என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • ஒருங்கிணைந்த பண்ணைய சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த விவசாயிகள் பயிற்சி பெருங்குறிச்சி கிராமத்தில் நடைபெற்றது.
    • பயிற்சியை வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தொடங்கி வைத்து மானாவாரி பகுதி மேம்பாடு திட்டத்தின் பல்வேறு சிறப்பம்சங்களை விரிவாக விளக்கி கூறினார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் மானாவாரி பகுதி மேம்பாடு திட்டத்தின் ஒரு அங்கமான ஒருங்கிணைந்த பண்ணைய சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த விவசாயிகள் பயிற்சி பெருங்குறிச்சி கிராமத்தில் நடைபெற்றது. பயிற்சியை வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தொடங்கி வைத்து மானாவாரி பகுதி மேம்பாடு திட்டத்தின் பல்வேறு சிறப்பம்சங்களை விரிவாக விளக்கி கூறினார். ஓய்வு பெற்ற தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் அப்பாவு ஒருங்கிணைந்த வேளாண்மை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும் அதன் பல்வேறு அலகுகள் குறித்தும் பேசி விவசாயிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார். கபிலர்மலை வட்டார வேளாண்மை அலுவலர் அன்புச்செல்வி வேளாண்மைத்துறையின் பல்வேறு மானியத்திட்டங்கள், கலைஞர் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் சிறப்பம்சங்களை விளக்கிக்கூறினார். முடிவில் வேளாண்மை உதவி அலுவலர் சந்திரசேகரன் நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர் சந்திரசேகரன் மற்றும் அட்மா திட்ட உதவி மேலாளர் ஜோதிமணி ஆகியோர் செய்திருந்தனர்.

    • மாதாந்திர சமயைல் கியாஸ் நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம் வருகிற 26-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) மாலை 4 மணிக்கு நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
    • மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார்.

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பாதவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் சமையல் கியாஸ் நுகர்வோர்கள் நலன் கருதி, அனைத்து எண்ணெய் மற்றும் கியாஸ் நிறுவன மேலாளர்கள், கியாஸ் கம்பெனி ஏஜெண்டுகள், விநியோகஸ்தர்கள், சமையல் கியாஸ் நுகர்வோர்கள், தன்னார்வலர்கள் ஆகி யோர்க ளுடன், மாதாந்திர சமயைல் கியாஸ் நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம் வருகிற 26-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) மாலை 4 மணிக்கு நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார். சமையல் கியாஸ் விநியோகம் தொடர்பான குறை பாடுகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சமையல் கியாஸ் விநியோகம் மற்றும் கோரிக்கைகள் குறித்து மனுக்களை அளித்து தீர்வு பெறலாம் என அதில் கலெக்டர் கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் தொழில் நிறுவனங்களுக்கு சுமார் 430 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ள மின்சாரக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.
    • பீக் ஹவர் மின் கட்டணம் உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க தலைவர் கோஸ்டல் இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    430 சதவீதம் உயர்வு

    தமிழகத்தில் தொழில் நிறுவனங்களுக்கு சுமார் 430 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ள மின்சாரக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். பீக் ஹவர் மின் கட்டணம் உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

    சோலார் மேற்கூரை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். வெல்டிங் உள்ளிட்ட மின் இணைப்பு களுக்கு டேரிப் மாற்றம் செய்து தர வேண்டும்.

    மல்டி இயர் டேரிப் கட்டணத்தை ரத்து செய்து குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு மின் கட்டணம் உயர்வை கைவிட வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி நாளை 25-ந் தேதி தமிழகம் முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மின் நுகர்வோர் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

    இதற்கு நாமக்கல் மாவட்ட சிறு, குறுந்தொ ழில்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

    கடையடைப்பு

    இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் நாளை நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் கலந்துகொண்டு கடை யடைப்பு செய்ய உள்ளனர்.

    நாமக்கல் மாவட்ட பாடி பில்டர்கள் சங்கம், கண்ணாடி கடை அசோசி யேசன், சேகோ பேக்டரி உரிமையாளர்கள் சங்கம், தேங்காய் நார் உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்ட சுமார் 2,500 சிறு, குறந்தொழில்கள் சங்கத்தினர் தங்கள் நிறுவனங்களை நாளை ஒரு நாள் மூடி வைத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • 700 ஏக்கர் பரப்பில் சிப்காட் மூலம் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • அப்பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த வளையப்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 700 ஏக்கர் பரப்பில் சிப்காட் மூலம் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து நிலம் அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் சிப்காட் எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி விவசாயிகளும், பல்வேறு அரசியல் கட்சியினரும் இணைந்து தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    கருத்துகேட்பு கூட்டம்

    அவர்கள் சாகும்வரை தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தை அறிவித்த ததைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நாமக்கல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் சிப்காட் சம்மந்தமான கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்தார்.

