search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூலி தொழிலாளி மயங்கி விழுந்து சாவு
    X

    கூலி தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

    • கபிலர்மலை அருகே உள்ள செஞ்சுடையாம் பாளையத்தில் உள்ள நாராயணமூர்த்தி என்பவரது வீட்டில் சென்ட்ரிங் வேலையில் ஈடுபட்டிருந்தார்.
    • அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ராமதேவம் ஊராட்சிக்கு உட்பட்ட வாழநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் கிருஷ்ணகுமார் (34) கட்டிட தொழிலாளி. இவர் நேற்று கபிலர்மலை அருகே உள்ள செஞ்சுடையாம் பாளையத்தில் உள்ள நாராயணமூர்த்தி என்பவரது வீட்டில் சென்ட்ரிங் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதை பார்த்த அவருடன் வேலை பார்த்த சக தொழிலாளர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வர வைக்கப்பட்டு அவரை காப்பாற்றி பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து பரமத்தி போலீசில் புகார் செய்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி போலீசார் கிருஷ்ணகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×