என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு பிரசன்ன வெங்கட்ரமண சாமிக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனை தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசி இலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலத்தில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமணசாமி கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு பிரசன்ன வெங்கட்ரமண சாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசி இலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பிரசன்னவெங்கட்ரமண சாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வெங்கட்ரமண சாமி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு துளசி இலை, தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் பரமத்தி வேலூர் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலிலும் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதி களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு லட்சுமி நாராயண பெரு மாளை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்க ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • கடையில் ஏராளமான பல்வேறு ரகமான மரச்சாமன்களை விற்பனைக்காக அடுக்கி வைத்திருந்தார்.
    • ரூ.2 லட்சம் மதிப்பிலான மரங்கள் சேதம்

    பரமத்தி வேலூர்

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் குமார் ( வயது 54). இவர் பரமத்திவேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்க் எதிரே மரச்சாமான்கள் விற்பனை செய்யும் மரக் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த கடையில் ஏராளமான பல்வேறு ரகமான மரச்சாமன்களை விற்பனைக்காக அடுக்கி வைத்திருந்தார். நேற்று மாலை குமார் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.இந்த நிலையில் இரவு சுமார் 10.30 மணியளவில் மரக்கடையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை.

    ரூ.2 லட்சம் மதிப்பு

    இது குறித்து குமார் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று மரக்கடையில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்து கட்டுப்படுத்தி அருகில் உள்ள குடியிருப்புகளுக்கும், கடைகளுக்கும் தீ பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.இருப்பினும் ரூ.2 லட்சத்துக்கு மேல் மதிப்பிலான மரச்சாமான்கள் தீயில் எரிந்து விட்டது விசாரணையில் தெரியவந்தது.

    • 2023-2024 ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கைக்கான கடைசி தேதி இம்மாதம் 30-ந் தேதி
    • மாணவ, மாணவிகளும், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு (ஐடிஐ) நேரடியாக விருப்பமான தொழிற்பிரிவுகளை தேர்ந்தெடுத்து சேர்க்கை பெறலாம்

    நாமக்கல்

    நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல்லில் உள்ள அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி நிலையங்களில் 2023-2024 ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கைக்கான கடைசி தேதி, 4.0 தொழிற் பிரிவுகளுக்கு இம்மாதம் 30-ந் தேதி வரையும், என்சிவிடி பிரிவுகளுக்கு 23-ந் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ஐ.டி.ஐ. தொழிற் பயிற்சி நிலை யங்க ளில்,கம்ப்யூட்டர் ஆபரேட்டர் புரோகிராமிங் அசிஸ்டன்ட் (என்சிவிடி) ஓராண்டு (பெண்கள் மட்டும்) 7 இடங்கள் காலியாக உள்ளன. தகவல் தொடர்பு தொழில் நுட்பம் மற்றும் கணினி பராமரிப்பு (என்சிவிடி) 2 ஆண்டு (பெண்கள் மட்டும்) 8 இடங்கள் காலியாக உள்ளன. கட்டிட பட வரைவாளர் (என்சிவிடி) 2 ஆண்டு, 5 இடங்கள் காலியாக உள்ளன.

    கம்மியர் ஆட்டோ பாடிரிப்பேர் (என்சிவிடி) ஓராண்டு 19 இடங்கள் காலியாக உள்ளன. இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் மேனுபாக்சரிங் டெக்னீசியன் (இண்டஸ்ட்ரி 4.0) ஓராண்டு 17 இடங்கள் காலியாக உள்ளன.நாமக்கல் மாவட்டத்தில் மேற்கண்ட பயிற்சியில் சேர விருப்பம் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளும், கீரம்பூரில் உள்ள, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு (ஐடிஐ) நேரடியாக சென்று விண்ணப்பித்து விருப்ப மான தொழிற்பிரி வுகளை தேர்ந்தெடுத்து சேர்க்கை பெறலாம்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    கடந்த 17 மற்றும் 18- ந் தேதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    நாமக்கல்

    நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள கடையில் சவர்மா சாப்பிட்டு 14 வயது சிறுமி உயிரிழந்தார்.

