக்டர் அலுவலகம்-15, பரமத்திவேலூர்-1, புதுச்சத்திரம்-23, ராசி புரம்-36, சேந்த மங்கலம்-14, திருச்செங்கோடு-2, கொல்லிமலை-16 என மாவட்டத்தில் நேற்று 147.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
- நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.
- இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
நாமக்கல்:
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர்.
10 பைசா உயர்வு
கடந்த 15-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ.4.70-ல் இருந்து 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் விலை ரூ.4.75 என இருந்தது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற என்.இ.சி.சி. கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.4.85 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்): சென்னை-540, பர்வாலா-520, பெங்களூர்-530, டெல்லி-525, ஹைதராபாத்-501, மும்பை-545, மைசூர்-530, விஜயவாடா-516, ஹொஸ்பேட்-490, கொல்கத்தா-615.
கோழிவிலை
பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ.104 ஆக பி.சி.சி. அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.92 ஆக தென்னிந்திய கோழி ப்பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.
- கேரளாவில் கடந்த ஆண்டு துரித உணவான ஷவர்மா சாப்பிட்ட 16 வயது சிறுமி உயிரிழந்தார். தற்போது நாமக்கல் சிறுமி உயிரிழந்துள்ளார்.
- முறையாக வேக வைக்காமல் சாப்பிடும்போது உயிர்கொல்லியாக மாறி விடுவதால் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்பட்டு விடுகின்றன.
நாமக்கல்:
கேரளாவில் கடந்த ஆண்டு துரித உணவான ஷவர்மா சாப்பிட்ட 16 வயது சிறுமி உயிரிழந்தார். தற்போது நாமக்கல் சிறுமி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இறைச்சியை பொறுத்தவரையில் அவற்றை முறையாக பதப்படுத்தாவிட்டாலும் வேக வைக்காவிட்டாலும் நஞ்சு பாக்டீரியா உருவாகி விடுகிறது. முறையாக வேக வைக்காமல் சாப்பிடும்போது உயிர்கொல்லியாக மாறி விடுவதால் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்பட்டு விடுகின்றன.
'சவர்மா' விற்க தடை
இதனால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் 'சவர்மா', கிரில் சிக்கன் போன்ற துரித வகை உணவுகளை தயாரிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா நிருபர்களிடம் கூறியதாவது:-
சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தி அங்கிருந்த உணவு வகைகள் அழிக்கப்பட்டு உணவகத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது. இந்த உணவகத்தில் உணவு வாங்கி சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த தகவல் திங்கட்கிழமை தெரியவந்தது. சிறுமியின் குடும்பத்தார் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றுள்ளனர். அங்கு போதிய சிகிச்சை அளிக்கவில்லை. இந்த நிலையில்தான் திங்கட்கிழமை காலை அச்சிறுமி தூக்கத்திலிருந்து எழுந்திருக்காமலேயே உயிரிழந்தார்.
ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
சம்பந்தப்பட்ட உணவகத்தில் இருந்து வழங்கப்பட்ட துரித உணவு, இறைச்சி ஆகியவை பரிசோதனைக்காக சேலம் உணவு பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முடி வுக்காக காத்திருக்கிறோம்.
வாந்தி, பேதி எனக் கூறி யார் வந்தாலும் உரிய சிகிச்சை அளிக்குமாறு தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் துரித உணவகங்களில் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்த சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்க தவறிய தனியார் மருத்துவமனையிடம் விளக்கம் கேட்டு தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஓட்டலில் உணவு சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி பலியாகி உள்ளார்.
- உணவகத்தில் உள்ள இறைச்சிகள் மற்றும் உணவுப் பொருட்களை அழித்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் பரமத்தி சாலையில் ஒரு தனியார் ஓட்டல் இயங்கி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஓட்டலில் உணவு சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை பலியாகி உள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் நேற்று முன் தினம் உணவகத்தில் சாப்பிட்ட கர்ப்பிணி, குழந்தைகள் உட்பட 44 பேருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது.
இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து ஓட்டலில் உள்ள பொருட்கள் அனைத்தையும் அழிக்க கலெக்டர் உமா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து உணவகத்தில் உள்ள இறைச்சிகள் மற்றும் உணவுப் பொருட்களை அழித்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
இதனை தொடர்ந்து ஓட்டல் உரிமையாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் துரித உணவு வகைகளான ஷவர்மா, கிரில் சிக்கன் ஆகியவற்றை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை ஆட்சியர் உமா, மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருண் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர்.
