என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • 60 பவுன் தங்க நகை மற்றும் 9 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை பட்டப்பகலில் மர்ம நபர்கள் திருடி சென்றனர்
    • மளிகை பொருட்கள் வாங்கிக் கொண்டு தனது மொபட்டை எடுக்க வந்தபோது மொபட்டில் பணம் வைத்திருந்த பர்சை காணவில்லை

    பரமத்திவேலூர்

    பரமத்திவேலூர் அருகே உள்ள குப்புச்சிபாளையம், குச்சிக்காடு பகுதியில் கடந்த வாரம் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் வைத்திருந்த 60 பவுன் தங்க நகை மற்றும் 9 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை பட்டப்பகலில் மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலகவுண்டம்பட்டி அருகே விவசாயி ஒருவரின் வீட்டில் பட்டப் பகலில் கதவை உடைத்து 25 பவுன் தங்க நகை மற்றும் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.

    பரமத்திவேலூர் பகுதியில் அடுத்தடுத்து நடந்த இந்த திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    இதற்கிடையே பரமத்தி பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள ஒரு மளிகை கடை முன்பு பெண் ஒருவர் தனது மொபட்டை நிறுத்தி விட்டு அதில் பர்சை வைத்து விட்டு பொருட்கள் வாங்க சென்றார். பின்னர் மளிகை பொருட்கள் வாங்கிக் கொண்டு தனது மொபட்டை எடுக்க வந்தபோது மொபட்டில் பணம் வைத்திருந்த பர்சை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம், பக்கத்தி னரிடம் இது பற்றி தெரிவித்தார்.

    இதையடுத்து அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிராவை பார்த்தபோது மர்ம நபர்கள் மொபட்டில் இருந்த பர்சை நைசாக திருடி கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த வீடியோ காட்சி தற்ேபாது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பரமத்தி பிரதான பகுதியில் பட்டப்பகலில் மர்ம நபர்கள் மொபட்டில் வைத்திருந்த பணப்பர்சை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதையடுத்து திருடர்களை விரைந்து பிடிக்க அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து கண்கா ணிப்பு கேமிராவில் பதி வான காட்சியை கொண்டு மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிர வேட்டை யில் ஈடுபட்டுள்ளனர்.

    துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும்

    பரமத்தில்வேலூர்

    துணை மின் நிலையத்தில் நாளை (22-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் வில்லிபாளையம், ஜங்கமநாயக்கன்பட்டி, சின்னம நாயக்கன்பட்டி, சுங்ககாரம்பட்டி, நல்லாகவுண்டம்பாளையம், பெரியாக்கவுண்டம்பாளையம், தம்ம காளிபாளையம், பில்லூர், கூடச்சேரி, அர்த்தநாரிபாளையம், மாவுரெட்டி, ஓவியம்பாளையம், தேவிபாளையம், கீழக்கரை, கஜேந்திர நகர், சுண்டக்காம்பாளையம் ஆகிய ஊர்களுக்கும், மேலும் மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் இதர பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை பரமத்திவேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.

    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம்
    • தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்

    புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திரு மஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி ,கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவி யங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்க ளுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதி களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிச னம் செய்து அருள் பெற்றனர்.

    அதேபோல் நன்செய் இடையாறு காவிரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவி லில் உள்ள வள்ளி -தெய்வா னை சமேத சுப்பிரமணியர் கோவில், கபிலர்மலை பால சுப்பிர மணியசாமி கோவில், பரமத்தி அருகே உள்ள பிராந்தகத்தில் 34.5 அடி உயர முள்ள ஆறுமுகக்கட வுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவில் சுப்ர மணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன், அனிச்சம்பா ளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ர மணியர், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்ட வர், நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோவில் சுப்ரமணியர், நன்செய் இடை யாறு ராஜா சாமி, கோப்ப ணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன், பாலப்பட்டி கதிர்மலை கந்தசாமி மற்றும் கந்தம்பாளையம் அருண கிரிநாதர் மலையில் உள்ள வள்ளி,தெய்வான சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெரு மானுக்கு புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷே கமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதி களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகன் பெருமான தரிசனம் செய்த னர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • பரமத்திவேலூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன.
    • கடந்த 6 மாதங்களாக பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற வில்லை.

