என் மலர்
உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூர் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.
பேரூராட்சி கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிப்பு
- பரமத்திவேலூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன.
- கடந்த 6 மாதங்களாக பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற வில்லை.
பரமத்திவேலூர்
நாமக்கல் மாவட்டம் பர மத்திவேலூர் பேரூராட்சி யில் 18 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. வைச் சேர்ந்த லட்சுமி தலைவராகவும், துணை தலைவராக ராஜாவும் தேர்ந்தெடுக்கப்பட்ட னர். கடந்த சில மாதங்களாக தலைவர் லட்சுமி மற்றும் துணை தலைவர் ராஜா ஆகிய இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறு பாட்டால் பேரூராட்சி மன்ற கூட்டம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த ஓராண்டாக வேலூர் பேரூ ராட்சியில் எந்த ஒரு தீர்மா னமும் நிறைவேற்றப்பட வில்லை.
கூட்டம்
கடந்த 6 மாதங்களாக பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெறாத நிலையில் நேற்று பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி தலை வர் லட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் துணை தலைவர் ராஜா, செயல் அலுவலர் திருநாவுக்கரசு மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்து.
தீர்மானங்கள் நிராகரிப்பு
காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கிய நிலையில் பேரூராட்சி கவுன்சி லர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பேரூ ராட்சி தலைவர் லட்சுமி கொண்டு வந்த 95 தீர்மா னங்களுக்கு 7 பேரூராட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
தீர்மானத்திற்கு 11 உறுப் பினர்கள் எதிர்ப்பு தெரி வித்தனர். உறுப்பி னர்களின் ஆதரவு இல்லாததால் அனைத்து தீர்மா னங்களும் நிராகரிக்கப் பட்டது.
இதனால் தீர்மானங்களும் நிறை வேற்றப்படாமல் மன்ற கூட்டம் நிறை வடைந்தது.