- உணவகத்தில் சாப்பிட்ட கர்ப்பிணி, குழந்தைகள் உட்பட 44 பேருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது.
- சிறுமி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து ஓட்டல் உரிமையாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்
நாமக்கல்:
நாமக்கல் பரமத்தி சாலையில் ஒரு தனியார் ஓட்டல் இயங்கி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஓட்டலில் உணவு சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை பலியாகி உள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் உணவகத்தில் சாப்பிட்ட கர்ப்பிணி, குழந்தைகள் உட்பட 44 பேருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது.
இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து ஓட்டலில் உள்ள பொருட்கள் அனைத்தையும் அழிக்க கலெக்டர் உமா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து உணவகத்தில் உள்ள இறைச்சிகள் மற்றும் உணவுப் பொருட்களை அழித்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
இதனை தொடர்ந்து ஓட்டல் உரிமையாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
- பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் தினசரி பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் குண்டு மல்லி, முல்லை பூ, சம்பங்கி, ரோஜா, செவ்வந்தி, அரளி, கனகாம்பரம் உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
இங்கு விளையும் பூக்களை கூலி ஆட்கள் மூலம் பறித்து விவசாயிகள் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் தினசரி பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.
கடந்த வாரம் குண்டுமல்லி ஒரு கிலோ ரூ.400- க்கும்,சம்பங்கி கிலோ ரூ.120- க்கும், அரளி கிலோ ரூ.130- க்கும், ரோஜா கிலோ ரூ.200- க்கும், முல்லைப் பூ ரூ.400- க்கும், செவ்வந்திப்பூ ரூ.200- க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் விற்பனையானது.நேற்று குண்டு மல்லி ஒரு கிலோ ரூ.1200-க்கும், சம்பங்கி கிலோ ரூ.300- க்கும், அரளி கிலோ ரூ.250- க்கும், ரோஜா கிலோ ரூ.300- முல்லைப் பூ கிலோ ரூ.1200-க்கும், செவ்வந்திப்பூ ரூ.320- க்கும், கனகாம்பரம் ரூ.1100-க்கும் விற்பனையானது. பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதால் பூ பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகுவிம ரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- விநாயகர் சதுர்த்தியையொட்டி போலீசார் அனுமதியுடன் பல்வேறு இடங்களில் சிறிய சிலைகள் முதல் பெரிய சிலைகள் வரை 730 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பொதுமக்கள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்:
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகுவிம ரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி போலீசார் அனுமதியுடன் பல்வேறு இடங்களில் சிறிய சிலைகள் முதல் பெரிய சிலைகள் வரை 730 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பொதுமக்கள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது. இதற்காக பந்தலில் மின் விளக்குகள் அலங்காரம், ரேடியோ செட் ஆகியவை அமைத்துள்ளனர். பந்தலில் வாழைதார்கள், பூக்கள் அலங்காரம் செய்துள்ளனர்.
சக்தி விநாயகர்
இன்று காலை முதல் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் விநாயகர் சதுர்த்தி யையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்க ளிலும் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
நாமக்கல் கடைவீதியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் சாமிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன் உள்பட 21 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர்.
நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை செய்யப்பட்டது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
இதேபோல் நாமக்கல் கோட்டை பிள்ளையார் கோவில், கணேசபுரம் விநாயகர் கோவில் உள்பட பல்வேறு விநாயகர் கோவில்களில் சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் பஞ்சமுக ஹேரம்ப விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு பஞ்சமுகஹேரம்ப விநாயகப் பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் நன்செய் இடையாறு மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள விநாயகர், பேட்டை விநாயகர், பாண்ட மங்கலம் விநாயகர், கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள விநாயகர், ஆனங்கூர் விநாயகர், அய்யம்பாளையம் விநாயகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விநாயகர் கோவிலில் இன்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள்பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பள்ளிப்பாளையம்
பள்ளிபாளையம் பஸ் நிலையம் அருகில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில், சாமிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இதேபோல் ராஜவீதியில் உள்ள ராஜகணபதி, காந்திபுரம் முதல் தெருவில் உள்ள விநாயகர் கோவில், காவிரி ஆறு பகுதியில் உள்ள விநாயகர் கோவில், அக்ரஹாரம் விநாயகர் கோவில், எஸ்.பி.பி. காலனியில் உள்ள விநாயகர் கோவில்களில் சதுர்த்தியையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
ராசிபுரம்
ராசிபுரம் இ.பி. காலனியில் உள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடத்தப்பட்டது. பின்னர் சாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டதுடன் பொறி, லட்டு, கொழுக்கட்டை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து வலம்புரி விநாயகர் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
இதேபோல் பட்டணம் ரோட்டில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜை, ஆராதனை நடத்தப்பட்து. கடைவீதியில் உள்ள இரட்டை விநாயகர் கோவில், சிவானந்தசாலை சக்தி விநாயகர் கோவில் உள்பட ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதேபோல் வெண்ணந்தூர் தினசரி மார்க்கெட்டில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையடுத்து சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே சிறிய அளவிலான சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர். அவர்கள் புத்தாடைகள் அணிந்து, பொறி, கொழுக்கட்டை உள்ளிட்ட பலகாரங்களை படைத்து விநாயகரை வழிபட்டனர்.