    பரமத்திவேலூர்

    நாமக்கல் மாவட்டம் பர மத்திவேலூர் பேரூராட்சி யில் 18 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. வைச் சேர்ந்த லட்சுமி தலைவராகவும், துணை தலைவராக ராஜாவும் தேர்ந்தெடுக்கப்பட்ட னர். கடந்த சில மாதங்களாக தலைவர் லட்சுமி மற்றும் துணை தலைவர் ராஜா ஆகிய இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறு பாட்டால் பேரூராட்சி மன்ற கூட்டம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த ஓராண்டாக வேலூர் பேரூ ராட்சியில் எந்த ஒரு தீர்மா னமும் நிறைவேற்றப்பட வில்லை.

    கூட்டம்

    கடந்த 6 மாதங்களாக பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெறாத நிலையில் நேற்று பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி தலை வர் லட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் துணை தலைவர் ராஜா, செயல் அலுவலர் திருநாவுக்கரசு மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்து.

    தீர்மானங்கள் நிராகரிப்பு

    காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கிய நிலையில் பேரூராட்சி கவுன்சி லர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பேரூ ராட்சி தலைவர் லட்சுமி கொண்டு வந்த 95 தீர்மா னங்களுக்கு 7 பேரூராட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

    தீர்மானத்திற்கு 11 உறுப் பினர்கள் எதிர்ப்பு தெரி வித்தனர். உறுப்பி னர்களின் ஆதரவு இல்லாததால் அனைத்து தீர்மா னங்களும் நிராகரிக்கப் பட்டது.

    இதனால் தீர்மானங்களும் நிறை வேற்றப்படாமல் மன்ற கூட்டம் நிறை வடைந்தது.

    • சோழசிராமணி காவிரி ஆற்றில் 150- க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.
    • 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் போலீசார் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டது.

    பரமத்திவேலூர்

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், ஜேடர்பாளையம் மற்றும் சோழசிராமணி காவிரி ஆற்றில் 150- க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் அந்தந்தப் பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்து வழிபட்டனர். பூஜை செய்து வழிபட்ட விநாயகர் சிலைகளை 3- நாளாக காவிரி ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாமக்கல் மற்றும் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வேலூர், நன்செய் இடையாறு, குச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றில் வேலூர் போலீசாரின் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டது.

    இதேபோல் சேலம், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஜேடர்பாளையம் மற்றும் சோழசிராமணி காவிரி ஆற்றில் ஜேடர்பாளையம் போலீசார் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டது.

    • நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நாளை (21-ந் தேதி) பகல் 12.30 மணிக்கு நடைபெற உள்ளது.
    • மாவட்ட கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து நுகர்வோர்களின் குறைகளை கேட்டறிகிறார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் நுகர்வோர்களின் நலன் கருதி, அனைத்து துறையின் முதல்நிலை அலுவலர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் ஆகியோர்களுடன், காலாண்டு நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நாளை (21-ந் தேதி) பகல் 12.30 மணிக்கு நடைபெற உள்ளது. மாவட்ட கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து நுகர்வோர்களின் குறைகளை கேட்டறிகிறார். பொது விநியோகத் திட்டம் தொடர்பான கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகர்வோர்கள் மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு மனுக்களை அளிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • எருமப்பட்டி, காளப்பநாய்க்கன்பட்டி துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

    நாமக்கல்:

    நாமக்கல் மின்வாரிய செயற் பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் கோட்டத்தில், அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்சார விநியோகம் செய்வதற்காக, ஒவ்வொரு துணை மின் நிலையத்திற்கு உட்பட பகுதியிலும், மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி, துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (21-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும். இதனால் எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்கா நத்தம், தோட்ட முடையாம்பட்டி, நவலடிப்பட்டி, பவித்திரம், தேவராயபும், முட்டான்செட்டி, வரதராஜ புரம், சிங்களங்கோம்பை, காவக்காரம்பட்டி, பவித்தி ரம்புதூர், செல்லிபாளையம், கஸ்தூரிப்பட்டி மற்றும் எருமப்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

    காளப்பநாய்க்கன்பட்டி

    காளப்பநாய்க்கன்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (21-ந் தேதி), பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை, காளப்பநாய்க்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திரும லைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாத புரம்புதூர், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல், துத்திக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் சுமாா் 30 ஏக்கா் பரப்பளவில் ரூ.450 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
    • மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் 2 முறை நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டாா்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் சுமாா் 30 ஏக்கா் பரப்பளவில் ரூ.450 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள மருத்துவ கல்லூரி செயல்பட்டு வரும் நிலையில் புதிய மருத்துவமனைக்கான பணிகள் நிறைவடைந்து ஓராண்டுக்கு மேலாகியும் செயல்படாமல் உள்ளது.

    குடிநீர் வசதி

    மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் 2 முறை நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டாா். மருத்துவமனைக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் வந்துவிட்ட நிலையில் முக்கிய தேவையான குடிநீா் வசதி இல்லாமல் உள்ளது.