    இதில் சிப்காட் எதிர்ப்பாளர்கள், நிலம் பாதிக்கப்படும் விவசாயிகள், சிப்காட் ஆதரவாளர்கள் ஆகியோரிடம் தனித்தனியாக கருத்துகள் கேட்கப்பட்டன. இதில் கலந்து கொண்ட பெரும்பாலானோர் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டால் விவசாய நிலங்கள், கால்நடைகள், குடிநீர் ஆதாரங்கள் கடுமையாக பாதிக்கப்படும் எனவே சிப்காட் அமைக்க கூடாது என கருத்து தெரிவித்தனர்.

    மீண்டும் போராட்டம்

    சிப்காட் எதிர்ப்புக்குழு சார்பில் கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது. கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதாலும், அதிகாரிகள் கேட்டுக் கொாண்டதாலும் கடந்த 2 வாரங்களாக அவர்களின் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

    கருத்துக்கேட்புக் கூட்டம் முடிவுற்ற நிலையில் இன்று மோகனூர் ஊராட்சி ஒன்றியம், வளையப்பட்டி, அரூர், என்.புதுப்பட்டி, பரளி உள்ளிட்ட பகுதிகளில் சிப்காட் எதிர்ப்புக்குழு சார்பில் கையெழுத்து இயக்கப் போராட்டம் நடைபெறுகிறது.

    • அம்மன் நகர் சாலையில் சுமார் 20 ஆண்டுகளாக சிலரின் ஆக்கிரமிப்பால் புதிய தார் சாலை அமைக்க முடியாமல் இருந்து வந்தது.
    • தார் சாலை அமைக்கும் பணிக்கு ரூ.1 கோடியே 83 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவு பிறப்பித்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அம்மன் நகர் சாலையில் சுமார் 20 ஆண்டுகளாக சிலரின் ஆக்கிரமிப்பால் புதிய தார் சாலை அமைக்க முடியாமல் இருந்து வந்தது. அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி தலைவரிடம் அம்மன் நகர் பகுதியில் தார் சாலை அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து அம்மன் நகர் பகுதியில் மழை நீர் வடிகால் மற்றும் தார் சாலை அமைக்கும் பணிக்கு ரூ.1 கோடியே 83 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் சாலையில் கழிவுநீர் செல்ல பெரிய பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதில் பலரும் விழுந்து காயமடைய நேரிடு அபாயம் உள்ளது.

    எனவே இந்த வடிகால் பகுதியில் தற்காலிக பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்காலிக பாலம் அமைக்கப்பட்டால் தார்ச்சாலை போடும்வரை அப்பகுதி மக்கள், பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் சிரமம் இல்லாமல் செல்வதற்கு ஏதுவாக அமையும். அதனால் நகராட்சி நிர்வாகம் இதை கருத்தில் கொண்டு தற்காலிக பாலம் அமைத்து மக்களின் சிரமங்களை தீர்த்து வைக்குமாறு இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரசு மற்றும் தனியார் மருத்து வமனைகளுக்கு சென்று காய்ச்சல் கண்டறியப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • கொசுப்புழுக்கள் தேங்கா வண்ணம் தடுப்பு நடவடிக்கை எடுக்க 40 பணியாளர்களை நியமித்து கொசுப்புழு தடுப்பு மருந்து ஊற்றும் பணி நடந்து வருகிறது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நகராட்சி ஆணையர் சரவணன் வெளியிட்டுள்ள ெசய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குமாரபாளையம் நகராட்சியில் 22 ஆயிரத்து 25 குடியிருப்புகள், 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள், 20-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது வட கிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் நீரினால் பரவக்கூடிய வாந்தி, பேதி, காலரா, டைப்பாய்டு, மஞ்சள் காமாலை, போன்ற தொற்று நோய்களும், கொசுக்கள் மூலம் பரவக்கூடிய மலேரியா, டெங்கு, யானைக்கால் நோய், மூளைக்காய்ச்சல், சிக்குன் குனியா போன்றவற்றை தடுக்க குமாரபாளையம் நகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதன்படி நகராட்சியின் உள்ள 33 வார்டுகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் நீர் சேமித்து வைக்கப்படும் கலன்கள் ஆய்வு செய்து கொசுப்புழுக்கள் தேங்கா வண்ணம் தடுப்பு நடவடிக்கை எடுக்க 40 பணியாளர்களை நியமித்து கொசுப்புழு தடுப்பு மருந்து ஊற்றும் பணி நடந்து வருகிறது.