    இந்நிலையில் மருத்துவக்கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் அதே கடையில் சவர்மா சாப்பிட்டு உடல் பாதித்த நிலையில் கடந்த 17 மற்றும் 18- ந் தேதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நாமக்கல் சேலம் சாலையில் உள்ள கடையில் பர்கர் சாப்பிட்ட கல்லூரி மாணவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் சவர்மா சாப்பிட்டு உடல்நிலை பாதித்த நிலையில் கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்பட 21 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    செறிவூட்டப் பட்ட பால் 500 மி.லி. மற்றும் நிலைப்படுத்தப் பட்ட பால் 200 மி.லி, விற்பனை

    நாமக்கல்

    நாமக்கல் மாவட்டத்தில் டிலைட் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:

    நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தி யாளர்கள் ஒன்றியத்தின் மூலம் "டிலைட்" என்ற வைட்டமின் சத்துக்கள் நிறைந்த, செறிவூட்டப் பட்ட பால் 500 மி.லி. மற்றும் நிலைப்படுத்தப் பட்ட பால் 200 மி.லி, நேற்று (21-ந் தேதி) முதல் மாவட்டத்தில் விற்பனை செய்யபப்படுகிறது. நாமக்கல் மாவட்ட ஆவின் விற்பனை முகவர்கள் மற்றும் ஆவின் பாலகங்களின், இந்த பால் பாக்கெட் டுகளை பொதுமக்கள் வாங்கி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பருத்தி ஏலத்திற்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வந்தனர்.
    • ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகம் உள்ளது.

    ராசிபுரம்

    ராசிபுரம் அருகே உள்ள ஆர்.கவுண்டம்பாளையம் பவர் ஹவுஸ் பின்புறம் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகம் உள்ளது. இங்கு பருத்தி ஏலம் நடந்து வருவது வழக்கம். நேற்று நடந்த பருத்தி ஏலத்திற்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

    அதேபோல் ராசிபுரம், ஆத்தூர், ஈரோடு, சேலம், பெருந்துறை, திருப்பூர், திருச்செங்கோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்து பருத்தியை ஏலம் எடுத்தனர். ஏலத்திற்கு ஆர்.சி. எச்.ரக பருத்தி 116 மூட்டைகளும், சுரபி ரக பருத்தி 52 மூட்டைகளும், கொட்டு ரக பருத்தி 6 மூட்டைகளும் கொண்டுவரப்பட்டு இருந்தன. இதில் ஆர்.சி.எச். பருத்தி 1 குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.6 ஆயிரத்து 269 முதல் அதிகப்பட்சமாக 1 குவிண்டால் ரூ. 7 ஆயிரத்து 169-க்கும், சுரபி ரக பருத்தி 1 குவிண்டால் குறைந்தபட்சம் ரூ. 6 ஆயிரத்து 79-க்கும் அதிகப்பட்சமாக 1 குவிண்டால் ரூ. 7 ஆயிரத்து 199-க்கும், கொட்டு ரக பருத்தி 1குவிண்டால் குறைந்தபட்சம் ரூ. 4 ஆயிரத்து 399 முதல் அதிகபட்சமாக 1 குவிண்டால் ரூ.4 ஆயிரத்து 720-க்கும் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் மொத்தம் 174 பருத்தி மூட்டைகள் ரூ.4 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் பருத்தி வரத்து குறைந்து காணப்பட்டது. அதே வேளையில் விலையும் குறைந்து காணப்பட்டது.