    அரசு மருத்துவமனை கட்டுமானப் பணியின்போது 11 ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தும் ஒன்றில் கூட தண்ணீா் கிடைக்கவில்லை. இதனால் மாற்று ஏற்பாடாக நாமக்கல் நகராட்சி மூலம் அரசு மருத்துவக் கல்லூரிக்கும், மாணவா்கள், ஆசிரியா்களின் விடுதிகளுக்கும் குடிநீா் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

    புதிய குடிநீா் திட்டப் பணிகளுக்காக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தமிழக அரசு ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதாவது, ஜேடா்பாளையத்தில் இருந்து பெரியமணலி அருகே முசிறிப்புதூருக்கு வரும் காவிரி குடிநீரை புதிய அரசு மருத்துவமனை கட்டடத்திற்கு கொண்டு வருவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

    90 சதவீத பணிகள்

    சுமாா் 12.5 கி.மீ. தொலை வுடைய இந்தப் பகுதிக்கு குழாய் பதிக்கும் பணி 3 மாதங்களுக்கு முன்பாகத் தொடங்கியது. நாமக்கல் மாவட்ட குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் இணைந்து ஒப்பந்ததாரா்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனா். தற்போது 90 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன.

    முசிறிப்புதூரில் 30 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி உள்ளது. இங்கிருந்து 15 லட்சம் லிட்டா் நீா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதற்காக முசிறிப்புதூரில் 30 ஹெச்.பி திறன் கொண்ட மோட்டாா் பொருத்தும் பணி மட்டும் நிலுவையில் உள்ளது. புது டெல்லியில் இருந்து அந்த மோட்டாா் வரவேண்டும் என்பதால் பணிகளில் தாமதம் நிலவுவதாக தெரிகிறது. அந்த மோட்டாா் பொருத்தப்பட்டு விட்டால் ஓரிரு மாதங்களில் புதிய அரசு மருத்துவ மனைக் கட்டிடம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.

    இது குறித்து குடிநீா் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    நாமக்கல் புதிய அரசு மருத்துவ மனைக்காக குடிநீா் குழாய் பதிக்கும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. வேலகவுண்டம்பட்டி அருகில் முசிறிப்புதூரில் இருந்து பொப்பம்பட்டி, மட்டப்பாறை புதூா், காதப்பள்ளி, காவல்துறை ஆயுதப்படை வளாகம் வழியாக 12.5 கி.மீ. தொலைவுக்கு குடிநீா் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தற்போது 11.7 கி.மீ. தொலைவுக்கு குழாய் பதிக்கப் பட்டுள்ளது. முக்கியமான இடங்களில் 22 ஏா் வால்வுகள் பொருத்தப்பட்டுள்ன.

    15 லட்சம் லிட்டர் தண்ணீர்

    30 லட்சம் லிட்டா் கொள்ள ளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் இருந்து 15 லட்சம் லிட்டா் நீா் அரசு மருத்துவக்கல்லூரி, புதிய மருத்துவமனைக் கட்டடத்திற்கு விநியோகம் செய்யப்பட உள்ளன. 30 குதிரைத் திறன் கொண்ட மோட்டாா் பொருத்தும் பணி ஓரிரு நாளில் தொடங்கும். அதன்பிறகு முழுமையாக குடிநீா் வழங்குவதற்கான நடை முறைகள் பின்பற்றப்படும். இதற்காக 1000 லிட்டருக்கு ரூ.75 வீதம் மருத்துவமனை நிா்வாகத்திடம் கட்டணமாக வசூலிக்கப்படும்.

    சுமாா் ரூ.7 கோடி மதிப்பீட்டில் இந்தப் பணிகள் நடைபெற்று உள்ளன. அடுத்து சித்த மருத்துவக் கல்லூரி, சட்டக்கல்லூரி அமையும்பட்சத்தில் குடிநீா் தேவையென்றால் கூடுதலாக குழாய்களை பதித்து நீரை விநியோகம் செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கபிலர்மலை அருகே உள்ள செஞ்சுடையாம் பாளையத்தில் உள்ள நாராயணமூர்த்தி என்பவரது வீட்டில் சென்ட்ரிங் வேலையில் ஈடுபட்டிருந்தார்.
    • அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ராமதேவம் ஊராட்சிக்கு உட்பட்ட வாழநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் கிருஷ்ணகுமார் (34) கட்டிட தொழிலாளி. இவர் நேற்று கபிலர்மலை அருகே உள்ள செஞ்சுடையாம் பாளையத்தில் உள்ள நாராயணமூர்த்தி என்பவரது வீட்டில் சென்ட்ரிங் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதை பார்த்த அவருடன் வேலை பார்த்த சக தொழிலாளர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வர வைக்கப்பட்டு அவரை காப்பாற்றி பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து பரமத்தி போலீசில் புகார் செய்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி போலீசார் கிருஷ்ணகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விநாயகர் சிலைகள் வருகிற வெள்ளிக்கிழமை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.
    • விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் சிலைகள் கரைக்கப்படும் காவிரி ஆறு உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பரமத்திவேலூர்:

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பரமத்திவேலூர் வட்டாரத்தில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் வருகிற வெள்ளிக்கிழமை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.