வயர்லெஸ் கேமரா அமைப்பு
விநாயகர் சிலை ஊர்வலத்தை சென்னையில் இருந்து கண்காணிக்கும் வகையில் வயர்லெஸ் கேமரா அமைக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இது குறித்து கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு 938 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள் ளனர். 8 சோதனை சாவடிகள் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளன. விநாயகர் சிலை உரிய அனுமதி பெற்றுள்ளனவா? என்பது குறித்தும் கண்காணித்து வருகின்றனர்.
மோகனூர், பரமத்தி வேலூர், இறையமங்கலம், பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் சிலைகள் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் இதுவரை 730 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி பெற்றுள்ளனர்.
பதட்டமான பகுதிகள்
குறிப்பாக பதட்டமான பகுதிகளாக கருதப்படும் பரமத்தி வேலூர், பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமரா அதிகப்படுத்தப்பட்டுள்ளன. விநாயகர் சிலை வைத்துள்ள வர்களே கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளோம்.
விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் போது டிரோன் கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு விழா கொண்டாட அறிவுறுத்தப் பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தை சென்னையில் இருந்து கண்காணிக்கும் வகையில் வயர்லெஸ் கேமரா அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாணவி கலையரசி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
- உணவுப் பொருட்களை அழித்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
நாமக்கல்:
நாமக்கல்லில் பரமத்தி சாலையில் ஒரு தனியார் ஓட்டல் இயங்கி வருகிறது. இங்கு நேற்று முன்தினம் இரவு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகள் 10 பேர் ஷவர்மா, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவு வகைகளை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. மேலும் விடுதியில் தங்கியிருந்த சில மாணவர்களுக்கும் சவர்மாவை பார்சல் வாங்கிச் சென்றனர். இதையடுத்து விடுதியில் இருந்த மாணவர்கள் இரவு 10 மணியளவில் சவர்மாவை சாப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் திடீரென 6 மாணவிகள், 7 மாணவர்கள் என மொத்தம் 13 பேருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் மற்றும் காய்ச்சல் போன்ற உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து அவர்கள் அனைவரும் நாமக்கல் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள காய்ச்சலுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா, அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவக்கல்லூரி மாணவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவர்கள் ஓட்டலில் என்ன உணவை சாப்பிட்டார்கள் என கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து அந்த ஓட்டலுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் கலெக்டர் உமா நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
இதைத்தொடர்ந்து ஓட்டலில் உள்ள பொருட்கள் அனைத்தையும் அழித்து, கடைக்கு நோட்டீஸ் வழங்கி 'சீல்' வைக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உமா உத்தரவிட்டார். இதையடுத்து உணவகத்தில் உள்ள இறைச்சிகள் மற்றும் உணவுப் பொருட்களை அழித்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே ஓட்டலில் உணவு சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் பலியாகி உள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் சந்தைப்பேட்டை புதூர் பழனிசாமி தெருவை சேர்ந்தவர் சுஜாதா. இவரது மகள் கலையரசி (14). இவர் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சனிக்கிழமை மாலையில் சுஜாதா, கலையரசி, மற்றும் கலையரசியின் மாமா, அத்தை உள்ளிட்டோர் ஓட்டலுக்கு சென்று பார்சல் வாங்கி வந்து வீட்டில் வைத்து சாப்பிட்டனர். அதன் பிறகு மாணவி கலையரசிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுஜாதா, மகளை நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து வீட்டில் இருந்து மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு மாணவி சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை மாணவி கலையரசி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மாணவி உடலை பார்த்து அவரது தாய் சுஜாதா கதறி அழுதார். இது அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது.
இது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு, இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவிக்கு என்ன மாதிரி சிகிச்சை அளிக்கப்பட்டது, மாணவி வீடு திரும்பும்போது அவரது உடல் நிலை எவ்வாறு இருந்தது, என டாக்டர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