    • தங்கம் 53 கிராம், வெள்ளி 131 கிராமும் பக்தர்களால் காணிக்கை
    • ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் உள்ள 6 உண்டியல்கள் மற்றும் நர சிம்மசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள 4 உண்டியல்கள்

    நாமக்கல்

    நாமக்கல் ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்ம சுவாமி கோவில் உண்டியல் கள் திறந்து எண்ணப் பட்டது. இதில் பக்தர்கள் ரூ.45 லட்சம் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

    நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் உள்ள 6 உண்டியல்கள் மற்றும் நர சிம்மசுவாமி கோயில் வளா கத்தில் உள்ள 4 உண்டியல்கள் என மொத்தம் 10 உண்டியல்கள், கோவில் அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது. மகளிர் சுய உதவி குழுவினர், அய்யப்பா சேவா சங்கத்தின் உண்டியலில் உள்ள காணிக்கைகள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.இதில் மொத்தம் ரூ 45, 24,833 ஆயிரம் காணிக்கை யாக இருந்தது. மேலும், தங்கம் 53 கிராம், வெள்ளி 131 கிராமும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப் பட்டிருந்தது. இந்த உண்டியல் திறப்பில், கோவில் செயல் அலுவலர் இளையராஜா, அறங்கா வலர் குழு உறுப்பினர் சீராளன் மற்றும் ரமேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஓட்டலில் சாப்பிட்ட சந்தைப் பேட்டை புதூரை சேர்ந்த 14 வயது மாணவி கலையரசி பரிதாபமாக இறந்தார்.
    • 57 கிலோ காலாவதியான இறைச்சி பறிமுதல்

    நாமக்கல்

    நாமக்கல்லில் துரித உணவு தயாரிக்கும் ஓட்டலில் சாப்பிட்ட சந்தைப் பேட்டை புதூரை சேர்ந்த 14 வயது மாணவி கலையரசி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கலெக்டர் உமா உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் அருண் தலைமை யில் உணவு பாதுகாப்பு அலுவலர், துப்புரவு அலுவலர், சுகாதார ஆய்வாளர் அடங் கிய 10 குழுக்கள் அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் உள்ள துரித உணவகங்கள், அவைச ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டு வருகின்றன.இந்தநிலையில் நேற்று முன்தினம் 2-வது நாளாக மாவட் டம் முழுவதும் உணவு பாது காப்புத்துறை அதிகாரிகள் 108 ஓட்டல்களில் நடத்திய சோத னையில் 58 கிலோ காலாவதி யான உணவு மற்றும் இறைச்சி பறிமுதல் செய்தும், 24 கடைக ளுக்கு அபராதம் விதித்தனர், 24 கடைகளுக்கு அபராதம் விதித்தும் நோட்டீஸ் அனுப்பிவைக்கப் பட்டு இருப்பதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து நேற்று 3-வது நாளாக மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஓட்டல்களில் சோதனை நடத்தினர். மொத்த மாக 87 ஓட்டல் களில் நடந்த இந்த சோதனை யில் 57 கிலோ காலாவதியான உணவு மற்றும் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக் கப்பட்டதாகவும், 20 கடைகளுக்கு அபராதம் விதிக்கப் பட்டு, நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பலத்த அடிப்பட்டு ரமேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் கிரீன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 49). இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் சிங்கப்பூரில் இருந்து ஊருக்கு வந்த ரமேஷ் வீட்டு வேலைகளை கவனித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு ரமேஷ் காட்டுப்புத்தூரில் இருந்து நாமக்கல்லில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவர் என்.புதுப்பட்டி பகுதியில் வந்தபோது மழை பெய்து கொண்டிருந்தது.

    இதனிடையே அந்த பகுதியில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சாலையில் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ரமேஷ் இரவு நேரம் என்பதால் பள்ளம் இருப்பது தெரியாமல் தவறி பள்ளத்தில் விழுந்தார். இதில் பலத்த அடிப்பட்டு ரமேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இன்று காலையில் அப்பகுதி மக்கள் பள்ளத்தில் ரமேஷ் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரமேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அப்பகுதி மக்கள் கூறுகையில், சாலை பணிகள் நடைபெறும் நிலையில் அந்த பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்கவில்லை என புகார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பர்கர் சாப்பிட்ட மாணவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • கல்லூரி மாணவர்கள் உள்பட 21 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    நாமக்கல்:

    நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள கடையில் ஷவர்மா சாப்பிட்டு 14 வயது சிறுமி உயிரிழந்தார். இந்நிலையில் மருத்துவக்கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் அதே கடையில் ஷவர்மா சாப்பிட்டு உடல் நலம் பாதித்த நிலையில் கடந்த 17 மற்றும் 18-ந் தேதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மாணவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நாமக்கல் சேலம் சாலையில் உள்ள கடையில் பர்கர் சாப்பிட்ட கல்லூரி மாணவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் ஷவர்மா சாப்பிட்டு உடல்நிலை பாதித்த நிலையில் கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்பட 21 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    • நாமக்கல்லில் உள்ள வீட்டில் வசித்து வந்த உதயசந்திரன் தாயார் லீலாவதி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
    • சென்னையில் இருந்த உதயச்சத்திரன் அவரது தாயார் லீலாவதி மறைவு செய்தி அறிந்து நாமக்கல்லுக்குப் புறப்பட்டு வந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட சேலம் ரோட்டில் உள்ள என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் உதயச்சந்திரன். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் தற்போது சென்னையில் தமிழக அரசின் நிதித்துறை செயலாளராகவும், சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.

    இந்த நிலையில் நாமக்கல்லில் உள்ள வீட்டில் வசித்து வந்த அவரது தாயார் லீலாவதி (72) கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

    சென்னையில் இருந்த உதயச்சத்திரன் அவரது தாயார் லீலாவதி மறைவு செய்தி அறிந்து நாமக்கல்லுக்குப் புறப்பட்டு வந்தார்.

    நாமக்கல் சேலம் சாலை என்.ஜி.ஜி.ஓ. காலனியில் வைக்கப்பட்டு இருந்த லீலாவதியின் உடலுக்கு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, வீட்டு வசதி துறை அமைச்சர் செ.முத்துசாமி, வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.பி.யுமான கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

    மேலும் எம்.எல்.ஏ.க்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி, நாமக்கல் கலெக்டர் உமா, சேலம் கலெக்டர் கார்மேகம், கரூர் கலெக்டர் சிவசங்கர், விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஸ்வநாத், நகர செயலாளர் ராணா ஆனந்த், பூபதி, சிவக்குமார், நாமக்கல் நகர மன்ற தலைவர் கலாநிதி மற்றும் ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

    உதயச்சந்திரன் தாயாரின் இறுதிச் சடங்கு இன்று மாலைசேந்தமங்கலம் சாலையில் உள்ள நகராட்சி மின் மயானத்தில் நடைபெற உள்ளது.

    • தேர்தல் நேரத்தில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு என்பது பா.ஜ.க.வின் அரசியல் நாடகம்.
    • வருகின்ற 5 மாநில சட்டசபைத் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும்.

    நாமக்கல்:

    ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் 4-வது அகில இந்திய மாநாடு நாமக்கல் கொங்கு திருமண மண்டபத்தில் கடந்த 19-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    இதில் ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் சார்பில் விவாதம், தொகுப்புரை, அகில இந்திய கமிட்டி நிர்வாகிகள் தேர்வு ஆகியவை நடைபெறுகின்றன.

    மாநாட்டின் 2-ம் நாள் நிகழ்ச்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான பிருந்தா காரத் தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி புரிந்து வருகிறது. இந்த நிலையில் தேர்தல் நேரத்தில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு என்பது பா.ஜ.க.வின் அரசியல் நாடகம். இந்த மசோதா நிறைவேறுவது கடினம்.

    ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது பா.ஜ.க.வின் அரசியல் தந்திரம். இது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

    வருகின்ற 5 மாநில சட்டசபைத் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும். அதற்குப் பின்னர் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் முடிவு செய்யப்படும்.

    தமிழக அரசு வழங்கி வரும் பெண்களுக்கான உரிமைத்தொகை பெண்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும்.

    இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் சனாதனம் குறித்து பேசுவது அந்தந்த கட்சியின் நிலைப்பாடு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இன்று 3-வது நாள் மாநாடு நடைபெறுகிறது. இதில் தீர்மானங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும்.

    ×