    ஆய்வு

    இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள காத்தாக்கண்டர் கடைவீதி பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம், அங்கிருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் திருவள்ளுவர் சாலை, பழைய பைபாஸ் சாலை, சந்தை பகுதி, பஸ் நிலையம் மற்றும் அண்ணா சாலை, காவிரி சாலை மற்றும் சிலைகள் கரைக்கப்படும் காவிரி ஆறு உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    600 போலீசார் பாதுகாப்பு

    விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும் வெள்ளிக்கிழமை அன்று போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலை மையில் சுமார் 600- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தெரிவித்தார்.

    • தனியார் ஓட்டல் ஒன்றில் கடந்த 16-ந் தேதி ஷவர்மா உள்ளிட்ட உணவை வாங்கி சாப்பிட்ட 44 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.
    • இதைத்தொடர்ந்து நாமக்கல் கலெக்டர் உமா ஆஸ்பத்திரிகளுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

    நாமக்கல்:

    நாமக்கல் பரமத்தி ரோட்டில் பழைய நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் கடந்த 16-ந் தேதி ஷவர்மா உள்ளிட்ட உணவை வாங்கி சாப்பிட்ட 44 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

    மாணவி இறந்தார்

    இதில் நாமக்கல் கோட்டை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்த மாணவி கலையரசி (14) என்பவர் உயிரிழந்தார்.

    இதைத்தொடர்ந்து நாமக்கல் கலெக்டர் உமா ஆஸ்பத்திரிகளுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

    மேலும், சம்மந்தப்பட்ட கடைக்கு நேரில் சென்று சோதனை நடத்தி அந்த கடையை மூடி சீல் வைக்க உத்தரவிட்டார்.

    4 பேர் கைது

    மேலும் இது தொடர்பான புகாரின் பேரில் கடை உரிமையாளர் நவீன்குமார், ஓட்டலின் சமையல் தொழிலாளர்கள் 2 பேர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஓட்டலுக்கு கோழி இறைச்சி சப்ளை செய்த ராமாபுரம்புதூர் பகுதியில் உள்ள கறிக்கோழிக் கடையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    இதில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை செய்ததாக உரிமையாளர் சீனிவாசன் என்பவரை நேற்று கைது செய்தனர். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    விற்பனைக்கு தடை

    இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள ஓட்டல்களில் சவர்மா, கிரில் சிக்கன், தந்தூரி சிக்கன் உணவு வகைகள் தயாரித்து விற்பனை செய்வதற்கு கலெக்டர் தடை விதித்துள்ளார். மேலும் மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள், பாஸ்ட் புட் உணவகங்கள், மீன் இறைச்சி கடைகள், கறிக்கோழிக் கடைகள் உள்ளிட்ட கடைகளை சோதனையிடவும் உத்தரவிட்டார்.

    அதனை தொடர்ந்து நேற்று முதல் சுகாதார மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மாவட்டத்தில் உள்ள ஓட்டல்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    குமாரபாளையம்

    குமாரபாளையம் பகுதியில் உள்ள ஓட்டல்களில் நகராட்சி ஆணையர் சரவணன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) சதீஷ், சுகாதார ஆய்வாளர்கள் சந்தான கிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் 9 கிலோ கிரில் சிக்கன், குளிர் சாதன பெட்டியில் பாக்கெட் செய்து வைக்கப்பட்ட 4 கிலோ பிரியாணி, 25 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். அபராதமாக ரூ.7 ஆயிரம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வு தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருச்செங்கோடு

    திருச்செங்கோடு சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், சுகாதாரத் துறை அதிகாரிகள் இணைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் 2 ஓட்டல்களில் இருந்து பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த கெட்டுப் போன சுமார் 250 கிலோ எடையுள்ள பழைய இறைச்சி, மீன் துண்டுகள், ஆகியவை கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. ஓட்டல் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப் பட்டது.