    தினசரி காலை, மாலை வேளையில் வார்டுகளில் முதிர் கொசுக்களை அழிக்க புகை தெளிப்பான் கருவிகள் கொண்டு புகை மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. துப்புரவு ஆய்வாளர்கள் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்து வமனைகளுக்கு சென்று காய்ச்சல் கண்டறியப்பட்டு தடுப்பு நட வடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தண்ணீரை காய்ச்சி பருக வேண்டும். வீடுகளில் உள்ள பயனற்ற கழிவுப்பொருட்களை நகராட்சி பணியா ளர்களிடம் அவசியம் கொடுக்க வேண்டும். சேமித்து வைக்கும் தண்ணீரை மூடி வைக்க வேண்டும் என அறி வுரை வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் வீட்டில் கொசுப் புழுக்கள் கண்டறியப்பட்டால் 500 ரூபாய் அபராதமும், வணிக நிறுவனங்களில் கண்டறியப் பட்டால் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு இதர பொது சுகாதார சட்ட பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • பரமத்தி வேலூர் தாலுகா பல பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • கரும்புகள் விளைந்தவுடன் வெட்டி செல்வதற்காக மோகனூரில் செயல்பட்டு வரும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்கின்றனர்.

        பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா அண்ணா நகர், பெரிய மரு தூர், சின்ன மருதூர், சேளூர் செல்லப்பம்பா ளையம், கொந்தளம், பிலிக்கல்பாளையம், அய்யம்பாளையம், வடகரை யாத்தூர், சின்ன சோளி பாளையம், பெரிய சோளி பாளையம், கொத்த மங்கலம், குரும்பலமகாதேவி, ஜமீன் இளம்பள்ளி,சோழ சிராமணி, சிறு நல்லிக்கோவில், திடுமல், தி.கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.

    கரும்புகள் விளைந்தவுடன் வெட்டி செல்வதற்காக மோகனூரில் செயல்பட்டு வரும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்கின்றனர். பதிவு செய்யாத விவசாயிகள் கரும்புகளை கபிலர் மலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் கரும்பு ஆலை உரிமையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர். வாங்கிய கரும்புகளை சாறு பிழிந்து கொப்பறையில் ஊற்றி பாகு தயார் செய்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர். பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி, உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரி களுக்கும் அருகாமையில் செயல்பட்டு வரும் ஏல மார்க் கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். வெல்ல சிப்பங்களை வாங்கிச் செல்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியா பாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு வெல்ல சிப்பங்களை வாங்கி செல்கின்ற னர். வாங்கிய வெல்ல சிப்பங்களை லாரி களில் ஏற்றி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்க ளுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்திரபிரதேசம், சண்டிகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்க ளுக்கும் அனுப்பி வைக்கின்றனர். கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,260- வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,370 வரையிலும் விற்பனையானது.

    உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,260 வரை யிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று1,260 வரையிலும் விற்பனையானது. உற்பத்தி அதிகரிப்பால் அச்சு வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிர் செய்துள்ளனர்.

    நாமக்கல்

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பெருங்குறிச்சி, குப்பிரிக்கா பாளையம், சுள்ளி பாளையம், சோழசிராமணி, ஜமீன் இளம்பிள்ளி, குறும்பல மகாதேவி, கொத்தமங்கலம், சிறு நெல்லி கோவில், திருமால் கவுண்டம்பாளையம் ,கபிலர்மலை, வடகரையாத்தூர்,ஆனங்கூர் , அண்ணா நகர், பெரிய மருதூர், சின்ன மருதூர், கபிலர்மலை, பாலப்பட்டி ,மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிர் செய்துள்ளனர். இவர்கள் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்புகளை பரமத்தி வேலூர் வெங்க மேட்டில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு விற்பனை கூடத்திற்கு கொண்டு சென்றும் விற்பனை செய்து வருகின்றனர்.மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் 7 ஆயிரத்து 474 கிலோ தேங்காய்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.24.69 -க்கும், குறைந்தபட்சமாக ரூ.22.06 - க்கும், சராசரியாக ரூ.23.30-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்து 82- க்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.அதேபோல் 10 ஆயிரத்து 248 கிலோ தேங்காய் பருப்பு ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்ச விலையாக கிலோ ரூ. 75.89- க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ. 53.33- க்கும், சராசரி விலையாக ரூ. 68.88- க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 8 லட்சத்து 74 ஆயிரத்து 288- க்கு ஏலம் நடைபெற்றது. ஒரே நாளில் சந்தையில் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்புகள் ரூ.10 லட்சத்து 43 ஆயிரத்து 370- க்கு விற்பனையானது.

    • சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்

    நாமக்கல்

    நாமக்கல் மாவட்டம் சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் நிலக்கடலை காய் 78.44 1/2குவிண்டால் எடை கொண்ட 263 மூட்டை விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ அதிகபட்ச விலையாக ரூ.84.10-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.61.17-க்கும், சராசரி விலையாக ரூ.80.40-க்கும் என ரூ. 5லட்சத்து 65 ஆயிரத்து 223-க்கு ஏலம் போனது.

    • ஆதவன் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி தலையில் பலத்த காயமடைந்தார்.
    • விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    நாமக்கல்

    ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதவன் (36)கூலி தொழிலாளி. இவர் பெரியமனலியில் இருந்து திருச்செங்கோடு நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்ற போது கொன்னையர் பஸ் நிலையம் அருகே எதிர்பாராத விதமாக எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி தலையில் பலத்த காயம் அடைந்து சுயநினைவின்றி இருந்துள்ளார்.இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மருத்துவ உதவியாளர் மணிவேல் ஓட்டுநர் கங்காதரன் ஆகியோர் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் சுயநினைவின்றி இருந்த ஆதவனை பரிசோதித்த போது அவரிடம் இருந்த ரூ.80 ஆயிரத்து 55 பணத்தை எடுத்து ஆதவனின் உறவினர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மையை ஆதவனின் உறவினர்கள் பாராட்டினர்.

    • இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் ஒவ்வொரு வருடமும் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. பின்னர் 5-ம் நாள் விநாயகர் சிலை கள் ஊர்வலமாக எடுத்து சென்று பரமத்தி வேலூர் காசி விஸ்வநாதர் கோவில் காவிரி கரையில் உள்ள காவிரி ஆற்றில் கரைப்பது வழக்கம்.

    அதேபோல் இந்த வருட மும் நாமக்கல் மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் 118 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது. 5-ம் நாளான நேற்று மாலை வேலூரில் இருந்து காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் கடைவீதி, காத்தாக்கண்டர் பிரிவு சாலையில் இந்து முன்னணி சார்பில் இந்து எழுச்சி ஒற்றுமை பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவிற்கு பரமத்தி ஒன்றிய தலைவர் ராஜவேல் தலைமை வகித்தார். பரமத்தி ஒன்றிய கேசவன் முன்னிலை வகித்தார். பரமத்தி ஒன்றிய ரமேஷ் வரவேற்றார். இந்து முன்னணி சேலம் கோட்ட தலைவர் சந்தோஷ்குமார் எழுச்சியுரையாற்றினார். மாவட்ட பொதுச்செய லாளர் கோபிநாத், மாவட்ட செயலாளர்கள் சரவணன், ஜெகதீசன், மாவட்ட பொருளாளர் பிரபாகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

    அதனை தொடர்ந்து பரமத்தி வேலூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் செந்தில்குமார் கொடியசைத்து விநாயகர் சிலை ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    கடைவீதி பகுதியில் இருந்து தொடங்கிய விநா யகர் விசர்ஜன ஊர்வலம் திருவள்ளுவர் சாலை, பழைய பை- பாஸ் சாலை, சந்தை பகுதி, பேட்டை பஞ்சமுக ஹேரம்ப விநாயகர் கோயில், பஸ்நிலையம், அண்ணா சாலை மற்றும் காவிரி சாலை வழியாக சென்று காசிவிஸ்வநாதர் கோவில் அருகில் உள்ள காவிரியாற்றில் விநாயகர் சிலைகள் நேற்று இரவு ஒவ்வொரு சிலையாக வரிசையாக கரைக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமையில், பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கம் திருச்செங்கோடு தலைமையகத்தில் நடைபெற்றது.
    • ரூ.3 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கம் திருச்செங்கோடு தலைமையகத்தில் நடைபெற்ற கொப்பரை டெண்டரில் 92 மூட்டைகள் வரத்து வந்தது. முதல் தரம் கிலோ ரூ 71 முதல் ரூ 76 வரையிலும் 2-ம் தரம் கிலோ ரூ 55 முதல் ரூ.69 வரையிலும் விலை போனது. ரூ.3 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×