search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எருமப்பட்டி, காளப்பநாய்க்கன்பட்டியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
    X

    எருமப்பட்டி, காளப்பநாய்க்கன்பட்டியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

    • எருமப்பட்டி, காளப்பநாய்க்கன்பட்டி துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

    நாமக்கல்:

    நாமக்கல் மின்வாரிய செயற் பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் கோட்டத்தில், அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்சார விநியோகம் செய்வதற்காக, ஒவ்வொரு துணை மின் நிலையத்திற்கு உட்பட பகுதியிலும், மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி, துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (21-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும். இதனால் எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்கா நத்தம், தோட்ட முடையாம்பட்டி, நவலடிப்பட்டி, பவித்திரம், தேவராயபும், முட்டான்செட்டி, வரதராஜ புரம், சிங்களங்கோம்பை, காவக்காரம்பட்டி, பவித்தி ரம்புதூர், செல்லிபாளையம், கஸ்தூரிப்பட்டி மற்றும் எருமப்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

    காளப்பநாய்க்கன்பட்டி

    காளப்பநாய்க்கன்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (21-ந் தேதி), பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை, காளப்பநாய்க்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திரும லைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாத புரம்புதூர், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல், துத்திக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×