    இதேபோல் நகரப் பகுதிகளில் உள்ள அனைத்து ஓட்டல்களிலும் அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தனர். இந்த ஆய்வு பணிகளில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் சிங்கார வேலன், நகர துப்புரவு அலுவலர் வெங்கடாசலம் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டனர்.

    பரமத்திவேலூர்

    பரமத்திவேலூர் பகுதியில் உள்ள 21 ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி முத்துசாமி தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். இதில் உரிமம் பெறாமல் இயங்கிய 2 ஓட்டல்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் உணவு பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு ஓட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த ஆய்வின்போது உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி, வேலூர் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் குருசாமி, துப்புரவு மேற்பார்வையாளர் ஜனார்த்தனன் உடன் இருந்தனர்.

    பள்ளிப்பாளையம்

    பள்ளிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அசைவ ஓட்டலில் நேற்று ஈரோடு உணவு பாதுகாப்பு துறை அலுவலர் குழந்தைவேல் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பள்ளிப்பாளையம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் அடங்கிய குழு ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் மொத்தம் 19 அசைவ ஓட்டிலில் ஆய்வு மேற்கொண்டு 3 ஓட்டலில் கெட்டுபோன 7½ கிலோ கோழி இறைச்சி குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர். மேலும் சம்மந்தப்பட்ட 3 ஓட்டலுக்கும் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

    இதேபோல் இன்றும் சேந்தமங்கலம், ராசிபுரம், கொல்லிமலை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  

    • தமிழகத்திலும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் விரும்பி சாப்பிடும் உணவாக 'சவர்மா' இருக்கிறது.
    • சில பாக்டீரியாக்கள் உடலுக்குள் சென்ற 6 மணி நேரத்தில் பாதிப்பு அறிகுறிகளை காட்டுகின்றன.

    அரபு நாடுகளில் இறைச்சி துண்டுகளை உலோக குச்சியில் சொருகி நெருப்பில் சுட்டு சாப்பிடுகிறார்கள். இதில் சில மாற்றங்களை செய்து நமது நாட்டில் 'சவர்மா' என்ற பெயரில் தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.

    சிக்கன், முட்டைகோஸ், வெங்காயம், மிளகாய்தூள் மற்றும் பல்வேறு உணவு பொருட்களை கொண்டு தயாரிக்கும் 'சவர்மா' வாலிபர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இவற்றில் சேர்க்கப்படும் உணவு பொருட்கள் அனைத்தும் கெட்டு போகாமல் இருந்தால் உடலுக்கு எந்த கேடும் ஏற்படுவதில்லை.

    அதே நேரத்தில் கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்தி செய்வதால், அதனை சாப்பிடுபவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு விடுகின்றன. சில நேரத்தில் உயிர் பலியும் ஏற்பட்டு விடுகிறது. கேரள மாநிலத்தில் சமீபத்தில் 'சவர்மா' சாப்பிட்ட சிறிது நேரத்தில் பள்ளி மாணவன் ஒருவன் பரிதாபமாக இறந்தான்.

    தமிழகத்திலும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் விரும்பி சாப்பிடும் உணவாக 'சவர்மா' இருக்கிறது. மாநில தலைநகரான சென்னையில் பலர் விரும்பி சாப்பிடும் உணவாக 'சவர்மா' உள்ளது. இந்நிலையில் நாமக்கல்லில் 'சவர்மா' சாப்பிட்ட 14 வயது பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார்.

    அவர் உணவு விஷமாகியதின் காரணமாக இறந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்களில் சுகாதாரத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில் பல கடைகளில் இருந்து பழைய உணவு பொருட்களை சுகாதாரத்துறையினர் கைப்பற்றினர்.

    சில பாக்டீரியாக்கள் உடலுக்குள் சென்ற 6 மணி நேரத்தில் பாதிப்பு அறிகுறிகளை காட்டுகின்றன. சில பாக்டீரியாக்கள் 72 மணி நேரத்திற்கு பிறகு வேலை செய்கிறது. விஷமாகும் உணவு குழந்தைகள் மற்றும் முதியவர்களை அதிகமாக பாதிக்கின்றன. பாதிப்பு தீவிரமடைந்த உடன் அது மற்ற உறுப்புகளை பாதிக்கிறது.

    'சவர்மா'வை பொறுத்தவரை பழைய உணவு பொருட்கள் மற்றும் கெட்டுப்போன இறைச்சியோ மற்றும் ஏற்கனவே தயாரித்த உணவை குளிர்ச்சி அடைய செய்து விட்டு மீண்டும் சூடுப்படுத்தி பயன்படுத்தாமல் இருந்தால் பயப்பட வேண்டியதில்லை என்று உணவுத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ×